என் மலர்

    நீங்கள் தேடியது "youth suicide"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமாரை திடீரென காணவில்லை.
    • அரசு ஆஸ்பத்திரியின் 2-வது தளத்தில் உள்ள கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.

    புதுச்சேரி:

    புதுவை சஞ்சீவி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது32). கொத்தனார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர் போதை மறுவாழ்வு மையத்துக்கு சென்று சிகிச்சை பெற்றும் குடிப்பழக்கத்தை கைவிடவில்லையாம்.

    இந்த நிலையில் அவரது அண்ணன் கோபி சர்க்கரை நோய்க்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு துணையாக ராஜ்குமார் இருந்து கவனித்து வந்தார்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமாரை திடீரென காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டு பிடிக்கவில்லை.

    இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியின் 2-வது தளத்தில் உள்ள கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ராஜ்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோரிமேடு போலீசார் அழுகிய நிலையில் இருந்த அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தற்கொலை செய்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
    • பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியில் டிரங்க் சாலையில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவருக்கு சுமார் 35 வயது இருக்கும். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் விரைந்துவந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், புலிக்குகை உள்ளிட்ட புராதன சின்னங்கள் சிறப்பு பெற்றது. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து ரசித்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்றுமாலை சாலவான் குப்பம் பகுதியில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 'புலிக்குகை' வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் வாலிபர் ஒருவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குறைவாக இருந்ததால் இதனை யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியருக்கும் மாமல்லபுரம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்துவந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் அவர் மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலத்தை சேர்ந்த முருகன் (வயது39) என்பது தெரிந்தது. பிளம்பராக வேலைபார்த்து வந்த அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீஸ், தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மின்கம்பியில் தொங்கிக் கொண்டு இருந்த டேனியலை மீட்டனர்.
    • வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாம்பரம்:

    சென்னை மேற்கு தாம்பரம் மாந்தோப்பு என்ற பகுதியை சேர்ந்தவர் டேனியல் (23). இவர் வீட்டில் குடும்பப் பிரச்சினை காரணமாக, சண்டை போட்டு விட்டு, பழைய பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலையில் உள்ள, அவரது நண்பர் மணிகண்டன் என்பவர் வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில், மணிகண்டன் வீட்டில் முதல் மாடியில் இருந்து, நண்பர்கள் டேனியலும் மணிகண்டனும், மது அருந்தி உள்ளனர். அப்போது மணிகண்டன் நண்பர் டேனியலுக்கு அறிவுரை கூறி, நீ வீட்டிற்கு செல்வது நல்லது என்று கூறியுள்ளார். ஆனால் டேனியல், "நான் வீட்டிற்கு செல்ல மாட்டேன், செத்தாலும் சாவேன்" என்று கூறியுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11:30 மணி அளவில் டேனியல், நண்பரின் வீட்டு முதல் மாடியில் இருந்து, அருகே தெருவில் உள்ள மின் கம்பிகள் மீது திடீரென குதித்தார். அதில் மின்கம்பியில் சிக்கி, மின்சாரம் தாக்கி துடிதுடித்துக் கொண்டு கிடந்தார். அதை அந்தத் தெரு மக்கள் பதற்றத்துடன் பார்த்து,பெண்கள் கதறி அழுது கூக்குரல் இட்டனர். இதை அடுத்து நள்ளிரவில் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பானது. உடனடியாக பீர்க்கன்கரணை போலீஸ், தாம்பரம் தீயணைப்புத்துறை, முடிச்சூர் மின்வாரிய அலுவலகம், ஆரம்ப சுகாதார மருத்துவ குழுவினர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து உடனடியாக அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போலீஸ், தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மின்கம்பியில் தொங்கிக் கொண்டு இருந்த டேனியலை மீட்டனர்.

    அதோடு மருத்துவக் குழுவினர், அதே தீயணைப்பு வாகனத்தின் மேல் பகுதியில் வைத்து, சி.பி.ஆர். சிகிச்சை கொடுத்து, டேனியல் உயிரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி டேனியல் உயிரிழந்தார்.

