search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actress Kasthuri"

    • நான் தெலுங்கு மக்கள் அத்தனை பேரையும் சொல்லவில்லை.
    • அரசியல் வித்தியாசம் பாராமல் எனக்காக ஆதரவு தந்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி.

    சென்னையில் கடந்த மாதம் 3-ந்தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு பேசும்போது, '300 வருடங்களுக்கு முன்பு ஒரு ராஜாவுக்கு, அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்? அதனால்தான் இங்கு தமிழர்கள் முன்னேற்ற கழகம் என்று வைக்க முடியவில்லை'', என்று குறிப்பிட்டார். கஸ்தூரியின் இந்த கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. கண்டனங்களும் வலுத்தன.

    தனது பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி கூறுகையில், நான் எதையும் புதிதாக சொல்லவில்லை. தவறாக சொல்லவில்லை. வைகோவும், காந்தாராஜூம் சொன்னதை தானே சொன்னேன். எனவே அவர்களை போய் கேளுங்கள்.

    தெலுங்கு மக்களை நான் எதுவுமே சொல்லவில்லை. திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுபவர்களை சொன்னால், அதை தெலுங்கு மக்களை சொன்னதாக திசை திருப்பியோரை வன்மையாக கண்டிக்கிறேன்.

    தமிழர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்லக்கூடிய திராவிட சித்தாந்தம் பேசக்கூடியவர்களை தான் நான் குறிப்பிட்டேன். லட்டுவில் கொழுப்பை சாப்பிட்டவர்கள் தானே. இனி நீங்கள் அனைவருமே மாட்டுக்கறி சாப்பிடலாமே... என்று கேலி பேசினார்களே... தி.மு.க. ஐ.டி. பிரிவில் கிண்டல் செய்தார்களே... அப்போதெல்லாம் என்ன செய்துகொண்டிருந்தார்கள். அதெல்லாம் தெலுங்கு மக்களை பாதிக்காதா?.

    நான் தெலுங்கு மக்கள் அத்தனை பேரையும் சொல்லவில்லை. என் மீதே நான் காரி உமிழ்வேனா? வீரபாண்டிய கட்டபொம்மனும் தெலுங்கர் தான். ஆனால் இந்தியாவுக்காக சண்டை போட்ட புரட்சியாளர் அவர். அவரை போல, எந்த மொழி பேசினாலும், தமிழர் நலனுக்காக உழைப்போரை தமிழர்கள் என்று ஒப்புக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.

     

    இதையடுத்து, கஸ்தூரி மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில், எழும்பூர் போலீசார் அவர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்தனர். அவருக்கு சம்மன் அளிக்கச் சென்றபோது அவரது வீடு மூடியிருந்தது. இதையடுத்து அவர் தலைமறைவானதாக தனிப்படை போலீசார் தேடி வந்தனர். முன்னதாக முன்ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

    அதன்பின்னர், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பதுங்கி இருந்த நடிகை கஸ்தூரியை போலீசார் கைது செய்தனர். பின்னர், சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

    நடிகை கஸ்தூரி சார்பில் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகரன் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் தனிமையில் வசித்து வருகிறேன். கணவர் ஆதரவு கிடையாது. நான் தலைமறைவாகவில்லை. என்னுடைய சென்னை வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியது எனக்கு தெரியாது. என்னை சிறையில் அடைத்தால் எனது குழந்தை பரிதவித்து விடும். எனவே எனக்கு ஜாமின் அளிக்க வேண்டும்" என கோரினார்.

    இந்த வழக்கு எழும்பூர் 14-வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கஸ்தூரி தரப்பில், மனுதாரர் சிங்கிள் மதர் என்றும், மனுதாரருக்கு சிறப்பு குழந்தை உள்ளதால், அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில் ஜாமின் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

     

    சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த கஸ்தூரி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'என்னை குடும்பம் போல் பாதுகாத்த என்னுடைய நண்பர்களுக்கு நன்றி. என்னுடைய வழக்கறிஞர்களுக்கு நன்றி. அரசியல் வித்தியாசம் பாராமல் எனக்காக ஆதரவு தந்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி. என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி.

