search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Odisha train accident"

    • ரெயில்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்துகள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன.
    • ரெயில்கள் மோதலை தடுக்க ‘கவாச்’ என்ற தானியங்கி தொழில்நுட்பத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

    புதுடெல்லி:

    விஷால் திவாரி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஒடிசா மாநிலம் பலசோர் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 3 ரெயில்கள் மோதிக்கொண்டதில், 288 பேர் பலியானார்கள். ரெயில்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்துகள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன.

    அவற்றை கருத்தில்கொண்டு, ரெயில்கள் மோதலை தடுக்க 'கவாச்' என்ற தானியங்கி தொழில்நுட்பத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், அந்த குறிப்பிட்ட வழித்தடத்தில் 'கவாச்' தொழில்நுட்பத்தை அமல்படுத்தவில்லை.

    பொதுமக்களின் பாதுகாப்புக்கும் உயிருக்கும் முன்னுரிமை அளிப்பதாக மத்திய அரசு அடிக்கடி கூறுகிறது. நான் எழுப்புவது மக்கள் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினை.

    ஆகவே, 'கவாச்' தொழில்நுட்பத்தை உடனடியாக அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும். அதுவரை ரெயில்கள் இயக்கத்தை நிறுத்திவைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த மனு, நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

    மனுதாரர் தனது மனுவின் நகலை அட்டார்னி ஜெனரலிடம் ஒப்படைக்க வேண்டும்.

    ரெயில் விபத்துகளை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட 'கவாச்' தொழில்நுட்பம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும், இனி எடுக்க திட்டமிட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அட்டார்னி ஜெனரல் தெரிவிக்க வேண்டும். நாடு முழுவதும் 'கவாச்' தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது குறித்து ஏதேனும் ஆய்வு செய்யப்பட்டதா என்றும் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

    அடுத்தகட்ட விசாரணையை 4 வாரங்களுக்கு பிறகு தள்ளி வைத்தனர்.

    • விபத்து நடந்து 4 மாதங்கள் ஆகியும் 28 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டிருந்தன.
    • இறந்தவர்கள் ஆணா பெண்ணா என்று அடையாளம் கூட காணமுடியாத அளவுக்கு உடல்கள் இருந்தன.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநகா பஜார் பகுதியில் கடந்த ஜூன் 2-ந் தேதி தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரெயில் மீது ஷாலிமர்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது.

    அப்போது, எதிர்திசையில் வந்த பெங்களூரு-ஹவுரா அதிவிரைவு ரெயிலின் கடைசி பெட்டிகளும் விபத்தில் சிக்கி தடம் புரண்டன. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் 297 பேர் உயிரிழந்தனர். 1,100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    இதனிடையே விபத்தில் பலியானவர்களில் 162 பேரின் உடல்கள் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில், 134 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

    அதே சமயம் விபத்து நடந்து 4 மாதங்கள் ஆகியும் 28 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டிருந்தன. எனவே உரிமை கோரப்படாத அந்த 28 உடல்களையும் தகனம் செய்ய புவனேஸ்வர் மாநகராட்சி முடிவு செய்தது.

    அதன்படி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த 28 உடல்களை புவனேஸ்வர் மாநகராட்சியிடம் எய்ம்ஸ் நிர்வாகம் நேற்று முன்தினம் ஒப்படைத்தது. அதனை தொடர்ந்து பெண் தன்னார்வலர்கள் மூலம் அந்த உடல்களுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு, அவற்றை தகனம் செய்யும் பணிகள் உடனடியாக தொடங்கின.

    இந்த நிலையில் 28 உடல்களும் தகனம் செய்யப்பட்டதாக புவனேஸ்வர் மாநகராட்சி மேயர் சுலோச்சனா தாஸ் நேற்று தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "ரெயில் விபத்தில் இறந்து உரிமை கோரப்படாதவர்களின் உடல்களை தகனம் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கியது. அனைத்து பணிகளும் புதன்கிழமை காலை 8 மணிக்கு நிறைவடைந்தது. பெண் தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து உடல்களுக்கு இறுதி சடங்கு செய்தனர்" என்றார்.

