என் மலர்
நீங்கள் தேடியது "Bhagyaraj"
- அவர் உடனே எழுந்து வந்து என் கையைப் பற்றிக்கொண்டு எப்படி இதை யோசித்தீர்கள் என்று வியந்தார்.
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று முன் தினம் விழா நடைபெற்றது.
இதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பாக்யராஜை வெகுவாக பாராட்டினார். இதற்கிடையே பாக்யராஜ் நேர்காணல் ஒன்று பங்கேற்று பேசியுள்ளார். அதில் ரஜினியின் தளபதி படத்திற்கு தான் யோசித்த வேறு மாதிரியான கிளைமாக்ஸ் குறித்து பாக்யராஜ் மனம் திறந்துள்ளார்.
1991 இல் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்மூட்டி திரைப்படம் வெளியாகி கிளாசிக் அந்தஸ்து பெற்றது அனைவரும் அறிந்ததே. மகாபாரதத்தில் துரியோதனன், கர்ணன் நட்பை இன்ஸபிரேசனாக கொண்டு அர்ஜுனனாக அரவிந்த் சாமியை வைத்து தளபதி கதையை மணிரத்னம் அமைத்திருப்பார்.
இந்த படத்தின் தாதா மம்மூட்டி தனக்கு இடையூறு தரும் கலெக்டர் அரவிந்த் சாமியை கொல்ல வேண்டும் என தனது உயிர் நண்பன், தளபதி ரஜினியிடம் கூறுவார். ஆனால் மம்மூட்டி இவ்வாறு சொல்வதற்கு முன் ரஜினி தனது தாயை சந்தித்து, அரவிந்த் சாமி தனது தம்பி என்பதை அறிந்துகொள்வார்.
எனவே மம்மூட்டி கேட்கும் போது தன்னால் கொலை செய்ய முடியாது என ரஜினி கூறுவார். ஒரு கட்டத்தில் அவன் என் தம்பி, எனது உயிரை எடுத்துக்கோ, நான் உன் உயிர் நண்பன் ஆனால் அவனை கொல்ல சொல்லாதே என மம்மூட்டி இடம் கூற, ரஜினியின் நட்பை பார்த்து அவர் பூரித்துப்போவார்.
நண்பனுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு சரணடையலாம் என அரவிந்த் சாமியை பார்க்க இருவரும் போக, வில்லன் அந்நேரம் வந்து துப்பாக்கியால் சுட்டவுடன் மமூட்டி ரஜினியின் கண் முன்னேயே உயிரிழப்பார். இது கதை.

நேர்காணலில் பாக்கியராஜ் கூறியதாவது, தளபதி படம் பார்க்கும்போது எனக்கு ஒன்று தோன்றியது. அவன் என் தம்பி, அவனை கொல்ல முடியாது என ரஜினி செல்லும்போது அந்த தேவா கதாபாத்திரத்தின் உயிர் நட்பு என்பது விழுந்துவிடுகிறது.
மம்மூட்டி சொன்னவுடன் எதுவும் சொல்லாமல் ரஜினி சிறு புன்னகையுடன் கையை நீட்டி துப்பாக்கியை வாங்கிக்கொண்டு தம்பியை கொல்ல புறப்பட வேண்டும்.
ரஜினி சென்றவுடன் அங்கு வரும் உண்மை தெரிந்த மற்றொருவன் இதை மாமூட்டியிடம் சொல்ல, மம்மூட்டி தனது நண்பன் தனக்காக தம்பியையே கொல்ல சென்றிருக்கிறான் என நெகிழ வேண்டும்.
ரஜினியை தடுக்க மம்மூட்டி கிளம்ப வேண்டும். மம்மூட்டி செல்லும் வழியில் வில்லன் கும்பல் அவரை இடைமறித்து தடுக்க வேண்டும். இப்போது ரஜினி அரவிந்த் சாமியை கொன்றுவிடுவாரா, அல்லது மம்மூட்டி வில்லன் கும்பலை சமாளித்து ரஜினியை சரியான நேரத்தில் தடுத்து நிறுத்துவாரா என்ற விறுவிறுப்பு படம் பார்பவர்களிடையே ஏற்படும்.
