என் மலர்
நீங்கள் தேடியது "letter"
- தற்கொலை செய்தவர்கள் எழுதிய கடிதம் சிக்கியது.
- கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை.
நெல்லை:
சென்னை ராயபுரம் துரை தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் விஜயன்(வயது 26). சென்னை திருவொற்றியூர் ஒண்டிக்குப்பத்தை சேர்ந்த வர் காந்தி. இவரது மகள் பவித்ரா(24).
இவர்கள் 2 பேரும் காதலித்து வந்த நிலையில் அவர்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ள னர். இதனால் கடந்த 1 வாரத்திற்கு முன்பு 2 பேரும் தங்களது வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். பின்னர் விஜயனின் நண்பர் வீட்டில் 2 பேரும் தங்கியிருந்த நிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து, புதுமண தம்பதி சென்னையில் இருந்து கடந்த 7-ந்தேதி நெல்லைக்கு வந்துள்ளனர். பாளையங்கோட்டை கோட்டூர் ரோடு பார்வதி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினர். இந்நிலையில் நேற்று மதியம் வரை அவரது வீட்டு கதவு திறக்கப்படவில்லை.
சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னலை எட்டிப்பார்த்த போது, அவர்கள் தூக்குப் போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. தகவல் அறிந்த பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேர் உடலையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இன்று காலை நெல்லை வந்து சேர்ந்தனர். இதனிடையே புதுமண தம்பதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்ததில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.
தற்கொலை செய்து கொண்ட விஜயனும், பவித்ராவும் உறவு முறையில் அண்ணன்-தங்கை ஆவர். பட்டதாரிகளான இவர்கள் 2 பேரும் அடிக்கடி ஒருவர் வீட்டுக்கு ஒருவர் சென்று வந்த நிலையில் செல்போனில் பேச்சை தொடர்ந்தனர். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
இந்த விஷயம் அவர்களது பெற்றோருக்கு தெரிய வரவே, இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும் 2 பேரும் காதலை கைவிட மறுத்து யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தனியாக வாழ்வதற்காக நெல்லைக்கு வந்த நிலையில் வீடு கொடுக்க யாரும் முன்வரவில்லை.
இதையடுத்து தனது உறவினர் ஒருவரின் மூலமாக விஜயனுக்கு பாளை கோட்டூரில் வீடு கிடைத்தது. அந்த வீட்டுக்கு முன்பணமாக ரூ.15 ஆயிரம் செலுத்திவிட்டு 2 பேரும் அங்கு வசித்து வந்தனர்.
நெல்லையில் உள்ள ஒரு கார் நிறுவனத்தில் இன்று முதல் விஜயன் வேலைக்கு செல்வதற்காக முடிவு செய்திருந்த நிலையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது தெரியவந்தது.
இதனிடையே அவர்களது அறையில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில், எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்களது உடல்களை பெற்றோரிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோல்டன் டிக்கெட் வாங்கியவன் என்ற உரிமையில் இதை செய்தேன்
- பாதுகாப்பு அதிகாரிகளை தாண்டி ஒரு மரத்தின் அருகில் சென்றேன்.
பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமாடோ [ZOMATO] ஏற்பாடு செய்த பிரையன் ஆடம்ஸ் கச்சேரி சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கழிவறை வசதி இல்லாததால் தனது கால் சட்டையிலேயே சிறுநீர் கழித்ததாக நீரழிவு நோயாளி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ZOMATO சிஇஓ தீபிந்தர் கோயலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மீடியா மற்றும் பொழுதுபோக்கு நிபுணரான ஷெல்டன் அரன்ஜோ தனது கடிதத்தில், பிரையன் ஆடம்ஸ் கச்சேரியில் சிறுநீர் கழிக்கதான் நான் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கினேன் போலும்.

