என் மலர்
நீங்கள் தேடியது "காதலி கொலை"
- ஷிரத்தா நாளுக்கு நாள் தன்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வலியுறுத்த தொடங்கினார்.
- ஆத்திரம் அடைந்த அப்தாப் அமின், ஷிரத்தாவை அடித்து துன்புறுத்தினார். கடந்த மாதம் அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டது.
புதுடெல்லி:
மும்பையில் உள்ள ஒரு சர்வதேச தகவல் தொழில்நுட்ப மையத்தில் பணியாற்றி வந்தவர் ஷிரத்தா.
இவருடன் அதே நிறுவனத்தில் அப்தாப் அமின் என்பவரும் பணிபுரிந்து வந்தார். இருவரும் ஒரே பிரிவில் பணிபுரிந்து வந்ததால் நண்பர்களாக பழகினார்கள்.
ஒரு கட்டத்தில் அவர்கள் காதலர்களாக மாறினார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் ஷிரத்தாவின் பெற்றோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
என்றாலும் மும்பையில் அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதற்கு ஷிரத்தா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்தனர். இதையடுத்து அப்தாப் அமினும், ஷிரத்தாவும் மும்பையில் இருந்து டெல்லிக்கு இடம் பெயர்ந்தனர்.
டெல்லியில் ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த இருவரும் மெக்ராலி என்ற பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்தனர். திருமணம் செய்துகொள்ளாமல் அவர்கள் வசித்து வந்ததால் இரு குடும்பத்திலும் தொடர்ந்து எதிர்ப்பு காணப்பட்டது.
இந்த நிலையில் அப்தாப் அமினிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி ஷிரத்தா வலியுறுத்தினார். ஆனால் அதை அப்தாப் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தினமும் தகராறு ஏற்படத் தொடங்கியது.
ஷிரத்தா நாளுக்கு நாள் தன்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வலியுறுத்த தொடங்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்தாப் அமின், ஷிரத்தாவை அடித்து துன்புறுத்தினார். கடந்த மாதம் அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டது.
அப்போது அப்தாப் ஆத்திரத்தில் ஷிரத்தா கழுத்தை நெரித்து கொலை செய்தார். அதன்பிறகும் அவரது ஆத்திரம் அடங்கவில்லை. சமையல் செய்ய பயன்படுத்தும் கத்தியை எடுத்து வந்து ஷிரத்தா உடலை துண்டுதுண்டாக வெட்டினார்.
மனதில் ஈவுஇரக்கமின்றி ஷிரத்தா உடலை 35 துண்டுகளாக அவர் வெட்டி பிரித்தார். அந்த உடல் பாகங்களை ஒரே சமயத்தில் வெளியே எடுத்துச்சென்றால் சிக்கிக் கொள்வோம் என்ற பயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் புதிதாக பிரிட்ஜ் ஒன்றை வாங்கி வந்தார். ஷிரத்தாவின் 35 உடல் பாகங்களையும் தனித்தனி பார்சல்களாக கட்டி அந்த பிரிட் ஜுக்குள் வைத்தார். கடந்த மாதம் 24-ந்தேதி முதல் உடல் பாகங்களை ஒவ்வொன்றாக வெளியே வீசத்தொடங்கினார்.
தினமும் நள்ளிரவு 2 மணிக்கு ஷிரத்தா உடல் பாகத்தில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு ஏதாவது ஒரு பகுதியில் வீசிவிட்டு வருவார். இப்படி 18 நாட்கள் ஷிரத்தா உடல் பாகங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று டெல்லி முழுக்க வீசியுள்ளார்.
இதற்கிடையே ஷிரத்தாவுடன் அவரது குடும்பத்தினர் போனில் பேச முடியாததால் தவிப்புக்குள்ளானார்கள். அவரது தந்தை விகாஷ் மதன் கடந்த வாரம் டெல்லியில் ஷிரத்தா குடியிருந்த வீட்டுக்கு சென்றார்.
வீடு பூட்டி இருந்ததால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அப்தாப் அமினை பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் அவன் ஷிரத்தா உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசி விட்டது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் அவனை கைது செய்தனர். ஷிரத்தா உடல் பாகங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகிறது.
- ஷ்ரத்தாவை அப்தாப் அமீன் பூனாவாலா 35 துண்டுகளாக வெட்டிய போது வீடு முழுவதும் ரத்தம் சிதறியது.
- தரை முழுக்க ரத்த ஆறாக ஓடியது. அந்த ரத்தக் கறைகளை எப்படி துடைத்து சுத்தம் செய்வது என்று அப்தாப்புக்கு தெரியவில்லை.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மாணிக்பூர் என்ற இடத்தைச் சேர்ந்த விகாஷ் என்பவரின் மகள் ஷ்ரத்தா (வயது 26). மும்பையில் உள்ள ஒரு கால் சென்டரில் இவர் வேலை பார்த்து வந்தார். அப்போது உடன் வேலை பார்த்த அப்தாப் அமீன் பூனாவாலா என்ற வாலிபருடன் அவருக்கு காதல் மலர்ந்தது. அந்த காதலை ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்த்தனர்.
அதையடுத்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் காதல் ஜோடி டெல்லிக்கு இடம் மாறியது. அங்கு மெக்ருலி பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியேறினர். இதற்கிடையே மும்பையில் உள்ள பெற்றோருடனும் ஷ்ரத்தா தொடர்ந்து பேசி வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 18-ந் தேதிக்கு பிறகு ஷ்ரத்தாவை அவருடைய பெற்றோரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அப்தாப் அமீன் பூனாவாலா கைது செய்யப்பட்டார். விசாரணையில் அப்தாப் அமீன் பூனாவாலா தனது காதலி ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்திருப்பது தெரியவந்தது.