    ஆந்திரா, தெலுங்கானா மக்களுக்கு மிகப்பெரிய நன்றி. புழல் சிறையில் என்னை நன்றாக நடத்திய அனைவருக்கும் நன்றி. எல்லாவற்றுக்கும் மேலாக சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி'' என்று கூறினார்.

    • எழும்பூர் காவல் நிலையத்தில் தினமும் காலை கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது.
    • அந்த ஜாமின் நிபந்தனைளை தளர்த்தக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி மனுதாக்கல் செய்துள்ளார்.

    பிராமணர் சமூகத்தினர் சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசிய உரை, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

    இதனால் நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் தலைமறைவானார். ஐதராபாத்தில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் பதுங்கி இருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    அதன்பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதையடுத்து நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில் எழும்பூர் காவல் நிலையத்தில் தினமும் காலை கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த ஜாமின் நிபந்தனைளை தளர்த்தக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி மனுதாக்கல் செய்துள்ளார்.

    • கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • கஸ்தூரிக்கு அவரது ஆதரவாளர்கள் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பிராமணர் சமூகத்தினர் சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசிய உரை, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    அந்த நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதனால் தனது கருத்துக்கு கஸ்தூரி வருத்தம் தெரிவித்தார்.

    எனினும், நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். இதையடுத்து ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குடா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் பதுங்கி இந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    அதன்பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதையடுத்து, நடிகை கஸ்தூரி ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அதில் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் என்பதை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

    இதையடுத்து இந்த மனுவை விசாரிக்கும் காவல்துறை சார்பில் ஆட்சேபனை இல்லை என தெரிவித்ததால் கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், புழல் சிறையில் இருந்து நடிகை கஸ்தூரி வெளியே வந்தார். சிறையின் வெளியே கஸ்தூரிக்கு அவரது ஆதரவாளர்கள் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மேலும், "அரசியல் வேறுபாடின்றி எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. தெலுங்கு மக்களுக்கும், ஆந்திரா மக்களுக்கும் நன்றி" என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

    • திமுக அரசை மாற்ற வேண்டும் என்று மக்கள் முடிவுடன் இருக்கின்றனர்.
    • திமுக பேசாத பேச்சா.. எல்லோரும் பேசுவதைப் போல் அந்த நடிகையும் பேசிவிட்டார்.

    மதுரையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஒரு திரைப்பட நடிகை. அவரது மகனுக்கு 12 வயது. ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர். அந்த பெண் தான் மகனை முழுவதுமாக உடன் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும்.

    திமுக பேசாத பேச்சா.. எல்லோரும் பேசுவதைப் போல் அந்த நடிகையும் பேசிவிட்டார். சரி அந்த விஷயத்திற்குள் நான் செல்லவில்லை.

    ஒரு நடிகையை இரண்டு தனிப்படைகளை அமைத்து காவல் துறை பிடித்திருக்கிறார்கள். ஒரு நடிகையை பிடிக்க இவ்வளவு செய்யும்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்று வந்து ஒரு வருடங்களுக்கும் மேல் ஆகியும் அவரது தம்பியை காவல்துறையினரால் இன்னும் பிடிக்க முடியவில்லையே. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கீழ் இருக்கும் காவல்துறை. இதற்கு மேல் என்ன கூறுவது.

    ஆக மொத்தம் இந்த அரசை மாற்ற வேண்டும் என்று மக்கள் முடிவுடன் இருக்கின்றனர்.

    எத்தனை நாட்களுக்கு முன்னால் தேர்தல் பணிகளை ஆரம்பித்தாலும் வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் மக்கள் முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு.
    • முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து தலைமறைவானார்.

    பிராமணர் சமூகத்தினர் சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசிய உரை, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    அந்த நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதனால் தனது கருத்துக்கு கஸ்தூரி வருத்தம் தெரிவித்தார்.


    எனினும், நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். இதையடுத்து ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குடா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் பதுங்கி இந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    அதன்பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நடிகை கஸ்தூரி ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அதில் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் என்பதை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

    இதையடுத்து இந்த மனுவை விசாரிக்கும் காவல்துறை சார்பில் ஆட்சேபனை இல்லை என தெரிவித்ததால் கஸ்தூரிக்கு ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • சிந்தாதிரிப்பேட்டை துணை கமிஷனர் அலுவலகத்தில் வைத்து கஸ்தூரியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
    • நடிகை கஸ்தூரி பிரபலமான நடிகை என்பதால் அவருக்கு ஏ1 வகுப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

    வன்கொடுமை தடுப்பு சட்டம் போல் பிராமணர்களை பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசுகையில், தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதையடுத்து அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பேட்டி அளித்தார். அதேவேளையில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்ககோரி பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.

    அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை எழும்பூர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கஸ்தூரியிடம் விசாரணை நடத்துவதற்கு எழும்பூர் போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அவர் தலைமறைவானார்.

    பின்னர் கஸ்தூரி முன்ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து நடிகை கஸ்தூரியிடம் விசாரணை நடத்த எழும்பூர் போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. அவரது செல்போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.

    இதனையடுத்து தலைமறைவான கஸ்தூரியை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்த நிலையில் நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில், தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கி இருப்பதாக எழும்பூர் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் ஐதராபாத் சென்று நடிகை கஸ்தூரியை கைது செய்தனர். கைது செய்ய சென்றபோது நடிகை கஸ்தூரி போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். 'எனது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறேன். நான் பேசியதற்கு ஏற்கனவே மன்னிப்பும் கேட்டு விட்டேன். அப்படி இருக்கும்போது கைது செய்வதற்கு ஏன் இப்படி அவசரம் காட்டுகிறீர்கள்' என்றார்.

    அதற்கு போலீசார் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் உடனே கைது செய்ய வேண்டிய நிலை உள்ளது என்று அவருக்கு விளக்கினார்கள். அதன் பிறகு அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    சிந்தாதிரிப்பேட்டை துணை கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். சுமார் 1½ மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் பேசிய வீடியோ ஆதாரங்களை காட்டி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அவர், 'எதிர்பாராத விதமாக உணர்ச்சி வசப்பட்டு அப்படி பேசிவிட்டேன். நான் பேசியதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டேன். தெலுங்கு பேசும் பெண்களை நான் மதிப்பவள்' என்று தெரிவித்தார்.

    விசாரணை முடிந்ததும் நடிகை கஸ்தூரியை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். அப்போது சாப்பிட என்ன வேண்டும் என்று கேட்டனர். அதற்கு அவர் சாப்பாடு வேண்டாம், ஜூஸ், சாண்ட்விச் போதும் என்றார். இதையடுத்து அவற்றை போலீசார் வாங்கி கொடுத்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது மாஜிஸ்திரேட்டு அவரை வருகிற 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அப்போது கஸ்தூரி, தனக்கு 12 வயதில் மாற்றுத்திறனாளி மகன் இருப்பதாகவும், அவனை நான் தான் கவனிக்க வேண்டும் என்றும் கூறினார். அதற்கு மாஜிஸ்திரேட்டு, 'மதுரை ஐகோர்ட்டு முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததால் நாங்கள் உடனடியாக ஜாமீன் வழங்க முடியாது.

    எனவே உங்கள் மகனை உறவினர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்' என்றார். இதையடுத்து நடிகை கஸ்தூரி தனது மகனை உறவினர்களிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு பிற்பகல் 3 மணிக்கு அவர் புழல் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    ஒவ்வொரு நாளும் ஜெயிலுக்கு அழைத்து வரப்படும் கைதிகள் முதல் நாளில் அங்குள்ள ஹாலில் மொத்தமாக வைக்கப்படுவது வழக்கம். நேற்று சுமார் 15 பெண் கைதிகள் வந்திருந்தனர். அவர்களுடன் ஹாலில் நடிகை கஸ்தூரி வைக்கப்பட்டு இருந்தார்.