பாம்பே கன்வென்ஷன் & எக்ஸிபிஷன் சென்டரின் குளிரூட்டப்பட்ட அரை எனக்கு சிறுநீரை வரவழைத்தது. அதற்காக நீண்ட அரிசில் கழிவறைக்கு முன் காத்துக்கிடந்தேன். ஆனால் வரிசை நகர்வதாக இல்லை. மற்றொரு வரிசைக்கு மாறினேன்.
ஆனால் அதுவே OTHER CATAGORY கழிவறை, எனவே அங்கு நான் செல்ல முடியாது. எனவே கோல்டன் டிக்கெட் வாங்கியவன் என்ற உரிமையில் பாதுகாப்பு அதிகாரிகளை நைசாக தாண்டி ஒரு மரத்தின் அருகில் எனது அவஸ்த்தையை இறக்கி வைத்தேன்.
ஆனால் அதற்கு முன்னதாகவே எனது சிறுநீர் பேண்டில் இறங்கி விட்டது. நான் ஒரு சர்க்கரை நோயாளி, எனவே இதை சொல்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை,1000 விருந்தினர்களுக்கு மொத்தமே அங்கு 3 கழிவறைகள் ஒதுக்கிய நீங்கள் தான் வெட்கப்பட வேண்டும் என்று அவர் தனது திறந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

- ப. சிதம்பரம் கையெழுத்திட்டதை கார்கே மறந்து விட்டார்போலும்.
- இரட்டை என்ஜின் NDA அரசாங்கங்களின் ஸ்திரத்தன்மையின் மீது மக்கள் நம்பிக்கை வைக்கின்றனர்.
மணிப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் கடத்தி கொல்லப்பட்ட பின்னர் அங்கு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த வாரம் முதலே அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படை திணறி வருகிறது. மத்தியிலிருந்து கூடுதலாக ஆயுதக் காவல் படையினர் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் பாஜக கலவரத்தையே விரும்புவதாக விமர்சித்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மணிப்பூர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கார்கேவுக்கு பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மூன்று பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், 20 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளூர் பிரச்சனைகளை கையாள்வதில் காங்கிரஸ் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மணிப்பூர் இன்னமும் மீளவில்லை.
ஆனால் மத்திய மாநில பாஜக அரசு மணிப்பூர் வன்முறை தொடங்கியது முதல் நிலைமையை கட்டுப்படுத்தவும், மக்களை பாதுகாக்கவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிநாட்டு போராளிகளின் சட்டவிரோத குடியேற்றத்தைக் காங்கிரஸ் அரசு சட்டப்பூர்வமாக்கியது. இதற்கான ஒப்பந்தங்களில் அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கையெழுத்திட்டதை கார்கே மறந்து விட்டார்போலும்.
இந்த அறியப்பட்ட போராளித் தலைவர்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக நாட்டிலிருந்து தப்பி ஓடுகிறார்கள். உங்கள் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக தோல்வியே அமைதியை அழித்து, மணிப்பூரைப் பின்னோக்கி தள்ளியுள்ளது.
அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட வேண்டும் என்று போராளிக் குழுக்கள் முயல்வதற்கு இதுவே காரணம். காங்கிரஸைப் போலல்லாமல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இதை எந்த வகையிலும் அனுமதிக்காது.

கார்கேவின் குற்றச்சாட்டுத் தவறான, பொய்யான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒன்றாகும் மோடி அரசாங்கத்தின் கீழ் பொருளாதாரம், பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி என ஒவ்வொரு துறையிலும் வடகிழக்கு பகுதி முழுமையான மாற்றத்தைக் கண்டுள்ளது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பொய்யான வாக்குறுதிகளை புறக்கணித்து இரட்டை என்ஜின் NDA அரசாங்கங்களின் ஸ்திரத்தன்மையின் மீது மக்கள் நம்பிக்கை வைக்கின்றனர்.
