search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vikravandi"

    • தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவு அரவை தொழிற்சாலை உள்ளது.
    • மக்கள் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் அருகே வேடம்பட்டில் மருத்துவ கழிவு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய விஷக்காற்றால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 20 பெண்கள் உட்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம் அடுத்த வேடம்பட்டில் தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவு அரவை தொழிற்சாலை உள்ளது. இன்று அதிகாலை 1 மணி அளவில் இப்பகுதியில் இருந்து வெளியேறிய நச்சு காற்றால் அருகில் இருந்த வேடம்பட்டு காலனி பொதுமக்கள் இக்காற்றை சுவாசிக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு அதிகாலை 1 மணி முதல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வேடம்பட்டை சேர்ந்த அங்காளவள்ளி, ஜெயலட்சுமி, சவுமியா, மாரியம்மாள், சுசிலா, ரேணுகா, மதன், கடலூர் சுரேஷ், உள்ளிட்ட 17 பேரும், காணை அரசு மருத்துவமனையில் 13 பேர்களும் என மொத்தம் 20 பெண்கள் உள்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனால் வேடம்பட்டு கிராமத்தில் பதட்டம் அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இப்பிரச்சனை தொடர்பாக வேடம்பட்டு காலனி மக்கள் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேடையில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ. புகேழந்தி மயக்கம் ஏற்பட்டு மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
    • அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் புகழேந்திக்கு முதல் உதவி செய்தனர்.

    விக்கிரவாண்டி:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    இதற்காக வேட்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் முன்னதாகவே வருகை தந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகைக்கு காத்திருந்தனர். நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதற்கு முன்பு மேடையில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ. புகேழந்தி மயக்கம் ஏற்பட்டு மேடையிலேயே மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்த அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் புகழேந்திக்கு முதல் உதவி செய்தனர்.

    இதையடுத்து லட்சுமணன் எம்.எல்.ஏ. பதட்டத்துடன் அங்கு ஓடி வந்து மேடைக்கு கீழே அமர்ந்திருந்த அவரது மகன் செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்து மேடைக்கு அழைத்தார்.

    பின்னர் புகழேந்தி எம்.எல்.ஏ.வை கைத்தாங்கலாக அழைத்து சென்று முதலமைச்சருக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு ஏ.சி. அறையில் ஓய்வெடுக்க வைத்தனர். ஆனாலும் அவருக்கு சரியாகாததால் பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை 10.35 மணியளவில் புகழேந்தி எம்.எல்.ஏ. பரிதாபமாக உயிரிழந்தார்.

    மரணம் அடைந்த புகழேந்திக்கு கடந்த 4 வருடங்களாகவே கல்லீரல் பிரச்சனை இருந்து வந்தது. அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பிறகுதான் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இந்த நிலையில்தான் அவர் மேடையில் மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

    புகழேந்தி எம்.எல்.ஏ. தற்போது விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.

    புகழேந்தி எம்.எல்.ஏ. மரணம் அடைந்ததை அறிந்ததும் அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். அங்கு அவரது உடலை பார்வையிட்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    விக்கிரவாண்டி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் அரசு பஸ்சில் பயணியிடம் ரூ.16 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    விக்கிரவாண்டி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கு வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பணி நிலை கண்காணிப்பு குழு அலுவலர் நாகராஜன் தலைமையில் ஏட்டுகள் துரைவேந்தன், பாலமுருகன், சத்யபிரியா ஆகியோர் நேற்று கஞ்சனூர் போலீஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வேலூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    பஸ்சில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் ரூ.15 லட்சத்து 90 ஆயிரத்து 890 வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் அவர் விக்கிரவாண்டி செ.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த அய்யனார் (வயது 26) தனியார் பைனான்ஸ் கம்பெனி பிரதிநிதியாக இருப்பது தெரியவந்தது.

    அவரிடம் பணத்தை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணம் இல்லை.

    இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து 15 லட்சத்து 90 ஆயிரத்து 890 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    விக்கிரவாண்டி தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரனிடம், தாசில்தார் சுந்தர்ராஜன் முன்னிலையில் தேர்தல் பறக்கும் படையினரிடம் பணத்தை ஒப்படைத்தனர்.

