search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு வாக்காளர்களும் விடுபடாமல் சேர்க்க வேண்டும்: மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் அறிவுறுத்தல்
    X

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.

    வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு வாக்காளர்களும் விடுபடாமல் சேர்க்க வேண்டும்: மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் அறிவுறுத்தல்

    • மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலரு மான ஷ்ரவன் குமார் முன்னிலை வகித்தார்.
    • 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் வாக்காளர் பட்டி யல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பான ஆலோ சனை கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்குகள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர் பட்டி யல் மேற்பார்வையாளரும், தமிழ்நாடு ஜவுளித்துறை ஆணையருமான வள்ளலார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலரு மான ஷ்ரவன் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற் பார்வையாளர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் கடந்த 5.01.2023 முதல் சிறப்பு சுருக்க திருத்த பணியின் கீழ் 18 வயது (01.01.2024 தகுதி நாளாக கொண்டு) நிரம்பியவர்க ளின் பெயர்களை வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதன்படி, இவ்வரைவு வாக்கா ளர் பட்டியலில் 27.10.2023 ன்படி உளுந்தூர் பேட்டை சட்டமன்ற தொகுதியில் 337 வாக்குச்சா வடிகளில், 2,86,422 வாக்கா ளர்களும், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் 305 வாக்குச்சாவடிகளில், 2,64,572 வாக்காளர்களும், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் 300 வாக்குச்சா வடிகளில், 2,62,896 வாக்கா ளர்களும், கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற தொகுதி யில் 332 வாக்குச்சாவடி களில், 2,76,131 வாக்காளர்க ளும் என மொத்தம் 1,274 வாக்குச்சாவடி மையங்க ளில் 10,90,021 வாக்காளர்கள் தற்போது வாக்காளர் பட்டி யலில் இடம்பெற்றுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பாக கிராமங்கள் மற்றும் கல்வராயன்மலை பகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் விழிப்பு ணர்வு பணிகளை மேற்கொண்டு எந்த ஒரு வாக்காளரும் விடுபடா வண்ணம் வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகளை அலுவலர்கள் சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கிருஷ்ணன், தனி தாசில்தார் (தேர்தல்) பசுபதி, அங்கீகரிக்கப்பட்டஅரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×