ஆனால் இந்த முன்னேற்றங்களைப் புறக்கணித்து, நீங்களும் உங்கள் கட்சியும் வடக்கு கிழக்கையும் அதன் மக்களையும் அரசியல் லாபம் ஈட்டவும், கேவலமான அரசியலுக்கும் பயன்படுத்துகிறீர்கள் என்று விமர்சித்துள்ளார். இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள கார்கே, நட்டாவின் கடிதம் முழுக்க முழுக்க பொய்களில் நிறைந்தது என்று தெரிவித்துள்ளார்.
- 39 டாஸ்மாக் கடைகளை ரெயில்வே பாதுகாப்பு படை அடையாளம் கண்டுள்ளது.
- குற்ற சம்பவங்கள் அதிகம் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
சென்னை புறநகர் மின் சார ரெயில் மீது கல்வீச்சு, சிக்னல் சேதம், திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ரெயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களே இதற்கு முக்கிய காரணம் என்று ரெயில்வே பாதுகாப்பு படையின் ஆய்வில் தெரிய வந்தது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தெற்கு ரெயில்வே சார்பில் டாஸ்மாக் நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை கோட்டத்தில் புறநகர் மின்சார ரெயில் நிலையங்களில் இருந்து 10 முதல் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள 39 டாஸ்மாக் கடைகளை ரெயில்வே பாதுகாப்பு படை அடையாளம் கண்டுள்ளது.
இந்த கடைகள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப் பேட்டை, வேலூர் மாவட்டங்களில் உள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பார்களில் மது அருந்திவிட்டு ரெயில் தண்டவாளத்தில் இறந்து கிடக்கின்றனர்.
பெரம்பூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை, கிண்டி, தரமணி, பெருங்குடி, திருவள்ளூர், ஊரப்பாக்கம், பழவந்தாங்கல், குரோம்பேட்டை, அரக்கோணம், இந்து கல்லூரி, ஆவடி உள்ளிட்ட இடங்களில் ரெயில் நிலையங்களுக்கு அருகில் மதுக்கடைகள் அமைந்துள்ளன.
லெவல் கிராசிங் கேட்களுக்கு அருகில் செயல்படும் மதுக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று தெற்கு ரெயில்வே வலியுறுத்தி உள்ளது.
தற்போது கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்களுக்கு அருகில் மதுக்கடைகள் செயல்பட தடை உள்ளது.
ஆனால் ரெயில் நிலையங்களுக்கு அருகில் மதுக்கடைகள், பார்கள் செயல்படுவதால் ரெயில்வே குற்ற சம்பவங்கள் அதிகம் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டு வலைத்தளவாசிகளின் பாராட்டை அள்ளி உள்ளார்.
- வீடியோவில் தாய், 10 வயதுடைய மகளுக்கு வாழ்த்து அட்டை தயாரித்து, அதில் தாத்தாவுக்கு கடிதம் எழுத கற்றுத் தருகிறார்.
கடிதம் எழுதுவது கடந்த காலம். ஆனால் இது இ-மெயில், வாட்ஸ்-அப் காலம். இன்ஸ்டாவிலும், ஸ்னாப்சாட்டிலும் அரட்டை அடிக்கிறது இன்றைய குழந்தைகள். அவர்கள் கடிதம் எழுதிப்படிப்பது பள்ளிப் பாடத்தில் மட்டுமே. அது அவர்களுக்கு விடுமுறை கடிதம் எழுதுவதற்குத்தான் பெரிதும் பயன்படுகிறது.
ஆனால் உறவுமுறையை வளர்க்க ஒரு காலத்தில் கடிதம் மட்டுமே இருந்தது, அது அளவில்லா மகிழ்ச்சிப் பெட்டகமாக பாதுகாக்கப்பட்டது என்பதை இன்றைய குழந்தைகள் அறிய மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கும், கடிதத்திற்கும் தொடர்பே இல்லை. அவர்கள் பயன்படுத்துவதும் இல்லை.
இந்த நிலையில் ஒரு இந்திய பெண், தனது மகளுக்கு கடிதம் எப்படி எழுதுவது, அதை எப்படி அனுப்புவது என்பதை நேரடியாக விளக்கி மகளின் முகத்தில் மலர்ச்சியை கொண்டு வந்துள்ளார். அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டு வலைத்தளவாசிகளின் பாராட்டை அள்ளி உள்ளார்.
