search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jagan Mohan Reddy"

    • பாப்லோ எஸ்கோபார் கொலம்பியாவின் போதைப்பொருள் ஜாம்பவான்.
    • உலகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விற்பனை செய்தார்.

    ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஜெகன்மோகன் ரெட்டி படுதோல்வியடைந்தார்.

    ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஜெகன் மோகன் ரெட்டி கட்சியினர் தாக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெகன்மோன் ரெட்டி டெல்லி போராட்டம் நடத்தினார். அவரது கட்சி தொண்டர்கள் தாக்கப்பட்ட படங்களை வெளியிட்டு வீடியோக்களையும் காட்சிப்படுத்தினார்.

    இந்த நிலையில் ஆந்திர சட்டப்பேரவையில் ஜெகன் மோகன் ரெட்டியை போதைப்பொருள் ஜாம்பவான் பாப்லோ எஸ்கோபார் உடன் ஒப்பிட்டு பேசினார்.

    இன்று சந்திரபாபு நாயுடு சட்டமன்றத்தில் பேசும்போது கூறியதாவது:-

    பாப்லோ எஸ்கோபார் கொலம்பியாவின் போதைப்பொருள் ஜாம்பவான். அவன் ஒரு போதைப்பொருள் பயங்கரவாதி. பின்னர் அரசியல்வாதியாக மாறினார். அதன்பிறகு உலகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விற்பனை செய்தார். அந்த நேரத்திலேயே 30 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் சம்பாதித்தார். தற்போது அது ஏறக்குறைய 90 பில்லியன் டாலராகும்.

    1976-ல் கைது செய்யப்பட்டார். 1980-ல் உலகின் மிகப்பெரிய பொதைப்பொருள் ஜாம்பவானாக திகழ்ந்தான். போதைப்பொருள் விற்றும் ஒருவர் கோடீஸ்வரர் ஆக முடியும்.

    முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் இலக்கு எண்ணம்?. டாடா, ரிலையன்ஸ், அம்பானியிடம் பணம் இருக்கிறது. அவர்களை விட பணக்காரர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார். சிலருக்கு தேவைகள் உள்ளன, சிலருக்கு பேராசை உள்ளது மற்றும் சிலருக்கு வெறி உள்ளது. இந்த வெறி பிடித்தவர்கள் இதுபோன்ற விஷயங்களைச் செய்கிறார்கள்.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆந்திர பிரதேசம் நாட்டின் போதை தலைநகராகியுள்ளது. இதில் முன்னாள் முதல்வரின் பங்கு உள்ளது என சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஜெகன் மோகன் ரெட்டி மீது உள்ளது. கொலை முயற்சி வழக்கு இந்த மாதம் தொடக்கத்தில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கொண்டா ரஜின் காந்தி "தெலுங்கு தேசம் கட்சி தேர்தல் இன்னும் முடியடைவில்லை என் பார்வையில் உள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியில் வன்முறை குறித்து கண்காட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மாநிலத்தில் நடைபெறும் வன்முறையை மீதான பார்வையை திசைதிருப்ப முயற்சிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    • தெலுங்கு தேசம் ஆட்சியில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
    • ஆந்திர மாநிலத்தின் நிலைமை குறித்து பிரதமர் மோடியை சந்தித்து புகார் அளிக்கப்படும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டாவில் நடுரோட்டில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இளைஞரணி தலைவர் ரஷீத் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரை நேரில் சென்று பார்வையிட்டு முன்னாள் முதல்-மந்திரியும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி ஆறுதல் கூறினார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தெலுங்கு தேசம் ஆட்சியில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.


    ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 45 நாள் ஆட்சியில் 36 படுகொலைகள், 300-க்கும் மேற்பட்ட படுகொலை முயற்சிகள், 560 இடங்களில் தனியாரின் சொத்துக்கள் சேதம் உள்ளிட்டவை நடந்துள்ளன. 490 அரசு சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்களால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவாளர்கள் மீது வீடு புகுந்து தாக்குதல்கள் நடந்துள்ளன.

    எனவே ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கோரி வரும் 24-ந் தேதி டெல்லியில் ஒய்.எஸ்.ஆர். கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சிக்களுடன் தர்ணா போராட்டம் நடத்தப்படும்.