இதை ஏன் மணிரத்னம் யோசிக்கிக்கவில்லை என்று தெரியவில்லை. நீண்ட காலத்துக்கு பிறகு ரஜினியின் வீட்டுக்கு சென்று பேசிக்கொண்டிருந்தபோது இந்த மாற்று கிளைமாக்ஸை அவரிடம் கூறினேன்.
அவர் உடனே எழுந்து வந்து என் கையைப் பற்றிக்கொண்டு எப்படி இதை யோசித்தீர்கள் என்று வியந்தார். ஒரு திரைக்கதை எழுத்தாளனாக படம் பார்க்கும்போது எனக்கு இயல்பாகவே இது தோன்றியது. அந்த தேவா கதபாத்திரம் அந்த இடத்தில் சட்டென விழுந்துவிட்டதே என்று தோன்றியது என்று ரஜினியிடம் கூறினேன்" என்று தெரிவித்தார்.
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று விழா ஒன்று நடைபெற்றது.
அதில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்று பாக்யராஜ்-க்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-
இன்னொரு ஒரு நிகழ்வு. என் வாழ்க்கையிலே பாக்யராஜை மறக்க முடியாது. இங்க வந்ததுக்கு முக்கிய காரணம் கூட இதை சொல்லணும். 1995-ல் சிவாஜி சாருக்கு மலேசியாவில் விருது கொடுத்தார்கள்.
அதற்காக அவரை தமிழ் திரைப்படத்துறை பாராட்டணும், அது அரசும் சேர்ந்து பாராட்டணும் என்று சொல்லி சேப்பாக்கத்தில் மிகப்பெரிய விழா வைத்திருந்தார்கள். அதற்கு சிறப்பு விருந்தினர் முதலமைச்சர் தான் அவர் தலைமையில் தான் விழா.
விழாவில் நன்றி தெரிவித்து நான் பேசுகையில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்த்து கொஞ்சம் ஆவேசமாக பேசினேன். எப்பவுமே இந்த கோபத்துக்கு ஆயுள் கம்மி. ஆனால் கோபத்தில் உதிர்ந்த வார்த்தைக்கு ஆயுள் ரொம்ப அதிகம். இதனால் தான் கோபத்தில் இருக்கும்போது வார்த்தைகளை அளந்து, அளந்து பேசணும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
நான் ஆவேசமாக பேசும்போது முதலமைச்சருக்கு affect ஆகிடுச்சு. விழாவில் சிவாஜி சார் இருந்தாலும் கூட நான் ஏதோ பேசிட்டேன். அதன்பிறகு என்பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஸ்ரீதேவி ஏன் இப்படியெல்லாம் என்று கேட்டார்கள்.
ஆனால் எனக்கு ஒன்னும் புரியவில்லை. அதன் பிறகு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் என்னை நிறைய பேர் சூழ்ந்து தலையில் அடிக்கிறாங்க, திட்டுறாங்க... எனக்கு ஒன்னும் புரியவில்லை.
அந்த இடத்தில் எஸ்.ஐ. எல்லாம் இருக்காங்க. ஆனா அவங்க எதுவும் செய்யவில்லை. அப்போ பாக்யராஜ் ஓடி வந்து அவர்களை பார்த்து கத்தி என்னை வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். அதை என்னால் மறக்கவே முடியாது. அதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் கூட ஒன்றும் கிடையாது. அருமையான மனிதர், நீங்க நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று விழா ஒன்று நடைபெற்றது.
அதில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்று பாக்யராஜ்-க்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-
பாக்யராஜ்க்கு மிகப்பெரிய ப்ரஸண்ட் என்றால் நம்ம பூர்ணிமா பாக்யராஜ். அவர் கூட தங்கமகன் படத்தில் நடித்தேன். அப்போ அவங்க இந்தியில தான் பேசுவாங்க. மும்பையில் பிறந்து வளர்ந்தது. எல்லோர்கிட்டயும் இங்கிலீஷ்ல தான் பேசுவாங்க. யார்கிட்டயும் ரொம்ப பேசமாட்டாங்க.