வீடியோவில் தாய், 10 வயதுடைய மகளுக்கு வாழ்த்து அட்டை தயாரித்து, அதில் தாத்தாவுக்கு கடிதம் எழுத கற்றுத் தருகிறார். பின்னர் இருவரும் தபால் நிலைய வாசலுக்கு வந்து இறங்குகிறார்கள். உள்ளே சென்று அஞ்சல் வில்லைகளை வாங்கி கடிதத்தில் ஒட்டுகிறார்கள். பின்னர் தபால் பெட்டிக்குள் கடிதத்தை சிறுமி போட்டுவிட்டு மகிழ்ச்சி புன்னகை பூக்கிறாள். அது மறுநாள் தாத்தாவுக்கு கிடைத்துவிட்டதா என்பதை தெரிந்து கொள்கிறாள். தாத்தா கடிதத்தை பிரித்து புன்னகையுடன் படிப்பதாக வீடியோ முடிகிறது. வீடியோவின் பின்னணியில் தாய் பேசும் காட்சி இணைக்கப்பட்டு உள்ளது. வீடியோ வைரலானது.
- ராகுல் காந்திக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
- சட்டப்படி அவதூறு வழக்கு தொடரப்படும்.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பா.ஜனதா, காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., த.மா.கா. கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட 21 பேர் கைது செய்யப் பட்டனர்.
இவர்களில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த அஸ்வத்தாமனும் ஒருவர். இந்த நிலையில் இப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையை தொடர்புபடுத்தி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொது செயலாளர் ஜெய்சங்கர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக நட வடிக்கை கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
இதுபற்றி செல்வ பெருந்தகையிடம் கேட்டபோது, சட்டம் தன் கடமையை செய்யும். யாரையோ திருப்திபடுத்துவதற்காக, எதையோ திசை திருப்புவதற்காக அவதூறு பரப்பி உள்ளார்கள். சட்டப் படி அவதூறு வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.
- அமேரிக்கா அணுசக்தி திட்டத்தை முன்னெடுத்ததில் ஐன்ஸ்டீன் முக்கிய பங்கு வகித்தார்.
- அணு ஆயுதங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டதை தன வாழ்வில் தான் செய்த மாபெரும் தவறு என்று ஐன்ஸ்டீன் எண்ணினார்.
அணு ஆயுதங்களின் திறன் குறித்து 1939ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஃபிராங்களின் டி ரூஸ்வெல்ட்டிற்கு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதத்தின் நகல் இந்திய மதிப்பில் சுமார் 32.7 கோடிக்கு ஏலம் போயுள்ளது.
இந்த கடிதம் அமெரிக்காவின் அணு ஆயுத உற்பத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, பல மனித உயிர்களை பறிபோக காரணமாக இருந்ததால் அதற்காக பின்னாட்களில் ஐன்ஸ்டீன் மனம் வருந்தினார்.
அமெரிக்க அணுசக்தி திட்டத்தை முன்னெடுத்ததில் ஐன்ஸ்டீன் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் 1945 இல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு வீசியதால் ஏற்பட்ட பேரழிவை பார்த்து ஐன்ஸ்டீன் வேதனை அடைந்தார். அணு ஆயுதங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டதை தன வாழ்வில் தான் செய்த மாபெரும் தவறு என்று அவர் எண்ணினார்.
நியூயார்க்கில் உள்ள பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் நூலகத்தில் ஐன்ஸ்டீனின் அசல் கடிதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐன்ஸ்டீனின் கடிதங்கள் ஏலம் விடுவது ஒன்றும் இது முதன் முறையல்ல. ஏற்கனவே ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி ரூ.96.77 கோடிக்கும் அவர் எழுதிய கடவுள் கடிதம் ரூ.20 கோடிக்கும் ஏலம் போனது.
- திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கம் தொடங்கப்பட்ட நாள்.
- தோழனாகத் திகழ்கிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து இன்று தமிழகம் புறப்படும் முன்பு தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அரசுமுறைப் பயணத்தில் ஏறத்தாழ இரண்டு வாரகாலமாக தொடர்ச்சியான பணிகளில் இருந்தாலும், என் உள்ளம் ஒவ்வொரு நொடியும் தமிழ்நாட்டைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறது.
உலகின் முன்னணித் தொழில் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டினைப் பெருக்கி, இளைய தலைமுறையினருக்கான வேலைவாய்ப்பை வழங்கிட வழிவகுக்கின்றன.
முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்பதை வெறும் சொற்களாக இல்லாமல், முழுமையான செயல்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு.
அதை அமெரிக்காவில் வாழும் தமிழர்களும் நன்றாகப் புரிந்துகொண்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குவதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.
சிகாகோ நகரின் ரோஸ்மாண்ட் அரங்கத்தில் செப்டம்பர் 7-ம் நாள் அமெரிக்கத் தமிழர்களுடனான சந்திப்பு பெரும் உற்சாகத்தை அளித்தது.
அமெரிக்காவில் இருக்கிறோமா, அன்னைத் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா என்கிற அளவிற்கு, 5000 தமிழர்களுக்கு மேல் திரண்ட ஒரு மினி தமிழ்நாடாக அந்த அரங்கம் அமைந்திருந்தது.
இன-மொழி உணர்வால் அவர்களுக்கு நானும், எனக்கு அவர்களும் உறவாக அமைந்த சிறப்பான நிகழ்வு அது.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சிகாகோவில் நடந்த சந்திப்புக்கு வருகை தந்த தமிழர்களும், பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் வர இயலாமல் போனவர்களும் தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டு களில் திராவிட மாடல் அரசு நிறைவேற்றியுள்ள சாதனைத் திட்டங்களைப் பாராட்டத் தவறவில்லை.
அவர்களின் பாராட்டுகள், உங்களில் ஒருவனான எனக்கு தமிழ்நாட்டின் நினைவுகளையே மீண்டும் மீண்டும் கிளறின. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஜனநாயகப் பேரியக்கம் என்றென்றும் தமிழையும் தமிழர்களையும் காக்கின்ற இயக்கமல்லவா!
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி, முக்கால் நூற்றாண்டு காலத்தைக் கடந்து, மக்களின் பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதுடன், இந்திய அளவில் கொள்கை வலிமைமிக்க தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய இயக்கமாகவும் திகழ்கிறதென்றால், அது தி.மு.க. தான்.

செப்டம்பர் 15-இந்த மாபெரும் இயக்கத்தை உருவாக்கித் தந்து, இந்த மாநிலத்தின் உரிமைகளைக் காத்து, தமிழ்நாடு என்று நம் மாநிலத்திற்குப் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள். செப்டம்பர் 17-கொள்கைப் பேராசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள்.
அதே நாள்தான், திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கம் தொடங்கப்பட்ட நாள். இந்த மூன்றையும் இணைத்து, முப்பெரும் விழா என்று பெயர்சூட்டி திராவிடத் திருவிழாவாகக் கொண்டாடும் வழக்கத்தை உருவாக்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
வருகிற 17-ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ள பவளவிழா நிகழ்வுகள் குறித்தும், மாவட்டங்கள் தோறும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறித்தும் அமெரிக்காவில் இருந்தபடியே, கழகத்தின் ஒருங்கிணைப்புக் குழுவினருடன் காணொலியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதுடன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் பலரிடமும் தொடர்ந்து பேசி வருகிறேன்.
ஆகஸ்ட் 16-ஆம் நாள் நடைபெற்ற மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கழக மாவட்டங்கள் பலவற்றிலும் கழகத்தின் பவள விழாவிற்கான சுவர் விளம்பரங்கள் எழில்மிகுந்த முறையிலே எழுதப்பட்டிருப்பதை காணொலிகளாக நம் கழக நிர்வாகிகள் அனுப்பியிருந்தார்கள். சிறப்பான முறையிலே சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன்.
