என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாடாலூரில் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
- செல்வம்அங்குள்ள ஒருவரது தோட்டத்தில் குடிசை அமைத்து குடும்பத்துடன் வசித்து வந்தார்
- கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் ( வயது 38). விவசாய கூலி தொழிலாளியான இவர் அங்குள்ள ஒருவரது தோட்டத்தில் குடிசை அமைத்து குடும்பத்துடன் வசித்து வந்தார்.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
மீண்டும் குடும்பம் நடத்த அழைத்த பின்னரும் அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த செல்வம் சறுக்கு பாறை பாலம் அருகே விஷம் குடித்து இறந்து கிடந்தார். அக்கம் பக்கத்து தோட்டக்காரர்கள் இன்று பாடாலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story