என் மலர்
நீங்கள் தேடியது "ஊட்டி ரோஜா கண்காட்சி"
- மலர் கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
- விடுமுறை தினம் என்பதால் அதிகாலையிலேயே சுற்றுலாபயணிகள் குவிந்தனர்.
ஊட்டி:
கோடை காலத்தை முன்னிட்டு ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் அரசு சார்பில் கோடை விழா நடத்தப்பட்டு மலர் கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக ஊட்டி ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 80 ஆயிரம் பல வண்ண ரோஜா மலர்களை கொண்டு இரு டால்பின்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பல ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு சிப்பி, நத்தை, மீன், பென்குயின், கடல் குதிரை, நீலத்திமிங்கலம், ஸ்நைல், கடல் கன்னி, நட்சத்திர மீன் உள்பட பல்வேறு வடிவங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதுதவிர வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலைத்துறையினர் 10-க்கும் மேற்பட்ட குடில்களில் பல வகையான மலர் அலங்காரங்களை செய்து வைத்துள்ளனர். மேலும் 40 வகையான 4 ஆயிரம் ரோஜா செடிகளில் பலவண்ண மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.
கண்காட்சியை காண நேற்று ஏராளமான சுற்றுலாபயணிகள் திரண்டனர். இன்று 2-வது நாளாக கண்காட்சி நடந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலையிலேயே சுற்றுலாபயணிகள் குவிந்தனர். அவர்கள் அங்கு பூத்து குலுங்கிய ரோஜா பூக்களை பார்த்து ரசித்தனர்.
ரோஜாக்களால் செய்யப்பட்ட மலர் அலங்காரங்கள் முன்பு நின்று அவர்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ரோஜா கண்காட்சி நாளை வரை நடக்கிறது. கண்காட்சிக்கு சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஜாக்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், சுற்றுலா பயணிகள் அதனை விரும்பி ரசித்து செல்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் ரோஜா செடிகளில் 40 வகையான பல வண்ண மலர்கள் பூத்து குலுங்கி கொண்டிருக்கின்றன.
- கண்காட்சியை முன்னிட்டு காலையிலேயே ரோஜா பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் கோடை விடுமுறையின் போது வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 3-ந்தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து நேற்று கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது.
ஊட்டியின் மைய பகுதியில் அமைந்துள்ள ஊட்டி ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. கண்காட்சியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
விழாவில் ஆ.ராசா எம்.பி., அரசு கொறடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியை முன்னிட்டு ரோஜா பூங்கா முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நுழைவு வாயிலில் தோரணங்கள் கட்டப்பட்டு, ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வண்ண ரோஜா மலர்களை கொண்டு பல்வேறு அலங்காரங்களும் வடிவமைக்கப்பட்டு, பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.
குறிப்பாக 20 ஆயிரம் பல வண்ண ரோஜா மலர்களை கொண்டு டால்பின்கள் அலங்காரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஆயிரம் ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு சிப்பி, நத்தை, மீன், பென்குயின் உள்பட பல்வேறு வடிவங்களும் உருவாக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இதுதவிர வெளிமாவட்டத்தை சேர்ந்த தோட்டக்கலைத்துறையினர் 10க்கும் மேற்பட்ட குடில்களில் பல வகையான மலர் அலங்காரங்களையும் செய்து வைத்திருந்தனர். ரோஜா இதழ்களை கொண்டு ரங்கோலியும் அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் ரோஜா செடிகளில் 40 வகையான பல வண்ண மலர்கள் பூத்து குலுங்கி கொண்டிருக்கின்றன.
கண்காட்சியை முன்னிட்டு காலையிலேயே ரோஜா பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றுலா பயணிகள் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த டால்பின்கள், சிப்பி, நத்தை, மீன், பென்குயின் உள்ளிட்ட வடிவமைப்புகளை பார்வையிட்டு கண்டு ரசித்தனர். அத்துடன் அதன் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து கொண்டனர். மேலும் ரோஜா இதழ்களை கொண்டு வரையப்பட்டிருந்த ரங்கோலியையும் பார்த்து ரசித்தனர்.