தி.மு.க.வின் கடைக்கோடி உறுப்பினரின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் உட்கட்சி ஜனநாயகத்தன்மையின் அடிப்படையில் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்கும் பொது உறுப்பினர்கள் கூட்டம் தொடர்ந்து நடைபெறுவதையும் அறிந்து கொண்டேன்.
வட்ட வாரியாக-கிளைவாரியாக நடைபெற்ற இத்தகைய பொது உறுப்பினர் கூட்டங்கள் பெரும்பாலான கழக மாவட்டங்களில் முழுமையாக நிறைவு பெற்றிருக்கின்றன.
பொது உறுப்பினர்கள் கூட்டங்களில், தொண்டர்களின் ஆழ்மனக் கருத்துகள் அடி வயிற்றிலிருந்து வெளிப்பட்ட குரலாக ஒலித்ததையும், தி.மு.க.வின் தலைவர் என்ற முறையில் நான் கவனிக்கத் தவறவில்லை.
தொண்டர்களின் குரலில் ஒலிக்கும் நியாய உணர்வுக்கு மதிப்பளிக்கத் தலைமை தவறுவதில்லை என்ற உறுதியை உங்களில் ஒருவனாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க.வின் பவள விழா பொதுக்கூட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 17-ந்தேதி எழுச்சிகரமாக நடைபெற இருக்கிறது.
இந்த 75 ஆண்டுகாலத்தில், தெற்குதான் வடக்கிற்கு வழிகாட்டுகிறது என்கிற அளவிற்கு தி.மு.க.வின் கொள்கைத் தாக்கம் நாடு முழுவதும் பேசப்படுகிறது. திராவிட மாடல் என்பது இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறியிருக்கிறது.
உலகத்தில் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் நம்பிக்கைக்குரிய இயக்கமாக-அவர்களின் நண்பனாகத் தோழனாகத் திகழ்கிற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். இதுதான் 75 ஆண்டுகாலப் பயணத்தின் சாதனை.
இந்த வெற்றிப் பயணம் தொடர்ந்திட, 17-ந்தேதி அன்று வரலாற்றுப் பெருவிழாவான கழகத்தின் பவள விழாவில் படையெனத் திரண்டு, கொண்டாடி மகிழ்வோம்.
இது உங்களில் ஒருவனான என்னுடைய அழைப்பு மட்டு மல்ல; இந்த இயக்கத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணாவும், பேணிப் பாதுகாத்து வளர்த்த முத்தமிழறிஞர் கலைஞரும் நம்மை அழைக்கிறார்கள்! அணி திரள்வோம்! பணி தொடர்வோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.
- பத்ம விருதுகள் பெற்ற 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. மருத்துவ ஊழியர் சஞ்சய் சிங் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு மேற்கு வங்காள போலீசால் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி நாடு முழுக்க மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இன்றைய தினமும் நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் காலவரையற்ற வேலை நிறுத்தமும் போராட்டமும் நடந்து வருகிறது. உயிரிழந்த மருத்துவர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவும், குற்றவாளியை விரைந்து தண்டிக்க வேண்டியும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் பத்ம விருதுகள் பெற்ற 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், 'கொல்கத்தா பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவம் நாட்டில் பெண்கள் மற்றும் மருத்துவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்பதையே காட்டுகிறது.
நமது நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில், தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தில் தலையிட்டு துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகளால் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.
- மத்திய அரசு இதுவரை அத்தகைய சிறப்புச் சட்டத்தை இயற்றவில்லை.
