என் மலர்
நீங்கள் தேடியது "மத்தியப் பிரதேசம்"
- வெங்காயம் எங்கள் குழந்தை போன்றது. விவசாயம் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி
- ஏற்றுமதி குறைவால், உள்நாட்டில் இருப்பு கூடி, மண்டிகளில் குறைந்த விலைக்கு வாங்கப்படுவதாக விவசாயிகள் வேதனை.
விலைச்சரிவால் அடிப்படை உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவை கூட எடுக்க முடியவில்லை என விரக்தியில், வெங்காயத்திற்கு விவசாயிகள் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சௌர் மாவட்டத்தின் தம்னார் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வுதான் இது. கிராமத்தில் உள்ள தகன மைதானத்தில் ஒரு பாடையில் வெங்காயத்தை கொட்டி, அதற்கு பூமாலை போட்டு, மனிதருக்கு இறுதி சடங்கு செய்வது போல அனைத்து காரியங்களையும் செய்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் மால்வா மற்றும் நிமர் பகுதிகள் இந்தியாவின் வெங்காய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள், வெங்காயத்திற்கு சரியான விலை கிடைக்காததால் இந்த நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மண்டிகளில் வெங்காயம் கிலோவுக்கு 1 முதல் 10 ரூபாய்க்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். சிலர் 1 -2 ரூபாய்க்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
நியாயமான விலை கிடைக்காததால் இந்த வெங்காய ஊர்வலம் நடத்தப்பட்டது. எங்களுக்கு நிறைய நஷ்டம் ஆகியுள்ளது. அரசு இன்னும் விழித்துக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? என இறுதிச் சடங்கில் பங்கேற்ற விவசாயி பத்ரி லால் தாக்கட் தெரிவித்தார்.
"இந்த நூதன போராட்டம் தொடர்பாக பேசிய மற்றொரு விவசாயி, "வெங்காயம் எங்கள் குழந்தை போன்றது. இந்த விவசாயம் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி. அதிக கனமழையால் இரண்டாவது பயிரும் வீணானது. இப்போது வெங்காயமும் காய்ந்துவிட்டது. அதனால்தான் இறுதி ஊர்வலம் நடத்தினோம். எங்கள் செலவை ஈடுகட்டும் விலையைக்கூட அரசு வழங்கவில்லை" என தெரிவித்தார்.
வெங்காயத்தின் மீதான நீண்டகால வரியால்தான் சர்வதேச சந்தைகளில் இந்தியா போட்டியிட முடியவில்லை எனவும், இதன் விளைவாக ஏற்றுமதி சரிந்து உள்நாட்டில் இருப்பு அதிகமாவதால், மண்டியில் குறைவான விலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த இறுதி ஊர்வலம் வெறும் ஆரம்பம்தான் எனவும், நியாயமான விலை உறுதி செய்யப்படாவிடில் பிராந்தியம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
- பாஜக எம்.பி கணேஷ் சிங் கிரேனில் ஏறி அம்பேத்கர் சிலைக்கு மாலை போட முயன்றார்.
- இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் கடந்த 31 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. வல்லபாய் படேலின் பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
மத்தியப் பிரதேசத்தில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பாஜக எம்.பி கணேஷ் சிங் கிரேனில் ஏறி அம்பேத்கர் சிலைக்கு மாலை போட முயன்றார்.
அப்போது அவர் கிரேனில் சிக்கிக் கொண்டதால் ஆத்திரத்தில் ஆப்ரேட்டரை அடித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- குவாலியர் மண்டல கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராக மகாநாரியமன் இருந்தார்.
- மிக இளைய வயதில் (29) ம.பி. கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் என்ற அவர் பெருமையை பெற்றுள்ளார்.
மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக மத்திய பாஜக அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் மகாநாரியமன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
குவாலியர் மண்டல கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த அவர் மிக இளைய வயதில் (29) ம.பி. கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானவர் என்ற அவர் பெருமையை பெற்றுள்ளார்.
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐ தலைவராக இருந்து இப்போது ஐசிசி தலைவராக உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மனைவி திரௌபதி, தனது கணவரின் பால்ய நண்பருடன் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்தார்.
- தனது கணவர் மற்றும் மாமியார் மீது பொய்யான வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்வதாகவும் மிரட்டினார்.
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோகர் லோதி (45). இவரது மனைவி திரௌபதி, தனது கணவரின் பால்ய நண்பருடன் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்தார்.
மனோகரின் குடும்ப உறுப்பினர்கள் இது குறித்து அறிந்ததும், அவர்கள் திரௌபதியை உறவை முறித்துக் கொள்ளுமாறு அவர்கள் எச்சரித்தனர்.
இருப்பினும், அவர் மறுத்தது மட்டுமல்லாமல், தனது கணவர் மற்றும் மாமியார் மீது பொய்யான வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்வதாகவும் மிரட்டினார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மனோகர் லோதி, அவரது தாயார் புல்ரானி லோதி (70), மகள் ஷிவானி (18) மற்றும் மகன் அங்கித் (16) ஒரு கடுமையான முடிவை எடுத்தனர்.
ஜூலை 26 ஆம் தேதி இரவு, நால்வரும் சல்பாஸ் மாத்திரைகளை விழுங்கி தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவத்தில், பூல்ராணி மற்றும் அங்கித் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஷிவானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார். மனோகர் லோதி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
முழு குடும்பத்தையும் தற்கொலைக்கு தூண்டியதாக மனோகரின் மனைவி திரௌபதி மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

- குறிப்பாக சிவ்புரி மாவட்டத்தில், நீர்நிலைகள் நிரம்பி அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
- அடுத்த 24 மணிநேரத்துக்கு சுமார் 220 மி.மீ. அளவிலான கனமழை பெய்யக்கூடும்
பருவமழையால் பல்வேறு வட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சிவ்புரி மாவட்டத்தில், நீர்நிலைகள் நிரம்பி அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள வீடுகளினுள் வெள்ளநீர் புகுந்துள்ள நிலையில் ராணும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
திண்டோரி, விடிஷா, ஜபாப்பூர், நர்மதாபுரம், அலிராஜ்பூர், ராஜ்கார் மற்றும் பேடல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், மொரேனா, ரைசன், குணா, அசோக்நகர், சிவ்புரி, சாகர் மற்றும் விடிஷா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 2,900-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு சுமார் 220 மி.மீ. அளவிலான கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- பி.எம். ஸ்ரீ பள்ளியில் ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
- பள்ளியின் பாழடைந்த நிலை குறித்து ஏற்கனவே அரசிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளி வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை, போபாலில் உள்ள பி.எம். ஸ்ரீ (மத்திய அரசு திட்ட) பள்ளியில் ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை. மாணவர் ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பள்ளியின் பாழடைந்த நிலை குறித்து ஏற்கனவே அரசிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் எந்த நடவடிக்கையில் எடுக்காமல் அரசு அலட்சியம் காட்டியதால் தற்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
- எங்கள் கிராமத்தில் தார் சாலைகள் இல்லை என்று அந்த வீடியோவில் கர்ப்பிணி பெண்கள் பேசியுள்ளனர்.
- சாசாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பாஜக எம்.பி. ராஜேஷ் மிஸ்ரா உறுதியளித்தார்.
மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் உள்ள காதி குர்த் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள், பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு செல்வதற்கு சாலை அமைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் பேசியுள்ள கர்ப்பிணி பெண்கள், எங்கள் கிராமத்தில் தார் சாலைகள் இல்லை. நிறைமாத கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு மருத்துவமனைகளை சேறு, சகதி நிறைந்த சாலையில் செல்ல வேண்டியுள்ளது. ஆகவே எங்கள் கிராமத்திற்கு தார் சாலைகளை அமைக்க வேண்டும்" என்று பேசியிருந்தனர்.
