search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telugu Desam"

    • தாக்குதலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் சதலவாடா ஆனந்தபாபு உள்ளிட்ட தொண்டர்கள் காயம் அடைந்தனர்.
    • மோதலில் ஈடுபட்ட இரு கட்சியை சேர்ந்தவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி-பா.ஜ.க. மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து வரும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது.

    தற்போது ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளன.

    இந்நிலையில் பல்நாடு மாவட்டம், நரச ராவ் பேட்டை தொகுதி தெலுங்கு தேசம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சதல வாடா அரவிந்த் பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

    அப்போது 2 கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்கிக் கொண்டனர்.

    இந்த தாக்குதலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் சதலவாடா ஆனந்தபாபு உள்ளிட்ட தொண்டர்கள் காயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 கட்சியினரையும் அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

    மேலும் காயமடைந்தவர்களை மீட்டு நரசராவ் பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    மோதலில் ஈடுபட்ட இரு கட்சியை சேர்ந்தவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தெலுங்கு தேசம் 17 பாராளுமன்றம் 144 சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளது.
    • பிரகாசமான எதிர்காலத்திற்கு இந்த கூட்டணி வழிவகுக்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. நேற்று ஆந்திர மாநிலம் அமராவதியில் கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது.

    இதில் மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத், பா.ஜ.க தேசிய துணை தலைவர் பைஜயந்த், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டனர் .

    இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. அதன்படி ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு 6 பாராளுமன்றம் மற்றும் 10 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    பவன்கல்யாண் கட்சி 2 பாராளுமன்ற தொகுதி 21 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. தெலுங்கு தேசம் 17 பாராளுமன்றம் 144 சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளது.

    தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளதால் வேட்பாளர்கள் தேர்வில் அந்தந்த கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா கூட்டணி மிகவும் வலிமையானது. ஆந்திர மாநிலத்தை மீட்டெடுக்க மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கு இந்த கூட்டணி வழிவகுக்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    ஆந்திர மாநிலம் சிலக்கலுரி பேட்டையில் வருகிற 17 அல்லது 18-ந் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.அப்போது பா.ஜ.க. வேட்பாளர்களை பொதுக்கூட்ட மேடையில் அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    • 175 இடங்களில் 151 இடங்களில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி போட்டி.
    • 24 இடங்களில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிடுகிறது.

    ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் சேர்த்து நடத்தப்பட இருக்கிறது. ஆந்திர மாநில முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இருந்து வருகிறார்.

    அவரை வீழ்த்துவதற்கு சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக பவன் கல்யாண் கட்சியான ஜனசேனா உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். இது தொடர்பாக தெலுங்குதேசம்- ஜனசேனா கட்சிகள் இடையே பேச்சவார்த்தை நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 175 சட்டமன்ற இடங்களில் 151 இடங்களில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடவும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 24 இடங்களிலும் போட்டியிடவும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

    அத்துடன் சந்திரபாபு நாயுடு- பவன் கல்யாண் கட்சிகள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.

    சந்திரபாபு நாயுடு 94 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதேவேளையில் பவன் கல்யாண் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார்.

    மக்களவை தேர்தலில் பவன் கல்யாண் கட்சி சந்திரபாபு நாயுடு கூட்டணியல் 3 இடங்களில் போட்டியிடுகிறது.

    தெலுங்குதேசம், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
    அமராவதி:

    பாராளுமன்ற தேர்தலிலும், ஆந்திர சட்டசபை தேர்தலிலும் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.

    தேர்தல் தோல்விக்கு பின்னர், குண்டூரில் நேற்று நடந்த கட்சி நிறுவனர் என்.டி.ராமாராவ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “புதிய அரசு பதவி ஏற்க உள்ளது. அவர்களுக்கு நாம் கொஞ்சம் அவகாசம் தர வேண்டும். அவர்கள் சில வாக்குறுதிகளை அளித்துள்ளனர். அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவிடுவோம்” என்றார்.

    மேலும், “நமது கட்சி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும். நாம் மக்களுக்கு பணி ஆற்றுவோம். நாம் நமது தவறுகளை ஆராய்ந்து சரி செய்வோம். மக்கள் பணியில் நம்மை மறுஅர்ப்பணம் செய்வோம்” எனவும் குறிப்பிட்டார்.
    ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் 150 இடங்களில் வெற்றி பெறும் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். #ChandrababuNaidu

    திருமலை:

    திருப்பதியில் உள்ள தாரகராமா விளையாட்டு மைதானத்தில் தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார்.