அப்படி இருக்கும்போது இவங்க பாக்யராஜை கல்யாணம் பண்ணிக்கப்போறதா சொன்னப்போ என்னால நம்ப முடியலை. ஏன் என்றால் நம்ம ஆளுக்கு இங்கிலீஷ் தெரியாது, இந்தி சுத்தம்.. இது எப்படி என்று சொல்லும்போது.
இங்க பார்த்தீங்கன்னா பாக்யராஜை படப்பிடிப்பு தளத்தில் ஒரு தடவை இயக்குனராக, நடிகராக பார்த்தாங்கண்ணு சொன்னா ஆம்பளைங்களுக்கே அவர் மேல காதல் வரும்.
நான் இப்போ சொல்றேன். மாடலேஷன் எல்லாம் பாக்யராஜ் சொல்லி கொடுத்தது தாங்க எனக்கு. சில சப்ஜெட்களில் டவுட் வந்தது என்றால் பாக்யராஜ் கிட்ட தான் கேட்பேன். படையப்பா கதை குறித்து பாக்யராஜ்யிடம் கூப்பிட்டு சொன்னேன். அதற்கு அவர் கதையை கேட்டு சொன்னார்.
சார் கதை ரொம்ப நல்லா இருக்கு. நீலாம்பரி கேரக்டரை மட்டும் சரியா எழுதணும். அதை செய்தாலும் படம் ஹிட்ஆகிடும். படம் எங்கேயோ போயிடும் என்றார். அதேப்போல் பாபா படக்கதை சொல்லும் போது, இது கொஞ்சம் ரிஸ்க்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று விழா ஒன்று நடைபெற்றது.
அதில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்று பாக்யராஜ்-க்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-
என்னை பொறுத்தவரைக்கும் பாக்யராஜ்-க்கு கிடைக்க வேண்டிய மதிப்பு, மரியாதை, ஊதியம் கொஞ்சம் கூட கிடைக்கலை. அவர் எப்போதும் யாருக்கும் ஜால்ரா போட்டது கிடையாது. மனதில் என்ன பட்டதோ அதை உடனே சொல்லிவிடுவார். அதில் உண்மை இருக்கும் நியாயம் இருக்கும்.
மக்கள் திலகம், புரட்சி தலைவர் எம்ஜிஆர் சார் அவர்கள், என்னுடைய திரையுலக வாரிசு பாக்யராஜ் என்று சொன்னால் எந்த மாதிரி அவரை நேசித்திருப்பார்கள். அதுமட்டுமில்லை அவரே நேரில் வந்து திருமணத்தை நடத்தி வைத்தார். அவ்வளவு எளிதில் எம்ஜிஆர் இதயத்தில் போக முடியாது. எப்படி அண்ணா இதயத்தில் எம்ஜிஆர் சார் போனார்களோ அந்த மாதிரி எம்ஜிஆர் சார் இதயத்தில் பாக்யராஜ் போனார். அவர் இதயக்கனி.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று விழா ஒன்று நடைபெற்றது.
அதில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்று பாக்யராஜ்-க்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-
அனைவருக்கும் வணக்கம். இன்றைக்கு (நேற்று) பாக்யராஜ் பிறந்தநாள். அவரை சம்மதிக்க வைத்து இந்த விழாவை நடத்தணும் என்று பூர்ணிமா எடுத்த முயற்சி கொஞ்ச நஞ்சம் இல்ல. முதலே என்னிடம் சொன்னார்கள், நீங்கள் வந்தா தான் அந்த விழா நடத்துவேன் என்று. அதற்கு நான் கண்டிப்பா வர்றேன். பாக்யராஜ்-க்கு இல்லாததா என்று இந்த விழாவிற்கு வந்து இருக்கேன். 70-களில் 3 ராஜாக்கள் தமிழ் சினிமாவிற்கு வந்தார்கள். ஒன்று இளையராஜா, இன்னொன்று பாரதிராஜா, மற்றொன்று பாக்யராஜ். இந்த மூன்று பேரும் ஒவ்வொரு துறையிலும் பறந்தார்கள். இன்னும் பறந்துக்கிட்டு இருக்கிறார்கள். அதனால் தான் இத்தனை பேர் இங்கு வந்திருக்கிறீர்கள்.
