search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife suicide"

    • சம்பவ இடத்திற்கு தீ தடுப்பு நிலைய அதிகாரி கர்ணன் தலைமையில் சென்ற குழுவினர் கிணற்றில் இறங்கி கலாவை பிணமாக மீட்டனர்.
    • சாலை விபத்தில் கணவன் இழந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வடக்கு அயித்தாம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 34). விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் குபேந்திரன்(21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வடக்கு அயித்தாம்பட்டியில் இருந்து நான்காவது மைலுக்கு சென்றார்.

    முசிறி, துறையூர் சாலையில் நான்காவது மைல் அருகே சீனிவாசன் என்பவரது வீடு அருகே வந்தபோது துறையூரில் இருந்து குளித்தலை ரெயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த சக்தி முருகன் (56) என்பவர் ஓட்டி வந்த ஆம்னி கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சிலம்பரசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி விரைந்து சென்று சிலம்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்தில் கணவர் இறந்த தகவல் அறிந்து சிலம்பரசனின் மனைவி கலா (27) கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

    வீட்டுக்கு சென்ற பின்னர் துக்கம் தாளாமல் கதறி அழுதுகொண்டே இருந்தார். திடீரென்று அவர் ஓடி சென்று வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்து விட்டார். அக்கம்பக்கத்தினர் திரண்டு அவரை மீட்க முயன்றனர். பின்னர் இது குறித்து முசிறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு தீ தடுப்பு நிலைய அதிகாரி கர்ணன் தலைமையில் சென்ற குழுவினர் கிணற்றில் இறங்கி கலாவை பிணமாக மீட்டனர். பின்பு கலாவின் உடலும் பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சாலை விபத்தில் கணவன் இழந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் வடக்கு அயித்தாம்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அடிக்கடி தகராறு
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள பெரிய அய்யம் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி இவரது மனைவி செல்வி (வயது 45). வீராசாமி அடிக்கடி குடிபோதையில் வீட்டில் வந்து தகராறு செய்தார்.

    இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி செல்வி தனது வீட்டில் பேன் கொக்கியில் புடவையில் தனக்குத்தானே தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

    இதனை கண்ட பிரகாஷ், செல்வியை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்வி உயிரிழந்தார்.

    இது சம்பந்தமாக பிரகாஷ் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் தரணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரசாந்த் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதும் தனக்கு பழக்கமான பெண்ணுடன் தனியாக குடும்பம் நடத்த தொடங்கி உள்ளார்.
    • பிரசாந்த் மீது பவானியின் பெற்றோர் புகார் தெரிவித்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது30). தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பவானி(24). இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் பிரசாந்த்துக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகினர். மேலும் அந்த பெண்ணுடன் பிரசாந்த் தனியாக குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த பவானி கணவரை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதில் மனவேதனை அடைந்த பவானி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென தூக்குப்போட்டு தொங்கினார். உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவானி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மணவாள நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பிரசாந்தை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    பிரசாந்த் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதும் தனக்கு பழக்கமான பெண்ணுடன் தனியாக குடும்பம் நடத்த தொடங்கி உள்ளார். மேலும் 3 மாதமாக அவர் வீட்டுக்கும் வரவில்லை என்று தெரிகிறது. இந்த மனவேதனையில் பவானி தற்கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே பிரசாந்த் மீது பவானியின் பெற்றோர் புகார் தெரிவித்து உள்ளனர். இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பங்கஜ்குமார் மற்றும் குடும்பத்தினர் இரவு வழக்கம் போல் தூங்கினர்.
    • மஞ்சரி கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

    போரூர்:

    கோயம்பேடு, நூறடி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 10-வது தளத்தில் வசித்து வருபவர் பங்கஜ்குமார். இவர் எஸ்.பி.ஐ வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மஞ்சரி (வயது46) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களது சொந்த ஊர், பீகார் மாநிலம் பாட்னா ஆகும்.

    நேற்று இரவு பங்கஜ்குமார் மற்றும் குடும்பத்தினர் இரவு வழக்கம் போல் தூங்கினர். இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் பங்கஜ் குமார் எழுந்து பார்த்தபோது அருகில் இருந்த மனைவி மஞ்சரி மாயமாகி இருந்தார். அவரை பங்கஜ்குமார் தேடிவந்தார்.

    இதற்கிடையே அடுக்குமாடி குடியிருப்பின் கீழே மஞ்சரி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு குடியிருப்பின் காவலாளி ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் பங்கஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்து பார்த்தபோது மனைவி மஞ்சரி பிணமாக கிடப்பதை கண்டு கதறி துடித்தார்.

