என் மலர்
நீங்கள் தேடியது "ரம்யா கிருஷ்ணன்"
- ராஜசேகர் முக்கிய கதாபாத்திரத்தில், அதாவது தினேஷ் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறாராம்.
- ராஜசேகர் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இதற்கு முன்பு ‘அல்லரி பிரியுடு', ‘பலராம கிருஷ்ணனுலு' போன்ற படங்களில் ஒன்றாக இணைந்து நடித்தனர்.
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா ஆகியோர் நடித்த 'லப்பர் பந்து' படம் கடந்த ஆண்டில் வெளியாகி பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் பணிகளில் களமிறங்கியுள்ளார், நடிகர் ராஜசேகர். இந்த படத்தை சசி இயக்கப்போகிறாராம்.
ராஜசேகர் முக்கிய கதாபாத்திரத்தில், அதாவது தினேஷ் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறாராம். அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
ராஜசேகர் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இதற்கு முன்பு 'அல்லரி பிரியுடு', 'பலராம கிருஷ்ணனுலு' போன்ற படங்களில் ஒன்றாக இணைந்து நடித்தனர்.
தற்போது 'லப்பர் பந்து' ரீமேக் படத்துக்காக 27 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
- மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
- இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது.
1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் சந்தித்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, சென்னை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட்டது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இந்த ஒன்றுகூடல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது
- மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் சந்தித்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனர்.

2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, சென்னை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட்டுள்ளது.
- அட்லி, தற்போது அல்லு அர்ஜூன்-தீபிகா படுகோனே நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார்.
- அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என தமிழ் படங்களில் தொடர் வெற்றி படங்களை கொடுத்த அட்லி, பாலிவுட் சினிமாவிலும் அசத்தினார். ஷாருக்கான்-நயன்தாரா கூட்டணியில் அவர் இயக்கிய 'ஜவான்' படம் ரூ.1,000 கோடியை தாண்டி வசூல் குவித்து சாதனை படைத்தது.
அட்லி, தற்போது அல்லு அர்ஜூன்-தீபிகா படுகோனே நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தமாகி இருக்கிறாராம். படத்தில் அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
- நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்.
- இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு சமீபத்தில் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் பல கோடிகளை குவித்தது. இந்த நிலையில், ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு சமீபத்தில் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்தனர்.
தற்பொழுது படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது. இன்று கேரளாவில் உள்ள அட்டப்பாடி மலைதொடரில் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இந்த ஸ்கெடியுல் 35 நாட்கள் நடைப்பெறவுள்ளதாக கூறப்படுகிறது .
இந்நிலையில் படத்தில் ரஜினிகாந்திற்கு மனைவியாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் படையப்பா திரைப்படம் வெளியாகி 26 வருடங்கள் நிறைவு, ஜெயிலர் 2 படப்பிடிப்பின் முதல் நாள் என பழைய நினைவுகளை நினைவு கூறும் வகையில் அப்பதிவை பதிவிட்டுள்ளார்.
ஜெயிலர் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
- 90களின் காலகட்டத்தில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்கள் ரோஜா மற்றும் ரம்யா கிருஷ்ணன்.
- இவர்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது சந்தித்துள்ளனர்.
90களின் காலகட்டத்தில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்கள் ரோஜா மற்றும் ரம்யா கிருஷ்ணன். இவர்களின் படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இருவரும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தனர். இவர்கள் இருவரும் சினிமாவை தாண்டி நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்தது.

இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரோஜா இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை ரோஜா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து, நல்ல நண்பர்கள் நட்சத்திரம் போல. இன்னும் எனக்கு நினைவிருக்கிறது, நாம் சந்தித்தது சிரித்தது எல்லாம் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- கோலமாவு கோகிலா படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார் நெல்சன் திலிப்குமார்.
- கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெய்லர் படத்தை இயக்கினார்.
நயன்தாரா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு கோலமாவு கோகிலா படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார் நெல்சன் திலிப்குமார்.
படம் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக சிவக்கார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை இயக்கினார். டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால் நெல்சன் திலிப்குமாரின் புகழ் உச்சிற்கு சென்றது.
அடுத்ததாக விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கினார். இதற்கடுத்து கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெய்லர் படத்தை இயக்கினார். படத்தின் பாடல்கள் மிகவும் ஹிட்டானது. படம் மிகப் பெரிய வசூலை குவித்தது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்பொழுது நெல்சன் ஜெயிலர் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகிவுள்ளது. இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.இதனிடையே இயக்குநர் நெல்சன் தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை வைத்து ரசிகர்கள் இயக்குநர் நெல்சன் ஜெயிலர் 2 படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கமென்ட் செய்து வருகின்றனர்.
இந்த படத்தில் ரஜினிகாந்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். முதல் பாகத்தைப் போல் இப்பாகமும் மிகப் பெரிய வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சியை காதலித்து 2003-ல் ரம்யா கிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டார்.
- ரம்யா கிருஷ்ணன் மனிதர்களை நேசிப்பவர்.
தமிழ் திரையுலகில் 1980-களில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்த ரம்யா கிருஷ்ணன் பின்னர் குணசித்திர வேடங்களில் நடித்தார். பக்தி படங்களில் அம்மன் வேடம் ஏற்று நடித்து இருந்தார்.
ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. பாகுபலி படத்தில் ராஜமாதாவாக நடித்தும் பெயர் வாங்கினார். தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சியை காதலித்து 2003-ல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணனும், கிருஷ்ண வம்சியும் பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் விவாகரத்து செய்து பிரிய இருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது
இதற்கு கிருஷ்ண வம்சி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "நான் படப்பிடிப்புகளுக்காக ஐதராபாத்தில் இருக்கிறேன். ரம்யா கிருஷ்ணன் சென்னையில் இருக்கிறார். இதை வைத்து நாங்கள் பிரிய இருப்பதாக வதந்திகள் பரப்பி உள்ளனர். இதில் உண்மை இல்லை.
நாங்கள் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாததால் இப்படி வதந்தி பரவி இருக்கலாம். ஆனால் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகவே சென்று வருகிறோம். நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்துள்ளோம். ரம்யா கிருஷ்ணன் மனிதர்களை நேசிப்பவர். மிகவும் புத்திசாலி'' என்று சொல்லி விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
- ரஜினியின் 169-வது திரைப்படமான ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகி வைரலாகி வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

வசந்த் ரவி - ரம்யா கிருஷ்ணன்
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று காலை 11 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

யோகிபாபு - விநாயகன்
இந்நிலையில் இப்படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜெயிலர் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் இணைந்துள்ளதாக படக்குழு வீடியோவுடன் அறிவித்துள்ளது.