அந்த உடல் பாகங்களை அவர் புதிதாக பிரிட்ஜ் வாங்கி பதப்படுத்தி வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஷ்ரத்தா உடல் பாகங்களை அவர் 18 நாட்கள் அந்த பிரிட்ஜில் வைத்திருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துண்டுகளாக வெளியில் வீசியுள்ளார். அமெரிக்க கிரைம் படமான டெக்ஸ்டர் படத்தை பார்த்து அப்தாப் அமீன் பூனாவாலா இந்த கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
ஷ்ரத்தாவை அப்தாப் அமீன் பூனாவாலா 35 துண்டுகளாக வெட்டிய போது வீடு முழுவதும் ரத்தம் சிதறியது. தரை முழுக்க ரத்த ஆறாக ஓடியது. அந்த ரத்தக் கறைகளை எப்படி துடைத்து சுத்தம் செய்வது என்று அப்தாப்புக்கு தெரியவில்லை.
இதனால் கூகுளில் அவன் இதற்கு விடை தேடினான். தரையில் படிந்த ரத்தக் கறைகளை சுவடு தெரியாமல் எப்படி சுத்தம் செய்வது என்று அவன் கூகுளில் ஆய்வு செய்துள்ளான். அப்போது சில ரசாயன பொருட்களை பயன்படுத்தினால் ரத்த கறைகளை முழுமையாக நீக்கலாம் என்று அவனுக்கு தெரியவந்துள்ளது.
அதன்படி அவன் அந்த ரசாயான பொருட்களை கடைகளில் இருந்து வாங்கி வந்து வீட்டை சுத்தம் செய்திருக்கிறான். ரத்தக் கறைகள் படிந்த சட்டையையும் அவன் கூகுளில் ஆராய்ச்சி செய்துதான் சுத்தம் செய்திருக்கிறான்.
அப்தாப் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் வீசப்பட்ட பகுதிகளில் டெல்லி போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அந்த இடங்களில் இருந்து சில எலும்பு துண்டுகள்தான் கிடைத்தன.
கடந்த மே மாதமே ஷ்ரத்தா உடல் பாகங்கள் வெட்டி வீசப்பட்டு விட்டதால் அவை மண்ணோடு மண்ணாக போயிருக்கும் என்று போலீசார் கருதுகிறார்ள். எனவே ஷ்ரத்தா உடல் பாகங்கள் கிடைக்காது என்று கூறப்படுகிறது.
அதுபோல ஷ்ரத்தா உடலை 35 துண்டுகளாக வெட்டுவதற்கு அப்தாப் பயன்படுத்திய சமையல் அறை கத்தியும் கிடைக்கவில்லை. என்றாலும், இந்த வழக்கில் துப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் டெல்லி போலீசார் அப்தாப்பை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.
முதல்கட்ட விசாரணையில் ஷ்ரத்தாவின் சமூக வலைதள தொடர்புகள் அனைத்தையும் அப்தாப் கடந்த சில மாதங்கள் வரை இயக்கி வந்தது தெரியவந்துள்ளது.
- துண்டிக்கப்பட்ட ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் சத்தார்பூர் வன பகுதியில் வீசப்பட்டுள்ளன.
- உடல் பாகங்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 10 துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி:
டெல்லியில் காதலியை கொடூரமாக கொலை செய்து காதலன் 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையின் பால்கர் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரத்தா (வயது26). கால் சென்டரில் பணியாற்றி வந்த அவருக்கு 2019-ம் ஆண்டில் அப்தாப் அமீன் பூனாவாலா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது.
இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். காதலனுக்காக பெற்றோரை உதறி தள்ளிய ஷ்ரத்தா மும்பையின் வாசி பகுதியில் காதலனுடன் தனி வீட்டில் வாழ்ந்தார்.
மும்பையில் வசித்தால் பெற்றோர், உறவினர்கள் தொந்தரவு செய்வார்கள் என்று கருதிய காதலர்கள் யாருக்கும் தெரியாமல் டெல்லிக்கு இடம் பெயர்ந்தனர். அங்கு ஷ்ரத்தா பன்னாட்டு நிறுவனத்தின் கால் சென்டரில் பணியாற்றினார். அப்தாப் நட்சத்திர ஓட்டலில் சமையல்காரராக வேலை செய்தார்.
மஹாரவுலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் வசித்தனர். திருமணம் செய்யாமல் 'லிவிங் டுகெதர்' முறையில் வாழ்ந்தனர்.
அப்தாபுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பது ஷ்ரத்தாவுக்கு தெரியவந்தது. இதனால் தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் வற்புறுத்தினார். இதனால் அவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டது.
நாள்தோறும் அவர்கள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இரவில் ஷ்ரத்தாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். கடந்த மே மாதம் 18-ந்தேதி அவர்களுக்குள் மிகப்பெரிய சண்டை நடந்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவன் காதலி ஷ்ரத்தாவை தலையணையால் அமுக்கி கொலை செய்தான். கொலையை மறைக்க உடலை துண்டு துண்டாக வெட்டினான்.
இறைச்சியை வெட்ட பயன்படுத்தும் கத்திகளால் ஷ்ரத்தாவின் கைகளை 3 துண்டுகளாகவும், கால்களை 3 துண்டுகளாகவும் வெட்டினான். ஒட்டுமொத்தமாக அவரது உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டினான். அவற்றை தனித்தனி பிளாஸ்டிக் கவரில் சுற்றி பிரிட்ஜில் வைத்துள்ளான்.
நாள்தோறும் நள்ளிரவில் 2 மணிக்கு வெளியே சென்று ஒவ்வொரு துண்டையும் வீசி எறிந்துள்ளான். தொடர்ச்சியாக 20 நாட்கள் நள்ளிரவு 2 மணிக்கு ஆள் நடமாட்டம் இல்லாத வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று அனைத்து உடல் பாகங்களையும் வீசியுள்ளான். அவற்றின் சில துண்டுகளை நாய்கள் கவ்வி சென்றன.