    கஸ்தூரி சினிமா நடிகை என்பதால் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர். அதனால் அவர் நேற்று இரவு ஜெயிலில் தூக்கமின்றி அவதிப்பட்டார். நேற்று பிற்பகலில் ஜெயிலுக்கு சென்றபோது சக கைதிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

    நேற்று மதியம் அவர் ஜெயிலில் சாப்பிடவில்லை. நேற்று இரவு கலவை சாதம் வழங்கப்பட்டது. அதை குறைந்த அளவிலேயே அவர் சாப்பிட்டார். இன்று காலையில் பொங்கல், கிச்சடி வழங்கப்பட்டது. அதையும் அவர் விரும்பாததால் குறைவாகவே சாப்பிட்டார்.

    சக கைதிகளுடன் அடைப்பு ஜெயிலில் முக்கிய பிரமுகர்களுக்கு ஏ1 வகுப்பு வழங்கப்படுவது வழக்கம். நடிகை கஸ்தூரி பிரபலமான நடிகை என்பதால் அவருக்கு ஏ1 வகுப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு அவர் முறைப்படி கோர்ட்டை அணுகி அனுமதி பெற வேண்டும். அதுவரை அவர் சக பெண் கைதிகளுடனேயே அடைக்கப்படுவார்.

    அதன்படி நேற்று ஜெயிலில் உள்ள ஹாலில் சக பெண் கைதிகளுடன் அடைக்கப்பட்டு இருந்த கஸ்தூரி இன்று வேறு அறைக்கு மாற்றப்பட்டு சக பெண் கைதிகளுடன் அடைக்கப்பட்டார்.

    • கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தலைமறைவானார்.
    • சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் பதுங்கி இந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    பிராமணர் சமூகத்தினர் சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசிய உரை, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதனால் தனது கருத்துக்கு கஸ்தூரி வருத்தம் தெரிவித்தார்.

    எனினும், நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். அவரை கைது செய்வதற்காக தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. இதையடுத்து ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குடா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் பதுங்கி இந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில், ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை போலீசார் சென்னை அழைத்து வந்தனர். சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

    அதன்பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகை கஸ்தூரியை நவம்பர் 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், கைது நடவடிக்கைக்கு முன்பு கஸ்தூரி வெளியிட்டு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

    அந்த வீடியோவில், " நான் தலைமறைவாகவில்லை, ஓடி ஒளியவில்லை. ஐதராபாத்தில் எனது வீட்டில் தான் இருந்தேன்.

    படப்பிடிப்பிற்காக ஐதராபாத் வந்திருந்தேன். தினமும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தேன்.

    நேற்று படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியபோது தான் கைது செய்தனர். என்னிடம் எனது செல்போன் இல்லை, வழக்கறிஞரிடம் கொடுத்திருந்தேன்" என கூறினார்.

    • தனது கருத்துக்கு கஸ்தூரி வருத்தம் தெரிவித்தார்.
    • மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பிராமணர் சமூகத்தினர் சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசிய உரை, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதனால் தனது கருத்துக்கு கஸ்தூரி வருத்தம் தெரிவித்தார்.

    எனினும், நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். அவரை கைது செய்வதற்காக தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. இதையடுத்து ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குடா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் பதுங்கி இந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில், ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை போலீசார் சென்னை அழைத்து வந்தனர். சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

    அதன்பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகை கஸ்தூரியை நவம்பர் 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கஸ்தூரி சமூக வலை தளங்களில் பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு வருபவர் ஆவார்.
    • மதுரையில் போடப்பட்டுள்ள வழக்கிலும் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்தனர்.

    சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு ஆதரவாக கடந்த 3-ந்தேதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் பெண்கள் பற்றி அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து தெலுங்கு அமைப்புகள் சார்பில் கஸ்தூரி மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து எழும்பூர் போலீசார் போயஸ் கார்டனில் உள்ள கஸ்தூரியின் வீட்டுக்கு சம்மன் அளிப்பதற்காக சென்றனர். ஆனால் கஸ்தூரி வீட்டை பூட்டி விட்டு தலைமறைவானார்.

