என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mallikarjuna Kharge"
- புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை.
- இந்திய கூட்டணி வெற்றி பெற்ற பிறகு நாங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.
புதுச்சேரியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று பிரசாரம் மேற்கொண்டார். புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு கட்சியின் தேசிய தலைவர் ஆதரவு திரட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
நாங்கள் எதைச் சொன்னாலும், வாக்குறுதி அளித்தாலும் அதைச் செய்வோம். ஆனால் பிரதமர் மோடி செய்ய மாட்டார். காங்கிரஸ், ராகுல் காந்தி, சோனியா காந்தியால் மட்டுமே செய்ய முடியும்.
புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை.
நேற்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை புதுச்சேரி மக்களின் அபிலாஷைகளை அப்பட்டமாக புறக்கணிப்பதாக உள்ளது.
காங்கிரஸ் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. 2024 தேர்தலில் இந்திய கூட்டணி வெற்றி பெற்ற பிறகு நாங்கள் வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரயில்வேயில் 3 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்களை பாஜக அரசு ஏன் நிரப்பவில்லை?
- இந்திய ரெயில்வேவை தனியார்மயமாக்கும் பெரும் திட்டத்தை மோடி அரசு ஏற்கனவே தொடங்கிவிட்டது
மோடியின் ஆட்சியில் ரயில்வேதுறை சுய விளம்பரத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது. மோடியின் 3டி செல்ஃபி பாயின்ட்கள் மற்றும் வந்தே பாரத் நிகழ்வின் பச்சைக் கொடிகளை காட்டி வேண்டுமென்றே ரெயில்வே துறையை சீரழித்துள்ளது பாஜக என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் ரயில்வே துறை பற்றிய 7 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
1. ரயில்வேயில் 3 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்களை பாஜக அரசு ஏன் நிரப்பவில்லை? இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தில் இடஒதுக்கீடு பெறக்கூடிய SC, ST, OBC, EWS மக்களுக்கு பாஜக எதிரானதா?
2. 2013-14 காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ரயில் பயணத்தில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பயணியின் சராசரி விலை 0.32 பைசாவில் இருந்து 2023ல் 0.66 பைசாவாக இருமடங்காக உயர்ந்தது ஏன் ?
3. 2017 மற்றும் 2021 க்கு இடையில் 1,00,000 க்கும் மேற்பட்ட ரயில் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன. கிட்டத்தட்ட 300 பேரின் விலைமதிப்பற்ற உயிரைப் பறித்த கொடிய ஒடிசா ரெயில் விபத்து (2023) இந்த பட்டியலில் இல்லை. ரெயில்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளாமல் தடுக்கக்கூடிய எதிர்ப்பு தொழில்நுட்பம் ரெயில்வே நெட்வொர்க்கில் 2.13% மட்டுமே உள்ளது என்பது உண்மையல்லவா?
4. கொரோனா பொது முடக்கத்தான் போது , மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சலுகைகளை மோடி அரசு ஏன் திரும்பப் பெற்றது? இதன் மூலம் ஒரே ஆண்டில் ₹2242 கோடியை மோடி அரசு கொள்ளையடித்தது.
5. CAG அறிக்கையின் படி, ₹58,459 கோடியில் 0.7% நிதி மட்டுமே ரெயில்வே பாதை புதுப்பித்தலுக்கு செலவிடப்பட்டது ஏன்? இதுவே, மோடி அரசாங்கத்தால் கூறப்படும் 180 கிமீ வேகத்திற்குப் பதிலாக, வந்தே பாரத் அதிவேக ரெயில்களின் சராசரி வேகம் மணிக்கு 83 கி.மீ. தான்.
6. ரெயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட் உடன் இணைக்கும் நடவடிக்கை என்பது பின் வாசல் வழியாக அதன் நிதியை குறைப்பதற்கான ஒரு வழியாகும் என்பது உண்மையல்லவா ?
7. இந்திய ரெயில்வேவை தனியார்மயமாக்கும் பெரும் திட்டத்தை மோடி அரசு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பது உண்மையல்லவா ? மோடி அரசின் தேசிய ரெயில்வே திட்டத்தின் (2021) படி, அனைத்து சரக்கு ரெயில்களும் 2031க்குள் தனியார்மயமாக்கப்படும் என்றும் 750 ரெயில் நிலையங்களில் 30 சதவீதம் தனியார்மயப்படுத்தப்படும் என்று பாஜக அரசு அறிவித்துள்ளது.
லாபம் ஈட்டும் அனைத்து ஏசி பெட்டிகளும் தனியார் மயமாக்கப்படும். நஷ்டத்தில் இயங்கும் இரண்டாம் வகுப்பு பயணிகள் ரெயில்கள் மட்டுமே ரயில்வேயிடம் விடப்படும். இன்னும் கோடிக்கணக்கான இந்தியர்களின் உயிர்நாடியாக ரயில்வே உள்ளது.
ஆனால் மோடி அரசு ரெயில்வே துறையின் நிதி, பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் மலிவு விலையில் மக்கள் பயன்படுத்தும் வசதியை அழித்துவிட்டது.
2012-13ல் 79% ஆக இருந்த மெயில் ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் எண்ணிக்கை 2018-19ல் 69.23% ஆக குறைந்ததில் ஆச்சரியமில்லை.
காங்கிரஸ் கட்சி ரயில்வே துறைக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
- இந்திய பகுதிகளை ஆக்கிரமித்து சீனா அச்சுறுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி கச்சத்தீவு கதையாடலில் தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்
- சீனாவின் இந்த கேவலமான செயல்களை இந்திய மக்களாகிய நாங்கள் ஒன்றாகக் கண்டிக்கிறோம்
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டி உள்ளது. கிழக்கு அருணாச்சலில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட "ஸங்னங்" பகுதி என பெயரிட்டு சீனா அழைக்கிறது.
11 குடியிருப்பு மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 நிலப்பகுதி உள்ளிட்ட 30 இடங்களுக்கு சீனா புதிய பெயர் சூட்டியுள்ளது. ஏற்கனவே 2017, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அருணாச்சலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டி உள்ளது. தற்போது 4வது முறையாக அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு, புதிய பெயர்களை சீனா சூட்டியுள்ளது.
தற்போது 4வது முறையாக அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு, புதிய பெயர்களை சீனா சூட்டியுள்ளது. இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டி வருவதால் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"இந்திய பகுதிகளை ஆக்கிரமித்து சீனா அச்சுறுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி கச்சத்தீவு கதையாடலில் தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்.
சீனப் பிரதமருடன் குறைந்தபட்சம் 19 சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், பிரதமர் மோடியால் சீனாவின் மீது எந்த ராஜதந்திர செல்வாக்கையும் பயன்படுத்தி இந்தியப் பகுதிகளுக்கு 'மறுபெயர்' செய்யும் இந்த அபத்தத்தை நிறுத்த முடியவில்லை.
டோக்லாம் மற்றும் கால்வானுக்குப் பிறகு, லடாக்கில் 2000 சதுர கிலோமீட்டர் இந்தியப் பகுதிகளை சீன ஆக்கிரமிப்புக்குப் பிறகு, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பல அத்துமீறல்கள் நடந்த பிறகு, பிரதமர் மோடி வசதியாக சீனா மீது எந்த தவறும் இல்லை என்றார்.
"56 இன்ச்" என அழைக்கப்படும் மோடி சைனீஸ் பிளிங்கர்ஸ் அணிந்துள்ளார்!
கல்வானில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்த பிறகு, சீனர்களுக்கு இலவச பாஸ் வழங்கிய பிரதமர் மோடியை எந்த திசை திருப்பினாலும் மாற்ற முடியாது!
பல்வேறு நாடுகளின் பிரதேசங்களுக்கு உரிமை கோருவது மற்றும் பெயர் மாற்றம் செய்வதை சீனா தொடர்ச்சியாக செய்து வருகிறது.
சீனாவின் இந்த கேவலமான செயல்களை இந்திய மக்களாகிய நாங்கள் ஒன்றாகக் கண்டிக்கிறோம்.
மோடி அரசாங்கத்தால் செய்யக்கூடியது என்னவென்றால் குறைந்தபட்சம் சீனாவின் இந்த அபத்தமான செயல்கள் மற்றும் அறிக்கைகளை கடுமையாக கண்டிப்பதும்தான்" என்று பதிவிட்டுள்ளார்.
- காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன
- தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை சுதந்திரமாக செயல்பட வேண்டும்
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் முடக்கப்பட்டுள்ளது அந்த கட்சிக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய சோனியா காந்தி, "ஒருபுறம், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு பெரும் தொகை நன்கொடையாக வந்துள்ளது. மறுபுறம், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சிக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு, தேர்தல் செலவுகள் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த சவாலான சூழ்நிலையிலும் தேர்தல் பரப்புரையை திறம்பட செய்ய எங்களால் முடிந்தவற்றை செய்கிறோம்
இது நமது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் ஆகும். ஜனநாயகத்தை முடக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது என்று அவர் பேசினார்.
பின்னர் பேசிய கார்கே, "தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை சுதந்திரமாக செயல்பட வேண்டும். நியாயமான, நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் களம் சமமாக இருக்க வேண்டும். கணக்கில் வராத கட்டுக் கட்டான பணம் பாஜகவுக்கு சென்றுள்ளது. ஒரே கட்சி எல்லாவற்றையும் கைக்குள் வைத்துக்கொள்ள முயற்சித்து செயல்படுகிறது.
தேர்தல் பத்திரத்தின் மூலம், 55% நிதியை பாஜக பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி வெறும் 11% மட்டுமே பெற்றிருக்கிறது. இந்நிலையில் தான், எங்கள் வங்கி கணக்குகளையும் முடக்கி, அபாயகரமான விளையாட்டை பாஜக விளையாடியிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
- இரண்டு தேர்தல் ஆணையர் பதவியிடங்கள் காலியாக உள்ளன.
- சுதந்திர நிறுவனங்களின் திட்டமிட்ட அழிவை நாம் நிறுத்தாவிட்டால் நமது ஜனநாயக சர்வாதிகாரத்தால் அபகரிக்கப்படும்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர் பார்த்த நிலையில் தேர்தல் கமிஷனர் அருண் கோயல் நேற்று ராஜினாமா செய்தார். 2027-ம் ஆண்டு டிசம்பரில் பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
ஏற்கனவே கடந்த பிப்ரவரியில் மற்றொரு தேர்தல் கமிஷனராக இருந்த அனூப் பாண்டே ஓய்வு பெற்றார். இதையடுத்து 3 பேர் கொண்ட தேர்தல் ஆணைய குழுவில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் மட்டுமே பதவியில் உள்ளார். இரண்டு தேர்தல் ஆணையர் பதவியிடங்கள் காலியாக உள்ளன.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மத்திய அரசை கேள்வி எழுப்பி சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
தேர்தல் ஆணையமா? அல்லது தேர்தல் புறக்கணிப்பா? இன்னும் சில நாட்களில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்தியாவில் தற்போது ஒரே ஒரு தேர்தல் கமிஷனர் மட்டுமே இருப்பது ஏன்?
நான் முன்பு கூறியது போல், சுதந்திர நிறுவனங்களின் திட்டமிட்ட அழிவை நாம் நிறுத்தாவிட்டால் நமது ஜனநாயக சர்வாதிகாரத்தால் அபகரிக்கப்படும். வீழ்ச்சி அடைந்த கடைசி அரசியலமைப்பு நிறுவனமாக இந்திய தேர்தல் ஆணையம் தற்போது இருக்கும்.
மோடி அரசு பதில் அளிக்க வேண்டும்
தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடு எடுக்கும் புதிய நடைமுறை தற்போது ஆளும்கட்சிக்கும், பிரத மருக்கும் அனைத்து அதி காரங்களை வழங்கியுள்ள நிலையில் 23-ந் தேதி பதவி காலம் முடிந்த பிறகும் புதிய தேர்தல் கமிஷனரை நியமிக்காதது ஏன்?
இந்த கேள்விகளுக்கு மோடி அரசு பதில் சொல்லி நியாயமான விளக்கத்தை அளிக்க வேண்டும்.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
- இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன் கார்கேவை மம்தா பானர்ஜி முன்மொழிந்தார்.