அதுல வந்து இளையராஜா ஒன்லி இசை, பாரதிராஜா ஒன்லி திரைக்கதை, இயக்கம்... ஆனா நம்ம பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன், நடிப்பு, இசையும் பண்ணியிருக்கார். எல்லோருக்கும் தெரியும் திரைக்கதையில் எவ்வளவு வல்லவர் என்று. ஒரு கதை நல்லா இருந்தா கூட திரைக்கதை சரியில்லை என்று சொன்னால் அது எடுபடாது.
கதை சுமாரா இருந்தா கூட திரைக்கதை நல்லா அமைந்தால் அந்த படம் ரொம்ப நல்லா போகும். அந்த திரைக்கதை தான் தமிழ் சினிமாவுக்கு முதுகெலும்பு. அது முதுகெலும்பு நம்ம பாக்யராஜ் சார்.
இந்தியாவிலேயே திரைக்கதையில் மன்னர் என்று சொன்னால் சலீம் சாகீத். அதுக்கு பிறகு இணையா சொல்லணும் என்றால் நான் பாக்யராஜ் சாரை சொல்வேன்.
ஏன்னா இப்போ வந்து Action Oriented, Male oriented அதை தான் சலீம் சாகீத் பண்றார். ஆனா பாக்யராஜ் சார் எல்லா lady oriented படத்தில் வந்து ஹீரோயிசம் கொண்டு வந்தாங்க. அது சாதாரண விஷயம் இல்லை.
70-களில் ஸ்ரீதர் சார், பாலசந்தர் சார், கேஎஸ் கோபால கிருஷ்ணன் எல்லாரும் lady oriented படத்தை தான் எடுத்தாங்க. அதுல ஹீரோக்களுக்கு அவ்வளவா வேலை இருக்காது. இவர் அதில் ஒரு மாற்றம் கொண்டு வந்து லேடிஸ் வந்து மெயினா வந்தா கூட இவரோட அந்த கதாபாத்திரம் பார்க்கிறவர்களுக்கு காம்பீர் மாதிரி தெரிந்தா கூட சகல நல்ல குணங்களுடன் அந்த கதாபாத்திரம் ஜொலிக்கும்.
அந்த மாதிரி யாரும் பண்ணதே கிடையாது. ஒன்லி பாக்யராஜ். அப்போ பண்ண ஒரு சார்லி சாப்ளின். ஒவ்வொரு படத்தையும் புரட்சிக்கரமா எடுத்து இருப்பார். புரட்சிக்கரமா இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆறு அறிவு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.
- திருமாவளவன் இசைத்தட்டை வெளியிட்ட இயக்குனர் பாக்கியராஜ் பெற்றுக்கொண்டார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற ஆறு அறிவு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். இந்த விழாவில் திருமாவளவன் இசைத்தட்டை வெளியிட்ட இயக்குனர் பாக்கியராஜ் பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் பேசிய திருமாவளவன், "அடங்க மறு, அத்து மீறு என்றால் வன்முறை அல்ல. அடக்குமுறையை எதிர்த்து நிற்பது. இதை சரியாக புரிந்து கொள்ளாமல் கிண்டல் செய்வது ஆதிக்க சாதி உணர்வு" என்று காட்டமாக தெரிவித்தார்.
அடங்க மறு, அத்து மீறு என்று கூறி திருமாவளவன் வன்முறையை தூண்டுகிறார் என்று தொடர்ச்சியாக இணையத்தில் விமர்சனம் எழுந்த நிலையில், அதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.
- மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
- இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது.
1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் சந்தித்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, சென்னை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட்டது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இந்த ஒன்றுகூடல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது
- மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் சந்தித்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனர்.

2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, சென்னை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட்டுள்ளது.
- Origin Studios சார்பில் கண்ணதாசன் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.
- ராஜ்குமார் ரங்கசாமி இப்படத்தை இயக்குகிறார்.
Origin Studios சார்பில் கண்ணதாசன் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. Production NO 1 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ராஜ்குமார் ரங்கசாமி இப்படத்தை இயக்குகிறார். எல்.ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார். இவர் பொறியாளன், சட்டம் என் கையில் படத்திற்கு இசையமைத்தவர்.
குட் நைட், லவ்வர் , டூரிஸ்ட் ஃபேமிலி, போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த பரத் இப்படத்துக்கு எடிட்டிங் செய்கிறார். படம் பற்றி இயக்குனர் ராஜ்குமார் ரங்கசாமி கூறியதாவது:
இந்த உலகில் காதலும் அன்பும் அதன் இயல்பு தன்மையை மாற்றாமல் இருப்பதை நாம் ஒப்புக் கொள்ளும் அதே வேளையில் அவற்றின் வடிவம் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருப்பதை நாம் மறுக்க இயலாது.
90s கிட்ஸ், 2K கிட்ஸ் .. வரிசையில் இன்றைய இளைஞர்களை ஜெனரேஷன் ஆல்ஃபா என்று சொல்கிறார்கள்..
இவர்கள் 21 ஆம் நூற்றாண்டில் முழுமையாகப் பிறந்த முதல் தலைமுறை மற்றும் COVID-19 தொற்றுநோய் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அதிகரித்து வரும் ஆதிக்கத்தால் வடிவமைக்கப்பட்ட குழந்தைப் பருவத்தை அனுபவித்தவர்கள். எல்லா தருணங்களிலும் CELEBRETING MINDSET - ல் இருக்ககூடியது இந்த ஜென் தறைமுறை. இவர்கள் மிகவும் அட்வான்சாக யோசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சகிப்புத்தன்மை, வெறுப்புணர்வு மேலோங்கி இருக்கும் இந்த சூழலில் உறவுகள் என்பது வேர்களில் இருந்து கற்றுக் கொள்ளப்படாமல் அதை விட்டு விலகிய நிலையில் இன்றைய இளம் தலைமுறையினர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
இன்னொருவர் கருத்தை ஒத்து கொள்வதை தாண்டி அதை கேட்க கூட யாரும் தயாராக இருப்பதில்லை. ஆனால் அடிப்படையான ஒன்றை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எந்த தறைமுறையாயிருப்பினும் அதன் ரூட் அதாவது வேர் என்பது முக்கியம். வேர்களை விட்டு விலகாத ஒரு வாழ்க்கை வேண்டும். அதுவே
அடுத்த தறைமுறையினரின் மீட்சியாக இருக்கும். சிந்தனைகளிலும், தொழில்நுட்பத்திலும் மிகவும் அட்வான்சாக வாழ்ந்து வரும் இன்றைய இளம் தலைமுறையினர் காலம் காலமாக இருந்து வரும் மனிதர்களின் இயல்பான சில நல்ல விஷயங்களை கற்று கொள்ளாமல், கற்று கொடுக்க படாமல் இருப்பதை மனதில் கொண்டு அதை கருவாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது.
அலட்டி கொள்ளாத, உறவுகள் இன்றி வாழும் ஒருவன்.., குடும்பம், பெற்றோர் என்று சார்ந்திருக்கும் ஒரு இளம் பெண் இவர்கள் இருவருக்கும் இடையே மலரும் உறவு எப்படி செல்கிறது என்பதே இப்படத்தின் கதை.