    இதற்கிடையே மதுரையிலும் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் கஸ்தூரி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடியானது.

    தெலுங்கு பேசும் பெண்கள் பற்றி கஸ்தூரி பேசிய பேச்சை நீதிபதியும் கண்டித்து இருந்தார்.

    முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதையடுத்து நடிகை கஸ்தூரியை பிடிப்பதற்காக சென்னை மற்றும் மதுரை போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

    இதில் கஸ்தூரி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சினிமா தயாரிப்பாளரான அரிகரன் என்பவரது வீட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து எழும்பூர் தனிப்படை போலீசார் கஸ்தூரி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பப்பலக்குண்டா என்ற இடத்தில் தயாரிப்பாளரின் பங்களா வீட்டில் பதுங்கி இருந்த கஸ்தூரியை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அங்கு வைத்தே அவரிடம் அதிரடி விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவரை சென்னைக்கு காரில் அழைத்து வருகிறார்கள். சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து கஸ்தூரியிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட உள்ளனர். தெலுங்கு பெண்கள் பற்றி அவதூறான கருத்துக்களை கூறியது தொடர்பாக கஸ்தூரியிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அவர் அளிக்கும் தகவல்களை போலீசார் வாக்கு மூலமாக பதிவு செய்கிறார்கள்

    இதைத் தொடர்ந்து கஸ்தூரி எழும்பூர் 5-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று மாலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் நீதிபதியின் வீட்டில் கஸ்தூரியை போலீசார் ஆஜர் படுத்துகிறார்கள். அதன் பிறகு அவர் புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்.

    மதுரையில் போடப்பட்டுள்ள வழக்கிலும் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்தனர். சென்னை போலீசாரின் நடவடிக்கை முடிந்ததும் மதுரை போலீசார் தாங்கள் பதிவு செய்து உள்ள வழக்கில் கஸ்தூரியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது.

    தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் கஸ்தூரி சமூக வலை தளங்களில் பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு வருபவர் ஆவார். இதற்கு முன்பு பல்வேறு விவகாரங்களிலும் அவர் தலையிட்டு கருத்துக்களை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

    அந்த வகையில்தான் தெலுங்கு பெண்கள் பற்றி கஸ்தூரி பேசிய பேச்சுக்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அவர் மீது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

    எழும்பூர் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாகவே நடிகை கஸ்தூரியை தற்போது இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர். கஸ்தூரி மீது கோயம்பேடு போலீஸ் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகியவற்றிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த புகார்கள் மீதும் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே தயாரிப்பாளர் அரிகரன் வீட்டில் கஸ்தூரி சிக்கியது எப்படி? என்பது பற்றி பரபரப்பான தகவல்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    தமிழிலில் 'அமைதிப்படை' உள்பட பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்ற கஸ்தூரி தற்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாமலேயே இருந்து வருகிறார். தெலுங்கில் அவரது நடிப்பில் வெளியான "அன்னமயா" திரைப்படம் மிகவும் பிரபலமான படமாகும். இது தவிர மேலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள கஸ்தூரிக்கு சினிமா தயாரிப்பாளரான அரிகரனுடன் நட்பு ஏற்பட்டு உள்ளது.

    இதன் அடிப்படையிலேயே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சென்னையில் இருந்து தப்பிச் சென்ற கஸ்தூரி ஐதராபாத் அருகே உள்ள பாப்புல குண்டா பகுதியில் தயாரிப்பாளர் அரிகரனின் பங்களா வீட்டுக்கு சென்று அங்கு கஸ்தூரி பதுங்கி இருந்து உள்ளார்.

    மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனுவை போட்டிருந்த கஸ்தூரி முன் ஜாமீன் கிடைத்த பிறகு வெளியில் வரலாம் என்று எண்ணியிருந்தார். ஆனால் முன் ஜாமீன் மனு தள்ளுபடியாகி போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதால் அடுத்த கட்டமாக என்ன செய்வது? என்பது பற்றி அவர் வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

    இந்த நிலையில்தான் கஸ்தூரியை எழும்பூர் போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்துள்ளனர்.

