search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Roja"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மந்திரி ரோஜா உள்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் தோல்வியை தழுவினர்.
    • கண்ணியத்துடன் எழுந்து நிற்போம். மக்களின் குரலை எதிரொலிப்போம்.

    திருப்பதி:

    ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மந்திரி ரோஜா உள்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் தோல்வியை தழுவினர்.

    தோல்வி குறித்து ரோஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் கெட்ட காரியங்களை செய்து தோற்றால்தான் வெட்கப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் மக்களின் பிரச்சினைகளுக்காக எழுந்து நின்று குரல் கொடுப்போம்.

    கண்ணியத்துடன் எழுந்து நிற்போம்.

    மக்களின் குரலை எதிரொலிப்போம். வரும் நாட்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளுக்காக மக்கள் பக்கம் நின்று போராட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • ரோஜா நகரியில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு சென்னை சென்றார்.
    • மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தமிழக எல்லையோரம் உள்ள நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ரோஜா 3-வது முறையாக போட்டியிட்டார்.

    ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்த ரோஜாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என நகரி தொகுதியில் உள்ள அவருடைய சொந்த கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனையும் மீறி ஜெகன்மோகன் ரெட்டி ரோஜாவுக்கு போட்டியிட வாய்ப்பளித்தார். நகரி தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ரோஜா பிரசாரம் செய்தார்.

    பிரசாரத்தின் போது சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்தார்.மேலும் அவர் தனது ஆட்சி காலத்திலும் சட்டமன்றம் மற்றும் பொதுக்கூட்டங்களிலும் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரை விமர்சித்து வந்தார்.

    இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரிடம் 40 ஆயிரத்து 687 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா படுதோல்வி அடைந்தார்.

    ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நடிகை ரோஜாவுக்கு திருப்பதி மற்றும் நகரி ஆகிய இடங்களில் வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் ஆந்திர மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் மோதல் காரணமாக தொடர்ந்து ஆந்திராவில் பதட்டம் நிலவுவதால் ரோஜா நகரியில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு சென்னை சென்றார்.

    அவர் தனது கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் மகன், மகளுடன் சென்னையில் உள்ள வீட்டில் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    தேர்தல் தோல்வியால் ரோஜா ஆந்திராவில் உள்ள வீடுகளை காலி செய்து தமிழகத்துக்கு சென்றிருப்பது ஆந்திர மாநிலத்தில் பரப்பரப்பாக பேசப்படுகிறது.

    • நலத்திட்டங்களை எந்த ஒரு முதல் மந்திரியும் அறிமுகம் செய்ததில்லை.
    • மக்கள் மனதில் ஜெகன் மோகன் உள்ளார்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா சாமி தரிசனம் செய்தார்.

    நாடு முழுவதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க கூடிய வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நாளை வெளியாக உள்ளது.எத்தனை சர்வே முடிவுகள் என்ன சொன்னாலும் நலத்திட்ட உதவிகள் வழங்கியதை வைத்தும், நலத்திட்டங்கள் தொடர வேண்டும் எனவும் பெண்கள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பினரும் இரவு 9 மணி வரை வரிசையில் காத்திருந்து வாக்களித்துள்ளனர்.

    இதுபோன்ற நலத்திட்டங்களை எந்த ஒரு முதல் மந்திரியும் அறிமுகம் செய்ததில்லை. சந்திரபாபு நாயுடு தேர்தல் நேரத்திலும் தேர்தலுக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கையிலும் பல்வேறு தில்லு முல்லுகளை செய்து வெற்றி பெற நினைக்கிறார்.

    ஆனால் மக்கள் ஜெகன்மோகன் முதல் மந்திரியாக வேண்டும் என்ற உறுதியுடன் வாக்களித்துள்ளனர். யார் என்ன செய்தாலும் மக்கள் மனதில் ஜெகன் மோகன் உள்ளார். எனவே அவரே மீண்டும் முதல் மந்திரியாக பதவி ஏற்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் சன்னதிகளில் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு வழிபட்டார்.
    • ஆண்டுதோறும் திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்து வருகிறேன்.

    திருவண்ணாமலை:

    ஆந்திர மாநில மந்திரியும் நடிகையுமான ரோஜா நகரி சட்டமன்ற தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட்டார். அங்கு கடந்த 13-ந்தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

    இதனை தொடர்ந்து பல்வேறு கோவில்களில் ரோஜா சாமி தரிசனம் செய்து வருகிறார். நேற்று இரவு ரோஜா திருவண்ணாமலை வந்தார்.

    அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு நின்று தரிசனம் செய்த அவர் அங்கிருந்து கிரிவலம் தொடங்கினார். 14 கிலோமீட்டர் கிரிவல பாதையில் நடந்து சென்றார். கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகளில் அவர் தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை ரோஜா அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

    அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் சன்னதிகளில் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு வழிபட்டார். வைகுண்ட வாசல் வழியாக அண்ணாமலையை நோக்கி மனமுருக வழிபாடு செய்தார்.

    ஆண்டுதோறும் திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்து வருகிறேன். அண்ணாமலையார் ஆசியோடு மக்களுக்கு சேவைப் பணிகளை செய்து வருகிறேன்.

    ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி 2-வது முறையாக முதல்-மந்திரியாக பொறுப்பேற்க வேண்டும் என அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனிடம் வேண்டிக் கொண்டேன்.

    அண்ணாமலையார் அருளால் மீண்டும் அமைச்சராகி மக்கள் பணியாற்றுவேன் என்றார்.

    கோவில் நிர்வாகம் சார்பில் ரோஜாவுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    • மக்கள் என்னை 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்க முடிவு செய்து தேர்தலில் வாக்களித்து உள்ளனர்.
    • ஜெகன்மோகன் ரெட்டியும் 2-வது முறையாக அதிக இடங்களில் வெற்றி பெற்று முதல் மந்திரியாக வருவார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் கோவில் உள்ளது.

    கெங்கையம்மன் கோவிலில் தற்போது கூழ்வார்க்கும் திருவிழா நடந்து வருகிறது.



    இந்த விழாவில் ஆந்திர மாநில விளையாட்டுத்துறை மந்திரி ரோஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அம்மனுக்கு பட்டு சேலை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினார். பின்னர் அம்மனுக்கு தீபாரதனை செய்து வழிபட்டார்.

    நகரி தொகுதி மக்கள் என்னை 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்க முடிவு செய்து தேர்தலில் வாக்களித்து உள்ளனர்.


     நான் 3-வது முறையாக வெற்றி பெறுவது உறுதி. அதேபோல் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியும் 2-வது முறையாக அதிக இடங்களில் வெற்றி பெற்று முதல் மந்திரியாக வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நகரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு தனது கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் மகளுடன் வந்து ரோஜா வாக்களித்தார்.
    • மந்திரியான பிறகு முதல் முறையாக வாக்களித்தது சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் 3-வது முறையாக ரோஜா போட்டியிடுகிறார்.

    இன்று காலை நகரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு தனது கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் மகளுடன் வந்து ரோஜா வாக்களித்தார்.

    எனது சொந்தத் தொகுதியில் ஓட்டு போடுவது மகிழ்ச்சி அளிக்கிறது சந்திரபாபு நாயுடு, லோகேஷ், பவன் கல்யாண், சர்மிளா ஆகியோருக்கு ஆந்திராவில் ஓட்டு இல்லை. அவர்களுக்கு வீடுகள் இல்லை. ஐதராபாத்தில் இருந்து வந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

    இதன் மூலம் அவர்களுக்கு ஆந்திர மக்கள் மீது அன்பு இல்லை என்பது தெரிகிறது. யார் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். எனக்கு நகரி தொகுதி மக்களின் ஆசிர்வாதம் என்றும் உள்ளது.

    3-வது முறையாக என்னை தேர்ந்தெடுக்க தயாராகிவிட்டனர்.

    எனக்கும் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கும் பெண்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்-அமைச்சராகவும் என்னை எம்.எல்.ஏ. ஆகவும் தேர்ந்தெடுக்க முடிவு செய்துவிட்டனர். எனது மகள் முதல் முறையாக வாக்களித்தார்.

    மந்திரியான பிறகு முதல் முறையாக வாக்களித்தது சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதற்கட்டமாக அவர் நகரி தொகுதியில் உள்ள கிராமங்களில் பிரசாரம் செய்து வருகிறார்.
    • வழக்கமான புன்னகையோடு வரவேற்ற ரோஜா அந்த பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் நகரி தொகுதியில் நடிகை ரோஜா 3-வது முறையாக போட்டியிடுகிறார்.

    கடந்த வாரம் வேட்பு மனு தாக்கல் செய்த ரோஜா தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார். முதற்கட்டமாக அவர் நகரி தொகுதியில் உள்ள கிராமங்களில் பிரசாரம் செய்து வருகிறார்.

    தேர்தல் பிரசாரத்திற்கு வரும் ரோஜாவுக்கு கிராமங்களில் அமோகமாக வரவேற்பு அளித்து வருகின்றனர். நகரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாக திரண்டு வந்து தங்களின் வீட்டில் உள்ள தாம்பூல தட்டில் கற்பூரம் ஏற்றி ரோஜாவை ஒரே நேரத்தில் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    11 திருஷ்டி பூசணிக்காய்களை ஒன்றாக சேர்த்து ரோஜாவை நோக்கி சுத்தியபடி அதனை தரையில் போட்டு உடைத்தனர்.

    அங்கு ரோஜா நடந்து சென்று வாக்கு கேட்டபடி இருந்தார். அப்போது வீட்டின் மாடிகளில் நின்று பெண்கள் சிறுவர்கள் ஆரவாரம் செய்தனர். பிரசாரத்தின் போது மூதாட்டி ஒருவர் ரோஜாவின் கன்னத்தைக் கிள்ளி நலம் விசாரித்தார். அவரிடம் ரோஜாவும் நலம் விசாரித்து ஆதரவு கேட்டார்.

    மேலும் ஒரு பெண் ரோஜாவை கண்டதும் நடன மாடியபடி ஆரத்தி எடுத்தார். அவரை வழக்கமான புன்னகையோடு வரவேற்ற ரோஜா அந்த பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    ரோஜா பிரசாரத்தால் நகரி தொகுதி தற்போது களை கட்டி வருகிறது.

    • ஜெகன்மோகன் ரெட்டி என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து போட்டியிட வாய்ப்பளித்தார்.
    • நகரி தொகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.

    தமிழக எல்லையில் உள்ள நகரி தொகுதியில் 3-வது முறையாக ரோஜா போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    முன்னதாக ரோஜா நகரி புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். வேட்பு மனுவை கோவிலில் வைத்து மனமுருக சாமி தரிசனம் செய்தார்.

    அங்கிருந்து திறந்த வேனில் நின்றபடி ரோஜா நகரி தாசில்தார் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்றார். இதில் ஆயிரக்கணக்கான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    வழி நெடுகிலும் கிரேன் மூலம் சுமார் 20 அடி உயரம் கொண்ட ராட்சத மாலைகள் அணிவிக்கப்பட்டன. ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் மலர் மாலை என ரோஜாவுக்கு விதவிதமான மாலைகள் கிரேன் மூலம் அணிவித்து வரவேற்றனர். செண்டை மேளம், தாரை தப்பட்டை மேளங்களுடன் ரோஜா தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்றார்.


    அப்போது ஜெய் ரோஜாம்மா என தொண்டர்கள் கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதனால் நகரி சாலை அதிர்ந்தது.

    இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் சென்று ரோஜா மனு தாக்கல் செய்தார்.

    நகரி தொகுதியில் நான் 3-வது முறையாக போட்டியிடக் கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் சதி செய்தன. எனக்கு சீட் கிடைக்காமல் செய்ய பலர் போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்தனர்.

    ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து போட்டியிட வாய்ப்பளித்தார். நான் இந்த தொகுதியில் 3-வது முறையாகவும் வெற்றி பெறுவேன். மனு தாக்கலின் போது இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை.

    இங்கு வந்துள்ள நகரி தொகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
    • நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவும் சாமி தரிசனம் செய்தார்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படையாக திகழ்கிறது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். மேலும் கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். 

    இந்த நிலையில் இன்று கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாள் என்பதால் திருத்தணி கோவிலுக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவும் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பக்தர்கள் சரவண பொய்கை திருக்குளத்தில் புனித நீராடி படிக்கட்டு வழியாக நடந்து சென்றும் சுவாமியை வழிபட்டனர். கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக திருத்தணி நகரம், அரக்கோணம் சாலை, மலைப்பாதையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விரைவில் அவர் திரையுலகில் இருந்து விடைபெற்று முழு நேர அரசியல்வாதியாக மாறுவார் என தகவல்கள் பரவி வருகின்றன.
    • அனுஷ்கா போட்டியிடப் போவதாக தகவல் பரவியதால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பதி:

    பாகுபலி படத்தின் மூலம் நடிகை அனுஷ்கா ஆந்திராவில் புகழ்பெற்ற நட்சத்திரமாக உள்ளார். தொடர்ந்து அவர் நடித்த படங்கள் பெரும் வெற்றியை பெற்றுள்ளன.