ஷ்ரத்தாவின் நண்பர் மூலம் தான் அவர் காணாமல் போனது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் அப்தாப்பை பிடித்து விசாரணை நடத்திய போது காதலியை கொன்று உடலை துண்டு துண்டாக வீசியது தெரியவந்தது. போலீசார் அவனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சைக்கோ காதலன் பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
துண்டிக்கப்பட்ட காதலியின் தலையை கடைசியாக வீசியுள்ளான். அவரது நினைவாக 20 நாட்கள் தினமும் தலையை பிரிட்ஜில் இருந்து எடுத்து பார்த்துள்ளான். முடிவில் வேறு வழியில்லாமல் தலையை வீசியதாக அப்தாப் போலீசில் தெரிவித்து உள்ளான்.
காதலி ஷ்ரத்தாவின் உடலை துண்டு துண்டாக வெட்டும் போது அப்தாபுக்கு கையில் கத்தி குத்து காயம் ஏற்பட்டது. இதற்காக அவன் டாக்டர் அணில் குமாரிடம் சென்று சிகிச்சை பெற்றான். பழங்களை வெட்டும் போது காயம் ஏற்பட்டதாக அவன் டாக்டரிடம் பொய் கூறியுள்ளான்.
இதை நம்பி டாக்டரும் அவனுக்கு சிகிச்சை அளித்துள்ளார். 5 முதல் 6 தையல்கள் வரை அப்தாபுக்கு போடப்பட்டுள்ளது.
தற்போது டாக்டர் அணில்குமார் இந்த வழக்கில் சாட்சியாக மாறி உள்ளார். அவர் அப்ரூவர் ஆவதால் இந்த வழக்கில் பிடி இறுகுகிறது.
துண்டிக்கப்பட்ட ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் சத்தார்பூர் வன பகுதியில் வீசப்பட்டுள்ளன. அவற்றை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 10 துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தடயவியல் நிபுணர்கள் அதை ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஷ்ரத்தாவின் தலையை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தலையை கண்டு பிடித்தால் தான் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியும். தலை கண்டு பிடிக்கப்பட்டதும் மண்டை ஓடு, சூப்பர் இம்போசிசன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அடையாளம் காண போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
இதுவரை மீட்கப்பட்ட எலும்புகள் டி.என்.ஏ. மாதிரிக்கு அனுப்பப்பட்டு ஷ்ரத்தாவின் தந்தை விகாசின் டி.என்.ஏ.வுடன் ஒத்து போகிறதா என்பது கண்டறியப்படும்.
கொலையாளி உடல் உறுப்புகளை நறுக்கி சேமித்து அகற்றும் போது ஆர்த்தோ போரிக் அமிலம் (போரிக் பவுடர்) மற்றும் வேறு சில ரசாயனங்களையும் பயன்படுத்தியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஷ்ரத்தாவின் பள்ளி நண்பர் லட்சுமணன். குடும்பத்தினருடன் தொடர்பு இல்லாததால் அவர் தனது நண்பருடன் வாழ்வின் துயரங்களை பகிர்ந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக ஷ்ரத்தாவை லட்சுமணனால் தொடர்பு கொள்ள இயலவில்லை. இதனால் அவர் தான் ஷ்ரத்தாவின் சகோதரருக்கு தகவல் கொடுத்தார்.
இதற்கு பிறகே அவர் கொல்லப்பட்ட விவரம் தெரியவந்தது. தற்போது போலீசார் ஷ்ரத்தா விவகாரம் தொடர்பாக லட்சுமணனிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இதற்கிடையே அப்தாப் போதை பழக்கத்துக்கு அடிமையானவரா என்பதை கண்டறிய அவருக்கு போதை மருந்து சோதனையும் நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து இருக்கும் போது அப்தாப் பல பெண்களை வீட்டுக்கு அழைத்து வந்ததாகவும் தெரிகிறது. அந்த பெண்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- ஷ்ரத்தாவின் அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவரது முகத்தை அப்தாப் தீ வைத்து எரித்ததாகவும் கூறப்படுகிறது.
- எரிக்கப்பட்ட தலை எங்காவது கிடக்கிறதா? என்று தேடுதல் வேட்டையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
புதுடெல்லி:
மும்பை பால்கர் பகுதியைச் சேர்ந்த ஷ்ரத்தாவும், அவரது காதலன் அப்தாப் அமீன் பூனாவாலாவும் டெல்லி மஹாரவுலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 'லிவிங் டு கெதர்' முறையில் வாழ்ந்து வந்தனர். ஷ்ரத்தா பன்னாட்டு நிறுவன கால் சென்டரிலும், அப்தாப் நட்சத்திர ஓட்டலில் சமையல்காரராகவும் வேலை செய்தனர்.
அப்தாப்புக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பது ஷ்ரத்தாவுக்கு தெரியவந்ததால் தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இதற்கு அப்தாப் மறுத்ததால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
இதனால் கடந்த மாதம் 18-ந்தேதி காதலி ஷ்ரத்தாவை அப்தால் தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்தார். கொலையை மறைக்க அவரது உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டினான். அவற்றை வெவ்வேறு இடங்களுக்கு எடுத்து சென்று வீசினான். இது தொடர்பாக அப்தாப்பை போலீசார் கைது செய்தனர். மேலும் ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை தேடி வந்தனர். அதில் 10 துண்டுகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
மேலும் பல இடங்களில் ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை நாய் உள்ளிட்ட விலங்குகள் சாப்பிட்டு விட்டன. அந்த இடங்களில் எலும்புகள் மட்டும் சேகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஷ்ராத்தாவின் தலை மற்றும் மற்ற உடல் பாகங்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
துண்டிக்கப்பட்ட ஷ்ரத்தாவின் தலையை பிரிட்ஜில் வைத்து அப்தாப் அதை தினமும் எடுத்துப் பார்த்ததாகவும் பின்னர் அதை எடுத்து வனப்பகுதியில் வீசி விட்டதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால் தற்போது வேறு மாதிரியான தகவல்களும் வெளியாகி வருகின்றன.
ஷ்ரத்தாவின் அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவரது முகத்தை அப்தாப் தீ வைத்து எரித்ததாகவும் கூறப்படுகிறது. எனவே எரிக்கப்பட்ட தலை எங்காவது கிடக்கிறதா? என்று தேடுதல் வேட்டையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
உடல் பாகங்களின் நாற்றம் காரணமாக அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களுக்கு சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அவற்றை பிளாஸ்டிக் பைக்குள் வைத்து பல பகுதியிலும் வீசியதாக கூறப்படுகிறது.
கொலை செய்யப்பட்டவரின் உடலை மற்றவர்களுக்கு சந்தேகம் வராமல் எப்படி அப்புறப்படுத்துவது என்ற தகவலை அப்தாப் இணையதளத்தில் தேடியதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்ட அப்தாப்புக்கு 10 மணி நேரம் ஆகியுள்ளது. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் அப்தாப் இடைவெளி விட்டு பீர் குடித்துள்ளார். சிகரெட் புகைத்துள்ளார் மேலும் உணவை ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டு உள்ளார்.
உடலை வெட்டி முத்த பிறகு மீண்டும் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டே ஓடிடியில் சினிமா பார்த்துள்ளார். மேலும் ஷ்ரத்தாவை கொலை செய்த பிறகு அவரது செல்போனையும் தொடர்ந்து பயன்படுத்தி உள்ளார். அப்போது அந்த செல்போனில் உள்ள டேட்டாவையும் அப்தாப் அழித்துள்ளார்.
இதற்கிடையே ஷ்ரத்தா கொலை செய்யப்பட்ட குடியிருப்பில் தடயவியல் துறையினர் நேற்று தடயங்களை சேகரித்தனர். அப்போது பல முக்கிய தடயங்களை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கொலை நடந்த குடியிருப்பில் தடயவியல் துறையினர் சிறப்பு ரசாயனங்களை பயன்படுத்தி ரத்தக்கறைகளை கண்டுபிடித்துள்ளனர். அப்தாப் ரசாயன முறையில் சுத்தம் செய்ய முடியாத இடத்தில் மட்டுமே இந்த ரத்த தடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அவர் அஹப்போ குளோரிக் அமிலத்தால் தடயங்களை சுத்தம் செய்ததும் தெரிய வந்தது.
ஷ்ரத்தாவின் உடலை குழாயின் அடியில் வைத்தே அப்தாப் வெட்டியுள்ளான். அப்போது ரத்தத்தை கழுவியதால் தண்ணீர் ஓடிக் கொண்டே இருந்துள்ளது. ரத்தக்கறைகளை அகற்ற அவன் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை பயன்படுத்தியுள்ளான். அதே நேரத்தில் ஷ்ரத்தாவை கழுத்தை நெரித்து கொன்ற அறையில் எந்தவித தடயம் மற்றும் ஆதாரமும் சிக்கவில்லை.
இதற்கிடையே அப்தாப்பை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி ஐகோர்ட்டு போலீசாருக்கு அனுமதி வழங்கி உள்ளது.
டெல்லிக்கு வருவதற்கு முன்பு அப்தாப்பும், ஷ்ரத்தாவும் உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். 5 நாள் காவலில் போலீசார் அப்தாப்பிடம் விசாரணை நடத்தும் பட்சத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- வீடியோவை போலீசார் சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
- கடுமையான விசாரணைக்குப் பிறகு அப்தாப் உண்மையை கூறத் தொடங்கி உள்ளான்
புதுடெல்லி:
டெல்லியில் காதலனுடன் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே மாதம் 18ம் தேதி ஷ்ரத்தாவுக்கும், காதலன் அப்தாப் அமீன் பூனாவாலாவுக்கும் இடைகிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் ஷ்ரத்தா, காதலன் அப்தாவால் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையை மறைக்க, உடலை 35 துண்டுகளாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச்சென்று காட்டில் வீசி உள்ளான் அப்தாப்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அப்தாப் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இது ஒருபுறமிருக்க ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக மீட்கப்படுகின்றன. அப்பகுதியில் பதிவான சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்துவருகின்றனர். ஷ்ரத்தாவின் தலையை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் அப்தாப் தனது வீட்டுக்கு வெளியே அதிகாலையில் நடந்து செல்லும் போது பதிவான சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. அதில், அவன் தனது முதுகில் பேக் மாட்டி உள்ளார். கையில் அட்டைப் பெட்டி வைத்திருந்தான். இதனால் அவன் ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த வீடியோவை போலீசார் சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அக்டோபர் 18ம் தேதி பதிவு செய்யப்பட்ட இந்த சிசிடிவி காட்சி, இந்த கொடூரமான கொலை வழக்கில் வெளிவந்த முதல் சிசிடிவி வீடியோ பதிவாகும்.
இருட்டில் மங்கலாக பதிவான அந்த வீடியோவில், ஒரு நபர் முதுகுப்பை மாட்டிக்கொண்டு கையில் அட்டைப்பெட்டியுடன் தெருவில் நடந்து செல்வது தெரிகிறது. அவரது முகம் தெளிவாக தெரியவில்லை. ஆனால் அது அப்தாப் என்று போலீசார் கூறுகின்றனர்.
இன்று அதிகாலை, அப்தாப் அமீன் பூனாவாலாவின் குடியிருப்பில் இருந்து கனமான மற்றும் கூர்மையான வெட்டும் கருவிகளை போலீசார் மீட்டனர். அவை ஷ்ரத்தாவின் உடலை வெட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கடுமையான விசாரணைக்குப் பிறகு அப்தாப் உண்மையை கூறத் தொடங்கி உள்ளான். அவன் கொடுத்த தகவலின்பேரில் சத்தர்பூர் குடியிருப்பில் இருந்து முக்கிய ஆதாரங்களை போலீசார் மீட்டுள்ளனர். அப்தாபின் குருகிராம் பணியிடத்தில் இருந்து நேற்று கருப்பு பாலிதீன் பையையும் போலீசார் மீட்டனர்.
- பொருட்களை டெல்லிக்கு கொண்டு செல்ல 37 பெட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- பணத்தை கொடுப்பது தொடர்பாக காதலர்கள் இடையே சண்டை நிகழ்ந்துள்ளது.
டெல்லியில் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண், காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் சாட்சியங்களைத் தேடுவதற்காக மகாராஷ்டிரா, அரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு டெல்லி காவல்துறை குழுக்கள் விரைந்துள்ளன.
இந்நிலையில் டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த காதலர்கள், அதற்கு முன்பு மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து கடந்த ஜூன் மாதம் அப்தாப், டெல்லிக்கு உடமைகளை மாற்றி உள்ளார். இதற்காக 37 பெட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
குட்லக் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் நிறுவனம் மூலம் மரச்சாமான்கள் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்களை கொண்டு செல்வதற்காக ரூ.20,000 செலுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பணத்தை யார் கொடுப்பது என்பது தொடர்பாக இருவரும் சண்டை போட்டதாக அப்தாப் காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார்.
20 ஆயிரம் ரூபாய் யாருடைய வங்கி கணக்கில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஷ்ரத்தாவும், அப்தாப்பும் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அப்தாப் குடும்ப உறுப்பினர்கள் வாக்குமூலத்தையும் போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவை விட்டு வெளியேறிய பிறகு, காதலர்கள் இருவரும் இமாச்சலப் பிரதேசம் உட்பட பல இடங்களுக்குச் சென்றுள்ளனர். அந்த பயணங்களின் போது அவர்களுக்கு இடையே ஏதாவது தகராறு ஏற்பட்டதா, அதனால் இந்த கொலை நடைபெற்றதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் காதலனால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
- இந்த வழக்கில் போலீசார் அப்தாப்பை கடந்த 12-ம் தேதி கைது செய்து காவலில் எடுத்துள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் (28), என்ற பெண், காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் மே மாதம் நிகழ்ந்துள்ளது. காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி கூறுபோட்டுள்ளார். இதன்பின்னர், அவற்றை டெல்லியின் பல பகுதிகளில் வீசி சென்றுள்ளார். இந்த வழக்கில் போலீசார் அப்தாப்பை கடந்த 12-ம் தேதி கைது செய்து காவலில் எடுத்துள்ளது.
இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பே அவன் கொலை செய்வான் என்றும், பல துண்டுகளாக வெட்டுவான் என்றும் ஷ்ரத்தா வாக்கர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி மகாராஷ்டிராவின் நலசோப்ரா நகரில் துலிஞ்ச் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் வாக்கர் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், அவன் இன்று என்னை மூச்சு திணறச்செய்து கொல்ல முயன்றான். என்னை பயமுறுத்துவதோடு, கொலை செய்து, பல துண்டுகளாக வீசி விடுவேன் என்று மிரட்டலும் விடுக்கிறான். 6 மாதங்களாக இது தொடருகிறது. என்னை தாக்கிக்கொண்டே இருக்கிறான். ஆனால், எனக்கு போலீசாரிடம் செல்ல தைரியம் இல்லை. ஏனெனில், என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டக்கூடும் என தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த புகாரில் அப்தாப்பின் பெற்றோருக்கும் கூட நாங்கள் ஒன்றாக வாழ்கிறோம் என தெரியும். என்னை தாக்குவதும், கொலை செய்ய முயற்சிப்பதும் கூட அவர்களுக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
- அப்தாப் பிரபலமான தாஜ் ஹோட்டலில் சமையல் பயிற்சி பெற்றவர் என்றும், சதையை எப்படி பாதுகாப்பது என்றும் அவருக்கு தெரியும்.
- ஸ்ரத்தாவை கொலை செய்த பிறகு தரையை சுத்தம் செய்ய உலர்ந்த ஐஸ் மற்றும் ரசாயனங்களை அப்தாப் பயன்படுத்தி உள்ளார்.
புதுடெல்லி:
கடந்த ஆண்டு டெல்லியில் ஸ்ரத்தா என்ற இளம்பெண்ணை அவரது காதலன் அப்தாப் என்பவர் கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு, துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
தலையை துண்டித்து வீட்டில் உள்ள 300 லிட்டர் பிரிட்ஜில் வைத்திருந்த அவர், வீட்டில் நாற்றம் வராமல் இருப்பதற்காக நறுமணங்களை பயன்படுத்தி இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அப்தாபை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற்ற போலீசார் சுமார் 6,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
அப்தாப்பிற்கும், ஸ்ரத்தாவிற்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்ததாலும், ஸ்ரத்தாவிடம் அப்தாப் அதிகளவில் பணம் கேட்ட பிரச்சினையிலும் கொலை நடந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் சம்பவத்தன்று ஸ்ரத்தாவை கழுத்தை நெரித்து கொலை செய்த அப்தாப் உடல் பாகங்களை கூறு போட்டு கொஞ்சம், கொஞ்சமாக அப்புறப்படுத்தி உள்ளார் என்பது போன்ற விபரங்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக கூடுதல் தகவல்களை டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அதில், அப்தாப் ஒரு பயிற்சி பெற்ற சமையல் கலைஞர். அவர் பிரபலமான தாஜ் ஹோட்டலில் சமையல் பயிற்சி பெற்றவர் என்றும், சதையை எப்படி பாதுகாப்பது என்று அவருக்கு தெரியும்.