    கஸ்தூரி தலைமறைவானவுடன் சினிமா வட்டாரத்தில் அவரது நெருங்கிய நண்பர்கள் யார்-யார்? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்திய போலீசார் அவர்களது பட்டியலையும் சேகரித்தனர்.

    இதன் பிறகே தெலுங்கு சினிமா தயாரிப்பாளரான அரிகரனின் பங்களாவில் கஸ்தூரி இருப்பதை கண்டு பிடித்த போலீசார் ஐதராபாத்துக்கு விரைந்து சென்று கைது நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு.
    • சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது கடும் விமர்சனத்தை எழுப்பியது. அத்துடன் பல்வேறு காவல்நிலையங்களில் கஸ்தூரிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

    புகார் அடிப்படையில் சென்ன எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து கஸ்தூரி தலைமறைவானார். தவைமறைவான கஸ்தூரி முன்ஜாமின் கேட்டு விண்ணப்பித்திருந்தார். முன்ஜாமினை நீதிமன்றம் நிராகரித்தது.

    இதற்கிடையே தலைமறைவானதால் தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தேடிவந்தனர். தனிப்படை போலீசாருக்கு கஸ்தூரி ஐதராபாத்தில் மறைந்து இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ஐதரபாத்திற்கு சென்று கஸ்தூரியை கைது செய்தனர்.

    ஐதராபாத்தில் ககைது செய்யப்பட்ட கஸ்தூரி நாளை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நடிகை கஸ்தூரியின் கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினரும் புகார் அளித்தனர்.
    • நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு எழும்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    கடந்த 3-ந்தேதி சென்னையில் பிராமண சமூகத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கேற்றார். அப்போது தெலுங்கு பேசுபவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் அவர்,தெலுங்கு மக்கள் குறித்து தவறான கருத்துகளை தெரிவிக்கவில்லை. தவறாக பேசியதாக கருதினால் வருத்தம் தெரிவிப்பதாக அறிவித்தார்.

    ஆனாலும் அவரது கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில் நடிகை கஸ்தூரி மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை திருநகர் போலீசில், நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகக்கோரி கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் வழங்க சென்றபோது முன்னதாகவே அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளார். தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு எழும்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    இதனிடையே வழக்கில் போலீஸ் கைதுக்கு பயந்து தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரி தனக்கு முன் ஜாமின் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, முன் ஜாமின் மனு மீதான உத்தரவை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

    இந்த நிலையில் அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. கஸ்தூரியின் கருத்து தொடர்பாக நீதிபதி தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார்.

    • கஸ்தூரி மீது 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.
    • அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    பிராமண சமூகத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி திராவிடர்கள் குறித்தும், தெலுங்கு மக்கள் குறித்தும் அவதூறாக பேசினார். குறிப்பாக, தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசிய கருத்தானது தெலுங்கு அமைப்புகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து நடிகை கஸ்தூரிக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, நடிகை கஸ்தூரி தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார். ஆனாலும் பல மாவட்டங்களில் அவர்மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. தற்போது அவர் தலைமறைவாக இருக்கிறார்.

    இதற்கிடையே, மதுரை திருநகரில் நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரில் கஸ்தூரி மீது 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் கோரி கஸ்தூரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.

    இந்நிலையில், நடிகை கஸ்தூரியின் முன் ஜாமின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தெலுங்கு மக்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். சென்னையின் முழு உருவாக்கமே தெலுங்கு சமூக மக்கள்தான். அவர்களை எப்படி பிரித்துப் பார்க்க முடியும்? கஸ்தூரியின் பேச்சை இணைய தளத்தில் இருந்து நீக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது, தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும், அரசியல் உள் நோக்கத்தோடு என் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன் என கஸ்தூரி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    கஸ்தூரிக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது. பிறருக்கு இது ஒரு பாடமாக அமையும் என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், முன் ஜாமின் வழக்கை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

    ×