சமூக ஊடகங்களில் லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட லீலு ஷா என்பவர் 2023 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை டேக் செய்து இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், "மத்தியப் பிரதேசத்திலிருந்து 29 எம்.பி.க்களையும் வெற்றி பெறச் செய்தோம். இப்போது எங்களுக்கு ஒரு சாலை கிடைக்குமா?" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலான நிலையில், அப்பகுதியில் சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக சித்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் பாஜக எம்.பி. ராஜேஷ் மிஸ்ரா ஆகியோர் உறுதியளித்தனர்.
இது தொடர்பாக பேசிய பாஜக எம்.பி. ராஜேஷ் மிஸ்ரா, "ஒவ்வொரு பிரசவத்திற்கும் ஒரு தேதி உண்டு. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இந்த பணிகளை முடித்துவிடுவோம். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் வழங்குவோம்.
இதுவரை சாலை மோசமாக இருந்த காரணத்தால் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்ட்டுள்ளார்களா? தேவைப்பட்டால், எங்களிடம் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் உள்ளன. எங்களிடம் ஆஷா பணியாளர்கள் உள்ளனர். எங்களிடம் ஆம்புலன்ஸ்கள் உள்ளன. இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. வனத்துறையின் ஆட்சேபனைகள் காரணமாக கட்டுமானப் பணிகள் தாமதமாகி வருகிறது" என்று தெரிவித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய மத்தியபிரதேச பொதுப்பணித் துறை அமைச்சர் ராகேஷ் சிங், "சமூக ஊடகங்களில் யாராவது ஒரு பதிவை போட்டால் அதற்கு நாங்கள் பதில் அளிக்க வேண்டுமா? பட்ஜெட்டுகள் குறைவாகவே உள்ளன. சமூக ஊடகங்களில் கூறப்படும் ஒவ்வொரு கோரிக்கையையும் நிறைவேற்ற முடியாது" என்று தெரிவித்திருந்தார்
- 23க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கினார்.
- 150க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இந்த மோசடி நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் ரூ. 512 கோடி மதிப்புள்ள போலி ஜி.எஸ்.டி. பில் ம மோசடியை பொருளாதார குற்றப்பிரிவு (EOW) கண்டறிந்துள்ளது. இந்த மோசடியின் முக்கிய குற்றவாளியான வினோத் சஹாய், ராஞ்சியில் கைது செய்யப்பட்டார்.
வினோத் சஹாய், 23க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கி, போலி ஜி.எஸ்.டி. பில்கள் மூலம் வரி சலுகைகளை தவறாகப் பெற்றுள்ளார். இந்த நிறுவனங்கள் காகித அளவிலேயே இயங்கி வந்துள்ளன. 150க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இந்த மோசடி நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளதாக EOW தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சஹாயிடமிருந்து போலியான ஆவணங்கள், ஜி.எஸ்.டி. பில் புத்தகங்கள், ஆதார், பான் கார்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த மோசடி ஜபல்பூர், நாக்பூர், பிலாஸ்பூர், கோர்பா, ராஞ்சி ஆகிய நகரங்களில் நிகழ்ந்துள்ளது. இதன் பின்னால் இன்னும் மிகப்பெரிய மோசடி மறைந்துள்ளது என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
- 90 டிகிரி வளைவில் திரும்பும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த மேம்பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று நெட்டிசன்கள் தெரிவித்தனர்.
மத்தியப் பிரதேசம் போபாலில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
ரூ.18 கோடியில் கட்டப்பட்ட, 648 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்ட இந்த மேம்பாலம் திரும்புவதற்கு 45 டிகிரி வளைவாக இல்லாமல் 90 டிகிரி வளைவில் திரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் பலரும் இந்த மேம்பால புகைப்படங்களை பகிர்ந்து இந்த மேம்பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது அம்மாநில பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.
இந்த மேம்பாலத்தை காங்கிரஸ் கட்சி தனது சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்த நிலையில், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ராகேஷ் சிங் இந்த பிரச்சினையை குறித்து ஆராய்வதாக உறுதியளித்தார்.
இந்நிலையில், விமர்சனத்திற்கு உள்ளான 90 டிகிரி L வடிவ ரயில்வே மேம்பாலம், மாற்றியமைக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது
- இணையத்தில் பலரும் இந்த மேம்பால புகைப்படங்களை பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
- இந்த மேம்பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது
மத்தியப் பிரதேசம் போபாலில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
ரூ.18 கோடியில் கட்டப்பட்ட, 648 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்ட இந்த மேம்பாலம் திரும்புவதற்கு 45 டிகிரி வளைவாக இல்லாமல் 90 டிகிரி வளைவில் திரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் பலரும் இந்த மேம்பால புகைப்படங்களை பகிர்ந்து இந்த மேம்பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது அம்மாநில பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த மேம்பாலத்தை காங்கிரஸ் கட்சி தனது சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்த நிலையில், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ராகேஷ் சிங் இந்த பிரச்சினையை குறித்து ஆராய்வதாக உறுதியளித்தார்.
- உறுப்பினர் பதவியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- ராகுல் புத்திசாலித்தனமாக பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்ததற்காக, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திக்விஜய் சிங்கின் சகோதரரும், மத்தியப் பிரதேசத்தின் மூத்த தலைவருமான லட்சுமணன் சிங்கை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஐந்து முறை எம்.எல்.ஏ.வுமான லட்சுமணன் சிங், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக காங்கிரஸின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் ஒழுங்குமுறைக் குழு உறுப்பினர் செயலாளர் தாரிக் அன்வர் அறிவித்தார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ராகுல் காந்தி மற்றும் அவரது மைத்துனர் ராபர்ட் வதேரா அளித்த பதில்களை குறிப்பிட்டு, லட்சுமணன் சிங், அவர்களை முதிர்ச்சியற்றவர்கள் என்று அழைத்தார்.
மேலும், ராகுல் புத்திசாலித்தனமாக பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மாநிலப் பிரிவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் லட்சுமணனின் தொடர்ச்சியான செயல்களுக்கு கட்சிக்குள் அவருக்கு எதிராக எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் மத்திய தலைமை இந்த ஒழுங்கு நடவடிக்கையை எடுத்துள்ளது.
- விஷாலின் 70 வயது தாய் சரளா பத்ராவும் வசித்து வருகிறார்
- சம்பவத்தன்று, வேலைக்கு சென்று வீடு திரும்பிய விஷாலை நீலிகாவின் தந்தையும் சகோதரனும் தாக்கியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் ஒரு பெண் தனது மாமியாரை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் ஆதர்ஷ் காலனியில் வசிப்பவர் விஷால் பத்ரா. இவரது மனைவி நீலிகா. இவர்களுடன் விஷாலின் 70 வயது தாய் சரளா பத்ராவும் வசித்து வருகிறார். இந்நிலையில் மாமியாரின் சொத்துக்களை தன்வசப்படுத்திக்கொண்டு அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்குமாறு தனது கணவனை நீலிகா நச்சரித்து வந்துள்ளார்.
ஆனால் தாயின் உடல்நிலை கருதி விஷால் அதற்கு மறுத்துள்ளார். இதனால் விஷாலை மன ரீதியாகவும், உடல் ரீதியாவதும் நீலிகா துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, வேலைக்கு சென்று வீடு திரும்பிய விஷாலை நீலிகாவின் தந்தையும் சகோதரனும் தாக்கியுள்ளனர்.
தடுக்க வந்த விஷாலின் தாய் சரளாவின் தலை முடியை பிடித்து இழுத்து மருமகள் நீலிகா தாக்கியுள்ளார். இந்த சம்பவம் மொத்தமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து தாக்கப்பட்ட தாயும் மகனும் நீலிகா குடும்பத்தினர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.