ஸ்ரத்தாவை கொலை செய்த பிறகு தரையை சுத்தம் செய்ய உலர்ந்த ஐஸ் மற்றும் ரசாயனங்களை பயன்படுத்தி உள்ளார். ஸ்ரத்தாவை கொலை செய்த ஒரு வாரத்தில் அப்தாப் வேறு ஒரு பெண்ணுடன் உறவில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஸ்ரத்தாவிற்கு முன்பு கொடுத்த மோதிரத்தை தனது புதிய காதலிக்கு அவர் பரிசளித்துள்ளார் என்ற விபரங்களையும் டெல்லி போலீசார் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே அப்தாப் உயர்கல்வி படிக்க விரும்புவதாகவும், இதற்காக கல்வி சான்றிதழ்களை பெறுவதற்கு அனுமதிக்க வேண்டும் என டெல்லி கோர்ட்டில் கோரிக்கை வைத்துள்ளார்.
- கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வினித்தின் தங்கை பாருல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- தலைமறைவான வினித் மற்றும் நண்பரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் சமீபகாலமாக திருமணம் செய்து கொள்ளாமல் 'லிவ்-இன் ரிலேசன்ஷிப்'-பில் இளம் ஜோடியினர் வாழ்ந்து வருவது அதிகரித்து வருகிறது.
இதில் காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்படும் போது கொலையில் முடிந்து விடுகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
கடந்த 12-ந் தேதி வடகிழக்கு டெல்லியில் உள்ள கரவால் நகர் பகுதியில் ஒரு பள்ளி அருகே அடையாளம் தெரியாத பெண் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. ஆனால் பிரேத பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட பெண் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர் உத்தரகாண்ட் மாநிலம் மிராஜ் பூரை சேர்ந்த ரோகினா நாஸ் என்ற மஹி (வயது 25) என்பது தெரியவந்தது.
இவர் கடந்த 4 ஆண்டுகளாக வடகிழக்கு டெல்லியை சேர்ந்த வினித் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் 'லிவ்-இன்' ரிலேசன்ஷிப்பில் இருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் வினித்தை தேடி சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார்.
இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தினர். இதில் சம்பவத்தன்று ஒரு மோட்டார் சைக்கிளில் வினித், அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்து ரோகினா உடலை எடுத்து சென்று சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் குப்பை கொட்டும் இடத்தில் வீசி செல்வது தெரியவந்தது.
இதனால் வினித்தான் ரோகினாவை கொலை செய்திருக்க வேண்டும் என்பதை உறுதி செய்த போலீசார் அவரையும், அவரது நண்பரையும் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வினித்தின் தங்கை பாருல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. வினித் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளது. அந்த வழக்கில் ஜாமீனில் வந்த அவருக்கு ரோகினாவுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் 'லிவ்-இன்' முறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ரோகினா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வினித்திடம் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு வினித்தின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வினித்-ரோகினா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ரோகினாவை தீர்த்துக்கட்ட வினித் முடிவு செய்துள்ளார். சம்பவத்தன்று காதலர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்படவே ஆத்திரத்தில் வினித், ரோகினாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை மறைப்பதற்காக தனது நண்பர் மற்றும் தங்கை பாருல் ஆகியோர் உதவியை நாடி உள்ளார். அவர்களும் உதவி செய்தது பாருலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
ரோகினாவை வினித் கொலை செய்த பிறகு ரத்தக்கறை படிந்த ஆடைகளை மாற்றுவதற்கு பாருல் உதவி செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் கொலைக்கு பின்னர் தாங்கள் தங்கியிருந்த வீட்டை விற்றுவிட்டு வேறு ஒரு வீட்டிற்கு வாடகைக்கு செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது.
தலைமறைவான வினித் மற்றும் நண்பரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- ஷீபாவிடம் யார் யார் செல்போனில் பேசி உள்ளனர் என்ற விவரத்தை போலீசார் சேகரித்தனர்.
- ஷீபாவிடம் கடைசியாக பேசிய ஒரகடம் அடுத்த பண்ருட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் சாமுவேல் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
ஒரகடம்:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஏலக்காய்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ். இவருடைய மகள் ஷீபா (வயது 25), இவர் குன்னவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஷீபாவின் குடும்பத்தினர் ஷீபாவை காணவில்லை என ஒரகடம் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் ஷீபாவிடம் யார் யார் செல்போனில் பேசி உள்ளனர் என்ற விவரத்தை போலீசார் சேகரித்தனர்.
ஷீபாவிடம் கடைசியாக பேசிய ஒரகடம் அடுத்த பண்ருட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் சாமுவேல் (வயது 26) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சாமுவேலும் ஷீபாவும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து பழகி வந்ததாகவும் திருமணம் செய்து கொள்ளும்படி சாமுவேலிடம் ஷீபா கூறிவந்தார்.
இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ஷீபா காதலன் சாமுவேலுடன் காரில் பல்வேறு இடங்களுக்கு சென்றார். வெளியே சென்று விட்டு வீடு திரும்பியபோது சுங்குவார்சத்திரத்தை அடுத்த கோவலவேடு ஏரி பகுதிக்கு ஷீபாவை அழைத்துசென்று அங்கு வைத்து ஷீபாவின் கழுத்தை டிஷர்ட் மூலம் நெரித்து கொலை செய்ததும் உடலை ஏரியின் மதகுப்பகுதியில் வீசிவிட்டு சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த கொலை சம்பவம் குறித்து தொடர்ந்து காதலன் சாமுவேலிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- வாடகை வீடு எடுத்து கணவன்- மனைவி போல வாழ்க்கையை தொடங்கினார்கள்.