- உச்சநீதிமன்றம் 2008 தீர்ப்பில் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து போலீசார் பிரிவு 307 ஐப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,
2013ல், உச்ச நீதிமன்றம், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது: சம்பவம் நடந்த 15 நாட்களுக்குள் ஒரு லட்சம் ரூபாயும், மீதமுள்ள 2 லட்சம் ரூபாயை இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். கடந்த 2005ம் ஆண்டு டெல்லியில் ஆசிட் வீச்சுக்கு ஆளான லட்சுமி என்ற பெண் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆசிட் தாக்குதல்கள் பெரும்பாலும் பெண்களை குறிவைத்து நடத்தப்படுகின்றன. காதலை நிராகரித்த, திருமணத்தை மறுத்த, வரதட்சணை வாங்க முடியாத பெண்கள் இந்தக் கொடுமைக்கு ஆளாகின்றனர். ஆசிட் வீச்சு வன்முறை பல நாடுகளில் நிகழும் அதே வேளையில், பாகிஸ்தான், பங்களாதேஷ், கம்போடியா, உகாண்டா மற்றும் இந்தியாவில் இது அடிக்கடி நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய சட்ட ஆணையம், 2008ல் சமர்ப்பித்த 226வது அறிக்கையில், ஆசிட் வீச்சு வன்முறையை விரிவாகக் குறிப்பிட்டு, அதைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த சட்டம் அடங்கும். ஆசிட் வீச்சுக்கு ஆளானவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மற்றும் அமில விற்பனையைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது. ஆனால், மத்திய அரசு இதுவரை அத்தகைய சிறப்புச் சட்டத்தை இயற்றவில்லை. டெல்லி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்குப் பிறகு அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிட்டி, தனது அறிக்கையில் சட்ட ஆணையத்தின் கருத்துக்களை முன்னிலைப்படுத்தி, இந்தப் பிரச்னைக்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு பாலியல் வன்முறையைத் தடுக்க ஒரு சட்டத்தை இயற்றியது மற்றும் ஆசிட் தாக்குதலைச் சமாளிக்க ஐபிசியில் பிரிவுகள் 326A மற்றும் 3268 ஐச் செருகியது, ஆனால் அமிலத் தாக்குதலைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றத் தவறிவிட்டது.
இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள பிரிவுகள் 3264 மற்றும் 3268 ஆகியவை இந்தக் குற்றத்தை நிவர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்பதால், ஆசிட் வீச்சுகள் உயிருக்கு ஆபத்தானது என்று உச்சநீதிமன்றம் 2008 தீர்ப்பில் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து போலீசார் பிரிவு 307 ஐப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆசிட் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தது. ஆசிட் விற்பனையை விஷப் பொருள்கள் சட்டம், 1919ன் கீழ் வகைப்படுத்த வேண்டும் என்று கூறிய நீதிமன்றம், மாநில அரசுகளுக்கு ஆணையிட்டது. இதற்கு அவர்கள் சொந்த விதிகளை உருவாக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படியும், தி வர்மா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஆசிட் வீச்சுகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
- கடந்த 26-ந் தேதி செல்வி வழக்கம்போல, ஆசிரியர் வீட்டில் பராமரிப்பு பணி செய்ய வந்தார்.
- பீரோவில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம், 1½ பவுன் தங்க கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்தவர் சித்திரை செல்வின், ஓய்வுபெற்ற ஆசிரியர். இவருக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் சித்திரை செல்வின் தனது மனைவியுடன் கடந்த 17-ந் தேதி சென்னை சென்றுவிட்டார். அப்போது இவரது வீட்டை அந்த பகுதியை சேர்ந்த செல்வி என்பவர் பராமரித்து வந்தார்.
