search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tourist passenger"

    புதுவை ஆம்பூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை கிண்டல் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க புதுவைக்கு கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து நேற்று ஏராளமானோர் வந்து இருந்தனர். அதேபோல் வாரவிடுமுறையான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகளும் புதுவைக்கு வந்து இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று புதுவை ஆம்பூர்சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த வெளிமாநில சுற்றுலா பயணிகளை ஒருவர் ஆபாசமாக பேசி கிண்டல் செய்து கொண்டு இருந்தார். இதையடுத்து அந்த வழியாக ரோந்து சென்ற பெரியக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கிண்டல் செய்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கடலூர் வீரபத்திரசாமி கோவில் தெருவை சேர்ந்த மகிமைராஜ் (வயது42) என்பதும், வெல்டர் வேலை செய்து வரும் இவர் தீபாவளியையொட்டி புதுவையில் பொருட்கள் வாங்க வந்த போது குடிபோதையில் சுற்றுலா பயணிகளை கிண்டல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து மகிமைராஜை போலீசார் கைது செய்தனர்.

    புதுவையில் சுற்றுலா பயணியிடம் பணப்பையை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    கொல்கத்தாவை சேர்ந்தவர் கவுர் கோபால்ஷா. ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவரது மனைவி அமிதஷா (வயது 55). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக வேலூருக்கு வந்திருந்தார். பின்னர் சிகிச்சை முடிந்து புதுவையில் அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை சுற்றி பார்க்க புதுவை வந்தார்.

    புதுவை விடுதி அறையில் தங்கி சுற்றுலா இடங்களை பார்க்க வந்தார். நேற்று இரவு 9 மணியளவில் அமிதஷா புதுவை ரோமண்ட் ரோலண்ட் வீதியில் நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென அமிதஷா தோளில் மாட்டி சென்ற கைப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.

    அமிதஷா அந்த பையில் 2 செல்போன், ரூ.12 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவைகளை வைத்திருந்தார்.

    இதுகுறித்து அமிதஷா பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல், முருகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதியில் பொறுத்தப்பட்டு இருந்த சி.சி.டி. கேமராக்களை ஆய்வு செய்து பணப்பையை பறித்து சென்றவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கொடைக்கானலில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    பெருமாள்மலை:

    திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கொடைக்கானல் உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் இதமான சீசன் நிலவுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    தற்போது குளு குளு சீசன் நிலவி வருகிறது. அதோடு கோடை விழாவும் நடைபெற்று வருவதால் குடும்பத்துடன் பயணிகள் கொடைக்கானல் வந்து மகிழ்ந்த வண்ணம் உள்ளனர். அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    நேற்று மாலையில் கன மழை நீடித்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

    தொடர் மழை காரணமாக கொடைக்கானல் மலை பகுதியில் புதிதாக அருவிகள் உருவாகியுள்ளது. நகரின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள வெள்ளி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்து விழுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமடைந்துள்ளனர்.

    கொடைக்கானல் மேல் மலை, கீழ்மலை பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், சாகுபடியில் இறங்கியுள்ளனர்.

    ஊட்டி-கூடலூர் சாலையில் 30 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    கர்நாடகா மாநிலம் பெங்களூர் பிந்தலூர் வித்யாரன்யபுரா பகுதியை சேர்ந்த 31 பேர் ஒரு தனியார் சுற்றுலா பஸ் மூலம் நேற்று முன்தினம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.

    ஊட்டியில் பல்வேறு சுற்றுலா தளங்களை கண்டுரசித்த அவர்கள் நேற்று மாலை மீண்டும் பெங்களூருக்கு திரும்பினர்.

    சுற்றுலா பஸ் ஊட்டி-கூடலூர் சாலையில் உள்ள தவளமலை கொண்டை ஊசி வளைவு அருகே இரவு 8 மணியளவில் சென்றது.

    அப்போது எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக சுற்றுலா பஸ்சை டிரைவர் சாலையோரமாக ஒதுக்கினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர்பாராதவிதமாக 30 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது.

    இதில் பஸ்சுக்குள் இருந்தவர்கள் தலைகீழாக கவிழ்ந்தனர். சிலர் வெளியே தூக்கி வீசப்பட்டனர்.

    இந்த விபத்தில் 2 ஆண்களும், ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காயம் அடைந்தவர்கள் வலி தாங்க முடியாமல் கதறி அழுதனர்.

    இந்த விபத்து பற்றி தெரியவந்ததும் கூடலூர் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையில் நடுவட்டம் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் மின்விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதன் காரணமாக மீட்பு பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக வந்த வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மீட்பு பணிகள் நடந்தது.

