search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electricity tariff hike"

    • பல ஆண்டு கட்டணத்தை உடனடியாக ரத்து செய்யவும் மற்றும் 2ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும்.
    • அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வால் கடந்த சில மாதங்களில் பல நூறு குறு, சிறுதொழில்கள் முடங்கி விட்டன. பலர் நிறுவனத்தையே மூடிவிட்டு சென்று விட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட சிறு குறு தொழில் சங்கம் சார்பில் நாமக்கல் கலெக்டரிம் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி முதல் தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு, உச்ச நேர மின் கட்டண அறிவிப்பு மற்றும் நிலைக் கட்டண உயர்வு போன்ற கோரிக்கைகளை நீக்க வலியுறுத்தி தமிழக தொழிற்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டமாக போராட்டங்கள் நடத்தி எங்களது ஆட்சேபனைகளை தெரிவித்தோம்.

    பல ஆண்டு கட்டணத்தை உடனடியாக ரத்து செய்யவும் மற்றும் 2ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும்.

    அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வால் கடந்த சில மாதங்களில் பல நூறு குறு, சிறுதொழில்கள் முடங்கி விட்டன. பலர் நிறுவனத்தையே மூடிவிட்டு சென்று விட்டனர். குறு, சிறுதொழில்களை நம்பி தொழில்முனைவோர்களும், பல லட்சம் தொழிலாளர்களும் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் மின்சாரத்தை நம்பியே உள்ளது. சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்கு பெருமளவில் வேலை வாய்ப்பை வழங்கி வரும் சிறுதொழில்கள் மின் கட்டண உயர்வால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீதான மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனு கொடுக்கும் போது மாவட்ட சிறு, குறு தொழில் சங்க தலைவர் இளங்கோ, லாரி பாடி பில்டர் சங்க தலைவர் தங்கவேல், தேங்காய் நார் சங்க தலைவர் குழந்தைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 36 அமைப்பினர் ஆதரவு தெரிவித்து ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.
    • வருகிற 16-ந் தேதி தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.

    பல்லடம்:

    தொழில் நிறுவனங்களுக்கான 430 சதவீதம் உயர்த்திய மின்சாரநிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பீக்ஹவர் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். 3பி-யில் இருந்து 3 ஏ1 நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு தொழில் நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் 25-ந்தேதி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் பனியன் தொழில் சார்ந்த தொழில் அமைப்பினர் மற்றும் சிறு, குறு தொழில் அமைப்பினர் என 36 அமைப்பினர் ஆதரவு தெரிவித்து ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

    இந்நிலையில் இன்று தொழில்துறையின் நிலை குறித்து அரசிடம் தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தொழில் துறையினர் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

    இதில் பங்கேற்ற தொழில் துறையினர் பலர் கருப்பு பேட்ஜ் மற்றும் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். மேலும் தொழில் பாதிப்பை அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் அவரவர் நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றினர். ஒவ்வொரு தொழில் சங்கத்தில் இருந்து குறைந்தபட்சம் 50 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    ஒவ்வொரு அமைப்பினரும் மின்கட்டண பாதிப்பு குறித்து மனுவில் கையெழுத்திட்டு கலெக்டரிடம் வழங்கினர். முன்னதாக அனைத்து அமைப்பினரும் ஒன்று சேர்ந்து திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தின் முன் திரண்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மேலும் மனுக்களை முதல்-அமைச்சருக்கு அனுப்ப இருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் கோபி பழனியப்பன் கூறும்போது, மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி இன்று தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக தொழில்துறையினர் கருப்பு பேட்ஜ் அணிந்து அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மனு நீதிநாள் முகாமில் கலெக்டரை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக வருகிற 16-ந் தேதி தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். இதில் திரளானவர்கள் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

    போராட்டத்தையொட்டி திருப்பூர், பல்லடம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. 