    ஆந்திர மாநிலத்தின் நிலைமை குறித்து பிரதமர் மோடியை சந்தித்து புகார் அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பி.வி.சுனில் குமார், பி.எஸ்.ஆர்.ஆஞ்சநேயுலு மற்றும் பிற போலீஸ் அதிகாரிகள் தன்னை பெல்ட்கள் மற்றும் தடிகளால் தாக்கினர்.
    • தனக்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தெரிந்தும் என்னை தாக்கினர்.

    ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் ரெட்டி மற்றும் 2 முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 பேர் மீது தெலுங்குதேச கட்சியின் எம்எல்ஏ அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

    ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் தனக்கு எதிராக கிரிமினல் சதித்திட்டம் தீட்டியதாக உண்டி எம்எல்ஏ கே ரகுராம கிருஷ்ண ராஜு தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார். 

    அவரது புகாரில், 2021-ம் ஆண்டில் ஐதராபாத்தில் சிஐடி என்னை கைது செய்தது. அப்போது ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பிற அதிகாரிகள் தனக்கு எதிராக ஒரு கிரிமினல் "சதி" திட்டம் தீட்டினர்.

    மே 14, 2021 அன்று, நான் முறையான நடைமுறையின்றி கைது செய்யப்பட்டேன். என்னை கொடுமைப்படுத்தினர். அதுமட்டும் இல்லாமல் சட்டவிரோதமாக போலீஸ் வாகனத்திற்குள் இழுத்துச் சென்றனர். அதே இரவில் வலுக்கட்டாயமாக குண்டூருக்கு கொண்டு சென்றனர்.

    பி.வி.சுனில் குமார், பி.எஸ்.ஆர்.ஆஞ்சநேயுலு மற்றும் பிற போலீஸ் அதிகாரிகள் தன்னை பெல்ட்கள் மற்றும் தடிகளால் தாக்கினர். இதய நோய்க்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள கூட அனுமதிக்கவில்லை. தனக்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது அதிகாரிகளுக்குத் தெரியும்.

    இது தெரிந்தும் சில அதிகாரிகள் எனது மார்பில் அமர்ந்து என்னை கொல்லும் முயற்சியில் அழுத்தம் கொடுத்தனர். மேலும் எனது தொலைபேசியை எடுத்துச் சென்று அதன் பாஸ்வேடை கூறுமாறு தாக்கினர்.

    அதனை தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். அங்கு மருத்துவர் பிரபாவதி எனக்கு மோசமாக சிகிச்சை அளித்தார். காவல்துறை அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் மருத்துவர் போலி மருத்துவ சான்றிதழ்களை வழங்கினார்.

    மேலும், அப்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சித்தால் கொலை செய்து விடுவதாக பிவி சுனில் குமார் மிரட்டினார்.

    இந்த வழக்கில் குண்டூர் அரசு பொது மருத்துவமனையின் முன்னாள் கண்காணிப்பாளர் பிரபாவதி, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி விஜய் பால் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    • சந்திரபாபு நாயுடு பழிவாங்கும் அரசியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
    • மாநிலத்தில் சட்டமும் நீதியும் முற்றிலும் மறைந்துவிட்டன.

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்க, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராக பதவி ஏற்றார்.

    இந்த நிலையில் குண்டூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகம் இடிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு பழிவாங்கும் அரசியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார் என கட்சி அலுவலக இடிப்பு குறித்து ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அடக்குமுறையை கையில் எடுத்துள்ளார். கிட்டத்தட்ட கட்டி முடிக்கப்பட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகத்தை சர்வாதிகாரி போல் புல்டோஸர் மூலம் இடித்துள்ளார். சந்திரபாபு நாயுடு பழிவாங்கும் அரசியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் புறக்கணிக்கப்பட்டன. மாநிலத்தில் சட்டமும் நீதியும் முற்றிலும் மறைந்துவிட்டன.

    சந்திரபாபு நாயுடுவின் ஐந்தாண்டு கால ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்ற செய்தியை இந்த சம்பவத்தின் மூலம் தந்துள்ளார். இந்த அச்சுறுத்தல்கள், வன்முறைகளுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அடிபணியாது. பின்வாங்கவும் செய்யாது. மக்களுக்காக கடுமையாக போராடுவோம்.

    இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • தேர்லுக்கு பின் கிரகப்பிரவேசம் நடத்தலாம் என ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
    • புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தோல்வி அடைந்தார். தெலுங்கு தேச கட்சி பெரும்பான்மையான வெற்றி பெற்று 4-வது முறையாக ஆந்திராவின் முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக்கொண்டார். ஆட்சி மாறியதும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரச்சனைகளும் வரிசை கட்டி இருக்கிறது.

    கடந்த 15-ந்தேதி, தெலுங்கானா மாநிலம் ஐதாராபாத்தில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டில் வீட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் புல்டோசர் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது.

    இந்நிலையில், ரூ.500 கோடி மதிப்பில் அரண்மனை போன்ற பங்களாவை ஜெகன்மோகன் கட்டி உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் சுற்றுலா பகுதிகளில் ஒன்றான ரிஷிகொண்டா என்ற மலைப்பகுதியில் இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது.


    இந்த பங்களா தொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தள பக்கத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி பகிர்ந்து, இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

    கண்ணாடிகள், கிரானைட்கள் என மிக பிரம்மாண்டாக கட்டப்பட்டுள்ள பங்களாவில் பாத்ரூம் தொட்டிக்கு மட்டும் ரூ.25 லட்சம் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பங்களாவை அரசின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஜெகன்மோகன் ரெட்டி மறுபடியும் ஆட்சிக்கு வருவார் என்ற நம்பிக்கையில் தான் இந்த பங்களா கட்டப்பட்டுள்ளதாகவும் தேர்லுக்கு பின் கிரகப்பிரவேசம் நடத்தலாம் என ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • தீர்ப்பு உண்மையில் நிறைவேற்றப்பட்டது என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
    • ஜனநாயகத்தைப் பின்பற்றும் வளர்ந்த நாடுகளே EVM முறை அன்றி வாக்குச் சீட்டு முறையையே பின்பற்றுகிறது.

    உலகப் பணக்காரர் எலான் மஸ்க் EVM வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளதால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறிய கருத்து உலக அரசியல் அரங்கில் பெரும் விவாதங்களைக் கிளம்பியுள்ளது.

    குறிப்பாக இந்தியாவில் மக்களவைத் தேர்தல் சமயத்தில் EVM மீதான நம்பகத்தன்மையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வியெழுப்பியிருந்த நிலையில் தேர்தலுக்குப் பின் சற்று தனித்திருந்த இந்த விவாதத்தை எலான் மஸ்க்கின் தற்போதைய கருத்து மீண்டும் கிளறிவிட்டுள்ளது.

    மஸ்க்கின் பதிவை மேற்கோள்காட்டி இந்தியாவில் EVM கள் முறைகேடு செய்வதற்கான கருப்பு பேட்டி மாதிரி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் EVM முறைக்கு எதிராக எலான் மஸ்க்கின் கருத்தைப் பகிர்ந்தனர்.

    இந்நிலையில்தான் ஆந்திர பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலோடு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிடம் ஆட்சியைப் பறிகொடுத்த ஒய்எஸ்ஆர் கட்சித் தலைவரும் முன்னால் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி EVM விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டால் அது நிறவேற்றப்படுவதுடன் மட்டுமிடின்றி அந்த தீர்ப்பு உண்மையில் நிறைவேற்றப்பட்டது என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதுபோலவே ஜனநாய நாடு என்று கூறுவதை விட அங்கு ஜனநாயக முறைப்படியே அனைத்தும் நடக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். தேர்தல் நடைமுறைகளில் ஜனநாயகத்தைப் பின்பற்றும் வளர்ந்த நாடுகளே EVM முறை அன்றி வாக்குச் சீட்டு முறையையே பின்பற்றுகிறது. நாமும் ஜனநாயகத்தைக் காப்பற்ற அந்த திசையை நோக்கியே பயணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்  

    • மாநிலத்தின் பல பகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் ஜகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிடருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
    • கர்னூல் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் தெலுங்கு தேச காட்சியைச் சேர்ந்த கௌரிநாத் சௌத்திரியை கத்தி மற்றும் கோடரியுடன் வந்த மர்ம நபர்கள் மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

    பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியுள்ளது . மொத்தம் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் 135 இடங்களிலும், கூட்டணி காட்சிகளான பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜன சேனா 21 இடங்களிலும் வென்றுள்ளது.