    எப்போது தேர்தல் வந்தாலும் நான் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பின், தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவது வழக்கம். அதன்படி நான் திருமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தேன். இந்தத் தேர்தலில் மக்கள் ஆதரவோடு நான் வெற்றி பெறுவேன். தேர்தல் தொடர்பாக நான் தினமும் நமது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு வாரிய தலைவர் பதவி, கமிட்டி தலைவர் பதவிகளில் இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும். இதுபோல கட்சியின் கடைக்கோடி உறுப்பினர்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் 18 கோரிக்கைகளை முன் வைத்தேன். அதில் அவர் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. போராட்டம் செய்தாலும், மத்திய அரசு தெலுங்கு தேசம் கட்சி மீது அடக்குமுறைகளை கையாள்கிறது. பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்தாலும் தெலுங்கு தேசம் கட்சி அரசு பயப்படாது. தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின்போது, ஐதராபாத் நகரத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டேன். தற்போது அங்கு முதல்-மந்திரியாக இருக்கும் சந்திரசேகரராவ், என்னை விமர்சனம் செய்து வருகிறார். தெலுங்கு தேசம் கட்சியை எதிர்த்தால், அவருக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்.

    போலவரம் அணை திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அந்தப் பணிகள் விரைவில் முடியும். போலவரம் அணை திட்டப்பணிகளை எதிர்த்து கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். எனினும் அந்தத் திட்டத்தை முடித்து விரைவில் மக்களுக்குக் குடிநீர் வினியோகம் செய்யப்படும். போலவரம் அணை திட்டப்பணிகள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும். அமராவதி தலைநகரம் அமைய எங்களை நம்பி விவசாயிகள் 32 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்கினார்கள். ஏழுமலையான் அருளால் தற்போது தலைமைச் செயலகம் கட்டும் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

    திருப்பதி ஏழுமலையான் எங்களின் குலதெய்வம். நான் திருப்பதியில் படிக்கும்போதே அரசியலில் குதித்து விட்டேன். அன்று தொடங்கிய எனது அரசியல் பணி, இன்னும் தொடர்கிறது. நான் எப்போதும் ஏழுமலையானை நினைத்துத்தான் எந்தச் செயலையும் செய்வேன். ஏழுமலையானின் அருள் எனக்கு எப்போதும் கிடைக்கும். வெடிகுண்டு வைத்து என்னை கொலை செய்ய முயன்றனர். அதில் நான் ஏழுமலையானின் அருளால் உயிர் தப்பினேன். அவர், என்னை காப்பாற்றி விட்டார். எனினும் நான் ஆந்திராவின் முன்னேற்றத்துக்காகவே பாடுபட்டு வருகிறேன்.

    ஆந்திராவில் வயது முதிர்ந்த தம்பதியர் என்னை அவர்களுடைய வீட்டில் ஒரு மூத்த மகனாக கருதுகிறார்கள். எனவே அவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆந்திர மாநில அரசு, அவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கி வருகிறது. பெண்கள், என்னை ஒரு சகோதரனாக பார்க்கிறார்கள். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு மஞ்சள்-குங்குமம் திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் வேளாண் கடன் ரூ.24 ஆயிரத்து 500 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுபோல எந்த ஒரு மாநிலத்திலும் யாரும் செய்ததில்லை. விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் அண்ணா கேண்டீன் திறக்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்தில் இருந்து மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவச் சிகிச்சைக்காக அளிக்கப்பட உள்ளது.

    மாநிலத்தில் தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. மாநிலத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடியில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது.

    ஆந்திர மக்கள் அனைவரும் இணைந்து வாக்களித்து தெலுங்கு தேசம் கட்சியை 150-க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதியிலும், 25 மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற செய்ய வேண்டும். இதுவே என் லட்சியம் என்றார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆந்திரபிரதேசம் மாநில முதல் மந்திரியான சந்திரபாபு நாயுடு, திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்து தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார். #TeluguDesam #ChandrababuNaidu #ElectionCampaign #TirupatiVenkateswaraSwamyTemple
    அமராவதி:

    ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அத்துடன், சட்டசபை தேர்தலும் நடக்கிறது.

    இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.



    பிரசாரம் தொடங்குவதற்கு முன்னதாக, திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் இன்று மாலை நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு 
    பங்கேற்று உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #TeluguDesam #ChandrababuNaidu #ElectionCampaign #TirupatiVenkateswaraSwamyTemple 
    ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் குண்டு பாய்ந்து காயமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. #AndhraPradeshAssemblyElection #TDP #Candidateinjuredingunfire
    அமராவதி:

    ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அத்துடன், சட்டசபை தேர்தலும் நடக்கிறது.

    இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மந்திராலயம் தொகுதி வேட்பாளராக டிக்கா ரெட்டி போட்டியிடுகிறார். இவர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    மந்திராலயம் தொகுதியின் ககாய் பகுதியில் டிக்கா ரெட்டி தனது தொண்டர்களுடன் வந்தார். அப்போது அங்கிருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இவர்களை கண்டனர். இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

    தகவலறிந்து வந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் டிக்கா ரெட்டி மற்றும் அவரது பாதுகாவலரின் காலில் குண்டு பாய்ந்தது.

    காயமடைந்த இருவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #AndhraPradeshAssemblyElection #TDP #Candidateinjuredingunfire
    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கட்சியின் எம்.எல்.ஏ. மல்லிகார்ஜூனா ரெட்டி கட்சியில் இருந்து திடீரென்று விலகி உள்ளார். #ChandrababuNaidu #MallikarjunaReddy
    விஜயவாடா:

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் அக்கட்சியின் ராஜம்பேட் தொகுதி எம்.எல்.ஏ. மல்லிகார்ஜூனா ரெட்டி தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து திடீரென்று விலகி உள்ளார்.

    மேலும் அவர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேருவதாக அறிவித்து உள்ளார்.

    இதையடுத்து நேற்று ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். பின்னர் மல்லிகார்ஜூனா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தெலுங்குதேசம் கட்சியில் ஜனநாயகம் இல்லை. பாகுபாடுகள் உள்ளன. அக்கட்சியில் இருப்பது தாங்க முடியாத வலியை தருகிறது.

    இதனால் நல்ல தலைமையில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்தேன்.

    சந்திரபாபு நாயுடு 23 எம்.எல்.ஏ.க்களை கால்நடை மந்தையில் விலைக்கு வாங்குவதுபோல் வாங்கினார். ஆனால் ஜெகன் மோகன்ரெட்டி என்னிடம் உங்கள் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்து விட்டு கட்சியில் சேருங்கள் என்று கூறினார். இதுதான் இரு கட்சிக்கும், இரு தலைவர்களுக்கும் உள்ள ஜனநாயக வேறுபாடு.

    இம்மாத கடைசியில் முறைப்படி எம்.எல்.ஏ. பதவியையும், கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டு ஒய்.எஸ்.ஆர். கட்சியில் இணைவேன்.

    அமைச்சர் ஆதிநாராயணா ரெட்டியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நான் கட்சியில் இருந்து விலகுவதாக கூறுவதில் உண்மை இல்லை. அது வெறும் புரளிதான்.

    இளம் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டிக்கு மக்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர் அரசியல் கடைபிடிக்கும் தூய்மை போன்றவற்றால் தான் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #ChandrababuNaidu #MallikarjunaReddy
    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பத்திபாடு தொகுதி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.ராவல கிஷோர்பாபு திடீரென பதவி விலகினார். #TeluguDesamMLA

    நகரி:

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பத்திபாடு தொகுதி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ராவல கிஷோர்பாபு. இவர் தனது எம்.எல்.ஏ. பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பி உள்ளார்.

    மேலும் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்து அதற்கான கடிதத்தை முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு அனுப்பி இருக்கிறார்.

    கட்சியில் தனக்கு மரியாதை இல்லை என்றும், கடந்த சில மாதங்களாக அவமானப்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறி அவர் தனது எம்.எல்.ஏ. பதவி, கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து விலகியதாக தெரிவித்தார்.

     


    2014-ம் ஆண்டு தேர்தலில் எம்.எல்.ஏ.வாக ராவல கிஷோர்பாபு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சந்திரபாபு நாயுடுவின் மந்திரிசபையில் சமூக நலத்துறை மந்திரியாக பதவி வகித்தவர்.

    அதன்பின் மந்திரிசபை விரிவாக்கத்தின்போது கிஷோர்பாபு நீக்கப்பட்டார். அதிலிருந்து அவர் அதிருப்தியில் இருந்து வந்தார். கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். இதற்கிடையே தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்.

    கிஷோர்பாபு தனது ஆதரவாளர்களுடன் நாளை நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சியில் சேருவார் என்று தெரிகிறது.

    திருப்பதி சென்றுள்ள ஆந்திர சபாநாயகர் சிவபிரசாத் ராவ் கூறும்போது, “கிஷோர்பாபு எம்.எல்.ஏ. எனது அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்ட கடிதத்தை அனுப்பி இருக்கிறார். நான் திருப்பதியில் இருந்து சென்றதும் அந்த கடிதத்தை பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். #TeluguDesamMLA

    பா.ஜ.க.வுக்கு எதிராக அமையும் எதிர்க்கட்சி கூட்டணியை மூத்த தலைவர் வழிநடத்துவார் என்று ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். #BJP #ChandrababuNaidu

    நெல்லூர்:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

    இதற்காக அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசி வருகிறார். எதிர்க்கட்சி கூட்டணிக்கு யார் பிரதமர்? யார் தலைவராக தேர்வு செய்யப்படுவார்? என்பதில் குழப்ப நிலை நிலவி வருகிறது.

