search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness Pledge"

    • பா.ம.க. சார்பில் கொடியேற்றி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    • முனியாண்டி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மூடுவார் பட்டி ஊராட்சியில் பாட் டாளி மக்கள் கட்சி தலை வர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளையொட்டி கட்சி யின் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    மேலும் நேர்மையான அரசியல் குறித்து விழிப்பு ணர்வு உறுதிமொழி எடுத் துக் கொண்டனர். இதற்கு ஒன்றிய பொருளாளர் ரேவதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட தலைவர் செல்லம் பட்டி முருகன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாவட்ட அமைப்பு செயலா ளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் ஈஸ்வரன், குரு பாலமுருகன், நிர்வாகிகள் நாராயணன், அமரன், முருகன், ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அலங்காநல்லூர் முனி யாண்டி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    • தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின பேரணி நடத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மருத்துவர் பிரேமலதா மாநில விருது பெற்றதை நினைவு கூர்ந்தார்.

    தென்காசி:

    தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் டிசம்பர் 1-ந் தேதி உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் பிரேமலதா தலைமையில் உலக எய்ட்ஸ் தின பேரணி நடத்தப்பட்டது. இதில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதி மொழியும் ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மருத்துவ மனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிஅவசர சிகிச்சை பிரிவு பேராசிரியர் அமலன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா பேசுகையில், தன் பணியின் போது அதிக எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை செய்தமைக்காக மாநில விருது பெற்றதை நினைவு கூர்ந்தார். அதேபோல் தென்காசி மாவட்டத்திலும் அனைத்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் அனைத்து விதமான சிகிச்சையும் தங்கு தடையில்லாமல் கிடைக்க அனைத்து மருத்துவர்களும் பணியாளர்களும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கூறுகையில், தென்காசி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் அனைத்து நோயாளிகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை செய்து வருகிறோம். முறையான பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடித்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கு அனைத்து சிகிச்சைகளும் செய்ய தென்காசி ஆஸ்பத்திரி தயாராக இருக்கிறது எனவும் கூறினார். விழாவில் ஏ.ஆர்.டி. வட்டார மருத்துவ அதிகாரி மருத்துவர் விஜயகுமார் , நோடல் ஆபீசர் கார்த்திக் அறிவுடை நம்பி ,அனைத்து துறை மருத்துவர்கள், நம்பிக்கை மையம் மாவட்ட பொறுப்பாளர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அனைத்து பொது மக்களுக்கும் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் கொடு க்கப்பட்டது. ஏற்பாடு களை தென்காசி அரசு ஆஸ்பத்திரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் செய்திருந்தனர்.

    ×