- ஜனநாயக முறைப்படி பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. இந்த கூட்டணி தலைவர்கள் ஏற்கனவே 3 முறை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இந்த கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, ஆர்ஜேடி தலைவர் லாலு, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 28 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன் கார்கேவை மம்தா பானர்ஜி முன்மொழிந்தார். மம்தாவின் கருத்திற்கு வைகோ, உபி. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் ஆதரவளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் வேட்பாளர் குறித்து மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், "எங்களின் இலக்கு வெற்றி தான். வெற்றிக்கு பிறகு தான் பிரதமர் யார் என முடிவு செய்யப்படும். பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்ற பின் எங்களிடம் போதுமான எம்.பிகள் இருப்பார்கள். அதன் பிறகு ஜனநாயக முறைப்படி பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்" என்றார்.
- இளம் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- தெலுங்கானா மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா சட்டசபை தேர்தல் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
தெலுங்கானாவை சேர்ந்த எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் வாக்களிப்பில் சாதனை நிகழ்த்தி ஜனநாயகத்தை வலுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக இளம் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
I call upon my sisters and brothers of Telangana to vote in record numbers and strengthen the festival of democracy. I particularly urge young and first time voters to exercise their franchise.
— Narendra Modi (@narendramodi) November 30, 2023
ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில் கூறும்போது, "தெலுங்கானா சகோதர, சகோதரிகள் திரளாக வாக்களிப்பில் கலந்து கொள்ள வேண்டும். தெலுங்கானா சிறந்த கட்டமைப்புக்கு வாக்களியுங்கள். காங்கிரசை வெற்றி பெற செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தெலுங்கானா மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
- இந்திரா காந்தி மிகத் திறமையான நிர்வாகி, நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்தவர்.
- நாட்டுக்கான அர்ப்பணிப்பு குறித்து அவர் கற்றுத்தந்த பாடங்களே எனது ஒவ்வொரு அடியையும் வலுப்படுத்தி வருகிறது.
புதுடெல்லி:
இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாளையொட்டி புதுடெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கார்கே பதிவிட்டுள்ளதாவது,
"இந்திரா காந்தி மிகத் திறமையான நிர்வாகி, நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்தவர். இந்தியாவின் முதல் பெண் பிரதமரான அவர் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். அவரது பிறந்தநாளில் அவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
இந்திய மக்களின் தலைவர் இந்திரா காந்தி, நாட்டுக்கான அர்ப்பணிப்பு குறித்து அவர் கற்றுத்தந்த பாடங்களே எனது ஒவ்வொரு அடியையும் வலுப்படுத்தி வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.
- 2022 அக்டோபரில் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
- பிரியங்கா உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் அங்கமான செயற்குழு முக்கிய விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மிக்கது. அக்கட்சியின் புதிய தலைவராக 2022 அக்டோபரில் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய செயற்குழுவில், மல்லிகார்ஜுன கார்கே, சோனியாகாந்தி, ராகுல் காந்தி, மன்மோ கன்சிங் உள்ளிட்ட தலைவர்களுடன் பிரியங்கா காந்தி வதேராவும் இடம் பெற்றுள்ளார். இதையடுத்து அவர் உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஏ.கே.அந்தோனி, அம்பிகா சோனி, திக்விஜய் சிங், அஜய் மாக்கன், ப.சிதம்பரம் ஆகியோரும் புதிய செயற் குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
தீபாதாஸ் முன்ஷி, சையத் நஸீர் ஹுசைன், ஆனந்த் சர்மா, முகுல் வாஸ்னிக், சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்ட புதிய முகங்களுக்கும் செயற்குழுவில் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. சோனியாவின் தலைமைக்கு எதிராக விமர்சனங்களை எழுப்பிய சசி தரூர், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலட்டுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் சச்சின் பைலட் ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
- செங்கோட்டையில் பிரதமர் மோடி 10-வது முறையாக நேற்று கொடியேற்றினார்
- அவரது இரண்டு முறை பிரதமர் பதவி காலத்தில் கடைசி சுதந்திர தின உரை
சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். அப்போது அடுத்த முறையும் டெல்லி செங்கேட்டையில் கொடியேற்றுவேன். இந்தியாவின் சாதனைகளை நாட்டு மக்களுக்கு பட்டியலிடுவேன் எனக் கூறினார்.
