என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனைவி தற்கொலை
    X

    தெலுங்கானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனைவி தற்கொலை

    • ரூபா தேவி கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏ.வின் மனைவி எதற்காக தற்கொலை செய்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டம் சோப்தண்டி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மெடிப்பள்ளி சத்தியம். இவரது மனைவி ரூபா தேவி. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    மெடிப்பள்ளி சத்தியம் ஐதராபாத் அடுத்த அல்வால் பஞ்சசீலா காலனியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். ரூபா தேவி விகாரபாத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மெடிப்பள்ளி சத்தியம் எம்.எல்.ஏ. தனது மனைவி குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் திருப்பதி மற்றும் பல்வேறு சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு வந்தனர்.

    இந்த நிலையில் ரூபா தேவி கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். நேற்று காலை தொகுதிக்குச் சென்ற எம்.எல்.ஏ. சத்தியம் மாலை வரை தொகுதியிலேயே இருந்தார்.

    நேற்று நள்ளிரவு எம்.எல்.ஏ. சத்யம் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் உள்ள படுக்கை அறையில் ரூபா தேவி தூக்கில் பிணமாக தொங்கினார். இதனைக் கண்ட சத்தியம் எம்.எல்.ஏ. மற்றும் குழந்தைகள் கதறி துடித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரூபா தேவியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏ.வின் மனைவி எதற்காக தற்கொலை செய்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×