search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒடிசா ரெயில் விபத்து: மாயமான என்ஜினீயர் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சீல்வைப்பு
    X

    ஒடிசா ரெயில் விபத்து: மாயமான என்ஜினீயர் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சீல்வைப்பு

    • ஒடிசா ரெயில் விபத்தில் 291 பேர் உயிரிழந்துள்ளனர்
    • சிபிஐ அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை

    கோரமண்டல் உள்ளிட்ட இரண்டு பயணிகள் ரெயில், ஒரு சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசா மாநிலம் பாலசோர் பஹனாகா ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந்தேதி கோர விபத்திற்குள்ளாகின. இதில் இதுவரை 291 பேர் பலியாகியுள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

    இந்த கோரவிபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சோரா செக்சன் ரெயில்வே சிக்னல் ஜூனியர் என்ஜினீயர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. ரெயில் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர்.

    கடந்த 16-ந்தேதி சிபிஐ அதிகாரிகள் பாலசோர் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து நேற்று ஜூனியர் என்ஜீனியர் வசித்து வந்த வாடகை வீட்டிற்கு நேற்று சென்றபோது, அவர் இல்லாததால் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    அதேவேளையில் சிபிஐ அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து ஜூனியர் என்ஜினீயரிடம் விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×