    இதை அடுத்து பீர்க்கன்கரணை போலீசார், டேனியல் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதோடு இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்துகின்றனர். மேலும் மின்வாரிய ஊழியர்கள், டேனியல் குதித்ததால் பழுதடைந்த மின் கம்பிகளை சீரமைத்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து, மீண்டும் பழைய பெருங்களத்தூர் பகுதிக்கு மின் இணைப்பை கொடுத்தனர்.

    மாடியிலிருந்து மின்சார கம்பிகளில் குதித்து விழுந்து, நூதனமான முறையில், வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காமராஜர் தெருவில் நண்பருடன் தங்கி இருந்தபோது நீண்ட நேரம் உறவினருடன் செல்போனில் பேசி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
    • தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவவர் ராகுல் (வயது25). கட்டிட தொழிலாளி. இவர் திருவள்ளூரை அடுத்த திருவலங்காடு பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார்.

    நேற்று இரவு ராகுல் திருவள்ளூர் காமராஜர் தெருவில் நண்பருடன் தங்கி இருந்தபோது நீண்ட நேரம் உறவினருடன் செல்போனில் பேசி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இதன்பின்னர் ராகுல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த சில மாதங்களாக சுரேஷுக்கு வயிற்று வலி இருந்து வந்தது.
    • கடந்த 6-ந் தேதி இரவில் சுரேஷ் வீட்டில் விஷம் குடித்தார்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஆழ்வார்குளம், கீழத்தெருவை சேர்ந்த முருகன் மகன் சுரேஷ் (வயது22). இவர் சென்னையில் ஒரு ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில மாதங்களாக அவருக்கு வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் வயிற்று வலி தீரவில்லை. இதனால் அவர் மனவேதனை அடைந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 6-ந் தேதி இரவில் சுரேஷ் வீட்டில் விஷம் குடித்தார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இறந்தார்.

    இதுபற்றி அவரது தந்தை முருகன் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி.ராஜு, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீசாரின் விசாரணைக்கு பயந்து வாலிபர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
    • மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசம்பாளையத்தை சேர்ந்தவர் சுஜித்குமார் (வயது 30).

    இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் டையிங் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுஜித்குமாருக்கு தோலம்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் நேரில் பார்த்து கொள்ளாமல் செல்போன் மூலம் பேசி பழகி வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். மேலும் வாலிபருடன் பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுரை கூறினர்.

    இதனையடுத்து இளம்பெண் தனது காதலனுடன் பேசுவதை தவிர்த்தார். ஆனால் சுஜித்குமார் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். இளம்பெண் போனை எடுக்கவில்லை.

    இந்தநிலையில் இளம்பெண்ணின் பெற்றோர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி செல்போன் மூலமாக தங்களது மகளுக்கு வாலிபர் தொல்லை கொடுப்பதாக மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். புகாரையடுத்து சுஜித்குமாரை தொடர்பு கொண்ட போலீசார் விசாரணைக்கு நேரில் வருமாறு அழைத்தனர்.

    இதனையடுத்து அவர் கடந்த 3-ந் தேதி பெங்களூரில் இருந்து தனது வீட்டிற்கு வந்தார். போலீசாரின் விசாரணைக்கு பயந்து அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுஜித்குமார் போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக சிங்காநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சுஜித்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விஜயகுமார்-அனிதா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மன வேதனை அடைந்த விஜயகுமார் திடீரென வீட்டின் அறைக்குள் சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    போரூர்:

    கோடம்பாக்கம், பாரதீஸ்வரர் காலனி 5-வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது31). கிராபிக் டிசைனராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அனிதா.

    விஜயகுமார்-அனிதா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த விஜயகுமார் திடீரென வீட்டின் அறைக்குள் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டில் தனியா இருந்த முருகன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி அடுத்த மாதவரம் முஸ்லீம் நகரை சேர்ந்தவர் முருகன் (44). தொழிலாளி. இவரது மனைவி குடும்ப தகராறில் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் வீட்டில் தனியா இருந்த முருகன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குடும்ப தகராறு காரணமாக நந்தியம்பாக்கம் அரசுப்பள்ளி வளாகத்தில் மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் இருளர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 19). இவர் குடும்ப தகராறு காரணமாக நந்தியம்பாக்கம் அரசுப்பள்ளி வளாகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் அவரது உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin