search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர்
    X

    கோவையில் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர்

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு பிரதீப்புக்கு திருமணமானது தெரிய வந்தது.
    • வாலிபர் வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    குனியமுத்தூர்,

    கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் 22 வயது பட்டதாரி இளம்பெண். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மேட்டுப்பாளையம் பாரதி நகரை சேர்ந்த திருமணமான பிரதீப் (வயது 28) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    பிரதீப் இளம்பெண்ணுடன் திருமணமானதை மறைத்து அவருடன் பழகி வந்தார். 2 பேரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்களது காதலை வளர்த்து வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு பிரதீப்புக்கு திருமணமானது தெரிய வந்தது. இது குறித்து இளம்பெண் கேட்ட போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் பிரதீப்புடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்தார்.

    ஆனால் வாலிபர் இளம்பெண்ணை தினசரி பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்தார். தொல்லை தாங்க முடியாத இளம்பெண் இது குறித்து குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பிரதீப்பை அழைத்து இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுக்க கூடாது என எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பினர்.

    சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பிரதீப் மீண்டும் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்தார். அவர் இளம்பெண்ணிடம் நீ எனக்கு மட்டும் தான். நான் உன்னை காதலித்து கொண்டே தான் இருப்பேன் என கூறி தகராறு செய்தார். பின்னர் அவர் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து இளம்பெண் மீண்டும் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த பிரதீப் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×