மோடியின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் விமர்சன கருத்துகளை தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ''பிரதமர் மோடி அடுத்த வருடம் அவரது வீட்டில்தான் கொடி ஏற்றுவார்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது செங்கோட்டையில் மோடியின் கடைசி கொடியேற்றம் என லல்லு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க.-வின் மாநிலங்களவை எம்.பி., மல்லிகார்ஜூன கார்கே சரியாகத்தான் கூறியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தம்பிதுரை கூறுகையில் ''பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை. இந்தியாதான் அவரது குடும்பம், செங்கோட்டைதான் அவரது வீடு. பிரதமர் மோடி அடுத்த ஆண்டு அவரது வீட்டில்தான் தேசியகொடி ஏற்றுவார் என காங்கிரஸ் தலைவர் கார்கே சரியாகத்தான் கூறியுள்ளார்'' என்றார்.
- இந்தியாவின் சாதனைகளை அடுத்த வருடம் இதே இடத்தில் பட்டியலிடுவேன்- மோடி
- மோடி அவர் வீட்டில்தான் கொடியேற்றுவார்- கார்கே கிண்டல்
இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடி இன்று காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதன்பின் செங்கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, ''என்னுடைய 2-வது பிரதமர் பதவி காலத்தில் 10-வது முறையாக உரையாற்றியுள்ளேன். இந்தியா அடைந்துள்ள சாதனைகளை, அடுத்த வருடமும் இதே இடத்தில் மக்களிடம் பட்டியலிடுவேன்'' எனத் தெரிவித்தார்.
இதன்மூலம் 3-வது முறையாக பிரதமர் ஆவது உறுதி என்பதை சூசகமாக தெரிவித்தார். இந்த நிலையில் இதுகுறித்து பதில் அளித்த காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ''பிரதமர் மோடி மீண்டும் ஒருமுறை அடுத்த வருடம் செங்கோட்டையில் கொடியேற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார். அவர் அடுத்த வருடம் அவரது வீட்டில் கொடியேற்றுவார்'' எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ''மோடி செங்கோட்டையில் கொடியேற்றுவது கடைசி இதுதான் முறை'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ''சுதந்திரம் வாங்கி 75 வருடங்கள் ஆன நிலையில், இந்தியாவில் வளர்ச்சி பாராட்டத்தக்கது. ஆனால், விரும்பிய இலக்கை இன்னும் எட்டவில்லை'' என்றார்.
26-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணி மோடியை தோற்கடிக்க திட்டமிட்டுள்ளது.
- புதிய செயற்குழுவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அதிக பிரதிநிதித்துவம் இருக்கும் என்று தெரிகிறது.
- சில அதிருப்தியாளர்களை முக்கிய பொறுப்புகளில் இருந்து கழட்டி விட கார்கே திட்டமிட்டுள்ளார்.
புதுடெல்லி:
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதே உற்சாகத்துடன் 5 மாநில சட்டசபைத் தேர்தலையும் சந்திக்க தயாராகி வருகிறார்கள்.
கடந்த 3 நாட்களாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில பிரதிநிதிகளை அழைத்து ராகுல், கார்கே இருவரும் தீவிர ஆலோசனை நடத்தினார்கள். அதன்படி விரைவில் புதிய அறிவிப்புகளை வெளியிட காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சி நிர்வாகத்தில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கார்கே 8 மாதங்களுக்கு முன்பு தலைவராக பதவி ஏற்றதும் காங்கிரஸ் செயற்குழுவை மாற்றி அமைக்க முடிவு செய்தார். இளைஞர்கள், பெண்களுக்கு செயற்குழுவில் அதிக முக்கியத்துவம் கொடுக்க திட்டமிட்டுள்ளார்.
அடுத்த வாரம் செயற்குழு மாற்றம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய செயற்குழுவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அதிக பிரதிநிதித்துவம் இருக்கும் என்று தெரிகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் சச்சின் பைலட் கடும் அதிருப்தியுடன் இருக்கிறார். எனவே அருக்கு தேசிய அளவில் முக்கிய பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது. பிரியங்காவுக்கு துணைத் தலைவர் பதவி கொடுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
ஆனால் சில அதிருப்தியாளர்களை முக்கிய பொறுப்புகளில் இருந்து கழட்டி விடவும் கார்கே திட்டமிட்டுள்ளார். அது போல சில மாநில காங்கிரஸ் தலைவர்களும் மாற்றப்பட உள்ளனர். எனவே அடுத்த வாரம் காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்