என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமங்கலம் அருகே மினி பஸ் டிரைவர் மர்ம மரணம்
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது29), மினி பஸ் டிரைவரான இவருக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது.
நேற்று காலை இவர் திருமங்கலம் செல்வதாக மனைவி ஹரிணியிடம் கூறி விட்டு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார். மதியம் 3 மணியளவில் மனைவி ஹரிணி ரமேஷ் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் ஹரிணி தனது உறவினர்களிடம் ரமேஷ் எங்கே இருக்கிறார் எனக்கு தெரியவில்லை. திருமங்கலத்தில் இருந்தாலும் அழைத்து வரும்படி கூறினார். உறவினர்களும் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை திருமங்கலம் வடகரை சாலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடலில் காயத்துடன் பிணமாக கிடப்பதாக திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் அவர் மினி பஸ் டிரைவர் ரமேஷ் என்பது தெரியவந்தது.உடனே போலீசார் ரமேஷ் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.
ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ரமேசின் உடலை பார்த்து மனைவி கதறி அழுதார்.
போலீஸ் விசாரணையில் ரமேஷ் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு இரவில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்திருக்கலாம் அப்போது ரமேஷ் தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்ததால் உடன் வந்தவர் அப்படியே போட்டு விட்டு சென்றிருக்கலாம் இரவு நேரம் என்பதால் காப்பாற்ற யாரும் வராததால் ரமேஷ் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவரது மனைவி ஹரிணி தனது கணவரை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரமேஷ் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தது யார்? எதற்காக அவரை அப்படியே விட்டுவிட்டுச் சென்றார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனை முடிவில்தான் ரமேஷ் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்