என் மலர்
நீங்கள் தேடியது "torture"
- போராட்டங்களில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்ட்டனர்.
- சூரியவனாக்ஷியின் குடும்பத்தினர் முதலில் மாவட்டத்துக்குள் நுழைய விடாமல் போலீசால் தடுக்கப்பட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் பர்பானி [Parbhani] நகரில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி ரெயில்வே நிலையத்துக்கு அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அரசியலமைப்பு பிரதியை எரிதத்தை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.
பகுஜன் அகாடி (VBA) கட்சியினர் உட்பட பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் டிசம்பர் 11 ஆம் தேதி இரவு கலவரத்தில் ஈடுபட்டு சொத்துகளை சேதப்படுத்தியதாக [vandalism] 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 35 வயதான பகுஜன் அகாடி (VBA) தலித் செயல்பாட்டாளர் சோம்நாத் வெங்கட் சூர்யவன்ஷி என்பவரும் அடங்குவார். பர்பானி மாவட்ட மத்திய சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் அவர் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 15 [ஞாயிற்றுக்கிழமை] காலையில் அவர் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தார். நெஞ்சுவலி காரணமாக சூர்யவன்ஷி உயிரிழந்ததாக போலீஸ் தெரிவித்தது. ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் சூர்யவன்ஷியின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சத்ரபதி சாம்பாஜிநகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வீடியோ பதிவுடன் நடத்தப்பட்ட அவரது பிரதேச பரிசோதனையில் சூர்யவன்ஷியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததும், அந்த காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவர் உயிர் பிரிந்துள்ளது என்றும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். எனவே போலீஸ் கஸ்டடியில் சித்திரவதை செய்யப்பட்டு அவர் உயிரிழந்தது உறுதியான நிலையில் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளது.
நாடோடி இனமான வடார் இனத்தைச் சேர்ந்த சூர்யவன்ஷி, படிப்பு செலவுக்காக சிறு சிறு வேலைகளைச் செய்து வந்தவர். இவரது சகோதரரும் தாயும் புனேவில் உள்ள சாக்கனில் கூலி வேலை செய்து வந்தனர்.
பகுஜன் அகாடி கட்சியுடன் இணைந்து உள்ளூர் செயல்பாட்டாளராக சூர்யவன்ஷி இருந்துள்ளார்.இந்நிலையில் அவரது மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சூரியவனாக்ஷியின் குடும்பத்தினர் முதலில் மாவட்டத்துக்குள் நுழைய விடாமல் போலீசால் தடுக்கப்பட்டனர்.
பின்னர், அவரது உடலை பர்பானிக்கு கொண்டு வருவதற்கு பதிலாக லத்தூரில் உள்ள அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லுமாறு போலீசார் வலியுறுத்தினர். ஆனால் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், மற்றும் போராட்டக்காரர்களின் எதிர்பால் போலீஸ் பின்வாங்கியுள்ளது.
The custodial death of Somnath Suryawanshi — a Bhim Sainik belonging to the Wadar community — in Parbhani is gut wrenching, sickening and intolerable to say the least.What is more intolerable that his death happened in judicial custody despite his bail application being…
— Prakash Ambedkar (@Prksh_Ambedkar) December 15, 2024
காவல்துறை வேண்டுமென்றே தலித் குடிசைகளுக்குள் நுழைந்து சொத்துக்களை அழிப்பதை உள்ளூர் வாசிகளால் பதிவுசெய்யப்பட்ட பல வீடியோக்கள் காட்டுகிறது.
பர்பானிக்கு மாவட்டத்தில் தலித்-பகுஜன் அம்பேத்கரிய இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் அளவை சூர்யவன்ஷியின் மரணம் எடுத்துக்காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்த விவகாரத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முற்றிலும் தோற்றுப் போயுள்ளார் என்று உத்தவ் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.
