search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வேப்பூர் அருகே மின் ஊழியர் திடீர் மரணம்

    வேப்பூர் அருகே மின் ஊழியர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே அடரி கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய துணை மின் நிலையம் செயல்படுகிறது. இங்கு பாசார் கிராமத்தை சேர்ந்த ராஜவேல், (வயது 58) என்பவர் சிறுபாக்கம் அடுத்த அடரி துணை மின் நிலையத்தில் கட்டுப்பாடு பிரிவு ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில், இரவு பணியிலிருந்த போது, இரவு 11:30 மணியளவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு அதே இடத்தில் இறந்துவிட்டார்.

    இது குறித்து தகவலறிந்து வந்த சிறுபாக்கம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார், அவரது பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்

    Next Story
    ×