search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drinking water issue"

    • குருமூர்த்திநாயக்கன்பட்டியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.
    • அதிகாரிகள் 10 தினங்க ளுக்குள் தாமிரபரணி குடிநீர் குடிக்க கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் தெரிவித்தனர்.

    விருதுநகர்

    காந்தி ஜெயந்தியை யொட்டி விருதுநகர் யூனியன் குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் கிராம சபை கூட்டம் தலைவர் முத்துலட்சுமி தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் வரதராஜ், பஞ்சாயத்து உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு தாமிரபரணி குடிநீர் வினியோகம் இல்லை என்று கூறியதுடன் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை என்றும் புகார் கூறினர்.

    மாணிக்கம் தாகூர் எம்.பி. இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தினார். குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகள் 10 தினங்க ளுக்குள் தாமிரபரணி குடிநீர் குடிக்க கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் தெரிவித்தனர்.

    மேலும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் உள்ள குறைபாடுகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.பி. உறுதி அளித்தார். கிராம மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட எம்.பி. இதுகுறித்து பரிசீலித்து தேவையான நடவ டிக்கைகளை மேற்கொள்வதாக தெரி வித்தார். முன்னதாக கிராம சபை கூட்டத்திற்கு வருகை தந்த மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர். இந்தநிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் வக்கீல் சீனிவாசன், சிவகுருநாதன், வைரவ சாமி, வக்கீல் சரவணன், செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை மாந கராட்சியின் 9-வது வார்டான உத்தங்குடி சாலை அம்பேத்கார் நகர் மறறும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்ய வில்லை.

    இதனால் அப்பகுதி பெண்கள் மற்றும் பொது மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் தண்ணீருக்கு நீண்ட தூரம் செல்லும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரியிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதை கண்டித்தும் குடிநீர் பிரச்சினை தீர்க்க வலியுறுத்தியும் இன்று காலை உத்தங்குடி மெயின் ரோட்டில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதி கூறினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    • கமுதி யூனியனில் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
    • யூனியன் சேர்மன் தமிழ்செல்வி போஸ் தலைமையில் கவுன்சிலர் கூட்டம் நடந்தது.

    பசும்பொன்

    கமுதி யூனியன் கவுன்சில் கூட்டம் யூனியன் சேர்மன் தமிழ்செல்வி போஸ் தலைமையில் நடந்தது. ஆணையாளர் மணி மேகலை, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர பாண்டியன், துணை சேர்மன் சித்ராதேவி அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலாளர் ராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-

    தமிழ் செல்வி போஸ் (சேர்மன்): குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெண் கவுன்சிலர்கள் தங்களின் கோரிக்கைகளை துணிச்சலுடன் தெரிவிக்க லாம். முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

    அன்பரசு (பேரையூர்): பேரையூர் கண்மாய்கரை பஸ் நிறுத்தத்தில் நிழற் குடை அமைக்க வேண்டும். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு அரசு அறிவித்துள்ள ரூ.294 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மணிமேகலை (ஆணையாளர்): 100 நாள் வேலை திட்டத்தில அரசு விதிமுறைப்படி வழங்குகிறோம்.

    அன்பரசு (பேரையூர்): வேளாண்மை காலங்களில் 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் பாதிக்கப்படுகிறது.

    தமிழ் செல்வி போஸ் (சேர்மன்):- 2.5 ஏக்கரில் நெல் விவசாயம் செய்தேன் களை எடுக்க முடியவில்லை.மணிமேகலை (ஆணை யாளர்):- 100 நாள் வேலை பணியாளர்களை வேளாண்மை பணிக்கு பயன்படுத்த ஆலோ சிக்கப்பட்டு வருகிறது. பாக்கு வெட்டி குடிநீர் திட்டபணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளன. விரைவில் குடிநீர் சப்ளை தொடங்கும். பல்வேறு குடிநீர் திட்டபணிகள் நடைமுறைபடுத்தப்பட்டு வருவதால் விரைவில் குடிநீரில் தன்னிறைவு பெறுவோம்

