என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்டா மாவட்ட விவசாயிகள்"

    • நெல்மணிகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யக்கூட வக்கற்ற அரசாக திமுக அரசு திகழ்கிறது.
    • மத்திய அரசிடமிருந்து ஆணை பெற்றும் நெல்மணிகளை கொள்முதல் செய்தோம்.

    நேரடி நெல் கொள்முதலில் மீண்டும் மீண்டும் நாடகமாடும் ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அதர்மத்தை அழித்து தர்மத்தின் வெற்றியைக் குறிக்கும் தீபாவளி பண்டிகையை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், இந்த விடியா திமுக அரசின் மோசமான நிர்வாகத்தினால், நம் தமிழக விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளியாக மாறியிருக்கிறது.

    நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த விவசாயிகள் பார்த்துப் பார்த்து விளைவித்த நெய்மணிகள் எல்லாம் தற்போது பெய்து வரும் மழையில் முளைத்து விவசாயிகள் கண் முன்னே வீணாகிறது. நெல் கொள்முதலில் ஃபெயிலர் மாடன் திமுக அரசின் குளறுபடியால், நெல்மணிகள் மழையில் நனைந்து முயையிட்டுள்ளன.

    கூட்டுறவு சங்கத்தில் கடன் வளங்குவதில் சிக்கல், உரத் தட்டுப்பாடு, காலநிலை மாற்றத்தால் காலம் தவறிப் பெய்யும் மழை என்று பல்வேறு சவால்களைக் கடந்து விவசாயிகள் நெல்மணிகளை உற்பத்தி செய்கிறார்கள். ஆனால், அந்த நெல்மணிகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யக்கூட வக்கற்ற அரசாக திமுக அரசு திகழ்கிறது.

    முந்தைய தி.மு.க. ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 800 மூட்டையாக இருந்த நெல் கொள்முதல், அஇஅதிமுக ஆட்சியில் 1000 மூட்டையாக அதிகரித்தும்; 17 சதவீதம் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி, மத்திய அரசிடமிருந்து ஆணை பெற்றும் நெல்மணிகளை கொள்முதல் செய்தோம்.

    ஆனால், ஸ்டாலின் மாடல் ஆட்சியில் நாளொன்றுக்கு 600 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும், நெல்லைப் பிடிக்க போதுமான சாக்குப் பைகள் இல்லை

    என்றும், நெல்லைப் பாதுகாக்க தார்ப்பாய்கள் இல்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுவதோடு ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும், நெல் கொள்முதவை 1000 மூட்டைகளாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இதையடுத்து பருவமழைக்கு முன்னதாகயே விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று. அஇஅதிமுக சார்பில் பலமுறை எச்சரிக்கை விடுத்தோம். அதையெல்லாம் திமுக அரசு காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை.

    இதனால், கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை நெல்மணிகளை கொட்டிவைத்து விடியலுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள் விவசாயிகள் நெல் மூட்டைகளை மழையிலிருந்து பாதுகாப்பதற்குக் தேவையான தார்ப்பாய்களைக்கூட விடியா திமுக அரசு கொடுக்கவில்லை.

    எனவே, மழையில் நனைந்து நெல்மணிகள் வீனாகும் கொடுமையையும், விவசாயிகளின் கண்ணீரையும் ஊடகங்கள் மீண்டும் மீண்டும் நோலையாகக் காட்டிய பிறகும், இந்த நீயசக்தி திமுக அரசுக்கு இரக்கம் பிறக்கவில்லை.

    சட்டமன்றத்தில் இது தொடர்பாக நாள் இரண்டு நாட்களுக்கு முன்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தபோது, அதற்கு பதிலளித்துப் பேசிய உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, "தமிழ் நாட்டில் 25 இடங்களில் திறந்த வெளி சேமிப்புக் கிடங்குகள் நிறக்கப்பட்டுள்ளன.

    தற்போது, ஒரு நாளைக்கு ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. என்று சமாளிக்கிறாரே தவிர, முழுமையாக நெல்மணிகள் கொள்முதல் செய்வதற்கும், உரிய முறையில் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    மேலும், இப்போதே 22 சதவீத ஈரப்பத நெல்மணிகளை கொள்முதல் செய்வதற்கு ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்கலாமா என்று அமைச்சர் கேட்பது அவரது அறியாமையைக் காட்டுகிறது. ஏனென்றால் இப்போதே பருவ மழை தொடங்கி அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் ரோட்டில் கிடக்கிறது. அறுவடைக்குத் தயாரான நெல்பணிகள், தண்ணீரில் மிதக்கின்றன. எனவே, இனியும் காலம் தாழ்த்துவதில் அர்த்தமே இல்லை.

    மேலும், "செறிவூட்டப்பட்ட அரிசிக்கு ஒன்றிய அரசிடம் அறுமதி பெற்றுத் தந்தால் நெய் தேங்கும் நிலை ஏற்படாது. அரிசி பதுக்கல் இருக்காது.." என்று உண்மைக்கு மாறாக மத்திய அரசு மீது பழி சுமத்தியிருக்கிறார். உண்மை என்னவென்றால் கடந்த ஆகஸ்ட் 18 அன்றே மத்திய அரசு இதற்கான அனுமதி வழங்கியிட்டது.

    இதை மறைத்து, மத்திய அரசு மீது குற்றம் சாட்டி விவசாயிகளையும் மக்களையும் ஏமாற்றுகிறது இந்த விடியா அரசு தமிழகத்தில் நெல் விளைச்சல் இந்த ஆண்டு அதிகம் என்று சட்டமன்றத்தில் பேசிய அமைச்சருக்கு, அதுபற்றி முன்பே தெரியாதா? விவசாயம் பற்றியும், ஒவ்வொரு பருவத்திலும் எந்த அளவுக்கு விளைச்சல் இருக்கும். இந்த ஆண்டு எய்யளவு அதிகம் விளையும் என்பதைக்கூட கணிக்கமுடியாத ஒருவர், அமைச்சராக இருப்பதற்குத் நகுதி இருக்கிறதா.?

    நெல் விளைச்சல் அதிகம் என்றால் அதற்கு எற்ப முன்கூட்டியே கொள்முதல் தொடங்கியிருக்க வேண்டாமா.? தேவையான அளவு கிடங்குகளை தயார் செய்திருக்க வேண்டாமா? குறைந்தபட்சம் மழையில் நளையாமல் பாதுகாப்பதற்கு தார்ப்பாய் போன்ற அடிப்படை வசதிகளையாவது செய்து கொடுத்திருக்க வேண்டாமா?

    இவை எதையும் செய்யாமல், போட்டோஷூட் நடத்துவதற்கும், புதுப்புது பெயர் சூட்டுவதற்கும் மெனக்கெடுவதால் மட்டும் விவசாயிகளின் துயரம் தீர்ந்துவிடுமா?

    பருவ மழை தீவிரமாகியிருப்பதாய் விவசாயிகளின் துன்பம் இரட்டிப்பாகிவிட்டது. டெல்டா மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் வேதனைப்படுகிறார்கள்.

    டெல்டா மாவட்டத்தில் மட்டும் பல ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்குத் தயார இருந்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து மீணாகிப் போவதுடன் சுமார் 30 லட்சம் மூட்டை நெல்மணிகள் கொள்முதல் செய்யாமல் சாலையில் குவித்து வைத்து மழையில் நனைந்து மீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் முழு நஷ்டம் அடைந்திருக்கிறார்கள்.

    நாகையில் தொடர் மழை காரணமாக அரசு நோடி நெய் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் வீணாகி வருகிறது. இதைக் கண்டு விவசாயிகள் தமிழகம் முழுக்க சாலை மறியல், பஸ் மறியல் செய்யும் காட்சிகளை எல்லாம் தொலைக்காட்சிகளில் பார்க்க முடிகிறது.

    மதுரை மாவட்டத்தில் 41 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கடந்த செப்டம்பர் பாதமே திறப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டும், இதுவரை ஒரு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தைக் கூட திறக்கவில்லை.

    பருவ மழைக்கு முன்பாக தப்பித்துவிடலாம். தீபாவளி பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடலாம் என்று ஆசையோடு காத்திருந்த விவசாயிகள், இப்போது போட்ட முதல் பணத்தைக் கூட எடுக்க முடியாமல் கண்ணீர் சிந்துகிறார்கள். நங்கள் ாழ்க்கையிலே இதுதான் இருண்ட தீபாவளி என்று விவசாயிகள் கண்ணீர் விடுகிறார்கள்.

    தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுவரை மட்டும் 7.968 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் NCRB) தெரிவிக்கிறது. தமிழக அரசின் நிர்வாகக் குளறுபடியால் இந்த எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிக்கும் அபாயம் தென்படுகிறது.

    எனவே, அதிக எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் நிறப்பதோடு, அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் செய்ததைப் போன்று தினமும் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவாயிகள் கொண்டு வரும் நெல்லை மழையில் இருந்து பாதுகாக்கத் தேவையான தார்ப்பாய்களை வழங்கிட வேண்டும் என்றும். விடியா தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்.

    விடியா திமுக அரசு, விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட நெல்மணிகளை கொள்முதல் செய்யாததால் விவசாயிகளிடத்தில் மிகப் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு, மாபெரும் போராட்டத்தை இந்த அரசு சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று மாச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி வருகிற 26-ந்தேதி டெல்டா மாவட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பிஆர் பாண்டியன் கூறினார். #PRPandian
    தஞ்சாவூர்:

    தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரியின் குறுக்கே கர்நாடகம் இனி அணை கட்டி தமிழகத்திற்கு செல்லும் தண்ணீரை தடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பில் கூறி உள்ளது. கீழ்பாசனத்தை தடுக்கக்கூடாது என நிரந்தரமான சட்டமும் உள்ள நிலையில் மேகதாதுவில் அணை கட்ட விரிவான ஆய்வறிக்கை தயார் செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கி உள்ளது. இது சட்ட விரோதமானது.

    இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் அணை கட்ட அனுமதி கொடுக்கவில்லை. ஆய்வுக்குத்தான் அனுமதி கொடுத்துள்ளோம் என்று மத்திய அரசு கூறுவது மோசடி நடவடிக்கையாகும். இதனை நீதிமன்றத்தில் தமிழக அரசு ஆதாரத்தோடு எடுத்துக்கூறி ஆய்விற்கான அனுமதியை ரத்து செய்ய முயற்சிக்க வேண்டும்.

    இந்த நிலையில் கர்நாடகாவை சேர்ந்த வாட்டாள்நாகராஜ், விவசாயிகள் சங்க தலைவர் என்ற போர்வையில் அணை கட்டுவதை தமிழகம் தடுத்தால் கன்னடத்தில் உள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் விடுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இனி ஒரு தமிழனுக்கு சிறு பாதிப்பு என்றாலும் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். அவர் மீது தேச துரோக வழக்கின் கீழ் நடவடிக்கை எடுத்து கன்னட தமிழர்களை பாதுகாக்க வேண்டும்.

    திருவாரூர் மாவட்டம் திருக்கார வாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) குடியரசு தினத்தன்று தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பங்கேற்கும் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #PRPandian
    மேட்டூர் அணை திறக்கப்படாததால் காவிரி பாசன பகுதிகளில் இந்த ஆண்டும் தொடர்ந்து 7-வது ஆண்டாக குறுவை சாகுபடி செய்ய இயலாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். #metturdam #deltafarmers
    தஞ்சாவூர்:

    காவிரி பாசன பகுதியில் வழக்கமாக சாகுபடி பணிகள் மேற்கொள்ள மேட்டூர் அணையில் இருந்து இன்று (12-ம் தேதி) தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீர் கல்லணைக்கு 16-ம் தேதி வந்து சேர்ந்து கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படும்.

    இதைத்தொடர்ந்து காவிரி ஆற்றின் துணை ஆறுகள், கிளை வாய்க்கால் வழியாக 2லட்சத்து 6 ஆயிரத்து 267 ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும். வெண்ணாறு பாசன பகுதியில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 422 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும்.

    கல்லணை கால்வாய் பகுதியில் 87 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும். கடந்த 6 ஆண்டுகளாக குறித்த தேதியான ஜூன் 12-ல் மேட்டூர் அணை தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்து போனது. இதனால் காவிரி வெண்ணாறு கல்லணை கால்வாய் பாசன பகுதியிலில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மிகுந்த துயரத்திற்கு உள்ளாயினர். 1934-ல் மேட்டூர் அணை கட்டப்பட்டு முறையாக பாசன பகுதிகளுக்கு தண்ணீர் விட தொடங்கியதில் இருந்து ஜூன் 12-ம் தேதி 15 முறைதான் திறக்கப்பட்டதாக பொதுப்பணித்துறை பதிவுகள் தெரிவிக்கின்றன. ஜூன் 12-க்கு முன்னராக 11 முறை திறக்கப்பட்டதாக பொதுப்பணித்துறை பதிவுகள் தெரிவிக்கின்றன.

    பொதுப்பணித்துறை பதிவுகள் இப்படி இருந்த போதிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் விளைவாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. பின்னர் ஜூன் 1-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிப்பு முறையாக அரசிதழில் வெளியிடப்பட்டது.

    இந்த நடவடிக்கைகளால் காவிரி பாசன விவசாயிகள் மத்தியில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

    குட்டை போல் காட்சி அளிக்கும் மேட்டூர் அணை

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டால் அணைகளை இந்த ஆணையம் தன் வசம் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீர் பெற்றுத் தரும் என்று விவசாயிகள் நம்பினார்கள். தற்போதய சூழலில் மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு வெறும் 38 அடியாக உள்ளது. கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பு நிலை குறித்து தெளிவான தகவல்கள் ஏதும் இல்லை. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதாக தகவல்கள் வந்து கொண்டுள்ளன. தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலையாளர்கள் தெரிவித்தனர்.

    தென்மேற்கு பருவ மழையால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி தலைப்பில் மழை பெய்து கர்நாடகாவின் அணைகளை தாண்டி இன்னமும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வந்து சேரவில்லை.

    காவிரி பாசன பகுதிகளில் இந்த ஆண்டும் தொடர்ந்து 7-வது ஆண்டாக குறுவை சாகுபடி செய்ய இயலாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

    குறுவை சாகுபடி இல்லாததால் விவசாயிகள் மட்டும் அல்லாமவ் விவசாய தொழிலாளர்களும் வேலை இல்லாத நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். காவிரி ஆணையம் வந்துவிட்டது. விடிவு காலம் பிறந்துவிட்டது என்று எண்ணிய விவசாயிகள் மீண்டும் இயற்கையிடம் சரண் அடைவதை தவிர வேறு வழியில்லை என்று கூறுகின்றனர்.

    மழை பெய்தால் மட்டுமே மேட்டூர் அணை நிரம்பி காவிரி பாசன விவசாயம் வசப்படும். இனி வருண பகவான் கருணை இருந்தால் மட்டுமே பிழைக்கலாம் என்று கருதுகின்றனர். #metturdam #deltafarmers

    ×