search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BMC"

    • பா.ம.க. சார்பில் கொடியேற்றி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    • முனியாண்டி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மூடுவார் பட்டி ஊராட்சியில் பாட் டாளி மக்கள் கட்சி தலை வர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளையொட்டி கட்சி யின் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    மேலும் நேர்மையான அரசியல் குறித்து விழிப்பு ணர்வு உறுதிமொழி எடுத் துக் கொண்டனர். இதற்கு ஒன்றிய பொருளாளர் ரேவதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட தலைவர் செல்லம் பட்டி முருகன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாவட்ட அமைப்பு செயலா ளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் ஈஸ்வரன், குரு பாலமுருகன், நிர்வாகிகள் நாராயணன், அமரன், முருகன், ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அலங்காநல்லூர் முனி யாண்டி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    • மேச்சேரி ஒன்றிய பா.ம.க. செயலாளர் துரைராஜ் சுதாகர் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் -பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ளது மேச்சேரி பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் நுழைவுப் பகுதியில் கடந்த 3 மாதங்களாக சாக்கடை நீர் தேங்கி நின்றது. கனரக வாகனங்க ள்செல்லும்போது இருசக்கர வாகனங்களில் செல்வோரின் மீது சாக்கடை வாரி இறைக்கப்படுகிறது. இந்தநிலையில் பல்வேறு முறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ராஜசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில வன்னியர் சங்க செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.மான கார்த்திக் போராட்டத்தை விளக்கிப் பேசினார், மேற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் மேச்சேரி ஒன்றிய பா.ம.க. செயலாளர் துரைராஜ் சுதாகர் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×