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    குமராட்சி அருகே காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    காட்டுமன்னார்கோவில்:

    குமராட்சி அருகே உள்ள ஆட்கொண்டநத்தம் ஊராட்சிக்குட்பட்ட ஊர் ராதாநல்லூர். இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 5 நாட்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

    மேலும் கடந்த சில நாட்களாக குடிநீரில் உவர் தன்மை இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். இருப்பினும், குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை 8 மணிக்கு ராதாநல்லூர் பஸ் நிறுத்தத்தில் சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கிராம மக்கள் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வரவேண்டும் என கூறினர்.

    பின்னர் இது பற்றி போலீசார் குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவஞானசுந்தரம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தினார். அப்போது விரைவில் குடிநீர் வழங்கவும், புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணவும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    இதை ஏற்ற கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    திருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவண்ணாமலை, 

    திருவண்ணாமலை வேங்கிக்கால் மின்நகர் பகுதி 5–வது மற்றும் 6–வது தெருவில் கடந்த சில தினங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. குடிநீர் கிடைக்காததால் அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்து உள்ளனர். இது குறித்து திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வேங்கிக்கால் ஊராட்சி செயலாளரிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட பொதுமக்கள் நேற்று காலை வேங்கிக்கால் பூமாலை வணிக வளாகத்தின் அருகில் திருவண்ணாமலை –போளூர் சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ், வேங்கிக்கால் ஊராட்சி செயலாளர் உமாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ் உடனடியாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    பல்லடம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பூமலூர் ஊராட்சியில் உள்ளது நடுவேலம்பாளையம் கிராமம். இங்கு 700-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அத்திக்கடவு குடிநீர் குழாய் முலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக குடிநீர் சரியாக வரவில்லை.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை 9 மணி அளவில் நடுவேலம் பாளையம்-பல்லடம் ரோட்டில் காலிக் குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இந்த தகவல் அறிந்ததும் மங்கலம் போலீசார் மற்றும் பூமலூர் ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரை மணி நேரமாக நடைபெறும் இந்த போராட்டத்தால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சங்கரன்கோவிலில் 18 நாட்கள் ஆகியும் குடிநீர் வழங்காததால் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் லட்சுமிபுரம் 7-ம் தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்துவருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 18 நாட்களுக்கு முன்பு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் 18 நாட்கள் ஆகியும் குடிநீர் வழங்காததால் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சங்கரன்கோவில் - ராஜபாளையம் சாலையில் உள்ள வாட்டர் டேங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    இது குறித்து தகவலறிந்து அந்த பகுதிக்கு வந்த சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, சங்கரன்கோவிலில் சில பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் வினியோகம் ஒழுங்காக செய்யப்படுகிறது. மற்ற பகுதி மக்களை நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. மேலும் மக்களுக்கு தண்ணீர் இல்லாத சமயத்தில் வாட்டர் டேங்கில் இருந்து சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் அடிக்கடி டேங்கர் வாகனம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. எனவே இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதையடுத்து அவர்களுடன் பேசிய இன்ஸ்பெக்டர் கண்ணன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் முற்றுகையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி அருகே குடிநீர் கேட்டு 60-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அடுத்த வெங்கடாபுரம் பாஞ்சாயத்து கே.ஏ.நகர் தர்கா பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இவர்களுக்கு இரண்டு ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீரை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. 

    கடந்த மூன்று மாதங்களாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றியது. இதனால் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை. குடிநீருக்காக அருகில் உள்ள விவசாய கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். 

    இப்பகுதிக்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என பி.டி.ஓ. மற்றும் பஞ்சாயத்து கிளர்க் வேல்முருகன் ஆகியோரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த 60-க்கும் மேற்பட்ட பெண்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் உள்ள இரண்டு ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றியதால், அருகில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க சென்றால் அவர்கள் தண்ணீர் எடுக்கக்கூடாது என்று சண்டையிடுகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு தண்ணீர் எடுக்க சென்றபோது ஏற்பட்ட சண்டையில் இரண்டு பெண்களுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து போலீசில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

    எனவே, எங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியே கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டோம் என்றனர். அப்போது பஞ்சாயத்து கிளர்க் நேரில் வந்து தண்ணீர் பிரச்சனையை உடனே சரி செய்வதாக கூறியதையடுத்து, முற்றுகையிட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    அய்யலூர் அருகே குடிநீருக்காக போராட்டத்தில் குதித்த கிராம மக்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

    வடமதுரை:

    அய்யலூர் அருகே மோர்பட்டி, கோப்பம்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமும், ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல் நிலை தொட்டியில் தேக்கியும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் குடிநீர் சீராக வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் தொடர்ந்து குடிநீர் இன்றி பொதுமக்கள் தவித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமதுரை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அவர்களை சமரசம் செய்தனர்.

    தற்போது மோர்பட்டி - சித்துவார்பட்டி சாலையில் பணிகள் நடைபெற்று வருகிறது. பணியின் போது குடிநீர் குழாயை உடைத்ததால் கோப்பம்பட்டி பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை.

    இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட தயாரானார்கள். சம்பவம் குறித்து அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாக்டர் பரமசிவம் எம்.எல்.ஏ.வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் பேசி குடிநீர் குழாயை விரைவில் சீரமைக்கப்படும் என உறுதியளித்ததால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    சேந்தமங்கலம் அருகே கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக கூறி காலிக்குடங்களுடன், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    சேந்தமங்கலம்:

    சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் துத்திகுளம் ஊராட்சியில் ரெட்டிபுதூர் காலனி உள்ளது. இந்த பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாயில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு சென்று அப்பகுதியில் வினியோகம் நடக்கிறது.

    இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் முழுமையாக ஏற்றப்படாமல் குறைவான தண்ணீர் ஏற்றி வந்ததால் பற்றாக்குறை ஏற்பட்டு அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். மேலும் குடிநீர் பற்றாக்குறையால், கேன்களில் விற்கப்படும் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வந்ததாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், காவிரி கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் இருந்து காலனிக்கு வரும் வழியில் சிலர் முறைகேடாக தண்ணீரை எடுத்துக்கொள்வதால் அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

    எனவே இங்கு முறைகேடாக தண்ணீர் எடுப்பதை தடுக்க வலியுறுத்தி, நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் பட்டத்தையன்குட்டை ராசிபுரம் சாலைக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன் செல்வராஜ், காளப்பநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமி, துத்திகுளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சின்னுசாமி, கிராம நிர்வாக அலுவலர் யுவராணி ஆகியோர் சாலைமறியல் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    மங்கலம்பேட்டை அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    மங்கலம்பேட்டை அருகே உள்ள எம்.பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றி கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்மோட்டார் திடீரென பழுதடைந்தது. இதனால் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இதனால் கிராம மக்கள், அருகில் உள்ள கிராமங்களுக்கும், விவசாய கிணற்றுக்கும் சென்று தண்ணீர் பிடித்து வருகிறார்கள். இது பற்றி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலையில் கிராம மக்கள் காலி குடங்களுடன் ஒன்று திரண்டு, விருத்தாசலம்- சிறுவம்பார் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது போலீசார் மற்றும் அதிகாரிகள், கிராம மக்களை சமாதானப்படுத்தி விரைவில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அவினாசி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள துலுக்கமத்தூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களுக்கு கடந்த 6 மாதமாக முறையான குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

    பக்கத்து ஊர்களுக்கு சென்றுதான் பொதுமக்கள் தங்கள் தேவைக்கு குடிநீர் பிடித்து வந்தனர். இதனால் ஆத்திரத்தில் இருந்தனர்.

    இன்று காலை துலுக்க மத்தூர் பொதுமக்கள் அங்குள்ள நால் ரோட்டில் காலி குடங்களுடன் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதில் 50 பெண்கள் பங்கேற்றனர்.

    மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் அவினாசி போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    ×