என் மலர்

    நீங்கள் தேடியது "Farmer"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேதாரண்யத்திலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்சில் ஏறினார்.
    • காயமடைந்த இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் சுராஜ்முகமது(வயது58).

    விவசாயியான இவர் கட்டி மேட்டிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்வதற்காக வேதாரண்யத்திலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்சில் ஏறினார்.

    கட்டி மேடு பகுதி வளைவில் பஸ் திரும்பிய போது பஸ்சின் பின்பக்க படியில் நின்று கொண்டிருந்த சுராஜ்முகமது மற்றும் கண்டக்டர் பிரசன்னா ஆகிய இருவரும் பஸ்சில் இருந்து வெளியே சென்று விழுந்தனர்.

    இதில் சுராஜ் முகமதுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    கண்டக்டா் பிரசன்னாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

    காயமடைந்த இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    அங்கு அவர்களை பாிசோதனை செய்த டாக்டர்கள் சுராஜ்முகமது உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.

    கண்டக்டர் பிரசன்னா உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிைரவர் வருண்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கார் சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை

     வேலாயுதம் பாளையம் 

    கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (61). விவசாயி . இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆத்தூர் செல்லும் சாலையில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலை கடக்கும்போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி அதி வேகமாக வந்த கார் சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலைத்திடுமாறி சரவணன் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மூலம் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சரவணனை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இது குறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய கோவை ரத்தினபுரி அருணா அபார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்த இளம்பரிதி மீது வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது.
    • பாதிப்படைந்த விவசாயிகள் நல்லதங்காள் அணைப்பகுதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூரை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணை உள்ளது. இந்த அணை கட்டுமான பணிக்காக 150 விவசாயிகளிடமிருந்து 750 ஏக்கர் நிலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 1997-ம் ஆண்டு கையகப்படுத்தி 2000-ம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர்.

    அப்போது விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீட்டுத் தொகை கேட்டு 2003-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்கில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை மற்றும் அதற்கு உரிய வட்டியை சேர்த்து அவர்களுக்கு வழங்க வேண்டும் என 2019-ம் ஆண்டு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இருப்பினும் விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கவில்லை.

    இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி சில மாதங்களுக்கு முன்பு தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்கள் ஜப்தி செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் நல்லதங்காள் அணைப்பகுதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் நூதன போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இன்று 45-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நீடிக்கிறது.

    இதில் விவசாயிகள் தரையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினர். இதில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீா்ப் பாதுகாப்பு சங்கம் சாா்பில் தொடா் உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர்.
    • சமச்சீா் பாசனம் மற்ற பகுதியில் உள்ளதைபோல மடைக்கு 7 நாட்கள் நீா் திறப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும்

    காங்கயம்:

    காங்கயம் பகுதியில் பிஏபி., வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலில் வரவேண்டிய தண்ணீரை பிஏபி., நிா்வாகம் முறைகேடாக பயன்படுத்தி, பல ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகளை வஞ்சித்து வருவதாகவும், சமச்சீா் பாசனம் என்று பெயரளவில் வைத்துக் கொண்டு, வெள்ளக்கோவில் கிளைக்குத் தேவையான தண்ணீரை பிஏபி., நிா்வாகம் கொடுப்பதில்லை.எனவே விவசாயத்துக்கு முறையாக தண்ணீா் வழங்க வேண்டும் என வலியுறுத்தி காங்கயம், வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

    இந்நிலையில் இந்தக் கோரிக்கை தொடா்பாக நீதிமன்றத்தின் தீா்ப்புகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, காங்கயம் அருகே கரூா் சாலையில் உள்ள பகவதிபாளையம் பகுதியில் பிஏபி., வெள்ளக்கோவில் கிளை கால்வாய் (காங்கேயம்-வெள்ளக்கோவில்) நீா்ப் பாதுகாப்பு சங்கம் சாா்பில் தொடா் உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர்.

    பிஏபி., கிளை வாய்க்காலுக்கு நீா் திறக்கும் விஷயத்தில் சென்னை உயர்நீதிமன்ற தீா்ப்புகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சமச்சீா் பாசனம் மற்ற பகுதியில் உள்ளதைபோல மடைக்கு 7 நாட்கள் நீா் திறப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தண்ணீா் திருட்டை ஒழித்து தண்ணீா் திறக்கும் சுற்றுகளை அதிகப்படுத்த வேண்டும். பிஏபி., தொகுப்பு அணைகளின் காலாவதியான ஷட்டா் மற்றும் உபகரணங்களை உடனே மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