- கதவருகே அவன் முகத்தை வைத்து கண்களை மூடிக்கொண்டு அவனை பலாத்காரம் செய்யும்படி ஒரு பெரிய கைதியிடம் கேட்பார்கள்
- கைதிகளின் கண்ணியம் மற்றும் நம்பிக்கையை சுவடே இல்லாமல் அழிப்பதே இந்த சித்திரவதையின் நோக்கமாகும்.
சிரியாவில் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உள்நாட்டு போர் 13 வருடங்கள் கழித்து வெற்றி பெற்றுள்ளது. தலைநகர் டமாஸ்கஸ் - ஐ நேற்று கைபற்றிய கிளர்ச்சியாளர்கள் வெற்றியை அறிவித்துள்ளனர்.
ஆசாத் குடும்பத்துடன் ரஷியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா இதே போன்றதொரு முடிவை எட்டினார்.
ஷேக் ஹஸீனாவின் ரகசிய சிறைகளாக கண்ணாடிகளின் வீடு திகழ்ந்து வந்த நிலையில் அவற்றில் சித்திரவதை செய்யப்பட்ட பலர் விடுவிக்கப்பட்டனர். history repeats itself என்ற கூற்றுக்கு இணங்க தற்போது வீழ்ந்துள்ள சிரியாவின் ஆசாத் அரசும் வீழ்ந்துள்ளது.
மனித கசாப்பு முகாம்
டமாஸ்கஸ், ஹமா மற்றும் அலெப்போவிற்கு அருகிலுள்ள அரசாங்க சிறைகளில் பல ஆண்டுகளாக சித்திரவதைகளை அனுபவித்த கைதிகளை கிளர்ச்சியாளர்கள் விடுத்துள்ளனர்.
இந்த சிறைச்சாலைகளில், மிகவும் பிரபலமானது 'சைட்னயா' [sednaya]. இது வெகுஜனத்தால் "மனித கசாப்பு கூடம்" [ human slaughterhouse] என்று குறிப்பிடப்படுகிறது.
இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமைகளுக்கான Syrian Observatory இன் 2021 அறிக்கையின்படி, சிறைகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தூக்கிலிடப்பட்டும் வேறு வழிகளில் உயிரிழந்தும் உள்ளனர்.
இதில் மனித கசாப்பு கூடம் என்று அறியப்படும் சைட்னயாவில் மட்டுமே 30,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
2011 ஆம் ஆண்டு முதல் சைட்னாயாவில் நடத்தப்பட்ட கொலை, சித்திரவதை, காணாமல் ஆக்கப்படுத்தல் ஆகியவை பொதுமக்களுக்குக் கட்டுக்குள் வைக்க ஆசாத் அரசு மேற்கொண்ட அடக்குமுறையின் ஒரு பகுதியாகவும் அரசின் கொள்கையாகவுமே இருந்தது என்றும் சைட்னாயாவில் நடந்தவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது.
சைட்னயா
சைட்னயா ராணுவ சிறைச்சாலையில் சிவப்பு நிற மற்றும் வெள்ளை நிறம் கொண்ட இரண்டு தடுப்பு மையங்கள் இருந்ததாக அம்னெஸ்டி அறிக்கை கூறுகிறதது.
2011 இல் கிளர்ச்சி தொடங்கியதில் இருந்து கைது செய்யப்பட்ட பொதுமக்கள் ஒரு சிவப்பு கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ராணுவத்தினர் வெள்ளை கட்டிடத்தில் சிறை வைக்கப்பட்டனர்.
சிவப்பு கட்டிடத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கைதிகள் ரகசிய மரணதண்டனையில் கொல்லப்பட்டதாக அறிக்கை கூறுகிறது
டமாஸ்கஸின் அல்-கபூன் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள இராணுவக் கள நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படும்
சிறை அதிகாரிகள் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் நாளை 'பார்ட்டி' என்று குறிப்பிடுகின்றனர்.
பார்ட்டி
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் சிவப்பு கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு அறைக்கு கொண்டு வரப்படுவார்கள், அங்கு அவர்கள் நள்ளிரவில் இரண்டு அல்லது மூன்று மணிநேரங்களில் கடுமையாக தாக்கப்படுகிறார்கள்.
அதன்பின் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு டெலிவரி டிரக்குகள் அல்லது மினிபஸ்களில் வெள்ளை கட்டிடத்திற்கு மாற்றப்படுகிறார்கள். அங்கு அடித்தளத்தில் உள்ள ஒரு அறைக்குள் இறுதியில் அவர்கள் தூக்கிலிடப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கை விவரிக்கிறது
இது வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை நடக்கும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், 20 முதல் 50 பேர் வரை தூக்கிலிடப்படுகிறார்கள். இந்த செயல்முறை முழுவதும், பாதிக்கப்பட்டவர்கள் கண்கள் மூடப்பட்டிருக்கும். மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான், உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என்று மட்டும் கூறப்படும்.
அவர்களின் மரணதண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்பது அவர்களுக்குத் தெரியாது. உடல்கள் ஒரு டிரக்கில் ஏற்றப்பட்டு, திஷ்ரீன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் புதைகுழிகளில் புதைக்கப்படுகின்றன
செப்டம்பர் 2011 முதல் டிசம்பர் 2015 வரை சைட்னாயாவில் 5,000 மற்றும் 13,000 பேர் சட்டத்திற்கு புறம்பாக தூக்கிலிடப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சைட்னாயாவில் மரணதண்டனை செயல்முறை இரகசியமானது மற்றும் நேரடியாக அதிகாரிகளுக்கும் சிரியாவின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் மட்டுமே தெரியும். சிவப்பு கட்டிடத்தில் அவர்கள் அடிக்கப்படுவதை பார்க்கும் சாதாரண சிறைக் காவலர்களுக்கு நள்ளிரவில் வெள்ளை கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட பிறகு கைதிகளுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி தெரியாது.
சித்ரவதை
சைட்னயாவில் உள்ள சிவப்பு கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விதவிதமான சித்திரவதைகள் நடக்கின்றன. வழக்கமாக கடுமையான அடித்தல் மற்றும் பாலியல் வன்முறை மூலம் அவர்கள் தொடர்ந்து சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.
அவர்களுக்கு போதுமான உணவு, தண்ணீர், மருந்து, மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவை மறுக்கப்படுகின்றன, இது தொற்றுநோய் மற்றும் நோய் பரவுவதற்கு வழிவகுத்தது. சித்திரவதை செஷன்களின்போது அமைதி கடைப்பிடிக்கப்படுகிறது. பல கைதிகள் தீவிர மனநோய்களுக்கு ஆளாகின்றனர் .
அதிகபட்ச உடல் மற்றும் உளவியல் துன்பங்களை ஏற்படுத்தும் வகையில் சைட்னயாவின் சித்திரவதை அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. கைதிகளை அவமானப்படுத்தி அவர்களின்கண்ணியம் மற்றும் நம்பிக்கையை சுவடே இல்லாமல் அழிப்பதே இந்த சித்திரவதையின் நோக்கமாகும்.
கைது செய்யப்பட்டபோது உயர்நிலைப் பள்ளி மாணவராக இருந்த கைதி ஒருவர், சைடன்யாவில் தங்களுக்கு என்ன நடந்தது என எந்த கைதியும் கூற முன்வர மாட்டார்கள். அந்த அளவுக்கு அவமானகரான செயல்களை அவர்கள் சந்தித்துள்ளனர் என்று தெரிவிக்கிறார்.
காவலர்கள் , அனைவரையும் எங்கள் ஆடைகளை களைந்துவிட்டு ஒவ்வொருவராக குளியலறைக்குச் செல்லச் சொல்வார். நாங்கள் குளியலறைக்குச் செல்லும்போது, அவர்கள் ஒரு சிறிய வயது வாலிபனை தேர்ந்தெடுத்து அவனை கதவருகே நிற்கச் சொல்வார்கள்.
கதவருகே அவன் முகத்தை வைத்து கண்களை மூடிக்கொண்டு அவனை பலாத்காரம் செய்யும்படி ஒரு பெரிய கைதியிடம் கேட்பார்கள்.. இது தங்களுக்கு நடந்ததென்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள், ஆனால் அது அடிக்கடி நடந்தது. மற்றும் இதை செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட கைதிகள் யாரும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்று அந்த கைதி கூறுகிறார்.
சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு மத்தியில், கிளர்ச்சிப் போராளிகள் சைட்னயா உள்ளிட்ட சிறைகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, கைதிகளை விடுவித்துள்ளனர். சைட்னாயாவிலிருந்து ஒருவர் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. கிளர்ச்சியாளர்கள் அவரது குடும்பத்தைப் பற்றி அவரிடம் கேட்கும்போது அவர் குழப்பமடைந்து பேசுவதற்கு சிரமப்படுவது பதிவாகி உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளும் சிறையில் இருந்து வெளிவந்துள்ளனர்.
One of the detainees freed from Assad's human slaughterhouse in Sednaya has lost his memory and is unable to speak, shattered by the horrors he endured, Rebels try to ask him about any details to take him back to his family but he's unable to speak.#Syria #Sednaya pic.twitter.com/PgDVWJFl7w
— Hussam Hammoud | حسام (@HussamHamoud) December 8, 2024
Dozens of young girls leave Sednaya prison in shock at the man's words asking them to leave and return home as if they were born in prison woman was afraid and said Assad regime will know that they escaped and bring them back. say that Assad has fallen They don't believe it. pic.twitter.com/6iJdlC6av3
— Hiba karm (@Hibakarm) December 8, 2024
இதற்கிடையே ரஷியா தப்பிச் சென்ற ஆசாத்தின் அதிபர் மாளிகை சூறையாடப்பட்ட நிலையில் அங்குள்ள சுரங்கப்பாதை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
سراديب منزل ماهر الأسد في دمشقمن يخاف من الشعب يحفر تحت الأرض عشرات الأمتار pic.twitter.com/BSMpzmplOy
— Abdullah Almousa (@Abu_Orwa91) December 8, 2024
- பெண் குழந்தையை காப்பக ஊழியர்கள் குளிக்க வைத்த போது, குழந்தை வலியால் பயங்கரமாக துடித்துள்ளது.
- தைக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆதரவற்ற குழந்தைகளை பராமரிக்கும் ஒரு காப்பகம் செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் நலக்குழு மூலமாக நடத்தப்பட்டு வரும் இந்த காப்பகத்தில் பெற்றோரை இழந்த இரண்டரை வயது பெண் குழந்தை மற்றும் ஒரு வயது ஆண் குழந்தை சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று அந்த இரண்டரை வயது பெண் குழந்தை படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த காப்பகத்தின் காப்பாளரான அஜிதா என்ற பெண், குழந்தையின் பிறப்புறுப்பில் தாக்கி காயப்படுத்தி இருக்கிறார்.
மேலும் அங்கு பணிபுரியக்கூடிய மகேஸ்வரி, சிந்து ஆகிய 2 பெண்களும் பெண் குழந்தையை துஷ்பிரயோகம் செய்து துன்புறுத்தி உள்ளனர். இதனால் அந்த பெண் குழந்தை வலியால் துடித்தபடி இருந்துள்ளது. இந்த நிலையில் அந்த பெண் குழந்தையை காப்பக ஊழியர்கள் குளிக்க வைத்த போது, குழந்தை வலியால் பயங்கரமாக துடித்துள்ளது.
இதையடுத்து தைக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது சிறுமியின் அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டிருப்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர். அதுகுறித்து குழந்தைகள் நலக்குழுவின் பொதுச்செயலாளரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவர் அது பற்றி திருவனந்தபுரம் அருங்காட்சியக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி இரண்டரை வயது பெண் குழந்தையை துன்புறுத்திய அஜிதா, மகேஸ்வரி, சிந்து ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
- கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சு தனது கணவரை பிரிந்து விட்டார்.