    • 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் அனைத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது.
    • தொழில் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டியவர்கள் தெருவில் வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    கோவை:

    கோவை இடையர்பாளையம், கணபதி, குறிச்சி, சிட்கோ, காளப்பட்டி, நீலாம்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் கிரைண்டர், மிக்சி உதிரி பாகங்கள், வாகன உதிரிபா கங்கள் உள்பட பல்வேறு உதிரி பாகங்கள் தயாரிக்கக்கூடிய 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த தொழிற்சாலைகளில் இருந்து தயாராகும் பொருட்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மூலப்பொருட்கள் விலை உயர்வு, பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பல இன்னல்களை தொழில் துறையினர் சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மின் கட்டணமும் உயர்ந்துள்ளதால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவை மாவட்ட தொழில்துறையினர் தொடர்ந்து பல்வேறு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    சமீபத்தில் கூட சென்னை சென்று, அமைச்சர்களை சந்தித்து பேசினர். ஆனாலும் தொழில் முனைவோரின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இதையடுத்து மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடந்தது. கோவை இடைய ர்பாளையம், கணபதி, குறிச்சி, சிட்கோ, காளப்பட்டி, நீலாம்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் அனைத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. அங்கு பணியாற்றியவர்களும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.

    மேலும் கோவை மாவட்ட தொழில் முனைவோர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்தபடி ஊர்வலமாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு கலெக்டரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    இதேபோல் கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்களிலும் இன்று கருப்பு கொடியேற்றப்பட்டு போராட்டம் நடந்தது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு இன்று 50 ஆயிரம் தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. அன்று மின்தடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம், இன்று மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்று வருகிறது.

    நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். மேற்கூரை சூரியஒளி ஆற்றல் உற்பத்திற்கு நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

    12 கிலோ வாட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 3பி-யிலிருந்து 3ஏ1 பிரிவின் கீழ் மாற்றுதல், 2 ஆண்டுகளுக்கு மின் கட்டண உயர்வை கைவி டுதல் என்பன 5 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இதில் 12 கிலோவாட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 3பியில் இருந்து 3ஏ1 பிரிவின் கீழ் மாற்றுதல் என்ற ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் அரசு நிறைவேற்றியுள்ளது.

    மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி எங்கள் கூட்டமைப்பில் உள்ள 300-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் சார்பில் இன்று கோவை உள்பட தமிழகம் முழுவதும் தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

    தொழில் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டியவர்கள் தெருவில் வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அடுத்த கட்டமாக சென்னையில் வருகிற 16-ந் தேதி 25 ஆயிரம் தொழில் முனைவோர் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரத போரா ட்டம் நடத்தப்படும். எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நாங்கள் அந்த கட்டண உயர்வையே ரத்து செய்ய அரசியிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
    • மீண்டும் கட்டண உயர்வு வணிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் அ.முத்துக்குமார், தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.அருண்குமார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் கட்டண உயர்வை அறிவித்து உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அந்த கட்டண உயர்வினால் வணிகர்கள் இருமடங்கு மின்சார கட்டணம் செலுத்தும் நிலைக்கு ஆளானார்கள். நாங்கள் அந்த கட்டண உயர்வையே ரத்து செய்ய அரசியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதற்குள்ளாகவே மீண்டும் இந்த கட்டண உயர்வு வணிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

    ஏற்கனவே கார்ப்ரேட் கடைகள் மற்றும் ஆன்லைன் வணிக நிறுவனங்களால் பெருமளவு பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் சிதைந்துள்ள நிலையில் வணிகர்களை காக்க வேண்டிய அரசே அவர்களை தொடர் கட்டண உயர்வினால் அழிக்க நினைப்பது முறையற்றது.

