என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth suicide"

    • திருமணத்திற்காக புரோக்கர்களுக்கு ரூ.1 லட்சமும், மணமகள் தீபாவுக்கு வரதட்சணையாக ரூ.1 லட்சமும் சிவசண்முகம் கொடுத்துள்ளார்.
    • திருமணம் நடந்து 2 நாளில் வீட்டைவிட்டு ஓடிய தீபா பல ஆண்களை இதுபோன்று திருமணம் செய்து கொண்டு மோசடி செய்யும் கல்யாண ராணியா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சிவசண்முகம்(35). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி அந்த பெண்ணை விவாகரத்து செய்து விட்டார். இந்நிலையில் சிவசண்முகம் மதுரையை சேர்ந்த திருமண புரோக்கர்கள் மூலம் 2-வது திருமணத்திற்கு பெண் தேடி கொண்டிருந்தார்.

    இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஆலம்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகள் தீபா (30) என்ற பெண்ணை கடந்த 7-ந்தேதியன்று மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள கோவிலில் சிவசண்முகம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது சிவசண்முகத்தின் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டனர். மணமகள் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை.

    இந்த திருமணத்திற்காக புரோக்கர்களுக்கு ரூ.1 லட்சமும், மணமகள் தீபாவுக்கு வரதட்சணையாக ரூ.1 லட்சமும் சிவசண்முகம் கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து சிவசண்முகம் மணமகள் தீபாவை அழைத்து கொண்டு குடும்பத்தினருடன் வடகரையாத்தூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.

    இந்நிலையில் திருமணமான 2-வது நாளான கடந்த 8-ந்தேதி திடுமல் ராசாம்பாளையத்தில் உள்ள தனது அக்கா மலர்கொடியின் வீட்டிற்கு சிவசண்முகம் தீபாவை விருந்துக்கு அழைத்துச் சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது சிவசண்முகத்தின் அக்கா வீட்டிலிருந்த தீபாவை காணவில்லை. இதையடுத்து சிவசண்முகம் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் புரோக்கர்கள் மற்றும் தீபாவின் செல்போனை தொடர்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவசண்முகம் விரக்தியில் இருந்தார். இந்நிலையில் ராசபாளையத்தில் உள்ள தனது அக்காள் வீட்டில் கடந்த 10-ந் தேதி மாலை தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவசண்முகத்தின் அக்காள் மலர்க்கொடி பார்த்து கதறி அழுதார். பின்னர் உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து சிவசண்முகத்தின் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிவசண்முகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிவசண்முகம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விரிவாக விசாரணை நடத்தினார்.

    போலீசாரின் விசாரணையில் வீட்டை விட்டு வெளியே சென்ற தீபா திருமணத்திற்கு எடுத்த பட்டுப்புடவை, 9 பவுன் தங்க தாலி கொடியுடன் தலைமறைவானது தெரியவந்தது. மேலும் தலைமறைவான புதுப்பெண் தீபா மற்றும் பெண் உள்பட 6 புரோக்கர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் திருமணம் நடந்து 2 நாளில் வீட்டைவிட்டு ஓடிய தீபா பல ஆண்களை இதுபோன்று திருமணம் செய்து கொண்டு மோசடி செய்யும் கல்யாண ராணியா? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • திருமணம் முடிந்த பிறகும் அஜித் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
    • தாய் சத்தம் போட்டதால் மனமுடைந்த அஜித் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் மாரியம்மன் குரும்பன்தெருவை சேர்ந்தவர் அரசன் மகன் அஜித் (வயது26). கூலித்தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வந்து விட்டார்.

    அதன்பிறகு ராஜபாளையத்தை சேர்ந்த சினேகா என்பவரை கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்தார். திருமணம் முடிந்த பிறகும் அஜித் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

    இதனை அவரது தாய் விக்டோரியா கண்டித்தார். மனைவி மற்றும் அவர்களது குடும்பத்தினர் முன்பு தனது தாய் சத்தம் போட்டதால் மனமுடைந்த அஜித் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் விக்டோரியா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் முடிந்து 40வது நாளில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • சென்னை அமைந்தகரையில் உள்ள வணிக வளாகத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த இந்திரஜித் சிங் (33 வயது என்ற இளைஞர், ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

    இவர் நேற்று மாலை, அமைந்தகரையில் உள்ள பிரபல மால் (வணிக வளாகம்) சென்றுள்ளார். அங்கு, 3-வது மாடியில் உள்ள கடைக்கு சென்று அவர் பொருட்களை வாங்கிவிட்டு, பில் போடுவதற்காக காத்திருந்துள்ளார்.

    இந்த நிலையில், திடீரென இந்திரஜித் சிங், தனது காலணியை கழற்றி வைத்துவிட்டு, ஓடிச்சென்று மாலின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

    இந்த சம்பவத்தை நேரில் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்திரஜித் சிங்கை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 6 மாதங்களாக சுரேஷ், ஷூ கம்பெனிக்கு வேலைக்கு செல்லவில்லை.
    • ஆத்திரமடைந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து சபீனாபானுவை தாக்க முயன்றுள்ளார்.

    வேலூர்:

    வேலூர் சின்ன அல்லாபுரம் கே.கே. நகர் திரவுபதியம்மன் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் சபீனாபானு (வயது 33). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார். சபீனாபானு, சின்னஅல்லாபுரத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

    தொடர்ந்து சதுப்பேரியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதே கம்பெனியில் வேலூர் விருப்பாட்சிபுரம் நேதாஜி தெருவை சேர்ந்த சுரேஷ் (35) என்பவரும் வேலை செய்து வந்தார்.

    இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்து வந்ததால் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக சுரேஷ், ஷூ கம்பெனிக்கு வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவருடன் பேசுவதை சபீனா பானு தவிர்த்து வந்தார்.

    பலமுறை சுரேஷ், சபீனாபானுவை தொடர்பு கொண்டும் அவர் பேச மறுத்ததாக தெரிகிறது. இதனால் சபீனாபானு மீது கோபத்தில் இருந்த சுரேஷ், நேற்றும் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.

    ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதையடுத்து நேற்று இரவு 11.30 மணியளவில் சுரேஷ், சின்ன அல்லாபுரத்தில் உள்ள சபீனாபானுவின் வீட்டுக்கு சென்றார். அவரிடம் 'ஏன் என்னிடம் 2 மாதங்களாக பேசவில்லை.

    வேறு யாருடனாவது தொடர்பு உள்ளதா?' என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆத்திரமடைந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து சபீனாபானுவை தாக்க முயன்றுள்ளார்.

    இதை பார்த்த சபீனாபானுவின் தந்தை சிராஜூதீன், தாய் ஆஜிரா ஆகியோர் தடுக்க முயன்றனர். இருவரையும் சுரேஷ் கம்பியால் தலையில் தாக்கினார்.

    இதில் படுகாயமடைந்த அவர்கள் மயங்கினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சபீனாபானு, வீட்டில் இருந்து வெளியே தப்பி ஓடினார். அவரை விரட்டி சென்ற சுரேஷ், சபீனாபானு வீட்டின் அருகில் இருந்த மின்கம்பம் அருகே மடக்கி அவரை சரமாரியாக தாக்கினார் .

    இதில் சம்பவ இடத்திலேயே சபீனாபானு பரிதாபமாக இறந்தார். உடனே, சுரேஷ் தனது பைக்கில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், பாகாயம் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டுகள் சக்கரவர்த்தி, செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து சுரேஷின் செல்போன் எண்ணை வைத்து விருபாட்சிபுரம் நேதாஜி தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர்.

    அங்கு தனது அறையில் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்கிட்ட நிலையில் சுரேஷ் பிணமாக தொங்கினார்.

    சபீனாபானுவை கொலை செய்த பின்னர், வீட்டுக்கு திரும்பிய சுரேஷ், தூக்கிட்டு தற்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து இருவரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    காயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்த சபீனாபானுவின் பெற்றோரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    மேலும் இந்த கொலை மற்றும் தற்கொலை தொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பாவூர்சத்திரம் செங்குந்தர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன்
    • கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரது மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்

    நெல்லை:

    பாவூர்சத்திரம் செங்குந்தர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஜெகநாதன்(வயது 35). ஜவுளி வியாபாரி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    குடும்பம் நடத்த மறுப்பு

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரது மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனைவியை குடும்பம் நடத்த அழைத்து வர நேற்று முன்தினம் ஜெகநாதன் சென்றுள்ளார்.

    ஆனால் அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஜெகநாதன் தனது வீட்டுக்கு வந்து தூங்க செல்வதாக கூறிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டார். நேற்று காலை வெகுநேரமாகியும் அவர் எழும்பாததால் சந்தேகம் அடைந்த முருகேசன் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

    தற்கொலை

    அங்கு ஜெகநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஜெகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரது அறையில் ஒரு கடிதம் இருந்தது. அதனை போலீசார் எடுத்து சென்றுள்ளனர். அதில் சாவுக்கு காரணமானவர் குறித்த பெயர் விபரங்கள் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் விசாரைணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சுரேசை தேடி வந்தனர்.
    • போலீசுக்கு பயந்த அவர் தூத்துக்குடிக்கு வந்தார். நேற்று இரவு அங்குள்ள தனியார் விடுதியில் தங்கிய அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தூத்துக்குடி:

    திருவாரூர் மாவட்டம் மூவநல்லூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது25). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது.

    அதன்பேரில் மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சுரேசை தேடி வந்தனர்.

    இந்நிலையில் போலீசுக்கு பயந்த அவர் தூத்துக்குடிக்கு வந்தார். நேற்று இரவு அங்குள்ள தனியார் விடுதியில் தங்கிய அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்ததும் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாண்டிச்செல்வம் ஆலங்குடி அருகே உள்ள டி.களபம் ஊராட்சி ஓமங்கொல்லைப்பட்டி கிராமத்தில் தாய் மாமன் கருப்பையா மகன் துரை என்பவரின் வீட்டில் வசித்து வந்தார்.
    • விவசாயம் செய்தும் வந்த அவர் அதே கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.


    புதுக்கோட்டை:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா ஜெயங்கொண்டாம் ஊராட்சியை சேர்ந்தவர் பாண்டிச்செல்வம் (வயது 23). இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள டி.களபம் ஊராட்சி ஓமங்கொல்லைப்பட்டி கிராமத்தில் 2 வயது முதல் தனது தாய் மாமன் கருப்பையா மகன் துரை என்பவரின் வீட்டில் வசித்து வந்தார். ஐ.டி.ஐ. முடித்து விட்டு அவரது வீட்டில் தங்கியிருந்தார்.

    இந்நிலையில் ஆடு, மாடுகள் மேய்த்தும், விவசாயம் செய்தும் வந்த அவர் அதே கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்குள் ஏற்பட்ட மன வருத்தத்தில் அதே கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் ஏணியில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இந்நிலையில் இறந்தவரின் தந்தை ஆலங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஆலங்குடி போலீஸ் அழகம்மை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.





    • செல்வம்அங்குள்ள ஒருவரது தோட்டத்தில் குடிசை அமைத்து குடும்பத்துடன் வசித்து வந்தார்
    • கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.


    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் ( வயது 38). விவசாய கூலி தொழிலாளியான இவர் அங்குள்ள ஒருவரது தோட்டத்தில் குடிசை அமைத்து குடும்பத்துடன் வசித்து வந்தார்.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    மீண்டும் குடும்பம் நடத்த அழைத்த பின்னரும் அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த செல்வம் சறுக்கு பாறை பாலம் அருகே விஷம் குடித்து இறந்து கிடந்தார். அக்கம் பக்கத்து தோட்டக்காரர்கள் இன்று பாடாலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.





    • மணக்கோலத்தில் பார்க்க வேண்டிய மகனை பிணக்கோலத்தில் பார்த்த பெற்றோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைத்தது.
    • வாலிபர் தற்கொலை குறித்து ஜம்புநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பொன்னுசங்கம்பட்டி கிராமம் முத்துராஜா தெரு பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் சசிகுமார் (வயது 30). இவர் கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு அமெரிக்காவில் பணியாற்றி வந்தார்.

    திருமண வயதை எட்டிய சசிகுமாருக்கு பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் அவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    பின்னர் பெற்றோர் அவருடன் சென்று பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்தனர். ஆனால் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து முடிவாகாமல் இழுபறியே நீடித்து வந்தது.

    திருமணம் முடித்து இல்லற வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்ற கனவுகளுடன் வந்த சசிகுமாருக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் சசிகுமார் மிகுந்த மன வேதனைக்கு ஆளானார்.

    இதற்கிடையே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார்.

    மணக்கோலத்தில் பார்க்க வேண்டிய மகனை பிணக்கோலத்தில் பார்த்த பெற்றோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைத்தது. இந்த சம்பவம் குறித்து ஜம்புநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜி, கடந்த ஒருவாரமாக தனது நண்பர்களிடம் தாயின் நினைவாக இருக்கிறது என்று கூறி வந்தார்.
    • நள்ளிரவில் ராஜி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை மார்க்கெட் பகுதியில் வசித்து வந்தவர் ராஜி. பூக்கடை பகுதியில் தள்ளுவண்டி வைத்து சிற்றுண்டி கடை நடத்தி வந்தார்.

    இவரது தாய் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாய் மீது அதிக அன்பு வைத்திருந்த ராஜியால் இந்த பிரிவை தாங்கிக்கொள்ள முடியவில்லை. எப்போதும் தாயின் நினைவாக இருந்தார். அவருக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் ராஜி, கடந்த ஒருவாரமாக தனது நண்பர்களிடம் தாயின் நினைவாக இருக்கிறது என்று கூறி வந்தார். இதற்கிடையே நள்ளிரவில் அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ராஜி தற்கொலை செய்வதற்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு செய்து இருந்தார். அதில் அம்மா... உன்னுடன் இருந்த உறவை மறப்பது கடினம் அம்மா... என்று குறிப்பிட்டு உள்ளார்.

