search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் மனைவி குடும்பம் நடத்த வராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
    X

    பாவூர்சத்திரத்தில் மனைவி குடும்பம் நடத்த வராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது

    • பாவூர்சத்திரம் செங்குந்தர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன்
    • கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரது மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்

    நெல்லை:

    பாவூர்சத்திரம் செங்குந்தர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஜெகநாதன்(வயது 35). ஜவுளி வியாபாரி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    குடும்பம் நடத்த மறுப்பு

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரது மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனைவியை குடும்பம் நடத்த அழைத்து வர நேற்று முன்தினம் ஜெகநாதன் சென்றுள்ளார்.

    ஆனால் அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஜெகநாதன் தனது வீட்டுக்கு வந்து தூங்க செல்வதாக கூறிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டார். நேற்று காலை வெகுநேரமாகியும் அவர் எழும்பாததால் சந்தேகம் அடைந்த முருகேசன் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

    தற்கொலை

    அங்கு ஜெகநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஜெகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரது அறையில் ஒரு கடிதம் இருந்தது. அதனை போலீசார் எடுத்து சென்றுள்ளனர். அதில் சாவுக்கு காரணமானவர் குறித்த பெயர் விபரங்கள் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் விசாரைணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×