    இந்த கட்டண உயர்வினை திரும்ப பெற கோரியும் ஏற்கனவே அமல்படுத்தப் பட்ட கட்டண உயர்வை ரத்து செய்ய கோரியும் வருகிற 21-ந்தேதி (புதன் கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் மாநில தலைவர் அ.முத்துக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். எனவே வணிகர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு நம்முடைய எதிர்ப்பினை அரசுக்கு தெரிவித்து மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் கடந்த ஆண்டு மின்சார கட்ட ணத்தை உயர்த்தியதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • தமிழக பொதுமக்களை பாதிக்கும் இந்த கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின்சார கட்டண உயர்வை கண்டித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. விழுப்புரம் மத்திய மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் தசரதன், ராஜே ந்திரன் தலைமையிலான காங்கிரசார் அளித்த மனுவில் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஆண்டு மின்சார கட்ட ணத்தை உயர்த்தியதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின்சார கட்டணத்தை உயர்த்தியிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனா தாக்கத்தில் இருந்து தற்போதுதான் மீண்டு வரும் நிலையில் வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின்சார கட்டணம் உயர்த்த ப்பட்டதால் மீண்டும் பாதிப்படையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்படை வார்கள். எனவே தமிழக பொதுமக்களை பாதிக்கும் இந்த கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதில் வடக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன், விழுப்புரம் நகரத் தலைவர் ஹரிபாபு, நிர்வாகிகள் ஜெயமூர்த்தி, வி. ஆர். பி. பள்ளி தாளாளர் சோழன், தண்டபாணி, சங்கர் பிரகாஷ்,கேபிள் பார்த்திபன், இசைமாறன், திருமலை ,செல்வ முத்துக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
    • மின்சாரக் கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை சொல்லிமாளாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நுகர்வோர் விலைக்குறியீடு உயர்வின் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருப்பதால், அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 10 மாதங்களில் மீண்டும் ஒரு மின்கட்டண உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.

    மின்சாரக் கட்டண உயர் வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை சொல்லிமாளாது. மின்சாரக் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள முடியாமல் ஏராளமான சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அதே போல், விசைத்தறி உரிமையாளர்களும் மின் கட்டண உயர்வின் தாக்கங்களை தாங்க முடியாமல் தொழிலை விட்டு வெளி யேறிவிட்டனர். சிறு வணிகர்களுக்கு கிடைக்கும் லாபத்தில் பெரும்பகுதி மின் கட்டணம் செலுத்துவதற்கே செலவாகி விடுகிறது. இத்தகைய சூழலில் மின்சாரக் கட்டணம் மீண்டும் ஒருமுறை உயர்த்தப்பட்டால், வணிகர்கள், சிறு, குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவரும் மீள முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்வார்கள்.

    அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் 90 சதவீத மக்களின் வருமானம் ஆண்டுக்கு 2 சதவீதம் கூட உயருவதில்லை. அப்படிப்பட்ட மக்களால் 4.70 சதவீத மின்கட்டண உயர்வை சமாளிக்க முடியாது. தமிழ்நாட்டின் வரலாற்றில் 10 மாதங்களில் இரண்டாவது முறையாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது இதுவரை நிகழ்ந்ததில்லை.

    எனவே, மின்சாரக் கட்டணத்தை ஜூலை மாதம் முதல் உயர்த்தும் முடிவை மின்சார வாரியம் கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • மின் கட்டண உயர்வை கண்டித்து கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் வருகிற 20-ந் தேதி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடக்கிறது.
    • அரசு கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டுமென கப்பலூர் தொழிலாளர்கள் சிட்கோ சங்கத்தலைவர் ரகுநாதராஜா தெரிவித்துள்ளார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் சிட்கோ தொழிற்பேட்டை இயங்கி வருகிறது. பல ஏக்கரில் உள்ள இந்த தொழிற் பேட்டையில் 500-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் பொருட்களை உற்பத்தி செய்து அங்கிருந்து விற்ப னைக்கு அனுப்பி வைக்கின்றன. இந்த சிட்கோ மூலம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் அண்மையில் நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் போது மாநிலம் முழுவதும் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் நிலங்களை ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி குத்தகைக்கு விடாமல் புதிதாக 99 ஆண்டுகளுக்கு குத்தகை அல்லது வாடகைக்கு விட முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    மேலும் சிட்கோவில் இயங்கும் தொழில் நிறுவனங்களுக்கான நிலையான மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கண்ட 2 முடிவுகளுக்கும் சிட்கோ தொழிலதிபர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேற்கண்ட உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கையும் வைக்கப் பட்டது. ஆனால் தமிழக அரசு இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க வில்லை.