- கொலையுண்ட பெண்ணின் உடலில் சில உறுப்புகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள மீராரோடு பகுதியை சேர்ந்தவர் மனோஜ்ச கானி (வயது 56). இவர் போரிவிலி பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.
இந்த நிலையில் இவருக்கும் அகமத் நகரை சேர்ந்த சரஸ்வதி வைத்யா (36) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. சரஸ்வதி யாரும் இல்லாத அனாதை என்பதால் அவருக்கு மனோஜ் ஆறுதலாக இருந்து வந்தார். 2 பேருக்கும் இடையே 20 வயது வித்தியாசம் என்றாலும் அதையும் மீறி அவர்களுக்குள் இடையே கள்ளக்காதல் உருவானது. தினமும் தனியாக சந்தித்து தங்கள் உறவை வளர்த்து வந்தனர். பின்னர் இருவரும் தாலி கட்டாமல் குடும்பம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக மீராரோடு கீதா நகரில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 7- வது மாடியில் வாடகைக்கு வீடு எடுத்து கணவன்- மனைவி போல வாழ்க்கையை தொடங்கினார்கள்.
கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் ஒன்றாக வசித்தனர். இந்தநிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அடிக்கடி 2 பேருக்கும் இடையே சண்டை மூண்டது. இதனால் காதலி மீது மனோஜ் சகானி வெறுப்பு அடைந்தார். தினமும் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்ததால் சரஸ்வதி வைத்யாவை போட்டு தள்ள அவர் முடிவு செய்தார்.
சம்பவத்தன்று 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு வெடித்ததால் ஆத்திரம் அடைந்த மனோஜ் சகானி காதலி சரஸ்வதி வைத்யாவை சரமரியாக அடித்து உதைத்தார். அரிவாளாலும் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சரஸ்வதி பரிதாபமாக இறந்தார். எங்கே போலீசில் சிக்கி விடுவோமோ? என மனோஜ் பயந்தார். அவரது மனதில் கொடூரமான எண்ணம் உதித்தது. அதன்படி சரஸ்வதி உடலை மரம் அறுக்கும் எந்திரத்தால் துண்டு துண்டாக வெட்டினார்.
கை,கால்கள், விரல்கள் என உடல் உறுப்புகள் அனைத்தையும் தனியாக துண்டித்து எடுத்தார். பின்னர் அந்த உடல் உறுப்புகளை ஒரு பெரிய குக்கரில் போட்டு அடுப்பில் வேக வைத்தார். தடயங்களை அழிக்க அவர் பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டார்.
ஆனால் சம்பவம் நடந்து 2 நாட்களுக்கு பிறகு அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதை தாங்க முடியாத அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பொதுமக்கள் ஏதோ விபரீதம் நடந்து இருக்கிறது என நினைத்து நயாநகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மனோஜ் சகானி தங்கி இருந்து வீட்டு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர்.
அப்போது அங்கு சரஸ்வதி வைத்யா அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் வெட்டி எடுக்கப்பட்டு பாதியாக இருந்தது.
சமையல் அறையில் இருந்த குக்கரில் வேக வைத்த நிலையில் இருந்த உடல் உறுப்புகளை போலீசார் மீட்டனர். ஒரு பாலிதீன் கவரில் அந்த உறுப்புகளை சுற்றி ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்த மனோஜ் சகானியை போலீசார் கைது செய்தனர். கொலையுண்ட பெண்ணின் உடலில் சில உறுப்புகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதனால் அந்த உறுப்புகளை மனோஜ் ஏதாவது ஒரு இடத்தில் புதைத்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதுபற்றி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ன காரணத்துக்காக இந்த கொடூர கொலை நடந்தது என தெரியவில்லை.
டெல்லியில் கடந்த ஆண்டு மே மாதம் ஷ்ரத்தா வாக்கர் (வயது 26) என்ற பெண் காதலன் அப்தாப் பூனாவாலா என்பவரால் கொல்லப்பட்டார். தாலி கட்டாமல் அவர்கள் குடும்பம் நடத்தினார்கள். அப்போது ஷரத்தா வாக்கர் தன்னை திருமணம் செய்ய காதலனை வற்புறுத்தினார். இதனால் ஏற்பட்ட தகறாரில் அப்தாப் காதலியை கழுத்தை நெரித்து கொன்றார்.
பின்னர் ஷரத்தா உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்தார். 3 வாரம் அதில் வைத்து இருந்த காதலியின் உடல் உறுப்புகளை பின்னர் பிளாஸ்டிக் பையில் சுற்றி குப்பைத்தொட்டி, நீர் நிலைகள், வனப்பகுதியில் வீசினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்திகளை படித்த மனோஜ் அதே போன்று கொலை செய்ய திட்டமிட்டதாவும்,அதனால் காதலி உடலை துண்டு துண்டாக வெட்டியதாகவும் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகலாம் என தெரிகிறது.
- ஒரு சில பாகங்களை நாய்களுக்கு மனோஜ் உணவாக போட்டு விட்டதால் மற்ற பாகங்கள் என்ன ஆனது என தெரியவில்லை.
