என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP Leader"

    • பாஜகவில் இருந்து முழுமையாக விலகிக் கொள்கிறேன் என்று அறிவித்தார்.
    • புதிய அரசு அமைய முழு வீச்சில் பாடுபடுவேன் என்றார்.

    புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவராக இருந்த முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன், கடந்த செப்டம்பர் மாதத்தில் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    அவர் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 25 ஆண்களுக்கு மேலாக இருந்த பாஜகவில் இருந்து முழுமையாக விலகிக் கொள்கிறேன்.

    புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன். புதுச்சேரி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். ஊழலற்ற, நேர்மையான புதியவர்களை கொண்டு புதிய அரசு அமைய முழு வீச்சில் பாடுபடுவேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், புதுச்சேரி மாநில பாஜக முன்னாள் தலைவர் சுவாமிநாதன் தவெகவில் நாளை இணைவதாக அறிவித்துள்ளார். கடந்த வாரம் விஜயை நேரில் சந்தித்து அவர் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மதமாற்றத்தை தூண்டும் வகையில் அவரின் பேச்சு அமைந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
    • உத்தரப் பிரதேச காவல்துறை முஸ்லிம்கள் மீது அற்பமான காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்து, இந்துத் தலைவர்கள் வன்முறையைத் தூண்டும்போது அதை மறைக்கும் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது.

    உத்தரபிரதேசத்தில் பாஜக முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் வெறுப்பு பேச்சின் வீடியோ வைரலாகி வருகிறது.

    டோமரியாகஞ்சில் ஒரு கூட்டத்தில் பேசிய பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ ராகவேந்திர பிரதாப் சிங், "ஒரு முஸ்லிம் பெண்களை அழைத்து வரும் இந்து பையன்களுக்கு நாங்கள் ஒரு வேலையை ஏற்பாடு செய்வோம்" என்று பேசியுள்ளார்.

    மதமாற்றத்தை தூண்டும் வகையில் அவரின் பேச்சு அமைந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "ஒரு தலைவர் கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றத்தை வெளிப்படையாகத் தூண்டினால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    உத்தரப் பிரதேச காவல்துறை முஸ்லிம்கள் மீது அற்பமான காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்து, இந்துத் தலைவர்கள் வன்முறையைத் தூண்டும்போது அதை மறைக்கும் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது.

    அவர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். இல்லையெனில், அனைவருக்கும் சமமான சட்டம் என்ற வாதம் வெற்றுத்தனமாகிவிடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • என் தந்தை மீது ஜீப்பை ஏற்றினர். அவர் அலறியபோதும் அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததால் யாரும் உதவத் துணியவில்லை
    • மகேந்திரா நாகர் நீண்டகாலமாக சிறு விவசாயிகளை அச்சுறுத்துவதையும் அவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.

    மத்தியப் பிரதேசத்தில் நிலத் தகராறில் பாஜக தலைவரும் அவரது ஆதரவாளர்களும் ஒரு விவசாயியை கொடூரமாகக் கொலை செய்தனர்.

    குணா மாவட்டம், கணேஷ்புரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராம் ஸ்வரூப் (40 வயது). இவரின் நிலத்தை கேட்டு உள்ளூர் பாஜக பூத் கமிட்டி தலைவர் மகேந்திரா நாகர் தகராறு செய்து வந்தார். ஆனால் ராம் ஸ்வரூப் அதற்கு உடன்படவில்லை. 

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், பாஜக தலைவர் மகேந்திரா நாகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விவசாயி ராம ஸ்வரூப்பை கம்பிகள் மற்றும் தடிகளைக் கொண்டு கொடூரமாகத் தாக்கினர்.

    மேலும் அவர்கள் வந்திருந்த தார் ஜீப்பை ராம் ஸ்வரூப் மீது ஏற்றினர். இதில், படுகாயமடைந்த ராம் ஸ்வரூப்பை கிராம மக்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றபோது துப்பாக்கிகளை காட்டு மிரட்டி சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதன்பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

    முன்னதாக தந்தை ராம் ஸ்வரூப்பை காப்பாற்ற ஓடிவந்த அவரது மனைவி மற்றும் 2 மகள்களும் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்.

    இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ராம் ஸ்வரூப்பின் மகள், "என் தந்தையைக் காப்பாற்ற நான் சென்றபோது, அவர்கள் என்னைத் தள்ளி கீழே தள்ளிவிட்டு, என் மீது அமர்ந்து என் உடையைக் கிழித்தனர்.

    எங்களை அச்சுறுத்தத் துப்பாக்கியால் சுட்டனர். என் தந்தை மீது ஜீப்பை ஏற்றினர். அவர் அலறியபோதும் அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததால் யாரும் உதவத் துணியவில்லை" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

     

    மகேந்திரா நாகர் நீண்டகாலமாக சிறு விவசாயிகளை அச்சுறுத்துவதையும் அவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் மகேந்தர் நாகர், அவரது மகன்கள், மனைவி உள்ளிட்ட 14 பேர் மீது கொலை மற்றும் பெண்களுக்கு மானபங்கம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில், மகேந்திரா நாகரை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்கக் கோரி மூத்த தலைவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளதாக குணா மாவட்ட பாஜக தலைவர் தர்மேந்திர சிகார்வார் தெரிவித்துள்ளார்.  

    • பீகாரில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார்.
    • அப்போது தனது தாயின் நினைவுகள் குறித்து பிரதமர் மோடி உணர்ச்சிகரமாகப் பேசினார்.

    பாட்னா:

    பீகாரில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாக்காளர் உரிமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தர்பங்காவில் யாத்திரையின்போது சில காங்கிரஸ் தொண்டர்கள் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தினர். இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதற்கிடையே, பீகாரில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    அம்மா தான் உலகம். அம்மா தான் எங்கள் சுயமரியாதை. பாரம்பரியம் நிறைந்த இந்த பீகாரில் சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்வை நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனது தாயை அவமதித்துவிட்டனர். ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் என் தாயை மட்டுமல்ல, இந்த நாட்டின் தாய்மார்களையும், சகோதரிகளையும் அவமதித்து விட்டனர்.

    என் இதயத்தில் எவ்வளவு வலி இருக்கிறதோ அந்த வலி பீகார் மக்களிடமும் உள்ளது. அரசியலில் எந்தத் தொடர்பும் இல்லாத எனது தாயாரை ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் ஏன் விமர்சனம் செய்தனர்? உங்களை போன்ற கோடிக்கணக்கான தாய்மார்களுக்கு சேவை செய்ய என்னை விட்டுப் பிரிந்து இருந்தார்.


    இப்போது என் அம்மா உயிருடன் இல்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சில காலத்திற்கு முன்பு 100 வயதை நிறைவு செய்த பிறகு அவர் நம் அனைவரையும் விட்டுச் சென்றார். அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத என் அம்மாவை ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் அவமதித்து உள்ளனர். சில தாய்மார்களின் கண்களில் கண்ணீரை என்னால் பார்க்க முடிகிறது. இது மிகவும் வேதனையானது. என் அம்மா மிகவும் வறுமையில் என்னை வளர்த்தார். அவர் தனக்கென ஒரு புதிய சேலையை கூட வாங்க மாட்டார். எங்கள் குடும்பத்திற்காக ஒவ்வொரு பைசாவையும் சேமிப்பார் என தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி உணர்ச்சி பொங்க பேசியதைக் கேட்ட மாநில தலைவர் கண்ணீர் சிந்தினார். பின்னால் அமர்ந்திருந்த பெண்கள் சிலரும் கண்ணீர் சிந்தினர்.

    • ராஜஸ்தானின் அஜ்மீரைச் சேர்ந்த பாஜக தலைவர் ரோஹித் சைனி, சஞ்சு என்ற பெண்ணை மணந்தார்.
    • வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் தனது மனைவியைக் கொன்று விலைமதிப்பற்ற பொருட்களைத் திருடிவிட்டதாக போலீசாரை நம்ப வைக்க முயன்றார்.

    ராஜஸ்தானில் காதலியுடன் புது வாழ்வை தொடங்க தனது மனைவியை கொலை பாஜக தலைவர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ராஜஸ்தானின் அஜ்மீரைச் சேர்ந்த உள்ளூர் பாஜக தலைவர் ரோஹித் சைனி, சஞ்சு என்ற பெண்ணை மணந்தார்.

    இருப்பினும், ரோஹித் அதே பகுதியைச் சேர்ந்த ரிது சைனி என்ற மற்றொரு பெண்ணுடன் சிறிது காலமாக திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்து வருகிறார்.

    மனைவி சஞ்சு அவர்களின் உறவுக்கு தடையாக இருந்துள்ளார். இந்த மாதம் 10 ஆம் தேதி, சஞ்சு சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் வீட்டில் இறந்தார்.

    சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரோஹித் முரண்பாடான பதில்களை அளித்தார்.

    வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் தனது மனைவியைக் கொன்று விலைமதிப்பற்ற பொருட்களைத் திருடிவிட்டதாக போலீசாரை நம்ப வைக்க முயன்றார்.

    இருப்பினும், அவரது நடத்தையில் சந்தேகமடைந்த போலீசார், அவர்களது பாணியில் விசாரித்தபோது அவர் காதலி ரிதுவின் தூண்டுதலின் பேரில் கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    ரோஹித் சைனியுடன், கொலையைத் தூண்டிய அவரது காதலி ரிது சைனியும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.  

    • 2 பேர் துப்பாக்கியால் சுரேந்திர கெவத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பி சென்றனர்.
    • பீகாரில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஷேக்புரா பகுதியை சேர்ந்தவர் சுரேந்திர கெவத் (வயது 52). பா.ஜ.க. சேர்ந்த அவர் அக்கட்சியின் கிசான் மோர்ச்சா தலைவராக பணியாற்றினார்.

    இந்த நிலையில் சுரேந்திர கெவத் தனது வயல்கள் உள்ள பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் துப்பாக்கியால் சுரேந்திர கெவத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பி சென்றனர்.

    இதில் அவரது உடலில் 4 தோட்டாக்கள் பாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவரை மீட்டு பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சுரேந்திர கெவத் உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பாட்னாவில் பிரபல தொழில் அதிபர் கோபால் கெம்கா அவரது வீட்டுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இதையடுத்து பீகாரில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில் பா.ஜ.க தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தாக்கி, காலால் எட்டி உதைத்த வீடியோ இணையத்தில் வைரலானது.
    • மாநிலம் முழுவதும் உள்ள ஓ.ஏ.எஸ் அதிகாரிகள் "கூட்டு விடுப்பு" எடுத்திருந்தனர்.

    ஒடிசா நிர்வாக சேவை (ஓ.ஏ.எஸ்) அதிகாரி ரத்னாகர் சாஹூ தாக்கப்பட்ட வழக்கில், பாஜக தலைவர் ஜெகந்நாத் பிரதான் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரிடம் பிரதான் சரணடைந்தார்.

    புவனேஸ்வர் மாநகராட்சி (பிஎம்சி) கூடுதல் ஆணையர் ரத்னாகர் சாஹூவை அவரது அலுவலகத்தில் இருந்து இழுத்துச் சென்று ஜெகந்நாத் பிரதானின் ஆட்கள் தாக்கி, காலால் எட்டி உதைத்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    சாஹூ மீதான இந்த தாக்குதலை கண்டித்து, மாநிலம் முழுவதும் உள்ள ஓ.ஏ.எஸ் அதிகாரிகள் "கூட்டு விடுப்பு" எடுத்திருந்தனர். பிரதான் கைது செய்யப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் தங்கள் விடுப்பை திரும்பப் பெற்றுள்ளனர்.

    இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதான் உட்பட மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    • சிறுமியின் தாயான அனாமிகா சம்மதத்துடனும், அவரது முன்னிலையிலும், அந்த நபர்கள் இந்தக் குற்றத்தைச் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
    • பாஜக மகிளா மோர்ச்சாவின் ஹரித்வார் மாவட்டப் பிரிவின் தலைவராக இருந்தார்.

    உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள உள்ளூர் பாஜக பெண் தலைவர் ஒருவர் தனது காதலனும் அவரது உதவியாளரும் தனது 13 வயது மகளை பலமுறை கண்முன்னே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்துள்ளார்.

    சிறுமியின் மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாஜக தலைவர் அனாமிகா சர்மாவும் அவரது காதலன் சுமித் பட்வாலும் ஹரித்வாரில் உள்ள ஹோட்டலில் இருந்து கைது செய்யப்பட்டனர்.

    பட்வாலின் கூட்டாளியான சுபம்  மீரட்டின் ஷாபூரில் கைது செய்யப்பட்டார்.

    ஜூன் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. சிறுமி தனது தந்தையிடம் தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றிக் கூறியதைத் தொடர்ந்து, அவர் போலீசில் புகார் அளித்தார்.

    அனாமிகா முன்பு பாஜக மகிளா மோர்ச்சாவின் ஹரித்வார் மாவட்டப் பிரிவின் தலைவராக இருந்தார். இருப்பினும், இந்த வழக்கில் அவரது பெயர் எழுந்தவுடன், அவர் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் ஹரித்வார், ஆக்ரா மற்றும் பிருந்தாவனில் சிறுமி பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

    சிறுமியின் தயான அனாமிகா சம்மதத்துடனும், அவரது முன்னிலையிலும், அந்த நபர்கள் இந்தக் குற்றத்தைச் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும், சிறுமியின் தந்தையை யாரிடமாவது இதை வெளிப்படுத்தினால் கொலை செய்துவிடுவதாகவும் அவர்கள் மிரட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.

    அனாமிகா தனது கணவரிடமிருந்து பிரிந்து தனது காதலனுடன் அவரது ஹோட்டலில் வசித்து வந்தார். அதே நேரத்தில் அவரது மகள் தனது தந்தையுடன் வசித்து வந்தார். 

    • விளக்கம் கேட்டு மாநில கட்சித் தலைமை நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
    • வீடியோவில் காணப்படும் பெண் ஒரு பாஜக தொண்டர், அன்று அவருக்கு உடல்நிலை சரியில்லை.

    உத்தரப் பிரதேசத்தில் பாஜக மூத்த தலைவர் ஒருவர் பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

     உ.பி. அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த சம்பவம், ஏப்ரல் 12 ஆம் தேதி கோண்டா நகரில் நடந்தது.

    சிசிடிவி காட்சிகளின்படி, பாஜக கோண்டா மாவட்டத் தலைவர் அமர் கிஷோர் காஷ்யப், கட்சி தலைமையகத்தின் படிகளில் நின்று கொண்டு ஒரு பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது.

    இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு தலைவர் தலைமைக்கு புகார் அளித்துள்ளார். இதையாவது காஷ்யப் இடம் விளக்கம் கேட்டு மாநில கட்சித் தலைமை நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

    தனது வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, அமர் கிஷோர் காஷ்யப் விளக்கம் அளித்தார். இவை அனைத்தும் தனக்கு எதிராக தனது எதிரிகள் செய்யும் சதி என்று அவர் குற்றம் சாட்டினார்.

    "வீடியோவில் காணப்படும் பெண் ஒரு பாஜக தொண்டர், அன்று அவருக்கு உடல்நிலை சரியில்லை. அவர் ஓய்வெடுக்கச் சொன்னபோது, கட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றேன். அவர் படிக்கட்டுகளில் ஏறும்போது மயக்கம் அடையும் நிலையில் இருந்தபோது, அவருக்கு உதவி செய்தேன்.