    விபத்தில் காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு பெண் பலியானார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இவர்களில் பெங்களூர் தொட்டபெல்லாபுராவை சேர்ந்த ரவிக்குமார் நாயக்(28), ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த கணேசன்(18) ஆகிய 2 பேரின் பெயர் விவரங்கள் மட்டுமே தெரியவந்தது. பலியான 2 பெண்களின் பெயர் விவரம் தெரியவில்லை.


    இந்த விபத்தில் காயம் அடைந்த 27 பேருக்கும் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு மட்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மற்றவர்கள் லேசான காயம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக கர்நாடகா மாநிலம் மைசூர் மற்றும் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சுற்றுலா பயணிகள் கன்னடத்தில் பேசியதால் அவர்கள் குறித்த விவரங்களை சேகரிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.

    இந்த விபத்தின் காரணமாக ஊட்டி - கூடலூர் சாலையில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. #tamilnews

    கோவை மற்றும் நீலகிரியில் நேற்று கனமழை பெய்தது. சுற்றுலா பயணிகள் குடைப்பிடித்தப்படி கண்டு ரசித்தனர்.

    கோவை:

    கோவையில் கடந்த சில நாட்களாக மாலை, இரவு நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் திடீரென மழை கொட்டியது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 1 மணிநேரம் கொட்டி தீர்த்த இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து இரவு நேரத்தில் கடுங்குளிர் நிலவியது.

    இதேபோல் ஊட்டியிலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் ஊட்டியில் உள்ள பல்வேறு சுற்றுலா தளங்களையும் பார்வையிட்டு வருகிறார்கள்.

    ஊட்டியில் நேற்று பகல் நேரத்தில் திடீரென பலத்த மழை கொட்டியது. இதனால் படகுசவாரி போட்டி ரத்து செய்யப்பட்டது. மேலும் பல்வேறு சாலைகளில் மழைவெள்ளம் தேங்கியது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் பெய்த மழையின் காரணமாக சுற்றுலா பயணிகள் குடைப்பிடித்தப் படி கண்டு ரசித்தனர். மேலும் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. சமவெளி பகுதிகளில் வெப்பம் வாட்டி வரும் நிலையில் ஊட்டியில் நிலவிய குளிர்ந்த காற்றை சுற்றுலா பயணிகள் ஆனந்தமான ரசித்தனர். சிலர் உற்சாக மிகுதியில் மழையில் நனைந்தபடி நின்றனர். மழையின் காரணமாக ஊட்டியில் குளுகுளு சீசன் களைகட்டியுள்ளது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் காலை நேரத்தில் இருந்தே அதிகரிக்க தொடங்கியது.

    சுண்ணாம்பாறு படகு குழாமில் சுற்றுலா பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    அரியாங்குப்பம்:

    புதுவை நோனாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். தற்போது பள்ளி கோடை விடுமுறையையொட்டி படகு குழாமில் படகு சவாரி செய்ய கூட்டம் அலை மோதுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை சுண்ணாம்பாறு படகு குழாமில் படகு சவாரி செய்ய ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அப்போது 2 வாலிபர்கள் குடிபோதையில் சுற்றுலா பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் அரியாங்குப்பம் புதுக்குளம் வீதியை சேர்ந்த ஆனந்த் என்ற அலெக்ஸ் (21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த உதயசெல்வன் (19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கோடை விழாவையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 16-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. கண்காட்சியை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

    ஊட்டி:

    கோடை விழாவையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 16-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. கண்காட்சியை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். எம்.பி.க்கள் கே.ஆர்.அர்ஜூணன், கோபால கிருஷ்ணன், குன்னூர் எம்.எல்.ஏ., சாந்தி ராமு, ஊட்டி எம்.எல்.ஏ., கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கண்காட்சியில் சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை ஆகிய நிறத்தால் ஆன 30 ஆயிரம் ரோஜாக்களால் பிரமாண்ட இந்தியா கேட் அமைக்கப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இது தவிர ஜல்லிக்கட்டுக்காளை, மயில்,மாம்பலம், சோட்டா பீம், ரங்கோலி ஆகிய மலர் அலங்காரம் சிறப்பாக இருந்தது. தோட்டக் கலைத் துறை சார்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நெல்லை, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ரோஜா கண்காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    கண்காட்சியில் 40 ஆயிரம் மலர்ச்செடிகளில் பூத்துக்குலுங்கும் மினியச்சர், இருவண்ண மலர்கள் ஆகியவை மெய்மறக்க செய்தது. சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    நாளை மாலை (ஞாயிற்றுக்கிழமை) சிறந்த அரங்கம், சிறந்த பூங்கா ஆகியவைகளுக்கு பரிசு அளிக்கப்படுகிறது. இன்றும் நாளையும் ரோஜா கண்காட்சியை காண மாவட்டத்தின் பிற பகுதிகள் மற்றும் சமவெளிப்பகுதி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். ரோஜா கண்காட்சியையொட்டி ஊட்டி நகரம் களை கட்டியது.

    ×