    இந்நிலையில் மாநிலத்தின் பல பகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் ஜகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிடருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.கர்னூல் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் தெலுங்கு தேச காட்சியைச் சேர்ந்த கௌரிநாத் சௌத்திரியை கத்தி மற்றும் கோடரியுடன் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

    ஒய்.எஸ்.ஆர் கட்சியினரே இந்த கொலையை செய்ததாக தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த கொலைக்கு கண்டம் தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடுவும் அவரது மகன் நாரா லோகேஷும், கௌரிநாத் கொலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தொடர்பு உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை முனவித்துள்ளனர். மேலும் 'தேர்தலில் தோற்ற பிறகும் ஜெகன் ரத்த சரித்திரத்தை எழுதி வருகிறார், இந்த அரசியல் கொலைகளை ஜெகன் நிறுத்த வில்லை என்றால் விளைவு விபரீதமாக இருக்கும்' என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

    இதற்கிடையில் தெலுங்கு தேசம் கட்சியினர் நாரா லோகேஷ் படத்திற்கு முன் ஒய்.எஸ்.ஆர் கட்சி தொண்டரை மண்டியிட வைத்து மன்னிப்பு கேட்கச் சொல்லி துன்புறுத்தும் வீடியோவை பகிர்ந்து, தலித்துகளின் உயிருக்கு தெலுங்கு தேசம் மிகப்பெரிய ஆபத்தாக மாறியுள்ளது என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே நாளை சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலைவராக பதவியேற்க உள்ளது குறிபிடித்தக்கது. 

    • நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து நடிகர் பவன் கல்யாணுக்கு எதிராகவும் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
    • ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி அடைந்தால் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடையில்லாமல் நடப்பேன் என்று ஸ்ரீரெட்டி சொன்னதாக ஒரு தகவல் பரவி வந்தது.

    நடிகர்கள் மீது பாலியல் புகார் சொல்லி தெலுங்கு பட உலகை கலங்கடித்த நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து நடிகர் பவன் கல்யாணுக்கு எதிராகவும் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இதனால் பவன் கல்யாண் ரசிகர்கள் ஸ்ரீரெட்டியை கண்டித்து வந்தனர். ஆந்திர தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி அடைந்தால் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடையில்லாமல் நடப்பேன் என்று ஸ்ரீரெட்டி சொன்னதாக ஒரு தகவல் பரவி வந்தது.

    தற்போது ஜெகன் மோகன் கட்சி தோல்வி அடைந்துள்ள நிலையில், எப்போது ஆடை இல்லாமல் நடக்கப்போகிறீர்கள் என்று சமூக வலைத்தளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

    இதற்கு பதிலடி கொடுத்து ஸ்ரீரெட்டி கூறும்போது, "நான் ஆடை இல்லாமல் நடப்பேன் என்று எப்போதும் சொன்னது இல்லை. நான் அப்படி சொன்னேன் என்று ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள். ஒருவேளை நான் அப்படி சொன்னேன் என்று நீங்கள் நிரூபித்தால் கண்டிப்பாக விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடை இல்லாமல் நடப்பேன். நான் எனது சமூக வலைத்தளங்களளில் எந்த பதிவையும் நீக்க போவது இல்லை. உங்களுடைய கேலிக்கும், கிண்டலுக்கும் பயப்படுகிறவள் நான் இல்லை. உங்களை துணிச்சலாக எதிர்கொள்வேன்'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.


    • ஜொகன்மோகன் ரெட்டி மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோர் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் தெலுங்குதேசம் பா.ஜ.க.பவன் கல்யாண் கூட்டணி 21 இடங்களில் வெற்றி பெற்றது. மீதமுள்ள 4 எம்.பி. தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

    மேலும் ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் மேல் சபையில் 11 எம்.பி.க்கள் உள்ளனர். ஆந்திராவில் தேர்தலின் பொது பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

    மேலும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் வழக்கு பதிவு செய்யப்படாமலே கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் ஜொகன்மோகன் ரெட்டி மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன. சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாக பொறுப்பேற்றதும் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவருடைய கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படுகிறது.

    இதனால் ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிலர் கட்சி தாவ வாய்ப்பு உள்ளது.

    இதனை தடுக்க ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தி வருகிறார். சில எம்.பி.க்கள் பா.ஜ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கலாம் அதன்மூலம் தெலுங்கு தேசம் கட்சி எடுக்கும் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியும் என கூறியுள்ளனர்.