    இதனை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) சிட்கோ தொழிற்பேட்டைகளில் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கப்பலூரில் உள்ள சிட்கோ தொழிற் பேட்டையிலும் உற்பத்தி நிறுத்த போராட்டம் அன்றைய நாளில் நடைபெறுகிறது. அப்போது கோரிக்கைகள் தொடர்பாக மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப் பட்டுள்ளது.

    எனவே அரசு கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டுமென கப்பலூர் தொழிலாளர்கள் சிட்கோ சங்கத்தலைவர் ரகுநாதராஜா தெரிவித்துள்ளார்.

    • மதுரை சோழவந்தான், வாடிப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், வாடிப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசியதாவது;-

    தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வால் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 8 ஆண்டுகள் மின் கட்டணம் உயர்வு இல்லை, சொத்து உயர்வு இல்லை. அப்போது மத்திய அரசு நிர்பந்தம் செய்து கூட மக்கள் மீது விலைவாசி ஏற்றத்தை சுமத்தவில்லை.

    தமிழக மக்களின் வாழ்க்கையை உயர்த்திட மக்கள் வாக்களித்தால், இன்றைக்கு மக்கள் மீது விலைவாசி உயர்வை இந்த அரசு சுமத்தி உள்ளது. எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்தபோது அங்கு அண்ணாயிசம் இல்லாத தால், அ.தி.மு.க.வை தொடங்கினார். ஆனால் இன்றைக்கு மு.க.ஸ்டாலின் எம்.ஜி.ஆர்.யிசத்தை கையில் எடுத்து எம்.ஜி.ஆர். பெரியப்பா என்று கூறு கிறார் .

    தி.மு.க.வில் கருணா நிதியை முதலமைச்சராக்க எம்.ஜி.ஆர். உழைத்தார். ஆனால் அவரை கட்சியை விட்டு நீக்கினார்கள். உழைத்தவருக்கு அங்கு இடம் இல்லை. மக்களும் அவரை தூக்கி வைத்துக் கொண்டதால் இதன் மூலம் அ.தி.மு.க.வை தொடங்கினார். 51 ஆண்டுகாலம் அ.தி.மு.க. மக்களுக்காக பொது சேவையில் தன்னை முழுமையாக அர்ப்ப ணித்துக் கொண்டது.

    அண்ணாயிசம், அம்மாயிசம், எம்.ஜி.ஆர்.யிசம் ஆகியவை அ.தி.மு.க.விற்கு தான் சொந்தம். மு.க.ஸ்டாலின் பேச்சை எந்த தொண்டனும் நம்ப மாட்டார்கள். எம்.ஜி.ஆர். கருணாநிதிக்காக உழைத்தார். அவரை கசக்கி எறிந்ததை தாய்மார்கள் இன்னும் மறக்க மாட்டார்கள். இன்றைக்கு எம்.ஜி.ஆர்.யிசத்தை கையில் எடுத்து தி.மு.க. செல்வாக்கு காணாமல் போய்விட்டது என்பதற்கு இன்றைக்கு மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார்.தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மழையே பெய்யதாலும் கூட எடப்பாடி கொடுத்த ஒரு உத்தரவுக்காக தொண்டர்கள் குவிந்துள்ள னர். இந்த கூட்டமே விரைவில் அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக வர அத்தாட்சியாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • விசைத்தறியாளர்கள் ,சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,மங்கலத்தை அடுத்த சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள அம்மன் கலையரங்கத்தில் மங்கலம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு மங்கலம் சங்க தலைவர் ஏ.பி.வேலுச்சாமி தலைமை தாங்கினார்.துணைத்தலைவர் சுல்தான்பேட்டை ஆர்.கோபால் ,மங்கலம் சங்க செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் விசைத்தறியாளர்கள் ,சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி யை இன்னும் இரண்டு தினங்களில் நேரில் சந்தித்து சாதா விசைத்தறிக்கு உயர்த்திய மின் கட்டணத்தை குறைக்க முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்செல்லக்கோரியும், உடனடியாக மின்கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . மின் கட்டணம் செலுத்தாத விசைத்தறி கூடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் விசைத்தறி கூட்டுக்கமிட்டி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • சர்வதேச உரிமைகள் கழகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது
    • மாநகராட்சி எல்லை அருகே உள்ள சுங்கச்சாவடியை மாற்ற வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் சர்வதேச உரிமைகள் கழகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் டி.கே.அசோக்குமார் தலைமை தாங்கினார். நிறுவனர் தலைவர் எஸ்.சுரேஷ்கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    தீர்மானங்கள்

