search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Roja"

    • ஜெகன்மோகன் ரெட்டி என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து போட்டியிட வாய்ப்பளித்தார்.
    • நகரி தொகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.

    தமிழக எல்லையில் உள்ள நகரி தொகுதியில் 3-வது முறையாக ரோஜா போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    முன்னதாக ரோஜா நகரி புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். வேட்பு மனுவை கோவிலில் வைத்து மனமுருக சாமி தரிசனம் செய்தார்.

    அங்கிருந்து திறந்த வேனில் நின்றபடி ரோஜா நகரி தாசில்தார் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்றார். இதில் ஆயிரக்கணக்கான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    வழி நெடுகிலும் கிரேன் மூலம் சுமார் 20 அடி உயரம் கொண்ட ராட்சத மாலைகள் அணிவிக்கப்பட்டன. ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் மலர் மாலை என ரோஜாவுக்கு விதவிதமான மாலைகள் கிரேன் மூலம் அணிவித்து வரவேற்றனர். செண்டை மேளம், தாரை தப்பட்டை மேளங்களுடன் ரோஜா தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்றார்.


    அப்போது ஜெய் ரோஜாம்மா என தொண்டர்கள் கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதனால் நகரி சாலை அதிர்ந்தது.

    இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் சென்று ரோஜா மனு தாக்கல் செய்தார்.

    நகரி தொகுதியில் நான் 3-வது முறையாக போட்டியிடக் கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் சதி செய்தன. எனக்கு சீட் கிடைக்காமல் செய்ய பலர் போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்தனர்.

    ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து போட்டியிட வாய்ப்பளித்தார். நான் இந்த தொகுதியில் 3-வது முறையாகவும் வெற்றி பெறுவேன். மனு தாக்கலின் போது இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை.

    இங்கு வந்துள்ள நகரி தொகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
    • நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவும் சாமி தரிசனம் செய்தார்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படையாக திகழ்கிறது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். மேலும் கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். 

    இந்த நிலையில் இன்று கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாள் என்பதால் திருத்தணி கோவிலுக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவும் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பக்தர்கள் சரவண பொய்கை திருக்குளத்தில் புனித நீராடி படிக்கட்டு வழியாக நடந்து சென்றும் சுவாமியை வழிபட்டனர். கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக திருத்தணி நகரம், அரக்கோணம் சாலை, மலைப்பாதையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விரைவில் அவர் திரையுலகில் இருந்து விடைபெற்று முழு நேர அரசியல்வாதியாக மாறுவார் என தகவல்கள் பரவி வருகின்றன.
    • அனுஷ்கா போட்டியிடப் போவதாக தகவல் பரவியதால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பதி:

    பாகுபலி படத்தின் மூலம் நடிகை அனுஷ்கா ஆந்திராவில் புகழ்பெற்ற நட்சத்திரமாக உள்ளார். தொடர்ந்து அவர் நடித்த படங்கள் பெரும் வெற்றியை பெற்றுள்ளன.

    இந்த நிலையில் அனுஷ்கா ஆந்திர அரசியலுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி சார்பில் அனுஷ்கா வேட்பாளராக போட்டியிடுவார் என்று தகவல்கள் பரவி வருகின்றன.

    இது குறித்து ஜனசேனா கட்சி தலைவர்களுடன் அனுஷ்கா பேசி வருவதாகவும் தனது அரசியல் அறிமுகத்திற்கு தீவிரமாக தயாராகி வருகிறார். விரைவில் அவர் திரையுலகில் இருந்து விடைபெற்று முழு நேர அரசியல்வாதியாக மாறுவார் என தகவல்கள் பரவி வருகின்றன.

    ஆந்திர மாநிலத்தில் நகரி தொகுதியில் போட்டியிடும் நடிகை ரோஜா 3-வது முறையாக அந்த தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

    அவரை தோல்வி அடையச் செய்ய எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்கின்றன. நகரி தொகுதியை பொறுத்த வரையில் தமிழர்கள் கணிசமாக உள்ளனர்.