    இந்த நிலையில் அனுஷ்கா ஆந்திர அரசியலுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி சார்பில் அனுஷ்கா வேட்பாளராக போட்டியிடுவார் என்று தகவல்கள் பரவி வருகின்றன.

    இது குறித்து ஜனசேனா கட்சி தலைவர்களுடன் அனுஷ்கா பேசி வருவதாகவும் தனது அரசியல் அறிமுகத்திற்கு தீவிரமாக தயாராகி வருகிறார். விரைவில் அவர் திரையுலகில் இருந்து விடைபெற்று முழு நேர அரசியல்வாதியாக மாறுவார் என தகவல்கள் பரவி வருகின்றன.

    ஆந்திர மாநிலத்தில் நகரி தொகுதியில் போட்டியிடும் நடிகை ரோஜா 3-வது முறையாக அந்த தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

    அவரை தோல்வி அடையச் செய்ய எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்கின்றன. நகரி தொகுதியை பொறுத்த வரையில் தமிழர்கள் கணிசமாக உள்ளனர்.

    நடிகை அனுஷ்கா தமிழ் படங்களிலும் பிரபலமானவர்.

    நடிகை ரோஜாவை எதிர்த்து தெலுங்கு தேசம் கூட்டணி சார்பில் ஜனசேனா கட்சி வேட்பாளராக அனுஷ்காவை களம் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஜனசேனா கட்சியினரும் அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இருப்பினும் அனுஷ்கா தனது அரசியல் வருகை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

    ரோஜாவை எதிர்த்து அனுஷ்கா போட்டியிடப் போவதாக தகவல் பரவியதால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பவன் கல்யாணை முதல்வராக வேண்டும் என நினைத்து தான் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை தொடங்கினர்.
    • சினிமாவில் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் பவன் கல்யாண் தற்போது பவர் இல்லாத மனிதர் ஆகிவிட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது,

    தெலுங்கு தேசம் கட்சியில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதில் 24 இடங்களை நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு சந்திரபாபு நாயுடு வழங்கியுள்ளார்.

    பவன் கல்யாணை முதல்வராக வேண்டும் என நினைத்து தான் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை தொடங்கினர்.

    ஆனால் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராக வேண்டும் என பவன் கல்யாண் பேசுவது கட்சியினர் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சினிமாவில் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் பவன் கல்யாண் தற்போது பவர் இல்லாத மனிதர் ஆகிவிட்டார்.

    இதனால் தான் அவர் தன்னை முன்னிலைப்படுத்தாமல் சந்திரபாபு நாயுடுவை முன்னிலைப்படுத்த வந்துள்ளார். சந்திரபாபு நாயுடுவிடம் 25 சதவீத சீட் கூட பெற முடியாதவர் பவன் கல்யாண்.

    40 ஆண்டுகால அனுபவம் உள்ளதாக கூறிக் கொள்ளும் சந்திரபாபு நாயுடு கூட்டணி இல்லாமல் களம் இறங்கினால் படுதோல்வி ஏற்படும் என மேலும் ஒரு கட்சியுடன் கூட்டணிக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கபடி போட்டியை தொடங்கி வைக்க சிறப்பு விருந்தினராக மந்திரி ரோஜா சென்றிருந்தார்.
    • இளைஞர்களின் விசில் பறக்கும் சத்தத்துடன் ரோஜா குதூகலமாக கபடி விளையாடினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.

    இதில் கபடி போட்டியை தொடங்கி வைக்க சிறப்பு விருந்தினராக மந்திரி ரோஜா சென்றிருந்தார். அங்கு பொதுமக்கள் அவருக்கு தடபுடலாக வரவேற்பு அளித்தனர்.

    இதனால் உற்சாகம் அடைந்த ரோஜா, யாரும் எதிர்பாராத வகையில் கபடி களத்தில் இறங்க, கூட்டம் ஆர்ப்பரித்தது. புடவையை சற்று ஏற்றி கட்டி, கோட்டைத் தொட்டுக்கும்பிட்டு, இளைஞர்களுடன் கபடி விளையாடினார். இளைஞர்களின் விசில் பறக்கும் சத்தத்துடன் ரோஜா குதூகலமாக கபடி விளையாடினார்.

    இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ×