'பயனற்ற கேள்விகளை கேட்காதீர்' - உயிரிழப்புகள் குறித்த கேள்விக்கு பாஜக அமைச்சர் ஆவேசம் - வீடியோ வைரலானதால் வருத்தம்!

எனது மக்கள் முழுமையாகப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்வீணான அல்லது பயன்றற கேள்விகளை கேட்காதீர்கள்
'பயனற்ற கேள்விகளை கேட்காதீர்' - உயிரிழப்புகள் குறித்த கேள்விக்கு பாஜக அமைச்சர் ஆவேசம் - வீடியோ வைரலானதால் வருத்தம்!
Published on

இந்தியாவின் தூய்மையான நகரம் என 8வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தூரில், கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி தற்போதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த உயிரிழப்புகள் தொடர்பாக மத்தியப்பிரதேச அமைச்சரும், அத்தொகுதியின் பாஜக எம்.எல்.ஏவுமான கைலாஷ் விஜயவர்க்கியாவிடம் ஆங்கில ஊடக நிரூபர் ஒருவர் ஒரு கேள்வியை முன்வைத்துள்ளார். அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர், Phokat prashn mat puchiye எனக் கூறியுள்ளார். அதாவது வீணான அல்லது பயன்றற கேள்விகளை கேட்காதீர்கள் எனக் கூறியுள்ளார். மேலும் "கண்டா" (ghanta) என்றும் கூறியுள்ளார்.

ஹிந்தியில் "கண்டா" என்ற சொல் பேச்சுவழக்கில் பயன்றறது, குப்பை, ஒன்றுமில்லை என்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. சில வார்த்தைகள் பேசத் தடுமாறிய பிறகு, அந்த பாஜக அமைச்சர் கண்டா என்ற சொல்லை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு உடனே எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரை ஒழுங்காகப் பேசுமாறு பத்திரிக்கையாளர் கூறினார். இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பத்துபேர் செத்ததெலாம் ஒரு விஷயமா? என்ற தொனியில் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த தற்போது மன்னிப்பு கோரியுள்ளார் பாஜக அமைச்சர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 

"நானும் எனது குழுவினரும் கடந்த இரண்டு நாட்களாக உறக்கமின்றி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையைச் சீரமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம். அசுத்தமான நீரினால் எனது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலர் நம்மை விட்டு பிரிந்தும் சென்றுவிட்டனர். இந்த ஆழ்ந்த துயரமான நிலையில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது எனது வார்த்தைகள் தவறாக வெளிவந்துவிட்டன. இதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், எனது மக்கள் முழுமையாகப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com