search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குடியில்  வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
    X

    ஆலங்குடியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

    • பாண்டிச்செல்வம் ஆலங்குடி அருகே உள்ள டி.களபம் ஊராட்சி ஓமங்கொல்லைப்பட்டி கிராமத்தில் தாய் மாமன் கருப்பையா மகன் துரை என்பவரின் வீட்டில் வசித்து வந்தார்.
    • விவசாயம் செய்தும் வந்த அவர் அதே கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.


    புதுக்கோட்டை:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா ஜெயங்கொண்டாம் ஊராட்சியை சேர்ந்தவர் பாண்டிச்செல்வம் (வயது 23). இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள டி.களபம் ஊராட்சி ஓமங்கொல்லைப்பட்டி கிராமத்தில் 2 வயது முதல் தனது தாய் மாமன் கருப்பையா மகன் துரை என்பவரின் வீட்டில் வசித்து வந்தார். ஐ.டி.ஐ. முடித்து விட்டு அவரது வீட்டில் தங்கியிருந்தார்.

    இந்நிலையில் ஆடு, மாடுகள் மேய்த்தும், விவசாயம் செய்தும் வந்த அவர் அதே கிராமத்தில் வீட்டின் அருகே உள்ள பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்குள் ஏற்பட்ட மன வருத்தத்தில் அதே கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் ஏணியில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இந்நிலையில் இறந்தவரின் தந்தை ஆலங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஆலங்குடி போலீஸ் அழகம்மை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.





    Next Story
    ×