    இது குறித்து ஜெகன்மோகன் ரெட்டி தீவிரமாக ஆலோசித்து வருவதாக அவருடைய கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஏற்கனவே சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோர் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளனர்.

    ஜெகன்மோகன் ரெட்டியும் ஆதரவு அளித்தால் ஆந்திர மாநிலத்தில் உள்ள 25 எம்.பி.க்களின் முழுமையான ஆதரவு பா.ஜ.க.வுக்கு. கிடைக்கும்.

    இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
    • தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு அடுத்த வாரம் பதவியேற்க உள்ளார்.

    ஆந்திர பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரை அந்த பகுதியில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இந்த கடற்கரை சார்ந்த சுற்றுலா தலத்திற்கு, முன்னதாக இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் - அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டு இருந்தது.

    எனினும், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, இந்த சுற்றுலா தலத்திற்கு ஒய்.எஸ்.ஆர். வியூ பாயிண்ட் என பெயர் மாற்றம் செய்தார். இவரது இந்த நடவடிக்கைக்கு அப்போதைய எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

    சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜென் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்தது. இதனால் ஆந்திராவின் அடுத்த முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு அடுத்த வாரம் பதவியேற்க உள்ளார்.

    இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர். வியூ பாயிண்ட் கடற்கரையின் பெயர் பலகையில் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் அப்துல் கலாம் வியூ பாயிண்ட் என்ற பழைய பெயரை மீண்டும் ஸ்டிக்கரிங் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    • தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஜூன் 9-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
    • முதல் மந்திரி ஜெகன் ரெட்டி தனது ராஜினாமாவை கவர்னரிடம் அளித்துள்ளார்.

    அமராவதி:

    பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2-ம் தேதி முடிவடைந்ததால் கடந்த 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

    ஆந்திராவில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 175 ஆகும். இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். இந்த தேர்தலில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் தனித்துப் போட்டியிட்டது.

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும், ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜனதா 10 இடங்களிலும் போட்டியிட்டது.வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே தெலுங்கு தேசம்- பா.ஜனதா கூட்டணி முன்னிலையில் இருந்தது.

    ஆந்திர சட்டசபை தொகுதிகளில் 175-ல் 158 இடங்களில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. கூட்டணி இல்லாமல் தனித்து 131 தொகுதிகளில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது.

    ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமோக வெற்றி பெற்று வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜூன் 9-ம் தேதி அமராவதியில் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அமோக வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஆந்திர கவர்னர் அப்துல் நசீரிடம் ஜெகன்மோகன் ரெட்டி தனது ராஜினாமா கடிதத்தை இன்று அளித்துள்ளார்.

    • இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் மும்முரமாக நடந்து வருகிறது.
    • கிட்டத்தட்ட பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் வெற்றியை உறுதி செய்துள்ளார்.

    இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் மும்முரமாக நடந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொகுதிகளில் பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடந்த தேர்தலில் பெற்றதை விட கூடுதல் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    ஆந்திராவில் ஜன சேனா கட்சியை தொடங்கியவர் நடிகர் பவன் கல்யாண், இவர் இந்த சட்டமன்ற தேர்தலில் பிதாபுரம் தொகுதியில் போடியிட்டார். அதே தொகுதியில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சி சார்பாக வங்கா கீதா விஸ்வனாதம் போட்டியிட்டார்.

    தற்போதைய நிலையில் பவன் கல்யாண் 80,161 வாக்குகளை பெற்றுள்ளார். வாங்கா கீதாவை விட 44,790 வாக்கு வித்தியாச்சத்தில் முன்னிலையில் உள்ளார். கிட்டத்தட்ட பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் வெற்றியை உறுதி செய்துள்ளார்.

    இதை கொண்டாடும் வகையில் பவன் கல்யாண் தற்பொழுது நடிக்கவிருக்கும் தே கால் ஹிம் ஓஜி (They Call Him OG) திரைப்படம் சார்பாக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இந்த போஸ்டரில் நெருப்பு பற்றி எரியும் சாரில் பவன் கல்யாண் மிக ஸ்டைலாக உட்கார்ந்து இருப்பது போல் காட்சி அமைந்துள்ளது. இந்த போஸ்டர் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×