    தகவல் அறிந்ததும் கோயம்பேடு பஸ் நிலைய இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மஞ்சரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மஞ்சரி, வீட்டின் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    மஞ்சரி கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் 10-வது மாடியில் இருந்து விழுந்து இறந்து உள்ளார்.

    இதுதொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மஞ்சரியின் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து அவரது கணவர் பங்கஜ்குமாரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் பங்கஜ்குமார் பாட்னாவில் இருந்து பணியிடம் மாறுதல் பெற்று சென்னைக்கு குடி வந்து உள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திருவெண்ணைநல்லூர் அருகே குடிகார கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
    • வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே கொண்ட சமுத்திரம் பகுதியைசேர்ந்தவர் சண்முகம்.அவரது மனைவி அம்சவல்லி (வயது 28) இவர்களுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சண்முகத்திற்கு குடி ப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனை ஏற்படும். இதனால் மன உளைச்சலில் இருந்த அம்சவல்லி நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயம் அரளி விதையை அரைத்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டுவிழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்து வமனையில் சிகி ச்சைக்காக சேர்த்தனர். அங்கு அம்சவல்லியை பரிசோதனை செய்த டாக்ட ர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுஅம்சவல்லி உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இது குறித்து அம்சவல்லி தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    சின்னமனூர் அருகே கணவர் இறந்த துக்கம் தாங்காமல் முடியாமல் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை போடி ரோட்டை சேர்ந்தவர் சோலைத்தேவர். இவரது மனைவி முத்துமாயக்காள் (வயது80). கடந்த மாதம் சோலைத்தேவர் இறந்து விட்டார்.

    இதனால் முத்து மாயக்காள் மனவேதனையில் இருந்தார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் நேற்று வி‌ஷம் குடித்து விட்டார். உடனே அவரை சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேதராப்பட்டு:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தை சேர்ந்தவர் இளையராஜா. கோட்டக்குப்பத்தை அடுத்த அனுமந்தை குப்பத்தை சேர்ந்தவர் சவுமியா (வயது 20). இருவரும் நேரு வீதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தனர்.

    இளையராஜாவும், சவுமியாவும் ஒரே கடையில் வேலை செய்து வந்ததால் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

    இருவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்பு இருவரும் சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு செல்லாமல் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு புது தென்றல் வீதியில் வசித்து வந்தனர்.

    இளையராஜா லோடு லாரி வாங்கி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு நியா என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதே போல் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில், மனவேதனை அடைந்த சவுமியா இரவு இளையராஜா தூங்கிய பின்பு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    காலையில் எழுந்து பார்த்த இளையராஜா மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுபற்றி ஆரோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து சவுமியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி சவுமியாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். சவுமியாவின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    பின்னர் சவுமியாவின் தாய் சுமதி ஆரோவில் போலீசில் இளையராஜா மீது புகார் கொடுத்தார். அதில், இளையராஜா வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததாகவும், எனவே, அடித்து கொலை செய்து இருக்கலாம் என்று கூறி இருந்தார்.

    இந்த புகார் குறித்தும் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா இதை சந்தேகத்துக்கிடமான மரணமாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் விசாரணை நடைபெறுகிறது.

    தவளக்குப்பம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் பால் வாடி தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது 2-வது மனைவி சித்ரா (வயது 42). இவர்கள் இருவரும் வீட்டின் அருகிலேயே அம்மன் கோவில் கட்டி வழிபட்டு வந்தனர். மேலும் குறி சொல்லியும் வந்தனர். மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் மீது அதிக தெய்வ பக்தி கொண்ட கணவன்-மனைவி இருவரும் கடந்த 20 நாட்களாக மேல்மலையனூரில் தங்கி இருந்து விட்டு நேற்று வீடு திரும்பினர். 

    இந்த நிலையில் நேற்று மாலை சித்ரா பக்கத்து வீட்டு பெண்ணிடம் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது நாகராஜ் இதை பார்த்து சித்ராவிடம் ஏன் பக்கத்து வீட்டு பெண்ணிடம் பேசினாய்? என்று கேட்டு கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சித்ரா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் அறை கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    தீ உடல்முழுவதும் பரவியதால் வலி தாங்காமல் சித்ரா அலறி துடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து தீயை அணைத்தனர். பின்னர் சித்ராவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சித்ரா பரிதாபமாக இறந்து போனார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஆறுமுகநேரியில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி எஸ்.ஆர்.எஸ். காட்டன்பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 50). இவர் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அய்யப்பன் தற்கொலை செய்து கொண்டார். இதில் இருந்து சுமதி மனவேதனையில் இருந்து வந்தார். மேலும் கடன் தொல்லைகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுமதி மற்றும் அவரது மகள் ஆகிய 2 பேரும் நேற்று வி‌ஷத்தை குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை சுமதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகநேரி காமராஜபுரத்தை சேர்ந்த செல்வி என்பவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    கொரடாச்சேரி அருகே கணவனுடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    கொரடாச்சேரி:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள முசிறியத்தை அடுத்த திட்டாணிமுட்டம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 35). இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார்.

    இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் மாரியம்மாள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் சேலத்தை சேர்ந்த வெற்றிவேல் என்பவரை 2-வது திருமணம் செய்து திட்டாணிமுட்டத்தில் தனது வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். வெற்றிவேல் வீட்டில் இருந்தபடியே தச்சு தொழில் செய்து வந்தார். வெற்றிவேலுக்கு மதுபழக்கம் இருந்தது. மேலும் அவர் தச்சுவேலை செய்து தருவதாக கூறி பலரிடமும் பணம் வாங்கி மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் பணம் கொடுத்தவர்கள் மாரியம்மாளின் வீட்டுக்கு வந்து பணம் கேட்டனர்.

    இது குறித்து மாரியம்மாள் தனது கணவர் வெற்றிவேலிடம் கேட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த மாரியம்மாள் சம்பவத்தன்று வீட்டுக்கு வெளியே வந்து தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    இதில் உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாரியம்மாளின் உறவினர் கைலாசம் கொடுத்த புகாரின்பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கணவர் குடிப்பழக்கத்தை கைவிட மறுத்ததால் பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மதுரை:

    மதுரை எழுமலை சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிச்சைப்பாண்டி மனைவி பாரதி (வயது 28). பிச்சைப்பாண்டிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.

    இதனால் குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இந்த நிலையில் பிச்சைப்பாண்டி சமீபத்தில் மனைவியிடம் நான் இனிமேல் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தாராம். அதன்படி கடந்த 4 மாதங்களாக குடிக்காமல் இருந்து வந்தார். திடீரென்று பிச்சைப்பாண்டி சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பாரதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பாரதி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாபநாசம் அருகே இரவில் வாலிபருடன் செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பொன்மான் மேய்ந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 35). விவசாயி. இவரது மனைவி ராஜஸ்ரீ(32), இவர்களுக்கு அஜிலேஸ் (10) என்ற மகனும், அனுஜ்ஸ்ரீ(8) என்ற மகளும் உள்ளனர்.

    ராஜஸ்ரீக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே நீண்டநாளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    இந்நிலையில் ராஜஸ்ரீ, கடந்த ஜனவரி மாதம், அந்த வாலிபருடன் சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சார்லஸ் மனைவியை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை.

    இதுபற்றி அவர் பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜஸ்ரீயை மீட்டு, சார்லசிடம் ஒப்படைத்தனர். மேலும் அந்த வாலிபரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி இரவு ராஜஸ்ரீ,  தனது செல்போனில் கள்ளக்காதலனுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். இதை சார்லஸ் கவனித்து விட்டார். இதனால் அவர் யாரிடம் இந்த இரவு நேரத்தில் பேசுகிறாய்? என்று கேட்டார். இதில் பயந்து போன, ராஜஸ்ரீ பீதியில் செல்போனை தூக்கி போட்டு விட்டு, கொல்லைப்புறமாக தப்பி ஓடி விட்டார்.

    இதையடுத்து சார்லஸ், செல்போனை எடுத்து பார்த்தபோது மனைவி, கள்ளக்காதலனுடன் பேசியது தெரியவந்தது. இதற்கிடையே ஏமாற்றி விட்டு தப்பி ஓடிய ராஜஸ்ரீ அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் பலன் இல்லாமல் போனது. இந்த நிலையில் அதே கிராமரத்தில் அழகர் என்பவரது திடலில் உள்ள மா மரத்தில் ராஜஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி சார்லஸ் பாபநாசம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    செல்போனில் கள்ளக்காதலனுடன் பேசியதால் ராஜஸ்ரீ உயிரை மாய்த்து கொண்டார். இதனால் இன்று அவரது 2 குழந்தைகளும் தாயை இழந்து விட்டதே என்று கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
    ×