- தாலிகட்டாமல் வாழ்ந்தாலும் எங்களது வாழ்க்கை இனிமையாக சென்றது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே 36 வயது காதலியை 56 வயதுடைய காதலர் மனோஜ் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி உறுப்புகளை குக்கரில் வேக வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காதலியை கொன்றது குறித்து அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார். போலீசாரிடம் அவர் கூறியதாவது:-
எனக்கு சொந்த ஊர் போரி விலி ஆகும். 10 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை இறந்து விட்டார். தாயும் இப்போது இல்லை. நான் கோரே பகுதியில் பால் பண்ணை வைத்து இருந்தேன். பல ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை அதிகாரிகள் எனது பண்ணையை அகற்றி விட்டனர்.
இதனால் போரி விலி மேற்கு பகுதியில் உள்ள ரேஷன்கடையில் வேலை பார்த்தேன். அந்த சமயம் நியூமும்பை வாஷி பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு செல்வேன். 2010-ம்ஆண்டு மார்க்கெட்டில் அகமத் நகரை சேர்ந்த சரஸ்வதி வைத்யாவை பார்த்தேன். அவர் என்னிடம் தான் ஒரு அனாதை என்று கூறினார். இதனால் அவர் மேல் எனக்கு இரக்கம் ஏற்பட்டது. நானும் பெற்றோரை இழந்து தவித்ததால் சரஸ்வதி வைத்யாவை வீட்டில் வேலைக்கு உதவிக்காக அழைத்துச்சென்றேன்.
நான் அவளை ஒரு மகள் போல பார்த்துக்கொண்டேன். நாளடைவில் அவள் என்னை காதலிக்க தொடங்கினாள். பின்னர் எங்களுக்குள் காதல் வளர்ந்தது. இதனால் கணவன்- மனைவி போல வாழ ஆசைப்பட்டு கடந்த 5 ஆண்டுக்கு முன்பு மீரா ரோட்டில் உள்ள கீதா அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினோம். 2 ஆண்டுகள் கழித்து அதே கட்டிடத்தில் 7- வது மாடியில் உள்ள வீட்டில் குடிபெயர்ந்தோம்.
தாலிகட்டாமல் வாழ்ந்தாலும் எங்களது வாழ்க்கை இனிமையாக சென்றது. இந்த நிலையில் தான் எனக்கு வேலைபறிபோனது. வருமானத்துக்கும் கஷ்டப்பட்டோம். அப்போது தான் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் நான் நிம்மதி இழந்தேன். இதனால் அவளை விட்டு வைத்தால் நன்றாக இருக்காது என நினைத்தேன். கடந்த 4-ந்தேதி எங்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. உடனே நான் அவளை அடித்து உதைத்தேன். இதில் அவள் இறந்து விட்டாள்.
பயந்து போன நான் என்ன செய்வது என தெரியாமல் விழித்தேன். அப்போது தான் டெல்லியில் காதலன் ஒருவர் காதலி ஷரத்தா வாக்கரை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்தது நினைவுக்கு வந்தது.நாமும் அதேபோல செய்தால் என்ன? என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இதற்காக மரம் அறுக்கும் ரம்பம் மற்றும் கத்தியை வாங்கி வந்தேன்.
சரஸ்வதி உடலை முதலில் 3 துண்டுகளாக வெட்டினேன். இதனால் வீடு முழுவதும் ரத்தம் வழிந்தது. அந்த ரத்தத்தை வாளியில் தண்ணீர் எடுத்து கழுவினேன்.
உடல் உறுப்புகளை ரம்பம், கத்தியால் சிறிது சிறிதாக வெட்டி குக்கரில் வேக வைத்தேன்.அதனை வெந்நீரில் கழுவினேன். எங்கள் குடியிருப்புக்கு பக்கத்தில் தான் ரெயில்வே தண்டவாளம் உள்ளது.அங்கு எப்போதும் நாய்கள் நிறைய இருப்பதை பார்த்து இருக்கிறேன்.குக்கரில் வேக வைத்த உறுப்புகளை எடுத்துசென்று அந்த நாய்களுக்கு உணவாக போட்டேன். சம்பவத்தன்றும் நான் இதற்காக வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தேன்.
அந்த சமயம் அடுக்குமாடி குடியிருப்பு நுழைவுவாயிலில் நின்று கொண்டிருந்த போலீசார் என்னை கைது செய்து விட்டனர். அவர்களிடம் சரஸ்வதி விஷம் குடித்து விட்டு தற்கொலை செய்தாக கூறினேன். போலீசுக்கு பயந்து போய் தான் இதனை வெளியில் சொல்லாமல் அவள் உடலை துண்டு துண்டாக வெட்டினேன் என சொன்னேன். ஆனால் இதனை போலீசார் நம்பவில்லை. பின்னர் நான் சரஸ்வதியை கொன்றதை ஒப்புக்கொண்டேன்.
இவ்வாறு மனோஜ் சனோ தனது வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மனோஜ் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. தனக்கு எய்ட்ஸ் இருந்ததால் அதன் பாதிப்பு சரஸ்வதிக்கும் இருக்கும் என்றும் ஒருவேளை தான் இறந்து விட்டால் அவளுக்கு ஆதரவாக யார் இருப்பார்கள்? எனக்கருதியும் இந்த கொடூர கொலையை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் காதலி நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை தீர்த்துக்கட்டி இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. இப்படி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
கைதான மனோஜ் சனோவை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். அவரை 16-ந்தேதி வரை போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த விசாரணையின் போது கொலைக்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவரும்
கொலையுண்ட சரஸ்வதியின் உடலை 20 துண்டுகளாக மனோஜ் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பாதி உடல் பாகங்களை தான் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதனை போர்வை மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி போலீசார் எடுத்து சென்று ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஒரு சில பாகங்களை நாய்களுக்கு மனோஜ் உணவாக போட்டு விட்டதால் மற்ற பாகங்கள் என்ன ஆனது என தெரியவில்லை. அதனை கழிவறைக்குள் வீசி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அந்த பாகங்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.