    நடிகை அனுஷ்கா தமிழ் படங்களிலும் பிரபலமானவர்.

    நடிகை ரோஜாவை எதிர்த்து தெலுங்கு தேசம் கூட்டணி சார்பில் ஜனசேனா கட்சி வேட்பாளராக அனுஷ்காவை களம் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஜனசேனா கட்சியினரும் அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இருப்பினும் அனுஷ்கா தனது அரசியல் வருகை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

    ரோஜாவை எதிர்த்து அனுஷ்கா போட்டியிடப் போவதாக தகவல் பரவியதால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பவன் கல்யாணை முதல்வராக வேண்டும் என நினைத்து தான் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை தொடங்கினர்.
    • சினிமாவில் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் பவன் கல்யாண் தற்போது பவர் இல்லாத மனிதர் ஆகிவிட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது,

    தெலுங்கு தேசம் கட்சியில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதில் 24 இடங்களை நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு சந்திரபாபு நாயுடு வழங்கியுள்ளார்.

    பவன் கல்யாணை முதல்வராக வேண்டும் என நினைத்து தான் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை தொடங்கினர்.

    ஆனால் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராக வேண்டும் என பவன் கல்யாண் பேசுவது கட்சியினர் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சினிமாவில் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் பவன் கல்யாண் தற்போது பவர் இல்லாத மனிதர் ஆகிவிட்டார்.

    இதனால் தான் அவர் தன்னை முன்னிலைப்படுத்தாமல் சந்திரபாபு நாயுடுவை முன்னிலைப்படுத்த வந்துள்ளார். சந்திரபாபு நாயுடுவிடம் 25 சதவீத சீட் கூட பெற முடியாதவர் பவன் கல்யாண்.

    40 ஆண்டுகால அனுபவம் உள்ளதாக கூறிக் கொள்ளும் சந்திரபாபு நாயுடு கூட்டணி இல்லாமல் களம் இறங்கினால் படுதோல்வி ஏற்படும் என மேலும் ஒரு கட்சியுடன் கூட்டணிக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கபடி போட்டியை தொடங்கி வைக்க சிறப்பு விருந்தினராக மந்திரி ரோஜா சென்றிருந்தார்.
    • இளைஞர்களின் விசில் பறக்கும் சத்தத்துடன் ரோஜா குதூகலமாக கபடி விளையாடினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.

    இதில் கபடி போட்டியை தொடங்கி வைக்க சிறப்பு விருந்தினராக மந்திரி ரோஜா சென்றிருந்தார். அங்கு பொதுமக்கள் அவருக்கு தடபுடலாக வரவேற்பு அளித்தனர்.

    இதனால் உற்சாகம் அடைந்த ரோஜா, யாரும் எதிர்பாராத வகையில் கபடி களத்தில் இறங்க, கூட்டம் ஆர்ப்பரித்தது. புடவையை சற்று ஏற்றி கட்டி, கோட்டைத் தொட்டுக்கும்பிட்டு, இளைஞர்களுடன் கபடி விளையாடினார். இளைஞர்களின் விசில் பறக்கும் சத்தத்துடன் ரோஜா குதூகலமாக கபடி விளையாடினார்.

    இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஷர்மிளா அமைச்சர் ரோஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
    • தந்தையின் பெயரை கெடுக்க ஷர்மிளா செயல்பட்டு வருகிறார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ஷர்மிளா நகரி உள்ளிட்ட இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    அப்போது ஷர்மிளா அமைச்சர் ரோஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். மேலும் ரோஜாவை ஊழல் ராணி என விமர்சித்தார்.

    இதையடுத்து மந்திரி ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் காங்கிரஸ் தெலுங்கு தேசம் ஜனசேனா கட்சிகள் ஒரே கிளையில் சாய்ந்து கொண்டு இருக்கின்றன.


    ஷர்மிளா கூறிய தன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்.

    ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டி மறைவிற்கு பிறகு முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அவரது பெயரை மக்களின் மனதில் நிலை நிறுத்த பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். தந்தையின் பெயரை கெடுக்க ஷர்மிளா செயல்பட்டு வருகிறார்.

    ஒய்.எஸ்.ஆர். மறைவிற்கு பிறகு ஜெகன்மோகன் ரெட்டியை 16 மாதங்கள் ஜெயிலில் அடைத்த காங்கிரஸ் கட்சியின் ஒரு அங்கத்தினராக ஷர்மிளா உள்ளார் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரோஜாவை ஜெய் அமராவதி என கோஷமிட வலியுறுத்தினர்.
    • ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி , மாநிலத்தில் 3 தலை நகரங்கள் அமைக்கப்படும் என்றார்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா சாமி தரிசனம் செய்தார். பின்னர், கோவிலில் இருந்து வெளியில் வந்தார்.

    அப்போது, தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி சேவை அமைப்பின் கீழ் சேவை செய்யும் பெண் தன்னார்வலர்கள் அவரை முற்றுகையிட்டனர்.


    அமராவதியை ஆந்திர தலைநகராக மேம்படுத்த வலியுறுத்தி, 'ஜெய் அமராவதி' என கோஷமிட்டனர். மேலும் ரோஜாவை ஜெய் அமராவதி' என கோஷமிட வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திராவிற்கு தலைநகராக அமராவதியை அப்போதைய முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.


     இதையடுத்து அமராவதியை மேம்படுத்துவதில் ஈடுபட்டார். இதனால், அப்போதிருந்து 'ஜெய் அமராவதி' என தெலுங்கு தேசம் கட்சியினர் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

    ஆனால் அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி , மாநிலத்தில் 3 தலை நகரங்கள் அமைக்கப்படும் என்றார்.

    இருப்பினும் தலை நகரங்கள் அமைக்கப்பட வில்லை. இதனால் மந்திரி ரோஜாவை தன்னார்வலர்கள் சூழ்ந்து, ஜெய் அமராவதி என கோஷம் எழுப்பினர்.

    சிரித்துக்கொண்டே ரோஜா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    • தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான்.
    • இவர் பல மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான் இசைப்புயல் என மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

    கடந்த 1992-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த "ரோஜா" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் தன் முதல் படத்திலேயே ரசிகர்களை தன் இசையால் வசியம் செய்துவிட்டார். இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் இன்று வரை மக்கள் கொண்டாடும் விதமாக அமைந்தது.


    இப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை புயல் வேகத்தில் உலகெங்கும் பரவியது. மலையாளம், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகளில் தன் இசையால் மக்களை மகிழ்வித்து தன் எல்லையை விரித்தார். பல விருதுகள் வென்ற ஏ.ஆர்.ரகுமான் "ஸ்லம் டாக் மில்லியனர்" என்ற படத்தில் இசை அமைத்ததற்காக கோல்டன் குளோப் விருது, பாப்டா விருதுகளை பெற்றார். இதே படம் ஆஸ்கார் விருதையும் வென்றது.

    கிராமிய இசை முதல் மேற்கத்திய இசை வரை தனது இசையால் தனித்து தெரியும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பல புதுமைகளை செய்துள்ளார். இவ்வாறு "ரோஜா"-வில் தன் பயணத்தை தொடங்கி இரண்டு ஆஸ்கர்களை வென்று ஆஸ்கர் நாயகனாக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதன் மூலம் மக்களுக்கு மேலும் சேவை செய்ய பலம் கிடைக்கும்.
    • வருகிற 2024 சட்டமன்ற தேர்தலிலும் எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

    இதில் நடிகையும் மந்திரியுமான ரோஜாவுக்கு மீண்டும் சீட் கிடைக்காது என எதிர்க்கட்சியினர் கேலி கிண்டல் செய்து வருகின்றனர். இதற்கு ரோஜா பதிலடி கொடுத்துள்ளார்.

    நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரோஜா சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதன் மூலம் மக்களுக்கு மேலும் சேவை செய்ய பலம் கிடைக்கும். ஆந்திர மாநில மக்கள் நலமடையவும், ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் முதல் மந்திரி ஆக வேண்டும். அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.

    நான் கட்சி நிகழ்ச்சிகளிலும் அமைச்சரவை கூட்டங்களிலும் முன் வரிசையில் இருந்து வருகிறேன்.

    நகரி தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளேன். வருகிற 2024 சட்டமன்ற தேர்தலிலும் எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் எதிர்க்கட்சிகள் கேலி செய்து வருகின்றனர். அது பலிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரும் 2024 சட்டமன்ற தேர்தலில் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெறுவது உறுதி.
    • ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்கள் போட்டி போட்டு சாதிக்க வேண்டும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மந்திரி ரோஜா காக்கிநாடா மாவட்டம் சமல் கோட்டில் உள்ள சாளுக்கிய குமார ராம பீமேஸ்வர சாமி கோவிலில் தரிசனம் செய்தார்.

    இதையடுத்து ராஜ நகரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியை தொடங்கி வைத்தார்.

    வரும் 2024 சட்டமன்ற தேர்தலில் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெறுவது உறுதி.

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் தோல்வி அடைவார்கள். தோல்வி அடைந்த பிறகு இருவரும் மனநல கோளாறுகளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும்.

    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் முதல் மந்திரியாக வர வேண்டும் என்பதற்காக சாமியிடம் பிரார்த்தனை செய்தேன்.

    ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்கள் போட்டி போட்டு சாதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உண்மை வெற்றி அடைந்தால் சிறையில் சந்திரபாபு நாயுடு நிரந்தரமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
    • ஆந்திராவில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் ஒன்ஸ்மோர் ஜெகன் என்ற முடிவை மக்கள் கொடுப்பார்கள்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆந்திர மந்திரி ரோஜா சாமி தரிசனம் செய்தார்.

    உண்மை வெற்றியடைய வேண்டும் என்று கோவிலில் வேண்டிக்கொண்டதாக சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி கூறியிருக்கிறார்.

    உண்மை வெற்றி அடைந்தால் சிறையில் சந்திரபாபு நாயுடு நிரந்தரமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    புவனேஸ்வரியும் சிறை செல்ல நேரிடும். ஆந்திராவில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் ஒன்ஸ்மோர் ஜெகன் என்ற முடிவை மக்கள் கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது குறித்து விமர்சனம் செய்து பேசிய மந்திரி ரோஜா எதற்கெடுத்தாலும் சந்திரபாபு நாயுடு பூம்பூம் மாடு போல் தலையை ஆட்டுவதாக பேசியுள்ளார்.
    • மந்திரி ரோஜாவின் பேச்சுக்கு பூம்பூம் மாடு வளர்ப்போர் கண்டம் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது குறித்து விமர்சனம் செய்து பேசிய மந்திரி ரோஜா எதற்கெடுத்தாலும் சந்திரபாபு நாயுடு பூம்பூம் மாடு போல் தலையை ஆட்டுவதாக பேசியுள்ளார்.

    மந்திரி ரோஜாவின் இந்த பேச்சுக்கு பூம்பூம்மாடு வளர்ப்போர் கண்டம் தெரிவித்துள்ளனர்.

    அதன் சங்க மாநில தலைவர் தாசரி சத்தியம் மற்றும் தாசரி ஸ்ரீனு, முங்கி வெங்கடேஸ்வரராவ், தாசரி சின்னா, ராம்பாபு ஆகியோர் நந்தி கம போலீசில் மந்திரி ரோஜா மீது புகார் அளித்தனர்.

    அதில் எங்கள் குலத்தொழிலையும், எங்கள் சாதியை பற்றி இழிவாக பேசிய மந்திரி ரோஜா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி இருந்தனர்.

    இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×