    தாய் இறந்த சோகத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக 12ஆண்டுகள் கழித்து மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மனஉலைச்சலுக்கு ஆளான ராஜா தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • திருவண்ணாமலை ரோட்டில் நேற்று நள்ளிரவில் சாலை மறியல் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே சூரப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் மூர்த்தி (வயது 47). இவர் கடந்த 20-ந் தேதி இரவு வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது பெட்ரோல் வாசனை அடித்தது. வெளியில் வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் பெட்ரோல் திருடிக் ெகாண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதில் ஒருவனை பிடித்தபோது அதே ஊரைச் சேர்ந்த மரியநாதன் என்பவர் மகன் ராஜா என்பது தெரிந்தது.

    இது குறித்து கெடார் போலீஸ் நிலையத்தில் மூர்த்தி புகார் அளித்தார். அப்போது அங்கு வந்த மரியநாதன், தனது மகன் ராஜாவை மூர்த்தி தாக்கிவிட்டு ஜாதியை சொல்லி திட்டியதாகவும் புகார் அளித்தார். புகாரினை பெற்ற போலீசார் மூர்த்தி மற்றும் ராஜா மீது தனித்தனியே வழக்கு பதிவு செய்தனர்.

    இதையடுத்து கடும் மனஉலைச்சலுக்கு ஆளான ராஜா என்பவர் நேற்று இரவு அவரது ஓட்டு வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கெடார் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைக்க சூரப்பட்டு கிராமத்திற்கு வந்தனர். 

    அப்போது ராஜாவின் உறவினர்கள் ராஜா தற்கொலை செய்துகொள்ள வெங்கந்தூர் கிராமத்தை சேர்ந்த பா.ம.க. பிரமுகர் வெங்கடேசன், மூர்த்தி ஆகியோர் தான் காரணம். எனவே, அவர்களை கைது செய்ய வேண்டுமென விழுப்புரம்-திருவண்ணாமலை ரோட்டில் நேற்று நள்ளிரவில் சாலை மறியல் செய்தனர். தகவலறிந்து விரைந்து வந்த விழுப்புரம் போலீஸ் சுப்பிரண்டு ஸ்ரீநாதா மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீஸ் நிலையம் வந்து புகார் மனு கொடுக்க அறிவுறு த்தினார். இதையடுத்து சாலை மறியலை ராஜாவின் உறவினர்கள் கைவிட்டனர். ராஜாவின் உடலை கைப்பற்றிய கெடார் போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அக்கிராமத்தில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஒருதலையாக காதலித்த பள்ளி மாணவியை தன்னை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி பொது இடத்தில் அடித்த வாலிபர் போலீசாரின் விசாரணைக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசாரின் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த எல்லப்பன்பட்டியை சேர்ந்தவர் மணி (வயது 21) டிராக்டர் டிரைவர். ஒடுகத்தூர் அருகே உள்ள மலைகிராமத்தை சேர்ந்த 15 வயது 10-ம் வகுப்பு பள்ளி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தார்.

    நேற்று மாதனூர் பகுதியில் இருக்கும் பள்ளிக்கு மாணவி பஸ்சில் சென்றார். அப்போது பஸ்சில் ஏறி சென்ற மணி தன்னை காதலிக்குமாறு மாணவியிடம் கட்டாயப்படுத்தியுள்ளார். மாணவி மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மாணவியை கட்டாயப்படுத்தி பஸ்சில் இருந்து கீழே இறக்கி அடித்துள்ளார்.

    இதனால் பள்ளிக்கு மாணவி காலதாமதமாக சென்றார். ஆசிரியர் தாமதம் குறித்து கேட்டபோது நடந்ததை மாணவி கூறினார். இதுகுறித்து உடனடியாக பெற்றோருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வேப்பங்குப்பம் போலீசார் மணியை விசாரிக்க வீட்டிற்கு சென்றனர். வீட்டில் மணி இல்லாததால் அவரின் அம்மாவிடம் கூறிவிட்டு வந்துள்ளனர்.

    போலீசார் வீட்டிற்கு வந்த தகவல் மணிக்கு செல்லவே விசாரணைக்கு பயந்து மணி பள்ளிகொண்டா அடுத்த பள்ளிகுப்பத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கு தனது பாட்டியிடம் போலீசார் வந்தால் நான் இங்கு இருப்பதாக சொல்லாதே என கூறிவிட்டு நிலத்திற்கு செல்கின்றேன் என கூறி சென்றார். இந்த நிலையில் போலீசாரின் விசாரணைக்கு பயந்த மணி நிலத்தில் இருந்த வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்து வந்த பள்ளிகொண்டா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசாரின் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×