கடந்த 26-ந் தேதி செல்வி வழக்கம்போல, ஆசிரியர் வீட்டில் பராமரிப்பு பணி செய்ய வந்தார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து செல்வி, சென்னையில் உள்ள சித்திரை செல்வினுக்கு தகவல் தெரிவித்தார். அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு ஊருக்கு திரும்பி வந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம், 1½ பவுன் தங்க கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசில் சித்திரை செல்வின் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளையன், எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
அந்த கடிதத்தில், "என்னை மன்னித்து விடுங்கள். நான் இன்னும் 1 மாதத்தில் திருப்பி தந்து விடுகிறேன். என் வீட்டில் உடம்பு சரியில்லை. அதனால் தான்" என்று எழுதப்பட்டு இருந்தது. போலீசார் அந்த கடிதத்தை கைப்பற்றி அதில் பதிந்து இருந்த கைரேகையை பதிவு செய்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மீனவர்கள் 2024 ஜூலை 5 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
- தமிழ் மீனவர்கள் பல நூற்றாண்டுகளாக மீன்பிடித்து வந்த கடலில் மீன்பிடிக்கும் உரிமையை எமர்ஜென்சி காலத்தில் காங்கிரஸ் அரசு பறித்தது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தின் ராமந்தபுரத்தில் உள்ள பாம்பனில் இருந்து 25 மீனவர்கள் மற்றும் 4 படகுகள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தொடர் கைது சம்பவங்கள் காரணமாக, மீனவர்கள் 2024 ஜூலை 5 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
1974ல் கச்சத்தீவை கைவிட்டதால், கடந்த பல தசாப்தங்களாக இந்த தொடர் கைதுகளால் தமிழக மீனவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். 1974 ஒப்பந்தம், பிரிவு 5, மீனவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் கச்சத்தீவுக்கு வருகை தராமல் கலாசார மற்றும் பொருளாதார உரிமைகளை வழங்கியது. பயண ஆவணங்கள் அல்லது விசாக்கள் பெறுதல். பிரிவு 6 இன் கீழ், பாரம்பரிய (வரலாற்று) நீரில் இரு நாடுகளின் கப்பல்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
பின்னர், எமர்ஜென்சியின் போது, மன்னார் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடாவின் எல்லைகளை தீர்மானிக்க இந்தியா மற்றும் இலங்கை இடையே (மார்ச் 23, 1976) மற்றொரு ஒப்பந்தம் போடப்பட்டது. பிரிவு 5இல், முன்னர் வழங்கப்பட்ட கலாச்சார மற்றும் பொருளாதார உரிமைகள், 'ஒவ்வொரு கட்சிக்கும் நீர் மற்றும் பிராந்திய கடல், அத்துடன் தீவுகள் ஆகியவற்றின் மீதும், எல்லையில் அதன் பக்கத்தில் விழும் இறையாண்மை மற்றும் 'ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உண்டு. இறையாண்மை உரிமைகள் மற்றும் கான்டினென்டல் ஷெல்ஃப் மற்றும் பிரத்தியேக பொருளாதார மண்டலம் மற்றும் அவற்றின் வளங்கள் மீது, வாழும் அல்லது உயிரற்றவை, மேற்கூறிய எல்லையின் அதன் பக்கத்தில் விழும்.
தமிழ் மீனவர்கள் பல நூற்றாண்டுகளாக மீன்பிடித்து வந்த கடலில் மீன்பிடிக்கும் உரிமையை எமர்ஜென்சி காலத்தில் காங்கிரஸ் அரசு பறித்தது. நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திறமையான தலைமையின் கீழ், நமது தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ள இந்த நீண்டகால நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான நிரந்தரத் தீர்வைக் காணும் முயற்சியில் நமது வெளியுறவு அமைச்சகத்தின் முயற்சிகளை நாங்கள் முழுமையாக ஒப்புக்கொள்கிறோம்.
இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைகளில் இருந்து தமிழக மீனவர்களை காப்பாற்றி கச்சத்தீவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும், கைதிகளை முன்கூட்டியே திருப்பி அனுப்பவும், அவர்களின் மீன்பிடி படகுகளை விடுவிக்குமாறு வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.
On behalf of @BJP4TamilNadu, we request the intervention of our External affairs ministry to facilitate the detainees' early repatriation and the release of their fishing boat and to find a permanent solution to the Katchatheevu issue that will save our Tamil Fishermen from these… pic.twitter.com/dlNEGCxiAt
— K.Annamalai (@annamalai_k) July 2, 2024