    சம்பவத்தை தவறாகப் புரிந்துகொண்டு எனக்கு எதிராக தவறான தகவல்களைப் பரப்ப சிசிடிவி காட்சிகள் பயன்படுத்தப்படுகிறது" என்று காஷ்யப் கூறியுள்ளார். 

    முன்னதாக டெல்லி - மும்பை விரைவு சாலையில் பாஜக உறுப்பினர் ஒருவர் நடுரோட்டில் பெண்ணுடன் உடலுறவு கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை 

    • போலீஸ்காரர்கள் சின்னச்சாமி, மந்திரம் ஆகிய 2 பேரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்.
    • குற்றவாளி மனைவி ஒருவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதாக புகார் எழுந்தது.

    ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் மோடி, ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து திருப்பூரில் பா.ஜ.க., சார்பில் தேசிய கொடி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    இந்தநிலையில் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர் சின்னச்சாமி, அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் மந்திரம் ஆகியோர், நயினார்நாகேந்திரனை நேரில் சந்தித்து பேசியதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து போலீஸ்காரர்கள் சின்னச்சாமி, மந்திரம் ஆகிய 2 பேரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

    இதேப்போல் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த போலீஸ்காரர் நல்லசாமி என்பவர், குற்றவாளி மனைவி ஒருவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து அவரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கமிஷனர் நடவடிக்கை மேற்கொண்டார். பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்ததாக போலீஸ்காரர்கள் 2பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விக்னேஷ் குமாரை கடைக்குள் உள்ள ஒரு அறைக்கு இழுத்து சென்று அவரை தாக்கியதாக கூறப்படுகிறது
    • பாரதீய ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி பொது செயலாளர் விநாயக மூர்த்தி மீது 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்

    சூரம்பட்டி,

    ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிதி நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோட்டை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கடன் வாங்கி மொபட்டை வாங்கியுள்ளார்.

    இந்த நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியதற்கான தவணை கட்டப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் செந்தில் குமார் வாங்கிய மொபட்டை ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள ஒரு செருப்பு கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு ள்ளதாக நிதி நிறுவன த்திற்கு தகவல் கிடைத்தது.

    இதையொட்டி நிதி நிறுவன ஊழியர்கள் விக்னேஷ் குமார் (26)என்பவர் உள்பட 3 பேர் அந்த கடைக்கு சென்று அங்கு நின்ற மொபட்டை எடுக்க முயற்சி செய்தனர்.

    அப்போது கடையில் இருந்த செருப்பு கடையின் உரிமையாளரும் பாரதீய ஜனதா கட்சி பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளருமான விநாயக மூர்த்தி அவர்களை தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் விக்னேஷ் குமாரை கடைக்குள் உள்ள ஒரு அறைக்கு இழுத்து சென்று அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் குமார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து விக்னேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கியதாக பாரதீய ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி பொது செயலாளர் விநாயக மூர்த்தி மீது 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.

    இதுபற்றி சூரம்பட்டி போலீசார் கூறும் போது

    இறந்த செந்தில் குமார் விநாயக மூர்த்தியிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணம் கடன் வாங்கி யிருந்ததாகவும் இந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்காமல் இறந்து விட்டதால் செந்தில் குமாரின் வீட்டுக்கு சென்று ஸ்கூட்டரை எடுத்து வந்ததாவும் அந்த மொபட்டை தனது செருப்பு கடை முன்பு நிறுத்தி இருந்ததாகவும் கூறினர்.

    • 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவர் மீது வெடிகுண்டு வீசியும், கத்தியால் தாக்கியும் கொலை.
    • தப்பி சென்ற மர்ம நபர்கள் தொடர்பாக சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி வில்லியனூரில் வெடிகுண்டு வீசி பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாஜக பிரமுகரான செந்தில் என்பவர் அங்குள்ள பேக்கரி கடையில் நின்றுக் கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவர் மீது வெடிகுண்டு வீசியும், கத்தியால் தாக்கியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் தப்பி சென்ற மர்ம நபர்கள் தொடர்பாக சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×