    கூட்டத்தில் தூத்துக்குடி சுற்று வட்டாரத்தில் கடல்வளம், நிலத்தடிநீரை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீது மாசுகட்டுப்பாட்டு வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்டத்தில் போதை பொருள் பழக்கம் அதிகரித்து உள்ளது. இதனை தடுக்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி எல்லை அருகே உள்ள சுங்கச்சாவடியை மாற்ற வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் காளிராஜ் பாண்டியன், இணை பொதுச் செயலாளர் சிவா, தலைமை கழக செயலாளர் செந்தில்குமார், மாநில அமைப்பாளர் செந்தில், மாநில துணை பொதுச் செயலாளர்கள் தீனதயாளன், சாமுவேல் பாண்டித்துரை, தூத்துக்குடி மாவட்ட தலைவர் பிரிசில்லா, மாவட்ட துணைத்தலைவர்கள் கோடீசுவரன், பாலசுப்பிரமணி, மீனவர் அணி பாஸ்கர், ஆன்மிக அணி மாநில துணை செயலாளர் சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக சுரேஷ் கண்ணன் நிருபர்களிடம் கூறும் போது, கொரோனா முடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆகையால் மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும். உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தத்துக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும், தமிழகத்தில் சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டும் என்று கூறினார்.

    • பகண்டைகூட்டுரோட்டில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • பொய்யாக வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சியை பிடித்துள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டு்ரோட்டில் அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.செந்தில்குமார் முன்னாள் எம்.பி., காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. க்கள் பிரபு, அழகுவேலுபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கதிர் தண்டபாணி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பொய்யாக வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு தி.மு.க. கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற ப்படவில்லை. குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், மகளிருக்கு விலையில்லா ஸ்கூட்டர் போன்ற பல்வேறு திட்டங்களை தி.மு.க.அரசு ரத்து செய்துள்ளது.

    மின்கட்டணத்தை குறைப்பதாகவும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்கப்படும் மின் கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி ஆட்சியைப் பிடித்த தி.மு.க. அரசு தற்போது மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 500 முதல் 1000 ரூபாய் வரை மின் கட்டணம் உயரும். இதுதவிர விலைவாசியும், பஸ் கட்டணமும் உயரபோகிறது. ஆகவே உடனடியாக மக்களை வஞ்சிக்கும் மின்கட்டண உயர்வை தி.மு.க. அரசு வாபஸ் பெற வேண்டும் என மாவட்ட செயலாளர் குமரகுரு பேசினர். முன்னதாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் அருணகிரி, துரைராஜ், தேவேந்திரன், நகர செயலாளர் பாபு மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கவுன்சிலர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    • தி.மு.க. அரசு மக்களை திணற வைக்கிறது.
    • கைகளில் சிமினி விளக்கேந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    மின்கட்டண உயர்வை கண்டித்துஎஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சிமினி விளக்கேந்தி திருப்பூர் மாநகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பசீர் அகமது தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாதிக் பாஷா வரவேற்றார். தி.மு.க. அரசின் மக்களை திணற வைக்கும் மின்கட்டண உயர்வை கண்டித்தும், மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்தக்கோரியும், மின்கட்டண உயர்வு முடிவை கைவிடக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பேச்சாளர் சேக் அலாவுதீன் கோரிக்கை குறித்து பேசினார்.மாவட்ட பொதுச்செயலாளர் இதாயத்துல்லா, தொழிற்சங்க தலைவர் முஜிபுர் ரகுமான், பெண்கள் அணி மாவட்ட தலைவர் பாத்திமா முஸ்தபா, மாவட்ட செயலாளர் அன்வர் பாஷா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கைகளில் சிமினி விளக்கேந்தி கலந்து கொண்டனர்.

    ×