    பின்னர் விழுப்புரம் கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.  #LokSabhaElections2019

    விக்கிரவாண்டி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்க வரிமையம் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் நாராயணன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர். லாரியில் இருந்தவரிடம் விசாரணை செய்தபோது, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த முட்டை வியாபாரி முருகேசன் (41) என்பது தெரியவந்தது. அவரிடம் ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் இருந்தது. அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடமிருந்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மோகன் தலைமையில் ஏட்டுகள் பிரபாகரன், சசிகுமார், முருகானந்தம் ஆகியோர் மதுரபாக்கம் அடுத்த எம். குச்சிபாளையம் பகுதியில் விழுப்புரம் திருக்கனூர் சாலையில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திருக்கனூர் பகுதியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்தவரிடம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது. விசாரணையில் அவர் திருக்கனூர், பிடாரி பட்டை சேர்ந்த முறுக்கு வியாபாரி மலைசாமி (39) என்பது தெரிந்தது.

    அவர் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நாராயணன், மோகன் ஆகியோர் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் விக்கிரவாண்டி தாசில்தார் சுந்தர் ராஜன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.#LokSabhaElections2019

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 19). அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் பரமசிவம்(19) இவர்கள் 2 பேரும் ஏ.சி.மெக்கானிக் படித்து விட்டு வேலை பார்த்து வந்தனர்.

    விக்னேஷ், பரமசிவம் இருவரும் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று அவர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் கண்டமங்கலத்தில் இருந்து மேல்மலையனூர் நோக்கி புறப்பட்டனர்.

    மோட்டார் சைக்கிளை விக்னேஷ் ஓட்டி சென்றார். பரமசிவம் பின்னால் அமர்ந்திருந்தார். விக்கிரவாண்டி அருகே ஒரத்தூர் லட்சுமிபுரம் கூட்டுசாலை வளைவில் விக்னேஷ் மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது அந்த வழியாக செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக திடீரென்று விக்னேசின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட விக்னேசும், பரமசிவனும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் விக்னேஷ், பரமசிவம் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் வாலிபர்கள் 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews

    விக்கிரவாண்டி அருகே கடனாக கொடுத்த நகை-பணத்தை திருப்பி கேட்ட தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி அருகே வி.மாத்தூர் கிராமத்ததை சேர்ந்தவர் குமார் (வயது 35). இவரும், அவரது மனைவி சுமதியும் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை செய்தனர். இந்நிலையில் செங்கல் சூளை உரிமையாளர் செங்கேணி என்கிற கோவிந்தன் (38) என்பவர் குமாரிடம் கடனாக நகை மற்றும் பணத்தை வாங்கியுள்ளார்.

    நீண்ட நாட்களாகியும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் குமார் தனது மனைவி சுமதியுடன் சென்று கடனாக கொடுத்த நகை மற்றும் பணத்தை கேட்டார். இதில் ஆத்திரமடைந்த செங்கேணி சாதி பெயரை குறிப்பிட்டு தகாதவார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இது குறித்து குமார் விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து கோவிந்தனை கைது செய்தார்.

    விக்கிரவாண்டி அருகே கொடுத்த கடனை கேட்ட தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய செங்கல்சூளை அதிபரை போலீசார் கைது செய்தனர்.
    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது35). இவரது மனைவி சுமதி(30). இவர்கள் 2 பேரும் அருகில் உள்ள கோவிந்தன்(38) என்பவரது செங்கல் சூளையில் வேலை பார்த்துவருகிறார்கள்.

    குமாரிடம் செங்கல்சூளைஅதிபர் கோவிந்தன் கடனாக ரூ. 20 ஆயிரம் வாங்கி இருந்தார். அதன்பின்னர் அவர் கடன் வாங்கிய பணத்தை திருப்பிகொடுக்கவில்லை. இதனைதொடர்ந்து குமார், கடனாககொடுத்த பணத்தை கோவிந்தனிடம் கேட்டார்.

    அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கோவிந்தன் தொழிலாளி குமாரை திட்டி தாக்கினார். இதனை தடுத்த குமாரின் மனைவி சுமதியையும் தாக்கினார்.

    இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசில் குமார் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து கணவன்- மனைவியை தாக்கிய கோவிந்தனை கைது செய்தார்.
    ×