- திருநம்பியான பிரியங்காவுடன் தகாத உறவில் மஞ்சு இருந்து வந்துள்ளார்.
மேட்டுப்பாளையம்:
கோவை குழந்தைகள் நல அலுவலகத்திற்கு நேற்று ஒரு அழைப்பு வந்தது. அதனை அங்கு பணியில் இருந்த குழந்தைகள் நல அலுவலர் பரமேஸ்வரி எடுத்தார்.
அப்போது எதிர்முனையில் பேசிய நபர், காரமடை அடுத்துள்ள தோலம்பாளையம் ஜே.ஜே நகரில் 2 பெண்கள் சேர்ந்து சிறுவர்களை அடித்து துன்புறுத்துவதாகவும், அவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்து விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர் பரமேஸ்வரி, களப்பணியாளர் ரெபீனா ஆப்பிரிணம் என்பவருடன் தோலம்பாளையம் ஜே.ஜே.நகர் பகுதியில் குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த 2 பெண்களும் சேர்ந்து சிறுவர்களை தாக்கியது உறுதியானது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.
பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மஞ்சு(வயது25). இவருக்கு ராஜீவ் காந்திநகரை சேர்ந்த ரமேஷ்(30) என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு ராகுல், ரோஷன் என 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சு தனது கணவரை பிரிந்து விட்டார். இதையடுத்து அவர் தனது மகன்களுடன் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தாய் கோவிந்தம்மாள் வீட்டிற்கு வந்தார்.
அங்கிருந்தபடி, அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது அதே நிறுவனத்தில் பணிபுரிந்த திருநம்பியான பிரியங்கா(28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியது.
இதையடுத்து மஞ்சுவும், பிரியங்காவும் தோலம்பாளையம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தனர். மஞ்சு தான் செல்லும் போது, தனது மகன்களையும் அங்கு அழைத்து சென்றார்.
இந்த நிலையில் இவர்களின் உறவிற்கு சிறுவர்கள் 2 பேரும் இடையூறாக இருப்பதாக மஞ்சுவும், பிரியங்காவும் நினைத்தனர்.
கடந்த 9-ந் தேதி மஞ்சுவும், பிரியங்காவும் சேர்ந்து சிறுவர்களை தகாத வார்த்தைகளால் பேசி கடுமையாக தாக்கியுள்ளனர். கத்தியை காட்டி கொன்று விடுவதாகவும் மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து அதிகாரிகள் சிறுவர்கள் 2 பேரையும் பார்த்தனர். அப்போது அவர்களுக்கு முகம், தாடை, கழுத்து, கை, மூக்கு, கால்களில் காயம் ஏற்பட்டிருந்தது. உடனடியாக அவர்கள் 2 பேரையும் மீட்டனர்.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பரமேஸ்வரி மற்றும் ரெபீனா ஆப்பிரிணம் ஆகியோர் சம்பவம் குறித்து காரமடை போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் திருநம்பி பிரியங்கா மற்றும் சிறுவர்களின் தாய் மஞ்சு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்டுத்தி கோவை ஜெயிலில் அடைத்தனர்.
திருநம்பியுடன் வாழ்வதற்கு ஆசைப்பட்டு பெற்ற தாயே தனது பிள்ளைகளை அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- மேலதிகாரிகளை பழைய பொருட்களை வாங்கும் இ காமர்ஸ் வெப்சைட்டில் விற்பதுப் போல் விளம்பரம் செய்கின்றனர்.
- அனைவரும் ஏதோ ஒரு வேலை செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போதைய சமூதாய சூழ்நிலையில் அனைவரும் ஏதோ ஒரு வேலை செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். அந்த வேலை பிடிக்கிறதோ, இல்லையோ அதை அனைவரும் செய்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
எல்லா வேலைகளிலும் நமக்கு மேல் அதிகாரி என்பவர் இருப்பார், அவர் கொடுக்கும் வேலை பளுவினால் வருவது மனசோர்வு, கோபம் மட்டும்தான். சில நபர்களுக்கு அவர்களுக்கு வேலை செய்யும் நிறுவனம் பிடிக்காது, மேலதிகாரி மற்றும் மேலதிகாரி நடத்தும் விதமும், அவர்கள் நடந்து கொள்ளும் விதமும் பிடிக்காது. இதனை சீன மக்கள் புதுவிதமான அணுகியுள்ளனர்.
