என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாவூர்சத்திரத்தில் மனைவி குடும்பம் நடத்த வராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
- பாவூர்சத்திரம் செங்குந்தர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன்
- கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரது மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்
நெல்லை:
பாவூர்சத்திரம் செங்குந்தர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஜெகநாதன்(வயது 35). ஜவுளி வியாபாரி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
குடும்பம் நடத்த மறுப்பு
கடந்த 20 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரது மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனைவியை குடும்பம் நடத்த அழைத்து வர நேற்று முன்தினம் ஜெகநாதன் சென்றுள்ளார்.
ஆனால் அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஜெகநாதன் தனது வீட்டுக்கு வந்து தூங்க செல்வதாக கூறிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டார். நேற்று காலை வெகுநேரமாகியும் அவர் எழும்பாததால் சந்தேகம் அடைந்த முருகேசன் உள்ளே சென்று பார்த்துள்ளார்.
தற்கொலை
அங்கு ஜெகநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஜெகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது அறையில் ஒரு கடிதம் இருந்தது. அதனை போலீசார் எடுத்து சென்றுள்ளனர். அதில் சாவுக்கு காரணமானவர் குறித்த பெயர் விபரங்கள் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் விசாரைணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்