96 படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் ஜோடியாக நடிக்கிறார்கள். இயக்குனர் கே பாக்யராஜ் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். இவர்களுடன் கிங்ஸ்லி, டி எஸ் ஆர், ஒளிப்பதிவாளர் ராஜூமேனன் மகள் சரஸ்வதி மேனன், இயக்குனர் சாய் ரமணி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, பொள்ளாச்சி, நாமக்கல் மற்றும் கோவா போன்ற இடங்களில் நடந்திருக்கிறது. இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த ஆண்டு படம் திரைக்கு வர உள்ளது.
பட தயாரிப்பாளர் கண்ணதாசன் கூறியதாவது:
இயக்குனராக வேண்டும் என்ற எண்ணத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தேன். இந்நிலையில் எனது நண்பர் ராஜ்குமார் ரங்கசாமி இந்த கதையை என்னிடம் கூறினார். இந்த காலகட்டத்திற்கு ஏற்ப சரியான கதையாகவும், சொல்ல வேண்டிய கதையாகவும் இருந்ததால் அதனை தயாரிக்க முடிவு செய்தேன்.
இப்படத்தை அடுத்து தொடர்ந்து படங்கள் தயாரிக்க எங்களது நிறுவனம் திட்டமிட்டுள்ளது
இவ்வாறு தயாரிப்பாளர் கண்ணதாசன் கூறினார்..

- அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கயிலன்'
- இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ஹர்ஷா, ஹரி எஸ்.ஆர். இசையமைத்திருக்கிறார்கள்.
BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் 'கயிலன்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
ஜூலை 25ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கயிலன் ' திரைப்படத்தில் ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ஹர்ஷா, ஹரி எஸ்.ஆர். இசையமைத்திருக்கிறார்கள்.
விறுவிறுப்பான திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடும் விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே பாக்யராஜ், கௌரவ் நாராயணன், தயாரிப்பாளர்கள் கே ராஜன், தனஞ்செயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ''இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் நடிகைகள் பணியாற்றி இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். நல்ல படம் எடுத்தால் அது கண்டிப்பாக வெற்றி பெறும். அதை வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இதற்கு சிறந்த உதாரணம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இந்தப் படத்தின் இயக்குநரை நான் மனதார பாராட்டுகிறேன். இந்தப் படத்தின் முன்னோட்டத்தை எனக்கு அனுப்பினார்கள். அதனை பார்த்தேன். இதன் சாராம்சம் என்னவென்றால் போராட்டம் தான்." என கூறினார்.
- இயக்குனர் சிவ மாதவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் '3.6.9.'
- இந்த படத்தில் நடிகர் பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இயக்குனர் சிவ மாதவ் இயக்கத்தில் பிஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம் '3.6.9.' இதில் இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடித்துள்ளார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்டே பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

3.6.9. இசை வெளியீட்டு விழா
மாரிஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கார்த்திக் ஹர்ஷா இசையமைத்துள்ளார். '3.6.9.' திரைப்படம் 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் பாக்கியராஜ் பேசியதாவது, ""நான் கொஞ்சம் பிடிவாதக்காரன் என்று இங்கே சொன்னார்கள். அது உண்மைதான். நல்ல விஷயத்திற்காக எப்போதும் பிடிவாதமாக தான் இருப்பேன்.

3.6.9. இசை வெளியீட்டு விழா
நான் கதை எழுதிய ஒரு கைதியின் டைரி படத்திற்காக நான் எழுதிய கிளைமாக்ஸ் வேறு. ஆனால் பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களாலும் எனது குருநாதர் பாரதிராஜாவுக்கு அது பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்பதாலும் வேறு மாதிரியான கிளைமாக்ஸ் வைத்து படமாக்கி படமும் ஹிட்டானது. அந்த கிளைமாக்ஸும் பேசப்பட்டது. ஆனால் அதே படத்தை இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து நான் இயக்க முடிவு செய்தபோது படத்தின் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பலரும் என்னிடம் வந்து தமிழில் எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சியையே இந்தியிலும் எடுங்கள்.

