search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    சங்கரன்கோவிலில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • வெங்கடாசலபுரத்தில் பகுதி நேர ரேசன்கடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    • ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தேரடி திடலில் தென்காசி வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அய்யாபுரம் போலீஸ் நிலையத்தில் பா.ம.க. பிரமுகர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும். திருவேங்கடம் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தில் பகுதி நேர ரேசன்கடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் டாக்டர் சீதாராமன் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், துணைச்செயலாளர் பால் நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில் நகர தலைவர் கருப்பசாமி வரவேற்று பேசினார். மாநில துணைத்தலைவர்கள் அய்யம்பெருமாள், சேது ஹரிஹரன், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, மாவட்ட துணைச்செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் மேரி புஷ்பலதா, விவசாய சங்க செயலாளர் மதிராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்கரன்கோவில் நகர செயலாளர் வேலுச்சாமி நன்றி கூறினார்.

    Next Story
    ×