பூங்காவில் பல வண்ணங்களில் பூத்து குலுங்கிய ரோஜா மலர்களையும் பார்வையிட்டு மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் அதன் முன்பு செல்பி புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
- ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி இன்று காலை தொடங்கியது.
- ரோஜா கண்காட்சிக்காக 4500 ரகங்களில் 37 ஆயிரம் ரோஜா செடிகள் வைக்கப்பட்டிருந்தன.
ஊட்டி:
கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள். அவர்களை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் ஊட்டியில் அரசு துறைகள் சார்பில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் மலர் கண்காட்சி, காய்கறி, பழங்கள் கண்காட்சி மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வகையான போட்டிகளும் நடத்தப்படும்.
இந்த ஆண்டுக்கான கோடை விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி 2 நாட்கள் நடந்தது. பல டன் காய்கறிகளை கொண்டு அமைக்கப்பட்டு இருந்த உருவங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. 2 நாள் கண்காட்சியை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்த்துச் சென்றனர்.
கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நேற்று தொடங்கியது. ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டியும் நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி இன்று காலை தொடங்கியது. கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். கலெக்டர் அம்ரித் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இந்த கண்காட்சி இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது.
ரோஜா கண்காட்சிக்காக 4500 ரகங்களில் 37 ஆயிரம் ரோஜா செடிகள் வைக்கப்பட்டிருந்தன. பூத்துக்குலுங்கிய பல வண்ண ரோஜா மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். கண்காட்சியில் 27 அடி உயரத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு ஈபிள் டவர் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ஈபிள் டவர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் கால்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டு தொடர்பான உருவ மாதிரிகளும் ரோஜா மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. சிறுவர்கள் குழந்தைகளை கவரும் வண்ணம் யானை, முயல், மயில் போன்ற வடிவங்களும் வடிவமைத்து இருந்தனர்.
தமிழக அரசின் திட்டமான மீண்டும் மஞ்சள் பை திட்டத்தினை அனைவரும் கடைபிடிக்கும் வண்ணம் விழிப்புணர்வு மஞ்சள் பை அலங்காரம், உலக சர்வதேச சிறுதானிய ஆண்டினை கொண்டாடும் வகையில் அதன் சின்னம், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வண்ணம் கோ ஆர்கானிக், ஊட்டியின் 200-வது வயதை கொண்டாடும் விதமாக ஊட்டி 200 சின்னம் என பலவகையான அலங்காரங்கள் 50 ஆயிரம் வண்ண ரோஜாக்களை கொண்டு செய்யப்பட்டு இருந்தன.
இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
ஊட்டி:
கோடை விழாவையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 16-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. கண்காட்சியை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். எம்.பி.க்கள் கே.ஆர்.அர்ஜூணன், கோபால கிருஷ்ணன், குன்னூர் எம்.எல்.ஏ., சாந்தி ராமு, ஊட்டி எம்.எல்.ஏ., கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை ஆகிய நிறத்தால் ஆன 30 ஆயிரம் ரோஜாக்களால் பிரமாண்ட இந்தியா கேட் அமைக்கப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இது தவிர ஜல்லிக்கட்டுக்காளை, மயில்,மாம்பலம், சோட்டா பீம், ரங்கோலி ஆகிய மலர் அலங்காரம் சிறப்பாக இருந்தது. தோட்டக் கலைத் துறை சார்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நெல்லை, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ரோஜா கண்காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
கண்காட்சியில் 40 ஆயிரம் மலர்ச்செடிகளில் பூத்துக்குலுங்கும் மினியச்சர், இருவண்ண மலர்கள் ஆகியவை மெய்மறக்க செய்தது. சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாளை மாலை (ஞாயிற்றுக்கிழமை) சிறந்த அரங்கம், சிறந்த பூங்கா ஆகியவைகளுக்கு பரிசு அளிக்கப்படுகிறது. இன்றும் நாளையும் ரோஜா கண்காட்சியை காண மாவட்டத்தின் பிற பகுதிகள் மற்றும் சமவெளிப்பகுதி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். ரோஜா கண்காட்சியையொட்டி ஊட்டி நகரம் களை கட்டியது.






