search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chiranjeevi"

    • இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் இந்தாண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • தனது அப்பா சிரஞ்சீவிக்கு ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் என்ற சொகுசு காரை ராம் சரண் வாங்கி கொடுத்தார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவான ராம்சரண் ஆடம்பர சொகுசு கார்களை வாங்கி குவிப்பதில் ஆர்வம் உள்ளவர். தற்போது அவர் 7.5 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரை வாங்கியுள்ளார்.

    கருப்பு நிறத்திலுள்ள இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் இந்தாண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு செல்வதற்காக ஹைதராபாத் விமான நிலையத்திற்கு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இந்த புதிய ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்து இறங்கினார் ராம் சரண். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    அண்மையில் தனது அப்பா சிரஞ்சீவிக்கு ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் என்ற சொகுசு காரை ராம் சரண் வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராம் சரணிடம் உள்ள சொகுசு கார்கள் :

    மெர்சிடிஸ் - மேபேக் ஜிஎல்எஸ் 600 - ரூ. 4 கோடி

    ஆஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் வி 8 - ரூ 3.2 கோடி

    ஃபெராரி போர்டோஃபினோ - ரூ 3.50 கோடி

    ரேஞ்ச் ரோவர் ஆக்டோபயோகிராபி - ரூ 2.75 கோடி

    பி.எம்.டபுள்யூ 7 சீரிஸ் - ரூ. 1.75 கோடி

    மெர்சிடிஸ் - பென்ஸ் ஜிஎல்இ 450 ஏஎம்ஜி கூபே ரூ.1 கோடி

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான காட் ஃபாதர் திரைப்படத்தை மோகன் ராஜா இயக்கினார்.
    • நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனது ஜன சேனா கட்சி மூலம் களம் கண்டார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மோகன் ராஜா. இவர் இயக்கத்தில் வெளியான பல்வேறு படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் இவர் எழுதி இயக்கிய தனி ஒருவன் படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

    கடந்த ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான காட் ஃபாதர் திரைப்படத்தை மோகன் ராஜா இயக்கினார். இப்படம் மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான லூசிஃபர் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். காட் ஃபாதர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    அதைத்தொடர்ந்து இயக்குநர் மோகன் ராஜா சிரஞ்சீவியை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. மேலும் இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது. சிரஞ்சீவியின் சகோதரர், நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனது ஜன சேனா கட்சி மூலம் களம் கண்டார்.

    தேர்தலில் அவரது ஜன சேனா கட்சி வேட்பாளர்கள் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இதையடுத்து ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் புதிய முதலமைச்சராக சந்திரபாபு நாயுடுவும், துணை முதல்வராக பவன் கல்யாணும் பதவியேற்றனர். இவர்களுடன் அமைச்சர்கள் பதவியேற்பும் நடைபெற்றது.

    இதுகுறித்து இயக்குநர் மோகன் ராஜா வாழ்த்து கூறி அவரது எக்ஸ் தளத்தில் பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் "பவன் கல்யான் காரு மற்றும் சிரஞ்சீவி காரு- க்கும் இடையே இருக்கும் பந்தத்தை காண நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும். எதிர்கால நோக்கம் கொண்ட தலைவர். எதிர்காலம் நல்ல நபரின் கைகளில் தான் இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.

    விரைவில் மோகன் ராஜா இயக்கவிருக்கும் சிரஞ்சீவி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழா இன்று காலை விஜயவாடாவில் பிரமாண்டமாக நடந்தது.
    • சந்திரபாபு நாயுடுவை கட்டியணைத்து வாழ்த்திய மோடி, மேடையில் இருந்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து ஏனைய பிரபலங்களை நலம் விசாரித்தார்.

    ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்குதேசம் கட்சி அமோக வெற்றி பெற்றதை அடுத்து ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழா இன்று காலை விஜயவாடாவில் பிரமாண்டமாக நடந்தது.

    விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜேபி நட்டா, தமிழக பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா,மகாராஷ்டிரா முதலவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் ஏனைய அரசியல் சினிமா பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

    முதலில் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவரை அடுத்து ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணும் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் நசீர் அகமது பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    சந்திரபாபு நாயுடுவை கட்டியணைத்து வாழ்த்திய மோடி, மேடையில் இருந்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து ஏனைய பிரபலங்களை நலம் விசாரித்தார். பவன் கல்யாணும் அவரது அண்ணன் சிரஞ்சீவியும் மோடியை மேடைக்கு நடுவே அழைத்து வந்து கைகளைக் கோர்த்து உயர்த்திக்காட்டினர்.

    அவர்கள் இருவருடனும் மோடி குதூகலமாக உரையாடினார். அப்போது ரஜினிகாந்த், பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் மேடைக்கு வரவே சந்திரபாபு நாயுடு மோடியை அவர்களிடம் அழைத்துச்சென்றார். ரஜினிகாந்த்துடன் கை குலுக்கிய மோடி, லதா ரஜினிகாந்திடம் நலம் விசாரித்தார். பின்னர் அருகில் நின்றிருந்த பாலகிருஷ்ணா, தமிழிசை ஆகியோருக்கு உற்சாகமாக வணக்கம் வைத்தார். பிரபலங்கள் பலர் ஓரே மேடையில் நிறைந்திருந்த இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

    • எனது வழிகாட்டியும் நலம் விரும்புபவருமான ஸ்ரீ ராமோஜி ராவ் அவர்களின் மறைவைக் கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன்.
    • பதவியேற்பு விழா முடிந்ததும் அவரை சந்திக்க விரும்பினேன்.

    ராமோஜி ராவ் ஃபிலிம்சிட்டி, ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமேஜி ராவ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.

    மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமோஜி ராவ் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.45 மணிக்கு காலமானார்.

    இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பதிவில் இரங்களை தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    எனது வழிகாட்டியும் நலம் விரும்புபவருமான ஸ்ரீ ராமோஜி ராவ் அவர்களின் மறைவைக் கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன். பத்திரிகை, சினிமா, அரசியலில் சிறந்த கிங் மேக்கராக வரலாறு படைத்தவர். அவர் என் வாழ்க்கையில் எனக்கு வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் இருந்தார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று கூறியுள்ளார்.

    ராமோஜி பிலிம் சிட்டி நிறுவனர் ராமோஜி ராவுக்கு ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் அஞ்சலி நேரில் சென்று அஞ்சலி செலுத்தின்ர்.

    ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் கூறுகையில், "ராமோஜி ராவின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. பதவியேற்பு விழா முடிந்ததும் அவரை சந்திக்க விரும்பினேன். கடந்த ஒன்றரை தசாப்தங்களில் அரசுகள் அவரை மிகவும் தொந்தரவு செய்தன, ஆனால் அவர் இன்று வரை மக்கள் பக்கம் நின்றார். அவர் தெலுங்கு திரையுலகிற்கு நிறைய உள்கட்டமைப்புகளை உருவாக்கி இருக்கிறார். அவரது குடும்பத்திற்கு கடவுள் பலம் கொடுக்க ஜனசேனா சார்பாகவும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

    இந்நிலையில் திரைப்பட நடிகரும், பத்ம விபூஷண் விருது பெற்றவருமான சிரஞ்சீவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    அவர் கூறுகையில், "அவரது கனவை அவரது வாரிசுகள் முன்னெடுத்துச் சென்று நிறைவேற்றுவார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். எல்லோரும் அவருக்குள் ஒரு பெரிய மனிதரைப் பார்த்திருக்கலாம், ஆனால் நான் அவரிடம் ஒரு சிறு குழந்தையைப் பார்த்தேன். 2009 இல், நான் பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்காக அவரை அடிக்கடி சந்தித்து ஆலோசனை பெறுவது வழக்கம்.. தனது கருத்துக்களை டைரியில் பல்வேறு வண்ண மைகளால் எழுதுவார் அவரது குடும்பம் மட்டுமல்ல, தெலுங்கு மக்களும் சிறந்த மனிதரை இழந்துவிட்டார்கள் என்று எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

    • நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில், மேரு மலையே தலைவணங்கும் அளவுக்கு வாழ்ந்த ராமோஜி ராவின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, இயக்குனர் ராம் கோபால் வர்மா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

    ராமோஜி ராவ் ஃபிலிம்சிட்டி, ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமேஜி ராவ் (87) உடல்நகுறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.45 மணிக்கு காலமானார்.

    ராமோஜி பிலிம் சிட்டியை நிறுவியதன் மூலம் ஐதராபாத் மற்றும் திரைப்படத் துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் ராமோஜி ராவ். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், 'ராமோஜி ராவ் இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர். அவருடன் பல முறை உரையாடுவதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி' என்று பதிவிட்டுள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில், மேரு மலையே தலைவணங்கும் அளவுக்கு வாழ்ந்த ராமோஜி ராவின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

    ஜுனியர் என்.டி.ஆர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்திய சினிமாவிலும் பத்திரிக்கைத் துறையிலும் தீர்க்கதரிசியாக விளங்கிய ராமோஜி ராவின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். எனது முதல் படமான நின்னு சூடலனி உருவாக காரணமாக இருந்த அவரை என்றென்றைக்கும் நினைவில் வைத்திருப்பேன். அவரது ஆன்மா சாந்தியடைவதாக. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

    மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, இயக்குனர் ராம் கோபால் வர்மா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 

    • சிரஞ்சீவி குடும்பத்தினர் பவன் கல்யாணுக்கு மலர் தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
    • பவன் கல்யாண் சிரஞ்சீவி மற்றும் அவரது மனைவி சுரேகா காலில் விழுந்து ஆசி பெற்றார்.

    ஆந்திராவில் நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றார்.

    அவருடைய கட்சி போட்டியிட்ட 21 இடங்களிலும் வெற்றி பெற்றது. பவன் கல்யாண் தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல் முறையாக மெகா ஸ்டாரும், சகோதரருமான சிரஞ்சீவி வீட்டிற்கு தனது மனைவி அனா மற்றும் மகன் அகிராவுடன் சென்றார்.

    சிரஞ்சீவி குடும்பத்தினர் பவன் கல்யாணுக்கு மலர் தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

    பிரமாண்ட மாலை அணிவித்து வழி நெடுகிலும் பூக்கள் தூவி வரவேற்றனர். அப்போது பவன் கல்யாண் சிரஞ்சீவி மற்றும் அவரது மனைவி சுரேகா காலில் விழுந்து ஆசி பெற்றார்.


    சிரஞ்சீவியும் அவரது மனைவியும் பவன் கல்யாணை கட்டி அணைத்து ஆனந்த கண்ணீர் வடித்தனர். பவன் கல்யாணுக்கு சிரஞ்சீவி ஆள் உயர மாலை அணிவித்து புத்தாடைகளை வழங்கினார்.

    அதேபோல் பவன் கல்யாண் தாய் அஞ்சனாதேவியும் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார்.

    நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், ஸ்ரீஜா, சாய் தரம்தேஜ், நந்தன், வருண் தேஜ், உபாசனா உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பத்தினரும் பவன் கல்யாணுக்கு உணர்ச்சி பொங்க வாழ்த்து தெரிவித்தனர்.

    பின்னர் கேக் வெட்டி கொண்டாடினர். ஒட்டுமொத்த குடும்பத்தினரும் ஆனந்த கண்ணீருடன் பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


    • இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
    • ஐதராபாத்தில் நடிகர் அஜித் குமார் சிரஞ்சீவியை சந்தித்தார்.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக விளங்கியவர் ஷாலினி. நடிகர் அஜித் குமாரை திருமணம் செய்து கொண்ட ஷாலினி, அதன் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவருக்கு பேபி ஷாம்லி என்ற தங்கையும், ரிச்சர்ட் ரிஷி என்ற சகோததரரும் உண்டு.

    இந்த நிலையில், ஷாலினி அஜித்குமார் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி தனது சகோதரி மற்றும் சகோதரருடன் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. சிரஞ்சீவி தற்போது விஷ்வம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வசிஷ்டா இயக்குகிறார்.

     


    முன்னதாக விஷ்வம்பரா படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற நடிகர் அஜித் குமார் நடிகர் சிரஞ்சீவியை சந்தித்தார். மேலும், படக்குழுவுக்கு தனது வாழ்த்தையும் தெரிவித்தார். இது தொடர்பான படங்கள் வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.
    • இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். இவர் தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும், இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

    இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதன்படி ஐதராபாத் நகரில் படப்பிடிப்புக்கு இடையே, நடிகர் அஜித் குமார் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவியை சந்தித்துள்ளார்.


     

    ஐதராபாத் நகரில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் விஷ்வம்பரா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. விஷம்பரா படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற நடிகர் அஜித் குமார் சிரஞ்சீவி மற்றும் படக்குழுவை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் சிரஞ்சீவி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிரஞ்சீவி நடிப்பில் வெளியான காட்ஃபாதர் படத்தை இயக்கினார்.
    • சிரஞ்சீவி முதன்மை பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மோகன் ராஜா. இவர் இயக்கத்தில் வெளியான பல்வேறு படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் இவர் எழுதி இயக்கிய தனி ஒருவன் படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில், தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகளை இயக்குநர் மோகன் ராஜா துவங்கினார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக இயக்குநர் மோகன் ராஜா தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான காட்ஃபாதர் படத்தை இயக்கினார்.

    மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக் படம் தான் காட்ஃபாதர். இந்த படமும் வெற்றி பெற்றதை அடுத்து, இயக்குநர் மோகன் ராஜா மீண்டும் தெலுங்கு படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்திலும் சிரஞ்சீவி முதன்மை பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    மோகன் ராஜா இயக்கும் இந்த படத்தின் கதையை பி.வி.எஸ். ரவி எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கான முதன்மை பணிகள் துவங்கி நடைபெற்று வருவதாகவும், படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத வாக்கில் துவங்கும் என்று தெரிகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பவன் கல்யாண் ஜன சேனா கட்சி சார்பாக பிதம்புரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
    • இந்நிலையில் இன்று ஆந்திரா மாநிலம் நாண்ட்யாவில் உள்ள அவரது நண்பரும் YSRP நாண்டியால் தொகுதியில் வேட்பாளாராக நிற்கும் ஷில்பா ரவிந்திர கிஷோர் ரெட்டி இல்லத்திற்கு திடீர் வருகை கொடுத்தார்.

    பவன் கல்யாண் ஜன சேனா கட்சி சார்பாக பிதம்புரம் தொகுதியில் ஆந்திரா தேர்தல் 2024 போட்டியிடுகிறார். பவன் கல்யாணுக்கு அமோக ஆதரவு கிடைத்துக் கொண்டு இருக்கும் நிலையில். மே 7 ஆம் தேதி அல்லு அர்ஜூன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவினை பதிவிட்டார் அதில் பவன் கல்யாண் காருவின் மீது எனக்கு எப்பொழுது மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. அவர் எடுத்துக் கொண்ட பாதையை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. என்னுடைய ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு என்று பதிவிட்டு இருந்தார்.

    இந்நிலையில் இன்று ஆந்திரா மாநிலம் நாண்ட்யாவில் உள்ள அவரது நண்பரும் YSRP நாண்டியால் தொகுதியில் வேட்பாளாராக் நிற்கும் ஷில்பா ரவிந்திர கிஷோர் ரெட்டி இல்லத்திற்கு திடீர் வருகை கொடுத்தார்.

    அதை அறிந்துக் கொண்ட ரசிகர்கள் ஷில்பா ரவிந்திராவின் வீட்டை சூழ்ந்துக் கொண்டனர். அவரைக் காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அவர்களுக்கு கையசைத்தும் நன்றி தெரிவித்தும் அன்பை பகிர்ந்துக்கொண்டார் அல்லு அர்ஜூன். பின் அவரது நண்பரான ஷில்பா ரெட்டிக்கு வாக்கு அளிக்குமாருக் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வீடியோவை சிரஞ்சீவியின் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
    • சிரஞ்சீவியின் வீடியோ ஆந்திர அரசியலில் பரபரப்பு.

    திருப்பதி:

    ஆந்திர மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அவருடைய தம்பி நடிகர் பவன் கல்யாண் பிதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.அவருக்கு ஆதரவாக சிரஞ்சீவி பிரசாரம் செய்து வருகிறார்.

    நேற்று அவர் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதில் என்னுடைய தம்பி தன்னை பற்றி சிந்திக்காமல் மக்களை பற்றி அதிகம் சிந்திக்கிறான்.

    ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு ஏதாவது செய்வேன் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் பவன் கல்யாண் விவசாயிகளின் கண்ணீரை துடைக்க தனது சொந்த பணத்தை செலவழித்து, நமது எல்லையை காக்கும் ராணுவ வீரர்களுக்கும் தாராளமாக நன்கொடை அளித்தார், மீனவர்களுக்கு உதவினார். இதையெல்லாம் பார்க்கும்போது, இவரைப் போன்ற ஒரு தலைவர் மக்களுக்குத் தேவை என்று உணர்கிறோம்.

    தனது வாழ்க்கையை அரசியலுக்காக அர்ப்பணித்துள்ளார் சட்டமன்றத்தில் அவரது குரல் ஒலிப்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

    இந்த வீடியோவை சிரஞ்சீவியின் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். சிரஞ்சீவியின் வீடியோ வைரலாகி வருகிறது. 

    • பிரசாரம் செய்வது போல வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலி வீடியோவை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் நடிகர் பவன் கல்யாண் தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடுகிறார்.

    அவருக்கு ஆதரவாக அவருடைய அண்ணன் நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த நடிகர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பவன் கல்யாணின் உறவினரான நடிகர் அல்லு அர்ஜுன் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாரம் செய்வது போல ஆந்திராவில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்ற தலைப்பில் வெளியான அந்த வீடியோவில் நடிகர் அல்லு அர்ஜுன் திறந்த வேனில் நின்று வாக்கு கேட்பது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த வீடியோ கடந்த 2022-ம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த இந்திய தின அணிவகுப்பில் நடிகர் அல்லு அர்ஜுன் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்டது. அதனை தற்போது தவறாக பரவ விட்டுள்ளனர்.

    இந்த போலி வீடியோவை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

    ×