search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை
    X

    கோவை அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை

    • ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து வக்கிரம்
    • கூலித்தொழிலாளி மீது போக்சோ வழக்கு

    கோவை,

    கோவையை சேர்ந்தவர் 14 வயது சிறுவன். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சிறுவன் கடந்த 7-ந் தேதி தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு வீட்டிற்கு வெளியே சிறுவன் விளையாடி கொண்டருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ராமராஜ் என்பவர் சிறுவனிடம் வந்து நைசாக பேச்சு கொடுத்தார். அவர் சிறுவனிடம் வா நாம் விளையாட போகலாம் என அழைத்தார்.

    சிறுவனும் விளையாட தானே என நினைத்து அவருடன் சென்றார். ராமராஜ் அந்த பகுதியில் உள்ள பள்ளியின் பின்புறம் ஆட்கள் நடமாட்டம் இல் லாத பகுதிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு வைத்து சிறுவ னுக்கு பாலியல் தொல்லை ெகாடுத்தார். மேலும் இதனை வெளியில் கூறி னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.இதனால் பயந்து போன சிறுவன் யாரிடமும் இதனை கூறாாமல் இருந்து வந்தான். இந்த நிலையில் சிறுவனுக்கு உடல்நிலை பாதிக்கப்படவே அவரது தாயார் விசாரித்தார்.

    அப்போது சிறுவன் தனக்கு நடந்த சம்பவத்தை தாயாரிடம் தெரிவித்தான். இதை கேட்டு அதிர்ச்சியான அவர் சம்பவம் குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் ராமராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×