search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு
    X

    கஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு

    கஞ்சன்ஜங்கா சிகரத்தில் ஏறி உயிரிழந்த இந்தியாவைச் சேர்ந்த 2 பேர் உடல்களை மீட்ட மீட்பு குழுவினர் உடலை மலை முகாமில் வைத்துள்ளனர்.
    காத்மாண்டு:

    இந்தியா-நேபாள நாட்டுக்கு நடுவே உள்ள இமயமலையில் கஞ்சன்ஜங்கா சிகரம் உள்ளது. உலகத்திலேயே 3-வது மிகப்பெரிய சிகரமான இதில் ஏராளமான மலையேறும் குழுவினர் ஏறி வருகின்றனர். இந்தநிலையில் சிகரத்தில் ஏறிய இந்தியாவைச் சேர்ந்த 2 பேர் பிணமாக கிடந்தனர்.

    அவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டு மலை முகாமில் வைத்தனர். பின்னர் காத்மாண்டுவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு 2 பேரின் உடல்களும் ஹெலிகாப்டரில் அனுப்பி வைக்கப்பட்டது. கடும் குளிர் ஏற்பட்டதாலும், உடலில் வெப்பம் குறைந்ததாலும் 2 பேரும் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.
    Next Story
    ×