3.6.9. இசை வெளியீட்டு விழா
அமிதாப்பச்சனுக்கு அதுபோன்ற ஒரு கிளைமாக்ஸ் ரொம்பவே கம்பீரமாக இருக்கும் என்று கூறினார்கள். ஆனால் நான் எழுதி வைத்த கிளைமாக்ஸை படமாக்கியே தீர்வது என்று உறுதியாக இருந்தேன். இதுகுறித்து படத்தின் ஹீரோவான அமிதாப் பச்சனிடமே நேரடியாக பேசியபோது, அவர் என் எண்ணங்களை புரிந்துகொண்டு ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒரு காட்சியுடன் நீங்கள் மனதில் நினைத்து வைத்திருக்கும் ஒரு காட்சியை எப்படி ஒப்பிட முடியும் அதனால் நீங்கள் நினைத்தபடி விரும்பிய கிளைமாக்ஸ் காட்சியை எடுங்கள் என ஒப்புக்கொண்டார்.

3.6.9. இசை வெளியீட்டு விழா
அந்த காட்சியை படமாக்கி முடித்த பின்புதான் அனைவரும் அதை பார்த்து வியந்து பாராட்டினார்கள். அந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்து விட்டு என்னுடைய குருநாதர் பாரதிராஜா வியந்து போய் என்னைப் பாராட்டினார். அப்படி ஒரு நல்ல விஷயம் வரவேண்டும் என்பதற்காக பிடிவாதமாக இருப்பது தவறில்லை. அதேபோல யாருமே முழுதாக சினிமாவை கற்றுக்கொண்டு உள்ளே நுழைவதில்லை. பல விஷயங்களை இங்கே தான் தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும். இந்த படத்தின் இயக்குனர் சிவ மாதவ் இந்த படத்தை தான் நினைத்தபடி மிக நேர்த்தியாக பிடிவாதமாக இருந்து செதுக்கி உள்ளார். அந்த வகையில் நிச்சயம் இந்த படம் அனைவராலும் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை" என்று கூறினார்.
- இயக்குனர் ரத்தன் லிங்கா எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் ‘லாக்’.
- இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட் , சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'லாக்'. இப்படத்தை இயக்குனர் ரத்தன் லிங்கா எழுதி, இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர், 'அட்டு' என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலைப்பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர்.
'லாக்' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இயக்குனர் கே. பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

லாக் திரைப்படம் இசை வெளியீட்டு விழா
இந்நிகழ்ச்சியில் கே. பாக்யராஜ் பேசியதாவது, "படத்தின் இயக்குனர் ரத்தன் லிங்கா பேசும் போது பல்வேறு சிரமங்கள் இடைஞ்சல்களைக் சந்தித்துதான் இந்தப் படம் உருவானது என்றார். நல்லது நடக்கும் போது இது மாதிரி இடையூறுகள் வந்து கொண்டுதான் இருக்கும். அதையும் தாண்டித் தான் வர வேண்டும். எவ்வளவு முயன்றாலும் வரவேண்டிய இடையூறுகள் வந்தே தீரும்.
எனக்கு இப்போது ஒரு கதை ஞாபகம் வருகிறது. மூன்று திருடர்கள் தினமும் விநாயகரை வேண்டி விட்டு திருடப்போவார்கள் ஒன்றும் கிடைக்காவிட்டால் வந்து சண்டை போடுவார்கள். அப்படி பல நாள் எதுவும் கிடைக்கவில்லை. அன்று வேண்டும் போது இன்று மட்டும் எதுவும் கிடைக்காவிட்டால் எங்களுக்கு கெட்ட கோபம் வரும் என்று எச்சரித்துவிட்டு திருடச் சென்றார்கள். அன்றும் ஒன்றுமே கிடைக்காது போகவே, ஒவ்வொருவராக விநாயகர் கோவிலுக்குள் கல் வீசினார்கள். ஆனால் மூன்றாவது திருடன் மட்டும் கொஞ்சம் தயங்கினான். விநாயகர் தண்டித்து விட்டால் என்ன செய்வது? என்று பயந்து அந்த கல்லைத் தூக்கி கோயிலுக்கு வெளியே உயரமாக இருந்த மரத்தின் மீது வீசினான்.