    முதல் 3 உடல்களுக்கு இறுதி சடங்கு செய்த பெண் தன்னார்வலர்களான மதுஸ்மிதா பிரஸ்டி, ஸ்மிதா மோகன்தி, ஸ்வகதிகா ராவ் ஆகியோர் கூறுகையில், "அடையாளம் தெரியாத உடல்களுக்கு இந்த புனிதமான காரியத்தை செய்ய நாங்கள் எங்கள் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே முன்வந்தோம். ஒரு வேலை முந்தைய பிறப்புகளில் அவர்கள் எங்கள் சொந்தக்காரர்களாக இருந்திருக்கலாம். இறந்தவர்கள் ஆணா பெண்ணா என்று அடையாளம் கூட காணமுடியாத அளவுக்கு உடல்கள் இருந்தன. அவர்கள் மனிதர்கள். அவர்களுக்கு அனைத்து மரியாதைகளுடனும் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன" என கூறினர்.

    அனைத்து உடல்களும் மாநில அரசு, மத்திய அரசு மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றின் வழிகாட்டுதல்களின் படி தகனம் செய்யப்பட்டதாகவும், விசாரணைக்காகவும், பின்னாளில் சட்டச்சிக்கல்கள் ஏதும் வந்தால் அதற்கு பதில் அளிக்கும் விதமாகவும் உடல்களின் மரபணுக்கள் பாதுக்கப்படுகின்றன என்றும் புவனேஸ்வர் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

    • ஒடிசா ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    • இந்த விபத்து தொடர்பாக 3 பேரை சி.பி.ஐ. கைது செய்தது.

    புதுடெல்லி:

    ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் ஜூன் 2-ம் தேதி சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்தக் கோர விபத்தில் 291 பேர் உயிரிழந்ததுடன், 900-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் சதி வேலையா அல்லது மனித தவறா என விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக மரணம் விளைவிக்கக்கூடிய குற்றம், ஆதாரங்களை அழிக்க காரணமாக இருந்தது ஆகியவற்றிற்காக, இந்திய தண்டனை சட்டம் 304, 201 ஆகிய பிரிவுகளின் கீழ் ஒடிசா ரெயில் விபத்து நடந்த பகுதியில் பணியாற்றிய சீனியர் செக்ஷன் பொறியாளர் அருண் குமார் நொஹந்தா, செக்ஷன் பொறியாளர் முகமது அமீர்கான், டெக்னீஷியன் பப்புகுமார் ஆகிய 3 பேரையும் கடந்த ஜூலை 7-ம் தேதி சிபிஐ கைது செய்தது.

    இந்நிலையில், இந்தப் பிரிவுகளின் கீழ் போகேஸ்வர் நகரில் அமைந்துள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விபத்து நடந்த 2 மாதத்திற்குள் சிபிஐ புலன் விசாரணையை நடத்தி முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

    • ஒடிசா ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இந்த விபத்து தொடர்பாக ரெயில்வே மூத்த பொறியாளர் உள்பட 3 பேரை சி.பி.ஐ. கைது செய்தது.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் ஜூன் 2-ம் தேதி சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்தக் கோர விபத்தில் 291 பேர் உயிரிழந்ததுடன், 900-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் சதி வேலையா அல்லது மனித தவறா என விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே மூத்த பொறியாளர் உள்பட 3 பேரை சி.பி.ஐ. கைது செய்தது.

    • ஒடிசா ரெயில் விபத்தில் 290க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
    • ஒடிசா ரெயில் விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஒடிசா ரெயில் விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

    ஜூன் 2-ம் தேதி சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரெயில், ஒடிசா மாநிலம் பஹனாக பஜார் ரயில் நிலையத்தில் சரக்கு ரெயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

    கோரமண்டலின் சில பெட்டிகள் அவ்வழியாகச் சென்ற பெங்களூரு-ஹவுரா ரெயில் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி விசாரணை நடத்தினார்

    இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பான 40 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை ஜூன் 29ம் தேதி ரெயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

    அந்த அறிக்கையில், பல்வேறு நிலைகளில் சிக்னல் மற்றும் தொலைதொடர்பு பிரிவின் அலட்சியமே விபத்திற்கான பிரதான காரணம் என தெரிவித்துள்ளது.

    • ஒடிசா ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தவறான சிக்னலே ரெயில் விபத்துக்கு காரணம் என ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் விளக்கமளித்துள்ளது.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் ஜூன் 2ம் தேதி சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த கோர விபத்தில் 291 பேர் உயிரிழந்ததுடன், 900-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் சதி வேலையா அல்லது மனித தவறா என விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ரெயில் விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தவறான சிக்னலே ஒடிசா ரெயில் விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

    தவறான சிக்னல் கொடுக்கப்பட்டதால் தான் மெயின் லைனில் செல்ல வேண்டிய கோரமண்டல் விரைவு ரெயில் லூப் லைனில் சென்று சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக மோதியது என ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்துள்ளது.

    • சிபிஐ விசாரணைக்கு அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அதிகாரி கூறினார்.
    • பாலசோர் மாவட்டம் பஹனாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி இந்த விபத்து நிகழ்ந்தது.

    ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரெயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து தொடர்பாக, பஹனாகா ரெயில் நிலைய ஜூனியர் சிக்னல் என்ஜினீயர் அமிர் கானிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நேற்று ஜூனியர் என்ஜீனியர் வசித்து வந்த வாடகை வீட்டிற்கு அதிகாரிகள் சென்றபோது, அவர் வீட்டில் இல்லை. இதையடுத்து அந்த வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    எனவே, அந்த ஜூனியர் என்ஜினீயர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டதாக தகவல் பரவியது. விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஊழியர் தலைமறைவாகிவிட்டதாக ஊடகங்களில் செய்திகளும் வெளியாகின.

    பஹனாகா ரெயில் நிலைய ஊழியர் தலைமறைவானதாக வெளியான செய்திகள் உண்மையல்ல என தென்கிழக்கு ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி அதித்ய குமார் சவுத்ரி மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். சிபிஐ விசாரணைக்கு அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

    பாலசோர் மாவட்டம் பஹனாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது. மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பஹனாகா பஜார் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, மாற்று தண்டவாளத்தில் ஏற்கெனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளன. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், தடம்புரண்டு கிடந்த ரெயில் பெட்டிகள் மீது அதிவேகத்தில் மோதியது. இவ்விபத்தில் 292 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    • ஒடிசா ரெயில் விபத்தில் 291 பேர் உயிரிழந்துள்ளனர்
    • சிபிஐ அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை

    கோரமண்டல் உள்ளிட்ட இரண்டு பயணிகள் ரெயில், ஒரு சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசா மாநிலம் பாலசோர் பஹனாகா ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந்தேதி கோர விபத்திற்குள்ளாகின. இதில் இதுவரை 291 பேர் பலியாகியுள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

    இந்த கோரவிபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சோரா செக்சன் ரெயில்வே சிக்னல் ஜூனியர் என்ஜினீயர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. ரெயில் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர்.

    கடந்த 16-ந்தேதி சிபிஐ அதிகாரிகள் பாலசோர் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து நேற்று ஜூனியர் என்ஜீனியர் வசித்து வந்த வாடகை வீட்டிற்கு நேற்று சென்றபோது, அவர் இல்லாததால் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    அதேவேளையில் சிபிஐ அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து ஜூனியர் என்ஜினீயரிடம் விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    • பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி 3 ரெயில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 289 பேர் பலியாகினர்.
    • பிரகாஷ் ராம் என்ற சிறுவன் ரெயில் விபத்தில் படுகாயம் அடைந்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    பாலசோர்:

    ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி 3 ரெயில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 289 பேர் பலியாகினர். இந்த விபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    பீகாரை சேர்ந்த பிரகாஷ் ராம் என்ற 17 வயது சிறுவன் இந்த ரெயில் விபத்தில் படுகாயம் அடைந்து, பாலசோர் மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து பலி 290 ஆக உயர்ந்தது.

    • நாட்டையே உலுக்கிய கோர விபத்தில் 288 பேர் பலியாகினர்.
    • ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாவட்டம் பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந் தேதி 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்து நேரிட்டது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் 288 பேர் பலியாகினர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இந்த ரெயில் விபத்தில் பலத்த காயமடைந்து, பகனகா பஜார் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பீகாரை சேர்ந்த பிஜய் பஸ்வான் என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 289 ஆக அதிகரித்துள்ளது.

    • ரெயில் விபத்து நடந்த பகுதியில் பேய்கள் உலாவுவதாக எழுந்த பீதியை தொடர்ந்து கிராம மக்கள் அதற்கான சடங்குகளையும் செய்து வருகிறார்கள்.
    • இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை இடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டம், பஹானகா பகுதியில் கடந்த 2-ந்தேதி கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் உள்பட 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

    இந்த கோர விபத்தில் 288 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த கோரவிபத்து நடந்த பகுதியில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. விபத்து நடந்த பகுதியில் வசிக்கும் மக்கள், இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

    ரெயில் தண்டவாளத்தில் இறந்தவர்கள் உடல்கள் சிதறி கிடந்த காட்சியும், படுகாயம் அடைந்தவர்களின் அலறல் ஓசையும் இன்னும் மனதை விட்டு அகலவில்லை என ஊர் மக்கள் கூறிவந்தனர்.

    ரெயில் விபத்து நடந்து 10 நாள் ஆகிவிட்ட நிலையில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு கிராம மக்கள் 10-ம் நாள் ஈமச்சடங்குகள் செய்தனர். இறந்தவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் என்னென்ன சடங்குகள் செய்வார்களோ, அந்த சடங்குகள் அனைத்தையும் விபத்து நடந்த பகுதி கிராம மக்களே செய்தனர். இதுபற்றி அந்த பகுதியின் பஞ்சாயத்து சமிதி தலைவர் சரத்ராஜ் கூறியதாவது:-

    ரெயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை நாங்கள் தான் அகற்றினோம். இதனால் அவர்களின் ஆன்மா அமைதியடைய ஈமச்சடங்குகளை நாங்களே செய்ய முடிவு செய்தோம்.

    அதன்படி விபத்து நடந்த பகுதியில் உள்ள கிராம குளத்தில் நாங்கள் அனைவரும் ஒன்று கூடி, இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தோம். அதன்படி எங்கள் கிராமத்தை சேர்ந்த 116 பேர் மொட்டை அடித்து கொண்டோம், அன்று மாலையில் இறந்தவர்கள் நினைவாக அன்னதானமும் வழங்கினோம்.

    இதுபோல விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் நலமடைய சர்வசமய பிரார்த்தனையும் நடத்த உள்ளோம். இன்றும், நாளையும் இந்த கூட்டு பிரார்த்தனை நடக்க உள்ளது, என்றார்.

    ரெயில் விபத்து நடந்த பகுதியில் பேய்கள் உலாவுவதாக எழுந்த பீதியை தொடர்ந்து கிராம மக்கள் அதற்கான சடங்குகளையும் செய்து வருகிறார்கள். மேலும் இங்கு இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை இடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.
    • சி.பி.ஐ. விசாரணை முடியும்வரை பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் எந்த ரெயிலும் நிற்காது

    புவனேஷ்வர்:

    ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் நடந்த 3 ரெயில்கள் மோதிக் கொண்ட விபத்தின் காரணமாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த விசாரணை முடிந்து உண்மையை கண்டறியும் வரை பஹனாகா பஜார் ரெயில் நிலையத்தில் எந்த ரெயிலும் நிற்காதவாறு சமிக்ஞை கட்டுப்பாடு மூடப்பட்டு விட்டது.

    பஹனாகா பஜார் ரெயில் நிலையம் போன்ற சிறிய ரெயில் நிலையங்களில் ரிலே இண்டர்லாக்கிங் பேனல்களில் ஒளிரூட்டப்பட்ட சிக்னல் குறியீடுகள், பாயிண்டுகள், ட்ராக் சர்க்யூட்ஸ், க்ராங்க் ஹேண்டில்கள், எல். சி.கேட், சைடிங்க்ஸ் இத்யாதிகள் அவற்றின் புவியியல் நிலைக்கு ஏற்றவாறு இணைக்கப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையத்தை சீலிட்டு பதிவுப் புத்தகத்தையும் சி.பி.ஐ. கைப்பற்றி உள்ளதால் இங்கு ரெயில்கள் நிற்காது என தென்கிழக்கு ரெயில்வேயின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி ஆதித்ய குமார் சவுத்ரி கூறியுள்ளார்.

    சி.பி.ஐ. அமைப்பினர், ரிலே இண்டர்லாக்கிங் பேனல் அமைப்பிற்கு சீல் வைத்துவிட்டனர். இது ரெயில் சமிக்ஞை கட்டுப்பாட்டின் முக்கிய அங்கம். இதை தடை செய்ததால் பயணிகள் ரெயிலோ, சரக்கு ரெயிலோ இங்கு நிற்காது எனவும் தெரிவித்தார்.

    விபத்து நடந்த இடத்தில் அனைத்து இருப்பு பாதைகளும் சரி செய்யப்பட்டிருந்தாலும், சில கோளாறுகள் சரிசெய்ய வேண்டி உள்ளதால் சுமார் 24 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×