    இது சம்பந்தமாக ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடந்த தெலுங்குதேச கட்சி நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு தனது கருத்தை தெரிவித்தார். அவர் பேசியதாவது:-

    இந்தியாவை பொறுத்த வரை 2 அணிகள்தான் இருக்கின்றன. அதில் ஒன்று பாரதிய ஜனதா அணி, மற்றொன்று பாரதிய ஜனதாவுக்கு எதிரான அணி.

     


    இந்த நாட்டை காப்பாற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவையும் தோற்கடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இதற்காக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நாட்டை காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் கூட்டணியில் சேருவது அவசியமான ஒன்றாகும்.

    எங்கள் கூட்டணியை மூத்த தலைவர் ஒருவர் வழிநடத்துவார். ஆந்திராவுக்கு யார் நன்மை செய்வாரோ அவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார்.

    பாராளுமன்ற கூட்ட தொடர் தொடங்குவதற்கு முன்பாக எதிர்க்கட்சி அணிகள் கூடி பேசி முக்கிய முடிவுகள் எடுப்போம். பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நாங்கள் போராடுவோம்.

    பிரதமர் மோடி வேண்டும் என்றே சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறையினரை தெலுங்குதேசம் கட்சி தலைவர்களுக்கு எதிராக ஏவி விட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார். #BJP #ChandrababuNaidu

    ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். #NandamuriHarikrishna #NTR
    அமராவதி:

    ஆந்திர முன்னாள் முதல் மந்திரி என்.டி ராமாராவின் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். நலகொண்டா மாவட்டத்தில் உள்ள நர்கெட்பள்ளி - அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்ற போது, ஹரிகிருஷ்ணாவின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.



    இந்த விபத்தில், படுகாயம் அடைந்துள்ள ஹரிகிருஷ்ணா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாகவும் ஹரிகிருஷ்ணா பணியாற்றியுள்ளார். 
    பிரதமர் நாற்காலியில் யார் அமர வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேசினார் #NoConfidenceMotion #PMModi
    புதுடெல்லி:

    மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடந்தது. சிவசேனா, பிஜு ஜனதா தளம் கட்சிகள் விவாதத்தை புறக்கணித்து விட்டன.

    இரு கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையான எண்ணும் குறைந்தது. எனினும், மசோதா மீதான விவாதம் நடந்தது. மத்திய அரசு மற்றும் பிரதமர் மீது பல்வேறு விவகாரங்களை முன்வைத்து ராகுல் காந்தி பேசினார்.

    அதிமுக, சமாஜ்வாதி, திரினாமுல், டிஆர்எஸ் ஆகிய கட்சிகளும் மத்திய அரசு மீது கலவையான விமர்சனத்தை முன்வைத்து பேசின. இதனை அடுத்து பேசிய ராஜ்நாத் சிங், “நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களின் தீர்ப்புக்கு எதிராக உள்ளது” என கூறினார். 

    இதனை அடுத்து, தீர்மானத்தின் மீது ஒவ்வொரு கட்சிகளும் பேசி வந்ததால் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்துவது தாமதமாகியது. இரவு 9.30 மணியளவில் பிரதமர் தனது உரையை தொடங்கினார். அவர் பேசுகையில் கூறியதாவது:-

    இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்ப்பு அரசியல் செய்பவர்களின் முகங்கள் வெளிப்பட்டு விட்டது. எதிர்க்கட்சிகளே பெரும்பான்மை மிக்க இந்த அரசின் மீது நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரியுங்கள்.

    அதிகாரப் பசியின் காரணமாக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர். இது நம்பிக்கையில்லா தீர்மானம் இல்லை, எதிர்க்கட்சிகளின் ஆணவத்தின் வெளிப்பாடு.

    பிரதமர் நாற்காலிக்கு என்ன அவசரம்? ஜனநாயகத்தில் எந்த அவசரமும் இல்லை. பிரதமர் நாற்காலியில் இருந்து நான் எழ வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். இந்த நாற்காலிக்கு யார் தகுதியானவர்கள் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். நாங்கள் மெஜாரிட்டி கொண்டிருப்பதால் இந்த பக்கம் இருக்கிறோம். மக்களை தவறாக வழி நடத்தாதீர்கள்.

    இவ்வாறு மோடி பேசி வருகிறார். மோடியின் பேச்சுக்கு எதிராக தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
    ×