    இதில் கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் செ.நல்லசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு உரையாற்றினர். விவசாயிகள் பலர் கலந்து கொண்டனா்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரம்பலூர் அருகே எறையசமுத்திரம் காட்டு கொட்டாயை பகுதியை சோ்ந்த விவசாயி கிணற்றில் விழுந்து தவித்தார்
    • பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் அருகே எறையசமுத்திரம் காட்டு கொட்டாயை பகுதியை சோ்ந்தவர் சிவா (வயது 40), விவசாயி. இவர் நேற்று மதியம் அருகே வயலில் உள்ள கிணற்றில் இறங்கி பழுதான மோட்டாரை தூக்க சென்றார். பின்னர் அவர் கிணற்றில் இருந்து மேலே ஏற முயன்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்தார். பின்னர் சிவா கிணற்றில் இருந்து மேலே ஏற முடியாமல் தவித்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி சிவாவை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
    • 22-ந் தேதி காலை 11 மணிக்கு திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 22-ந் தேதி காலை 11 மணிக்கு திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பி.ஏ.பி., கால்வாய்களிலும் சமச்சீா் பாசனத்தை அமல்படுத்த வேண்டும்.
    • கால்வாய் சீரமைப்புப் பணிகளை நீண்டகால அடிப்படையில் தரமானதாக செய்ய வேண்டும்.

    திருப்பூர்:

    பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனக்கால்வாய் நீா் நிா்வாகத்தை சீரமைக்க வலியுறுத்தி 22-ந்தேதி தொடா் பட்டினி போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு ஆதரவு திரட்டும் வகையில் வெள்ளக்கோவில் பகுதியில் சேனாபதிபாளையம், வேலப்பநாயக்கன்வலசு, கல்லமடை, இலுப்பைக்கிணறு, அய்யனூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சங்கத்தலைவா் வேலுச்சாமி தலைமையில் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டப்பட்டது.

    அப்போது சங்க நிா்வாகிகள் கூறியதாவது:-

    மற்ற பகுதிகளில் உள்ளதை போல வெள்ளக்கோவில் பகுதி பி.ஏ.பி., கால்வாய்களிலும் சமச்சீா் பாசனத்தை அமல்படுத்த வேண்டும். கால்வாய்களில் நீா் மாசுபாடு, நீா் திருட்டை தடுக்க வேண்டும். கால்வாய் சீரமைப்புப் பணிகளை நீண்டகால அடிப்படையில் தரமானதாக செய்ய வேண்டும். பி.ஏ.பி., நீா் பாசன விதிமுறைகள் மற்றும் நீதிமன்ற தீா்ப்பின்படி எங்களுக்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்கும் பொருட்டு 22-ந்தேதி பகவதிபாளையம் சங்க வளாகத்தில் விவசாயிகள் பங்கேற்கும் தொடா் பட்டினி போராட்டம் நடைபெற உள்ளது என்றனா்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அரியலூரில் சம்பவம்விலை போகாததால் பூத்து குலுங்கிய முருங்கை மரங்களை வேரோடு அழித்த விவசாயி உருக்கமாக பேசும் வீடியோ வைரல்

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் முருங்கை சாகுபடி செய்து வருகின்ற னர். குறிப்பாக தா.பழூர், ஜெயங்கொண்டம் பகுதிக ளில் விவசாயிகள் முருங்கை யை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இதில் உற்பத்தியாகும் முருங்கை காய்களை கும்ப கோணம், தஞ்சாவூர், திருச்சி, சென்னை உள்ளி ட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக சந்தைக்கு எடுத்து செல்லப்படுகிறது.

    அரியலூர் மாவட்டம் வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் முருங்கை சாகுபடி செய்திருந்தார்.

    தற்போது முருங்கை பூவும் பிஞ்சுமாய் காய்த்து வருகிறது. கூலி ஆட்களை கொண்டு பறிக்கப்பட்ட முருங்கைக்காயை விற்பனை க்காக கும்பகோணம் சந்தை க்கு எடுத்து சென்றுள்ளார். அங்கு

    ஒரு கிலோ முருங்கை காய்க்கு ரூ. 2 விலை நிர்ண யம் செய்திருந்தார்கள். இது பேர் அதிர்ச்சியாக இருந்தது.

    அடுத்த சில நாட்களில் முருங்கைக்காயின் விலை அதிகரிக்கும் என்ற எண்ண த்தில் தொடர்ந்து பறிக்க ப்பட்ட முருங்கைக்காயை சந்தைக்கு கொண்டு சென்ற குமாருக்கு மீண்டும் மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.

    2 ரூபாய் 3 ரூபாய்க்கு விற்பனையான முருங்கை க்காயை கூட வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலையே காணப்பட்டது.இதனால் விரக்தி அடைந்த விவசாயி முருங்கை வயலுக்கு வந்து பறிக்கும் கூலிச் செலவுக்கு கூட முருங்கைக்காய் விற்ப னையாகவில்லையே என விரக்தியில் பூவும் பிஞ்சுமாய் காயுமாக இருந்த முருங்கையை டிராக்டர் கொண்டு அழிக்க முடிவு செய்தார்.

    பின்னர் அதிரடியாக முருங்கை மரத்தை முழுவ துமாக வேரோடு அழித்து உழவு செய்துள்ளார்.

    இதுகுறித்து விவசாயி குமார் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் முருங்கை க்கு ஆதார விலை என்று அரசு நிர்ணயிக்காததால் தற்போது இரண்டு ரூபாய் முதல் மூன்று ரூபாய்க்கு கூட சந்தையில் வாங்கு வதற்கு ஆள் இல்லை.

    இந்த விலை முருங்கை க்காயை பறிப்பதற்கான கூலி செலவுக்கு கூட கட்டுபடி யாகவில்வை. இந்த வயலில் 4 டன் அளவிற்கு முருங்கைக்காய் மரத்தில் உள்ளது. வேறு வழி இல்லாததால் இதனை தற்போது அழித்து வருகிறேன். வருங்கால ங்க ளில் இது போன்ற சூழல் விவசாயிக்கு ஏற்படாத வகையில் முருங்கைக்கு ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என கையெடுத்து கும்பிடுகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    • 15-ந் தேதி காலை 11 மணிக்கு சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 15-ந் தேதி காலை 11 மணிக்கு அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்குகிறார். இதில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.

    தாலுகா அளவில் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த கூட்டம் பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. இந்த முறை அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் நடக்கிறது.

    அனைத்து விவசாயிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது
    • காண்டூர் கால்வாயில் நீர் திறக்கப்பட்டு ஒரு வார காலமாகியும் வினாடிக்கு 1150 கன அடி என்ற அளவில் திருமூர்த்தி அணைக்கு திருப்பி விடவில்லை

    குடிமங்கலம், செப். 12-

    பி.ஏ.பி. பாசனம் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது

    பி.ஏ.பி. விவசாயிகள் நல சங்கம் திருப்பூர் மாவட்ட உப்பாறுவிவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கலந்தாய்வு கூட்டம் கோட்டமங்கலத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ராமலிங்கம் தலைமை தாங்கினார். சிவக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பி.ஏ.பி. நான்காம் மண்டல பாசனத்திற்கு ஒரு சுற்று தண்ணீர் வழங்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்குரிய நீரியல் விவரங்களை வெளியிடாமல் தண்ணீர் திருட்டை ஒழித்திடாமல் ஒரு சுற்று தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட கன அடி தண்ணீர் திருமூர்த்தி அணையில் இருந்து வெளியேற்றாமலேயே வெளியேற்றப்பட்டதாக போலியான பதிவேடுகள் பராமரித்து உள்ளனர். மடைகள் அனைத்திற்கும் ஒரு சுற்றுக்கு ஏழு நாட்கள் தண்ணீர் வழங்காமல் சில இடங்களில் 7 நாட்கள், சில இடங்களில், 5 நாட்கள் சில இடங்களில், 3 நாட்கள் என்று பாரபட்சமாக தண்ணீர் வழங்கப்படுவது ஏன். ஒவ்வொரு கால்வாயிலும் ஏற்படும் நீரிழப்பு விவரங்களை வெளியிட வேண்டும்.

    காண்டூர் கால்வாயில் நீர் திறக்கப்பட்டு ஒரு வார காலமாகியும் வினாடிக்கு 1150 கன அடி என்ற அளவில் திருமூர்த்தி அணைக்கு திருப்பி விடவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழைப்பொழிவு கிடைக்க பெற்றும் ஒவ்வொரு வருடமும் திருமூர்த்தி அணைக்கு 20 டிஎம்சி., நீர்வரத்து இருந்துள்ள நிலையில் பி.ஏ.பி. ஆயக்கட்டில் பல ஆயிரக்கணக்கான நிலங்கள் வேளாண்மை அல்லாத மாற்று பயன்பாட்டிற்கு பரிவர்த்தனையாகியுள்ளது.

    திருமூர்த்தி அணை மூலம் பாசனம் பெறும் புதிய ஆயகட்டுமடைகளுக்கு சமச்சீரான அளவில் தண்ணீர் வழங்குவதை ஒரு வார காலத்தில் முடிவு செய்து புதிய நீரியல் கணக்கீடுகளை தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் பி.ஏ.பி. 4-ம் மண்டலத்திற்கு நீர் திறப்பு செய்ய திருமூர்த்தி அணைக்கு வருகை தரும் அமைச்சருக்கு கருப்பு கொடி காட்டப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    கூட்டத்தில் விவேகானந்தன், ரகுபதி, விஜயசேகர் ரத்தினசாமி, ராஜேஷ் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin