என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "#பா.ம.க."

    • அ.தி.மு.க. மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.
    • 40 தொகுதிகளில் களம்மிரங்குவதற்கு பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்பதே அ.தி.மு.க. பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் கணக்காக உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய அ.தி.மு.க., தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் அந்தக் கட்சிக்கு தேர்தலில் தோல்வியே கிடைத்தது.


    இதைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணிக்கு காய் நகர்த்திய எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அணியில் இருந்து கட்சிகளை இழுத்து புதிய கூட்டணியை அமைத்து விடலாம் என திட்டமிட்டார். ஆனால் அதற்கான சூழல் ஏற்படவே இல்லை .

    இந்த நிலையில் தான் அ.தி.மு.க. மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் சேர உள்ளன.

    ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த டி.டி.வி. தினகரன் ஓ. பன்னீர்செல்வம், டாக்டர் கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், ஜான் பாண்டியன் ஆகியோரும் இந்த கூட்டணியிலேயே தொடர உள்ளனர்.

    இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான புதிய கூட்டணி மெகா கூட்டணியாகவே மாறி இருக்கிறது. இப்படி அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எத்தனை இடங்களை குறி வைத்து காய் நகர்த்தி வருகின்றன என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

    2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ஜ.க. 20 தொகுதிகளில் போட்டியிட்டது. தற்போது இரண்டு மடங்கு கூடுதலாக அந்த கட்சி தொகுதிகளை எதிர்பார்க்கிறது. இதன் மூலம். 40 தொகுதிகளில் களம்மிரங்குவதற்கு அந்த கட்சி திட்டமிட்டு உள்ளது.

    பா.ம.க.விற்கு 15 தொகுதிகள் தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் தினகரனுக்கு 10 தொகுதிகள் என முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஓ.பன்னீ செல்வதற்கு தற்போது நான்கு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களை தக்க வைக்கும் வகையில் நான்கு இடங்களை ஒதுக்க லாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தவிர மீதமுள்ள சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளை ஒதுக்கி கொடுப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கூட்டணியில் 150 இடங் களில் போட்டியிடுவதற்கு அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ள தன் மூலம் மீதமுள்ள 84 தொகுதிகளையும் பார திய ஜனதா கட்சியிடம் கொடுத்துவிட்டு அவர்கள் மூலமாக மற்ற கட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக வும் கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. , பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு கள் எவை? எவை? என்பது பற்றிய பட்டியலை தயா ரித்து வைத்துள்ளன.அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி உறுதியாகி இருப்பது போல மற்ற கட்சிகளுடனும் கூட்டணியை இறுதி செய்த பிறகு யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என் கிற விவரங்களை தேர்தல் நேரத்தில் வெளியிடுவ தற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ளது.அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியும் தங்களுக்கு செல் வாக்கு உள்ள பகுதியான கொங்கு பகுதியில் குறிப் பிடத்தக்க தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிட வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளது. இதே போன்று பாட்டாளி மக்கள் கட்சி வடமாநிலங்களில் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை பெறுவதிலும் கவனம் செலுத்த தொடங்கி யுள்ளது.

    இப்படி கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகள் தங்களுக்கு தேவையான இடங்களை பெறுவதில் தீவிரம் காட்ட தொடங்கி யுள்ளது.இதன்மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க, கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக விரைவில் இறுதி செய்யப் பட்டு தொகுதி பங்கீடும் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    • குடும்பத்தினர் டாக்டர் ராமதாசிடம் ஆலோசனை ஈடுபட்டு வருகின்றனர்.
    • சந்திப்பு தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று காலை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களை சந்தித்தார் .

    அப்போது கட்சி நிறுவனரான நான் இனி கட்சியின் தலைவராகவும் செயல்பட போவதாக அறிவித்தார். கட்சியின் செயல் தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்வார் என டாக்டர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார்.

    இந்த நிலையில் பா.ம.க. வின் பல்வேறு நிர்வாகிகள் அன்புமணி ராமதாஸ் கட்சியில் தலைவராக தொடர வேண்டும் என தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    நேற்று மாலை 4 மணி அளவில் டாக்டர் ராமதாசை சந்தித்து ஆலோ சனை நடத்துவதற்காக டாக்டர் ராமதாசின் மூத்த மகளும் இளைஞர் அணி தலைவர் முகுதனின் தாயாருமான காந்தி, இளைய மகள் கவிதா, மாநில பொருளாளர் திலகபாமா, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன்,மயிலம் எம்.எல்.ஏ.சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி,முன்னாள்எம்.பி. செந்தில்குமார், பா.ம.க. மாநில நிர்வாகி வக்கீல் பாலு ஆகியோர் டாக்டர் ராமதாசை சந்திக்க வந்தனர்.

    இதில் பா.ம.க. பொரு ளாளர் திலகபாமாவிற்கு மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை. மற்றவர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்திவிட்டு ஒவ்வொருவராக வெளியே வந்தனர்.

    இன்று காலை பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி மற்றும்பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் டாக்டர் ராமதாசை சந்திக்க உள்ளனர். அதில் சுமூகமான முடிவு ஏற்படும் என பா.ம.க. வட்டாரம் தெரிவிக்கிறது.

    டாக்டர் ராமதாஸ் மகள்கள் மற்றும் பேரன் முகுந்தன் ஆகியோர் கட்சியினர் வெளியே சென்ற பிறகு மீண்டும் ஆலோசனை ஈடுபட்டனர்.

    இரவு வரை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. ஆனால் அதில் எந்த முடிவும் ஏற்படாமல் சந்திப்பு தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

    ராமதாசை சந்தித்து விட்டு வந்த வக்கீல் பாலுவிடம் நிருபர்கள், ஆலோசனையில் என்ன பேசினீர்கள் என்று கேட்டனர். அதற்கு பாலு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் இது வழக்கமான நிகழ்வு தான் எனக் கூறிவிட்டு எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமல் கிளம்பி விட்டார்.

    3 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை முடிந்த நிலையில் டாக்டர் ராமதாசின் மனைவி சரஸ்வதி, மூத்த மகள் காந்தி, இளைய மகள் கவிதா மற்றும் பா.ம.க. இளைஞரணி தலைவர் முகுந்தன் ஆகியோர் மட்டுமே டாக்டர் ராமதாசிடம் ஆலோசனை ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வக்கீல் பாலு,முன்னாள் எம்.பி. செந்தில்குமார்,தலைமை நிலைய செயலாளர் அன்பழகன்ஆகியோர் டாக்டர் அன்புமணி ராமதாசை இன்று சென்னையில் சந்திக்க உள்ளதாகவும் பா.ம.க. வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

    • தமிழகத்தைப் புறக்கணித்து தெலுங்கானாவுக்கு சென்றிருப்பது கவலை அளிக்கிறது.
    • முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தமிழ்நாடு எங்கு பின் தங்கியிருக்கிறது?

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சீனாவைச் சேர்ந்த மின் சார மகிழுந்து நிறுவனமான பி.ஒய்.டி ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்தியாவில் அதன் முதலாவது மகிழுந்து உற்பத்தி ஆலையை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.

    தமிழ்நாட்டிற்கு இந்த மகிழுந்து ஆலையைக் கொண்டு வருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தும் கூட, அந்த வாய்ப்புகளை தமிழக அரசு கோட்டை விட்டிருக்கிறது.

    பி.ஒய்.டி மகிழுந்து ஆலையை தங்கள் மாநிலத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு, குஜராத், மராட்டியம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் போட்டியிட்டன.

    இந்த மாநிலங்களில் தமிழ்நாட்டுக்குத் தான் அதிக வாய்ப்புகள் இருந்தன.

    ஆசியாவின் டெட்ராய்ட் சென்னை தான் என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து வரும் நிலையில், உலகின் மிகப்பெரிய மின்னனு வாகனங்கள் உற்பத்தி நிறுவனம் தமிழகத்தைப் புறக்கணித்து விட்டு தெலுங்கானாவுக்கு சென்றிருப்பது உண்மையாகவே கவலை அளிக்கிறது.

    தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்வது ஏன்? தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தமிழ்நாடு எங்கு பின் தங்கியிருக்கிறது? முதலீடுகளை ஈர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்தெல்லாம் தமிழக அரசு ஆராய வேண்டும். அதனடிப்படையில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான தமிழ்நாட்டின் திறனை அரசு அதிகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வெங்கடாசலபுரத்தில் பகுதி நேர ரேசன்கடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    • ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தேரடி திடலில் தென்காசி வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அய்யாபுரம் போலீஸ் நிலையத்தில் பா.ம.க. பிரமுகர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும். திருவேங்கடம் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தில் பகுதி நேர ரேசன்கடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் டாக்டர் சீதாராமன் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், துணைச்செயலாளர் பால் நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில் நகர தலைவர் கருப்பசாமி வரவேற்று பேசினார். மாநில துணைத்தலைவர்கள் அய்யம்பெருமாள், சேது ஹரிஹரன், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, மாவட்ட துணைச்செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் மேரி புஷ்பலதா, விவசாய சங்க செயலாளர் மதிராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்கரன்கோவில் நகர செயலாளர் வேலுச்சாமி நன்றி கூறினார்.

    • செயற்குழு கூட்டம் கடத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பா.ம.க .கவுரவ தலைவர் பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    கடத்தூர்,

    தருமபுரி கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் கடத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பா.ம.க .கவுரவ தலைவர் பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    மாவட்ட தலைவர் அல்லிமுத்து தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அரசாங்கம் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் தருமபுரி தேர்தல் பணிக்குழு தலைவர் ஸ்டீல்ஸ் சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி, செந்தில், ராமசுந்தரம், முத்துசாமி, ஜெயகுமார், சிவகுமார், வணங்காமுடி, இமயவர்மன், ராமலிங்கம் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் ஜி.கே. மணி பேசும் போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    கட்சியின் 35-வது ஆண்டு துவக்கவிழா எழுச்சியோடு கொண்டாட வேண்டும். ஆழுகின்றவர்களுக்கு ஆலோசனை வழங்கும் கட்சியாக பாமக உள்ளது என பேசினார்.

    • மேச்சேரி ஒன்றிய பா.ம.க. செயலாளர் துரைராஜ் சுதாகர் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் -பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ளது மேச்சேரி பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் நுழைவுப் பகுதியில் கடந்த 3 மாதங்களாக சாக்கடை நீர் தேங்கி நின்றது. கனரக வாகனங்க ள்செல்லும்போது இருசக்கர வாகனங்களில் செல்வோரின் மீது சாக்கடை வாரி இறைக்கப்படுகிறது. இந்தநிலையில் பல்வேறு முறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ராஜசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில வன்னியர் சங்க செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.மான கார்த்திக் போராட்டத்தை விளக்கிப் பேசினார், மேற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் மேச்சேரி ஒன்றிய பா.ம.க. செயலாளர் துரைராஜ் சுதாகர் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பா.ம.க. சார்பில் கொடியேற்றி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    • முனியாண்டி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மூடுவார் பட்டி ஊராட்சியில் பாட் டாளி மக்கள் கட்சி தலை வர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளையொட்டி கட்சி யின் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    மேலும் நேர்மையான அரசியல் குறித்து விழிப்பு ணர்வு உறுதிமொழி எடுத் துக் கொண்டனர். இதற்கு ஒன்றிய பொருளாளர் ரேவதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட தலைவர் செல்லம் பட்டி முருகன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாவட்ட அமைப்பு செயலா ளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் ஈஸ்வரன், குரு பாலமுருகன், நிர்வாகிகள் நாராயணன், அமரன், முருகன், ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அலங்காநல்லூர் முனி யாண்டி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    • பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
    • அலங்கை ஒன்றிய பெருந்தலைவர் சண்முகவேல் நன்றி கூறினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங் காநல்லூர் அருகே முடுவார் பட்டி ஊராட்சியில் பாட் டாளி மக்கள் கட்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட தலை வர் செல்லம்பட்டி முருகன், மாவட்ட துணைத் தலைவர் ராஜா, அலங்கை ஒன்றிய தலைவர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர் செந் தில்குமார், பொருளாளர் ரேவதி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    மாநில செயற்குழு உறுப் பினர் செல்வம், ஸ்டாலின் வரவேற்றார். செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஈஸ்வ ரன் சிறப்புரையாற்றி னார். இந்த கூட்டத்தில் மது ஒழிப்பு மற்றும் தடை செய் யப்பட்ட போதை பொருட் கள் விநியோகத்தை கட்டுப்ப டுத்த வலியுறுத்தி தீர்மா னங் கள் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் அலங்கை ஒன் றிய பெருந்தலைவர் சண் முகவேல் நன்றி கூறினார்.

    • மது விலக்கு குறித்து பேரணி நடத்த பா.ம.க. மனு அளித்தது
    • மராத்தான் ஓட்டத்திற்கு அனுமதி வழங்குவதை நீதிபதி குறிப்பிட்டார்

    பாட்டாளி மக்கள் கட்சி, தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு கோரி பல வருடங்களாக தமிழ்நாட்டின் ஆளும் கட்சிகளுக்கு கோரிக்கை வைத்து வருகிறது. அக்கட்சியின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக பூரண மதுவிலக்கை நீண்ட காலமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

    தங்களின் கோரிக்கையை மக்களிடம் பிரச்சாரம் செய்ய அக்டோபர் 5-ஆம் தேதி ஒரு மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்த ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் பா.ம.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

    அனுமதி மறுக்கப்பட்டதால் பா.ம.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    பேரணி செல்லும் பாதையில் பிற மதத்தினர் உள்ளனர் என கூறி அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பா.ம.க. மதம் சார்ந்த கட்சி அல்ல என்றும் பா.ம.க. வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இதை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் அரசு தரப்பு வக்கீலிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்.

    அவர் விசாரணையின் போது கேட்டதாவது:

    ஆளும் கட்சியினர் மராத்தான் ஓடவும், நடப்பதற்கும் அனுமதி வழங்குகிறீர்கள்; மதுவுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கினால் என்ன? யாருக்காக காவல்துறை உள்ளது? தமிழ்நாட்டில் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் சோதனைகளை நடத்தினால் அவை மத்திய அரசின் ஏஜென்சிகள் என குற்றம் சாட்டுகிறீர்கள். அப்படி என்றால் தமிழ்நாடு காவல்துறை யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறது? ஆளும் கட்சிக்கு ஆதரவாகத்தான் காவல்துறை செயல்படுமா?

    இவ்வாறு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    விவாதங்களுக்கு பிறகு வழக்கை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    • தி.மு.க. பட்டியல் தயார் செய்து வருகிறது.
    • விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கும்.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி (தி.மு.க.) மரணம் அடைந்ததை தொடர்ந்து இந்த தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் கமிஷனில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் 7-வது கட்டமாக ஜூன் 1-ந் தேதி நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கும் தேர்தல் நடத்தினால் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது.

    அதன் அடிப்படையில் எந்த நேரத்திலும் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அனேகமாக நாளையே (7-ந்தேதி) தேர்தல் தேதிக்கான அட்டவணை வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கனவே அமலில் இருப்பதால் தேர்தலில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களை வைத்து இடைத்தேர்தலை நடத்தி விடலாம் என தேர்தல் ஆணையம் கருதுவதாக தெரிகிறது.

    ஆனால் வெயில் அதிகமாக இருப்பதால் இடைத்தேர்தல் தேதியை முடிவு செய்வதற்கு முன்பு தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவு எடுக்க கூடாது என்றும் அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    மே 4-ந் தேதி முதல் தமிழகத்தில் வெப்ப அலை நிலவி வருவதால் தேர்தல் ஆணையம் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

    இந்த சூழ்நிலையில் எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் கட்சிகள் இடைத் தேர்தலை சந்திக்க தயாராகவே இருப்பதாக தெரிகிறது.

    பா.ம.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணியின்றி இப்போது தனித்தனியாக இருப்பதால் தேர்தலில் தமக்கு சாதகமான நிலை காணப்படுவதாக தி.மு.க. கருதுகிறது. இதனால் இப்போதே யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று தி.மு.க. பட்டியல் தயார் செய்து வருகிறது.

    இந்த தேர்தலில் தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் தலைமையை அணுகி வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெயச் சந்திரன் விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி, மறைந்த புகழேந்தி எம்.எல்.ஏ.வின் மருமகள் பிரசன்னா தேவி (கோலியனூர் முன்னாள் சேர்மன்) ஆகியோர் `சீட்' பெறுவதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர்.

    அ.தி.மு.க.வில் ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.எம். பன்னீர், முன்னாள் பொதுக் குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன் உள்பட நிர்வாகிகள் போட்டியிட ஆர்வம் காட்டி அ.தி.மு.க. மேலிடத்தை அணுகி வருகின்றனர்.

    பா.ம.க.வில் மாவட்டத் தலைவர் புகழேந்திக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பகுதியில் ஏற்கனவே பிரபலமான முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத் உள்ளார்.

    இவர் பா.ஜனதா கட்சி யில் இருப்பதால் பா.ம.க. ஆதரவுடன் அவர் களம் காணுவாரா? என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை அறிவிப்பதை பொறுத்து விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கும்.

    • விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட்டு வெற்றி பெறும்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக, தி.மு.க.,வை சேர்ந்த புகழேந்தி இருந்தார். இவர் உடல் நலக்குறைவால் ஏப்ரல் 6-ந் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடந்தது. பாராளுமன்ற தேர்தல் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. இறுதி கட்ட தேர்தலின் போது, விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிட பா.ம.க., விரும்புவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் தெரிவித்தார். அதே சமயம் அந்த தொகுதியில் போட்டியிட, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பா.ஜ.க.வும் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க.-அ.தி.மு.க.வை அடுத்து பா.ஜ.க. பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று பலம் வாய்ந்த கூட்டணி உருவானது. எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட்டு வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. 10 தொகுதிகளில் போட்டியிட்டது.
    • பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் தொடர்ந்து இருக்கும்.

    சென்னை:

    தேர்தலுக்கு தேர்தல் பா.ம.க. போடும் கூட்டணி கணக்கு அந்த கட்சிக்கு சில நேரங்களில் சாதகமாக அமைந்தாலும் பல நேரங்களில் பாதகமாக அமைந்து முதலுக்கே மோசம்போன கதையில் கட்சிக்கே சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. 10 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் தர்மபுரி தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் மற்ற கட்சிகளுக்கு போட்டியாகவே பா.ம.க. இல்லை.

    வாக்கு வங்கி அதிகம் உள்ள வடமாவட்ட தொகுதி களில் கூட பா.ம.க.வால் சாதிக்க முடியவில்லை. திண்டுக்கல் தவிர 9 தொகுதி களும் பா.ம.க.வுக்கு செல் வாக்கு மிக்க தொகுதிகள். இதில் காஞ்சீபுரத்தில் பா.ம.க. வேட்பாளர் ஜோதி 1 லட்சத்து 64 ஆயிரத்து 931 வாக்குகள் பெற்று 3-வது இடத்துக்கு சென்றார்.

    அரக்கோணம், ஆரணி, கடலூர் தொகுதிகளில் 3-வது இடத்துக்கு தள்ளப் பட்டது. கள்ளக்குறிச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சியை விட குறைவான வாக்குகளை பெற்று 4-ம் இடத்தை பெற்றது.

    10 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க. 18 லட்சத்து 77 ஆயிரத்து 490 வாக்குகளை பெற்றது. போட்டியிட்ட 10 தொகுதி களில் 6 தொகுதிகளில் பா.ம.க. டெபாசிட்டையும் இழந்தது. அதே போல் வாக்கு வங்கியும் 4.33 சதவீதமாக குறைந்துள்ளது.

    1989-ம் ஆண்டு முதல் முறையாக பா.ம.க. பாராளு மன்ற தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட்டது. தனித்து போட்டியிட்டு 5.82 சதவீதம் வாக்குகளை பெற்று யானை சின்னத்தையும் தக்க வைத்தது. அதன் பிறகு நடந்த தேர்தல்களில் வாக்கு சதவீதத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களால் யானை சின்னத்தை இழந்தது.

    2016 சட்டமன்ற தேர்த லில் தனித்து போட்டியிட்டது. 2019 பாராளுமன்ற தேர்தலி லும், 2021 சட்டமன்ற தேர்த லிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது. இதில் 2019 பாராளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆனாலும் 5.42 சதவீத வாக்கு வங்கியை தக்க வைத்து கொண்டது.

    கடந்த சட்டமன்ற தேர்த லில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிக ளில் வென்றது. ஆனால் வாக்கு சதவீதம் 3.8 சத வீதமாக குறைந்தது. இதற்கு காரணம் தேர்தலுக்கு தேர் தல் கூட்டணி மாறுவ தால் வன்னியர் சமூக ஓட்டு களும் முழுமையாக கிடைக்கவில்லை என்கி றார்கள்.

    இந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர் தலில் யாருடன் கூட்டணி என்று எதிர்பார்த்த நிலையில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது.

    கூட்டணி விசயத்தில் அ.தி.மு.க.வுடன் செல்ல வேண்டும் என்ற கருத்து பா.ம.க.வினரிடம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏற்பட்ட வெறுப் பில்தான் சொந்த கட்சியினர் வாக்குகளே முழு அளவில் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் ஏற்க னவே மாநில கட்சி அங்கீகா ரத்தை இழந்த நிலையில் மாம்பழம் சின்னத்தையும் இழக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் பாலு கூறியதாவது:-

    பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் தொடர்ந்து இருக்கும். தேர்தல் ஆணையத்தின் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு விதி 1968-பத்தி 10-ல் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில் தெளிவாக தெரிவித்துள்ளது.

    பதிவாகும் மொத்த வாக்குகளில் ஒரு சதவீதத்துக்கும் குறையாமல் வாக்குகளை பெற்றிருந்தால் அந்த கட்சி முன்பு பயன்படுத்திய சின்னத்தை தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதியோடு தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள எந்த தடையும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×