அவர்களது மன சோர்வை குறைத்துக்கொள்ள அவர்களுக்கு பிடிக்காத வேலையையும் , பிடிக்காத மேலதிகாரிகளையும் பழைய பொருட்களை வாங்கும் இ காமர்ஸ் வெப்சைட்டில் விற்பதுப் போல் விளம்பரம் செய்கின்றனர்.
அலிபாபா என்ற இந்த தளத்தில் அவர்களது வேலை பளுவை குறைத்துக் கொள்ள இப்படி செய்து வருகின்றனர். இந்த வேலையையும் , தொல்லை பிடித்த மேலதிகாரிகளை 4 முதல் 9 லட்ச ரூபாய் வரை விற்பதாக சீன மக்கள் பதிவிடுகின்றனர்.
அதில் ஒரு நபர் அவர் மாதம் 33 ஆயிரம் ஈட்டித்தரும் வேலையை 91000 ரூபாய்க்கு விற்பதாகவும் நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை 3 மாதங்களில் திரும்பி எடுத்துக் கொள்ளலாம் என்றும் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர் அவருடன் வேலை பார்க்கும் சக நக்கல் பிடித்த ஊழியரை 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதாக பதிவிட்டுள்ளார். கூடுதலாக அவரை எப்படி சமாளிக்கவேண்டும் என்பதை நானே கற்று தருகிறேன் என்று அதில் எழுதியுள்ளார்.
ஆனால் இதெல்லாம் ஒரு விளையாட்டுக்காகவும், மன சோர்வை குறைக்கும் ஒரு செயலுக்காக தான் இப்படி செய்கிறார்கள். யாரும் இதன் மூலம் பணபரிவர்தனை செய்யக்கூடாது. அப்படி யாரெனும் விளம்பரத்தை பார்த்து முன்வந்தால் அவர்கள் அந்த பதிவை அழித்து விடுகின்றனர்.
இப்படி உங்களுக்கும் உங்கள் வேலையில் மனசோர்வு மற்றும் பிடிக்காத மேலதிகாரி அல்லது கடுப்பேற்றும் சக ஊழியர்கள் இருந்தால் இப்படி எதையாவது புதுவிதமாக முயற்சி செய்து உங்கள் மனசோர்வை குறைத்துக் கொள்ளுங்கள்.
- கணவரின் கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார் அவரது மனைவி மெஹர் ஜஹான்
- சிசிடிவி காட்சிகளை காட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்க மனைவி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், கணவரின் கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்திய அவரது மனைவி மெஹர் ஜஹானை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கணவனுக்கு போதைப்பொருள் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்திய பிறகு அவரை கட்டிப்போட்டு அவரது ஆண் உறுப்பை சிகரெட்டால் சுட்டு காயப்படுத்தி கொடுமைப் படுத்தியுள்ளார்.
மனைவி தன்னை கட்டி வைத்து தாக்குவது சிகரெட்டால் சுடுவது போன்ற காட்சிகளை சிசிடிவி காட்சிகள் மூலம் கணவன் பதிவு செய்துள்ளார். இதனை ஆதாரமாக கொண்டு கடந்த 5-ம் தேதி காவல்நிலையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, மெஹர் ஜஹான் மீது கொலை முயற்சி, சித்திரவதை செய்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.
Warning Post:
— Niranjan kumar (@niranjan2428) May 7, 2024
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், போதை கலந்த பாலை கொடுத்து கணவருக்கு மயக்கத்தை ஏற்படுத்தி பிறகு அவரது கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார் அவரது மனைவி மெஹர் ஜஹான்
சிகரெட்டால் சுட்டும், ஆண் உறுப்பை கத்தி கொண்டு காயப்படுத்தியும் கொடுமை… pic.twitter.com/vDTnLdUZ5m
- குறவைய்யாவை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தது சம்பந்தமாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், தாடி பத்திரி, சி.பி.ஐ காலனியை சேர்ந்தவர் ராம குறவைய்யா. கடந்த மாதம் 25-ந் தேதி ராம குறவைய்யாவுக்கும் அவரது நண்பருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் காயம் அடைந்த நண்பர் இது குறித்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அமீத்கான் வழக்கு பதிவு செய்து குறவைய்யாவை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தார்.
பின்னர் போலீஸ் நிலையத்தில் வைத்து குறவைய்யாவின் மூக்கு மற்றும் காதில் மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்தார். இதில் குறவைய்யாவின் மூக்கு மற்றும் காதில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து குறவைய்யாவை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து குறவைய்யா அனந்தபூர் போலீஸ் சூப்பிரண்டு அன்புராஜனிடம் புகார் செய்தார். மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தது சம்பந்தமாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
விசாரணையில் இன்ஸ்பெக்டர் அமித்கான் என்பவர் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தது தெரிய வந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அன்பு ராஜன் தெரிவித்தார்.
- ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து வக்கிரம்
- கூலித்தொழிலாளி மீது போக்சோ வழக்கு
கோவை,
கோவையை சேர்ந்தவர் 14 வயது சிறுவன். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுவன் கடந்த 7-ந் தேதி தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு வீட்டிற்கு வெளியே சிறுவன் விளையாடி கொண்டருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ராமராஜ் என்பவர் சிறுவனிடம் வந்து நைசாக பேச்சு கொடுத்தார். அவர் சிறுவனிடம் வா நாம் விளையாட போகலாம் என அழைத்தார்.
சிறுவனும் விளையாட தானே என நினைத்து அவருடன் சென்றார். ராமராஜ் அந்த பகுதியில் உள்ள பள்ளியின் பின்புறம் ஆட்கள் நடமாட்டம் இல் லாத பகுதிக்கு அழைத்து சென்றார்.
அங்கு வைத்து சிறுவ னுக்கு பாலியல் தொல்லை ெகாடுத்தார். மேலும் இதனை வெளியில் கூறி னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.இதனால் பயந்து போன சிறுவன் யாரிடமும் இதனை கூறாாமல் இருந்து வந்தான். இந்த நிலையில் சிறுவனுக்கு உடல்நிலை பாதிக்கப்படவே அவரது தாயார் விசாரித்தார்.
அப்போது சிறுவன் தனக்கு நடந்த சம்பவத்தை தாயாரிடம் தெரிவித்தான். இதை கேட்டு அதிர்ச்சியான அவர் சம்பவம் குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் ராமராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு பிரதீப்புக்கு திருமணமானது தெரிய வந்தது.
- வாலிபர் வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
குனியமுத்தூர்,
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் 22 வயது பட்டதாரி இளம்பெண். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மேட்டுப்பாளையம் பாரதி நகரை சேர்ந்த திருமணமான பிரதீப் (வயது 28) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
பிரதீப் இளம்பெண்ணுடன் திருமணமானதை மறைத்து அவருடன் பழகி வந்தார். 2 பேரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்களது காதலை வளர்த்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு பிரதீப்புக்கு திருமணமானது தெரிய வந்தது. இது குறித்து இளம்பெண் கேட்ட போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் பிரதீப்புடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்தார்.
ஆனால் வாலிபர் இளம்பெண்ணை தினசரி பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்தார். தொல்லை தாங்க முடியாத இளம்பெண் இது குறித்து குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பிரதீப்பை அழைத்து இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுக்க கூடாது என எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பினர்.
சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பிரதீப் மீண்டும் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்தார். அவர் இளம்பெண்ணிடம் நீ எனக்கு மட்டும் தான். நான் உன்னை காதலித்து கொண்டே தான் இருப்பேன் என கூறி தகராறு செய்தார். பின்னர் அவர் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து இளம்பெண் மீண்டும் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த பிரதீப் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- 2 வயது சிறுமி பிரீத்தி உள்ளிட்டவர்களை தெருநாய் துரத்தி கண்டித்துள்ளது.
- கடந்த 2 நாட்களில் மட்டும் 14 பேரை நாய் கடித்து தாக்கியதாக அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.
சிங்கை:
விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டி பகுதியில் சேக்கிழார் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுமி பிரீத்தி, 6 வயது சிறுவன் மிதில், 13 வயது சிறுவன் சிவசங்கர் ஆகியோரை அப்பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய் துரத்தி சென்று கண்டித்துள்ளது.
மேலும் அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 43), காந்திமதி நாதன் (76), வேலம்மாள் (61) ஆகியோரையும் நாய்கள் கடித்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த அந்த நாய் கடந்த 2 நாட்களில் மட்டும் 14 பேரை கடித்து தாக்கியதாக அப்பகுதி யினர் புகார் கூறுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. இது சாலையில் செல்லும் சிறுவர்கள் மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என பலரையும் கடித்து வருகிறது. நாய் கடித்து காயமடைந்தவர்கள் எங்கள் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆனால் சிவந்திபுரம் ஊராட்சி இந்த சம்பவத்தை கண்டுகொள்ளவே இல்லை. எனவே சாலைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் நாய்களை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெயிண்டரான மகா விஷ்ணு, பொங்கல் பண்டிகை முடிந்து மும்பை சென்ற மகேஸ்வரியிடம் தொடர்ந்து செல்போனில் பேசி தனது காதலை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
- மகா விஷ்ணு மற்றும் அவரது குடும்பத்தினர், மகேஸ்வரியை ஒரு வீட்டினுள் அடைத்து வைத்து கருவை அழிக்க வேண்டி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.
வாழப்பாடி:
வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் வேலு. இவருடைய மகள் மகேஸ்வரி (வயது 22). இவர் சிறு வயது முதலே மும்பையில் சித்தி வீட்டில் தங்கி இருந்தார்.
இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை கொண்டாட தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் மகாவிஷ்ணு (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
பெயிண்டரான மகா விஷ்ணு, பொங்கல் பண்டிகை முடிந்து மும்பை சென்ற மகேஸ்வரியிடம் தொடர்ந்து செல்போனில் பேசி தனது காதலை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட முத்தம்பட்டிக்கு மகேஸ்வரி வந்துள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை மகா விஷ்ணு, மகேஸ்வரியுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் மகேஸ்வரி கர்ப்பம் தரித்தார்.
இதை அறிந்த மகா விஷ்ணு மற்றும் அவரது குடும்பத்தினர், மகேஸ்வரியை ஒரு வீட்டினுள் அடைத்து வைத்து கருவை அழிக்க வேண்டி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. அங்கிருந்து தப்பி வந்த மகேஸ்வரி வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், மகாவிஷ்ணு அவருடைய தந்தை ரவிச்சந்திரன், தாயார் சிவகாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- யுவராஜாவுக்கும் செட்டிகுளத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
- யுவராஜா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
வள்ளியூர்:
பழவூர் அருகே யாக்கோபுரத்தைச் சேர்ந்த யுவராஜா (வயது 31) இவருக்கும் செட்டிகுளத்தை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது வரதட்சனையாக 30 பவுன் நகை போடுவதாக கூறியுள்ளனர்.
திருமணத்தின்போது பெண் வீட்டார் 16 பவுன் நகை போட்டதாகவும், மீதி நகையை வாங்கி வர சொல்லி யுவராஜா கொடுமைப்படுத்தியதாக வும், யுவராஜாவின் மனைவி வள்ளியூர் நீதிமன்றத்தில் 2021-ம் ஆண்டு வழக்கு தொடுத்தார். வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி யுவராஜா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி உத்தரவிட்டார்.அதன்படி வள்ளியூர் மகளிர் காவல் நிலையத்தில் யுவராஜா மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.