லாக் திரைப்படம் இசை வெளியீட்டு விழா
அதே நேரத்தில் கண்வலித்தது. என்ன என்று பார்த்தால் எதிரே விநாயகர் நின்றார், தலையில் ரத்தத்தோடு. நான் எதுவுமே செய்யவில்லையே நான் கல்லை கோயிலைத்தாண்டித் தானே வீசினேன்? என்றான் எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை கொடுத்தாய் விநாயகா ?என்றான். விநாயகர் நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று நான் தான் மரத்தின் மீது ஏறி ஒளிந்து கொண்டு உட்கார்ந்திருந்தேன் என்றார் . அதுபோல இடையூறுகள் வருவது என்றாலும் எப்படியென்றாலும் வந்தே தீரும்.
இத்தனைக் காலம் கடந்தும் எனது முருங்கைக்காய் கதையை எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன பெரிய ரகசியம்? என்று கேட்டால் . எந்த ஒரு விசேஷ காரணமுமில்லை. எனது பாட்டி எங்களுக்கு உணவு பரிமாறும் போது எனக்கு முருங்கக்காய் துண்டுகளை குறைவாகத்தான் போடுவார். உடன் சாப்பிடும் மாமாவுக்கு நிறைய போடுவார். இன்னும் ரெண்டு பீஸ் போடச் சொல்லி நான் கேட்பேன். இது உனக்குப் போதும். இரண்டுக்குமேல் வேண்டாம் இது போதும் என்பார் பாட்டி. எப்போதும் வேண்டாம் என்பதில் தான் மனம் சுற்றிச் சுற்றி வரும்.
எங்கள் ஊரில் ஒரு பெரியவர் சின்னப் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருப்பார். அவரிடம் இந்தச் சந்தேகத்தைக் கேட்டபோதுதான் அதன் அர்த்தம் புரிந்தது. அதுவரை விளையாட்டாகத் தான் என் படத்தில் வைத்தேன். அப்போது அதைப்பற்றி பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் இவ்வளவு காலம் கடந்தும் முருங்கைக்காய் கதை பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அது ஒரு வகையில் எனக்கு மகிழ்ச்சி தருகிறது .

லாக் திரைப்படம் இசை வெளியீட்டு விழா
நான் 'தூறல் நின்னு போச்சு' படத்தில் கம்பைச் சுற்றி பயிற்சி எடுத்துக் கொண்டேன். அப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த கோபியில் 30 நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்ட பிறகு தான் அப்படி நடித்தேன் .அப்போது நான் ஒரு கையால் சுற்றி விளையாடுவது போல் இருக்கும் .இரண்டு கையாலும் சுற்றிப் பிடிப்பது போல் பயிற்சி பெற வேண்டும் என்று அழகிரிசாமி மாஸ்டரிடம் கேட்டேன்.அது முடியாது கஷ்டம் என்றார். அதன் நுட்பத்தைச் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டேன்.அவருக்கு நம்பிக்கை இல்லை ஆனாலும் நான் கற்றுக் கொண்டதைப் படத்தில் வைத்தேன். மிகவும் சிரமப்பட்டு கற்றுக்கொண்டு படத்தில் சுற்றி இருப்பேன். படத்தை பார்த்து எம்ஜிஆர் எத்தனை வருடமாக இதற்குப் பயிற்சி எடுத்தாய் என்று கேட்டார். நான் விசயத்தை சொன்னபோது அவர் நம்பவே இல்லை .பொய் சொல்லாதே என்றார்.அப்போது நான் சொன்னேன் மனது வைத்தால் எதுவும் முடியும் என்றேன்" என்று கூறினார்.
'லாக்' படக்குழுவினர் சார்பில் இந்த விழாவில் இயக்குனர் பாக்யராஜுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.






