என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mallikarjuna Kharge"

    • தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் SIR பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • இதுதொடர்பாக மாநில நிர்வாகிகளிடம் காங்கிரஸ் கட்சி இன்று ஆலோசனை நடத்தியது.

    புதுடெல்லி:

    தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் SIR பணிகள் தொடர்பாக மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனையை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று டெல்லியில் நடத்தினார். இதில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் வேணுகோபால் உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:

    சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறை நடைபெற்று வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அகில இந்திய காங்கிரசின் பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் செயலாளர்களுடன் விரிவான உத்தி மதிப்பாய்வை நடத்தினோம்.

    வாக்காளர் பட்டியல்களின் நேர்மையைப் பாதுகாப்பதில் காங்கிரஸ் கட்சி சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாக உள்ளது.

    ஜனநாயக நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில், SIR செயல்முறையின் போது தேர்தல் ஆணையத்தின் நடத்தை மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.


    அது பா.ஜ.க.வின் நிழலில் செயல்படவில்லை என்பதை உடனடியாக நிரூபிக்க வேண்டும்.

    அது எந்த ஆளும் கட்சிக்கும் அல்ல, இந்திய மக்களுக்கு அதன் அரசியலமைப்பு உறுதிமொழி மற்றும் விசுவாசத்தை நினைவில் கொள்ள வேண்டும்.

    பாஜக SIR செயல்முறையை வாக்கு திருட்டுக்காக ஆயுதமாக்க முயற்சிக்கிறது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

    தேர்தல் ஆணையம் வேறு வழியைப் பார்க்கத் தேர்வு செய்தால், அந்தத் தோல்வி வெறும் நிர்வாக ரீதியாக மட்டுமல்ல - அது மௌனத்தின் உடந்தையாக மாறும்.

    உண்மையான வாக்காளர்களை நீக்கவோ அல்லது போலி வாக்காளர்களைச் சேர்க்கவோ எவ்வளவு நுட்பமான முயற்சிகளை மேற்கொண்டாலும், அதை நாங்கள் அம்பலப்படுத்துவோம் என தெரிவித்தார்.

    • காங்கிரஸ் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    • மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி, கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 41-வது நினைவு நாளான இன்று காங்கிரஸ் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • 3 மத்திய அரசு நிறுவனங்களும் சேர்ந்து ரகசிய திட்டம் ஒன்றை தீட்டியதாக வாஷிங்க்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
    • எஸ்பிஐயிலிருந்து 525 கோடி ரூபாய் அதானியின் எஃப்பிஓவில் முதலீடு செய்யப்பட்டது ஏன்?

    இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) மூலம் அதானி குழுமத்துக்கு 3.9 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ.33,000 கோடி) முறைகேடாக நிதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டதாக அமெரிக்காவின் வாஷிங்கடன் போஸ்ட் பத்திரிகையின் குற்றம்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    தொடர் முறைகேடு குற்றச்சாட்டுகளால் நஷ்டமடைந்த அதானி குழுமத்தை மீட்க கடந்த மே மாதம், மத்திய நிதி அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை (DFS), LIC ஆகிய 3 மத்திய அரசு நிறுவனங்களும் சேர்ந்து ரகசிய திட்டம் ஒன்றை தீட்டியதாக வாஷிங்க்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

    இதன் ஒரு பகுதியாக மே மாத இறுதியில், கடனை தீர்க்க, அதானி குழுமத்தின் கீழ் உள்ள அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் (APSEZ) சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை வெளியிட்டபோது இதனை LIC முழுமையாக வாங்கியது.

    மேலும் இதே போல பல முதலீடு வழிகளில் LIC இன் நிதி மொத்தம் ரூ.33,000 கோடி அதானி குழுமத்திற்கு முறைகேடாக வழங்குவதே அந்த ரகசிய திட்டம் என்றும் அதற்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதலும் கிடைத்தது என்பதே வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையின் குற்றச்சாட்டாக உள்ளது.

    வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையின் குற்றச்சாட்டுகள் ஆதரமற்றவை என LIC நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகாயர்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், LIC எல்ஐசி பிரீமியத்தின் ஒவ்வொரு பைசாவையும் செலுத்தும் ஒரு சாதாரண சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்க நபருக்கு, மோடி தனது சேமிப்பைப் பயன்படுத்தி அதானியை மீட்கிறார் என்பது தெரியுமா? இது நம்பிக்கை துரோகம் இல்லையா? இது கொள்ளை இல்லையா?

    அதானியின் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட எல்ஐசி பணத்திற்கும், மே 2025 இல் ROO 33,000 கோடி முதலீடு செய்யும் திட்டத்திற்கும் மோடி அரசாங்கம் பதிலளிக்குமா?

    இதற்கு முன்பே, 2023 இல், அதானியின் பங்குகளில் 32% க்கும் அதிகமான சரிவு இருந்தபோதிலும், எல்ஐசி மற்றும் எஸ்பிஐயிலிருந்து 525 கோடி ரூபாய் அதானியின் எஃப்பிஓவில் முதலீடு செய்யப்பட்டது ஏன்?

    மோடி தனது நண்பரின் பைகளை நிரப்புவதில் மும்முரமாக இருக்கிறார். 30 கோடி எல்ஐசி பாலிசிதாரர்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை கொள்ளையடிக்கிறார்" என்று விமர்சித்துள்ளார்.

    இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா எல்ஐசியின் பதில் அறிக்கையை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, LIC India, எதை நீங்கள் பொய் என்று கூறுகிறீர்கள்?, நீங்கள் வரிசெலுத்துவோரின் ரூ.30,000 கோடியை அதானிக்கு உதவ பயன்படுத்தியதையா அல்லது அதானிக்கு நிதி வழங்க விரைந்து அனுமதி வழங்குமாறு நிதியமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுத்ததை பொய் என்று கூறுகிறீர்களா? என்று வினவியுள்ளார்.   

    • சோர்வு மற்றும் சுவாசப் பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • இதயத்தில் லேசான பாதிப்பு இருப்பதால், 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்த அறிவுறுத்தினர்.

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (83 வயது) சோர்வு மற்றும் சுவாசப் பிரச்சனைகள் காரணமாக இந்த வார தொடக்கத்தில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், இதயத்தில் லேசான பாதிப்பு இருப்பதால், 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்த அறிவுறுத்தினர்.

    இந்நிலையில் கார்கேவுக்கு நேற்றுமேற்கொள்ளப்பட்ட பேஸ்மேக்கர் பொருத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

    அவர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் தனது பணிகளை மீண்டும் தொடங்குவார் என்றும் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

    • சுதந்திரத்திற்குப் பிறகு துணை சபாநாயகர் பதவியை யாரும் காலியாக வைத்திருக்கவில்லை.
    • ஆனால் அவர் அந்தப் பதவியை காலியாக வைத்திருக்கிறார். இந்தச் செயல் சட்டவிரோதமானது.

    பெங்களூரு:

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே இன்று கலபுரகி வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    பிரதமர் மோடி எப்போதும் ஜனநாயகம், ஜனநாயகம் என்றுதான் சொல்வார். சுதந்திரத்திற்குப் பிறகு, எந்தப் பிரதமரும் துணை சபாநாயகர் பதவியை காலியாக வைத்திருக்கவில்லை, ஆனால் அவர் அந்தப் பதவியை காலியாக வைத்திருக்கிறார். மோடியின் இந்தச் செயல் சட்டவிரோதமானது, ஜனநாயக விரோதமானது.

    துணை சபாநாயகர் பதவியை, ஒரு சிறிய பதவியைக் கூட அவர் கொடுக்க விரும்பவில்லை. இது அவருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. அதனால்தான் அரசியலமைப்பின் படி அது வழங்கப்பட வேண்டும் என நான் அவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த நாட்டில் அரசாங்கம் அரசியலமைப்பின் கீழ் இயங்குகிறது என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும்.

    கடந்த 65 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். ஆனால் ஒரு பிரதமர் இவ்வளவு பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதை நான் பார்த்ததில்லை. அவர் எல்லாவற்றிலும் பொய் சொல்கிறார். அவர் ஒருபோதும் தனது தவறை ஒப்புக்கொள்ளவில்லை.

    முந்தைய அரசாங்கத்தின் பங்களிப்பு (உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் திட்டம்) பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. நான் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, அங்கும் வடகிழக்கு பகுதிக்கும் அதிகபட்ச நிதியை வழங்கினேன். நாங்கள் செய்யும் பணிகளுக்கு அவர் (பிரதமர் மோடி) அதை முன்னெடுத்துச் சென்று திறந்து வைக்கிறார் என தெரிவித்தார்.

    • கட்சிப் பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வெடுக்க வேண்டும்.
    • தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றாதவர்கள் ஓய்வு பெற வேண்டும்.

    குஜராத் மாநிலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சி பணிக்கு உதவி செய்யாதவர்கள் ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக கார்கே பேசியதாவது:-

    கட்சியின் அமைப்புகளை உருவாக்குவதில் மாவட்டத் தலைவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும். எனவே, அவர்கள் கட்சியின் வழிகாட்டுதல்களின்படி பாரபட்சமின்றி நியமனம் செய்யப்பட வேண்டும்.

    நாட்டின் அனைத்து மாவட்டத் தலைவர்களையும் மூன்று கட்டங்களாக அழைத்து பேசியுள்ளோம்.. ராகுல் காந்தியும் நானும் அவர்களுடன் பேசி அவர்களின் கருத்துக்களைப் பெற்றோம். எதிர்காலத்தில், தேர்தல்களுக்கான வேட்பாளர் தேர்வு நடைமுறையில் மாவட்டத் தலைவர்கள் ஈடுபாடு இருக்கும்.

    கட்சிப் பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வெடுக்க வேண்டும். தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றாதவர்கள் ஓய்வு பெற வேண்டும்.

    இவ்வாறு கார்கே தெரிவித்தார்.

    • ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தால் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி உறுதி.
    • அடுத்த முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும்.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான கலபுரகிக்கு நேற்று வருகை தந்தார். அவருக்கு கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கார்கே பேசியதாவது:- 


    இமாசல பிரதேச மாநில தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. அதுபோல், கர்நாடகத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக கர்நாடகத்தை சேர்ந்த நான் இருந்து வருகிறேன். எனக்கு பெருமை சேர்த்து கொடுக்கும் விதமாக கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் தீவிரமாக இருப்பார்கள். அவர்களை போன்று நம்முடைய தலைவர்களும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்து உழைத்தாலே கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி. நாம் ஒற்றுமையாக இல்லாமல் சட்டசபை தேர்தலை சந்தித்தால், அது மக்களுக்கு செய்யும் துரோகம்.

    எனக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று யாரும் இல்லை. அடுத்த முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும். அதுபோல அமைச்சரவையில் யார் இருக்க வேண்டும் என்பதையும் மேலிடம் தீர்மானிக்கும். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

    • சரத் யாதவின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் காலமானார். சரத் யாதவின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அந்த டுவிட்டர் பதிவில், " முன்னாள் அமைச்சர் சரத் யாதவின் மறைவு எனக்கு வருத்தமளிக்கிறது. பல தசாப்தங்களாக சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக நாட்டிற்கு சேவை செய்து சமத்துவ அரசியலை வலுப்படுத்தியவர். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    • தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுடனும் மல்லிகார்ஜூன கார்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
    • காங்கிரஸ் தலைவர் கார்கேயிடம் சில திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வா? சாவா? என்ற மிகப்பெரிய சவாலை உருவாக்கி இருக்கிறது. கடந்த 2 பொதுத் தேர்தல் களில் பா.ஜனதாவிடம் படு தோல்வியை தழுவிய காங்கிரஸ் கட்சி 3-வது முறையாக பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    கடந்த 2 தேர்தல்களில் ஏற்பட்ட மோசமான தோல்வி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுல் விலகி நிற்கும் நிலையில், கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே காங்கிரசுக்கு தலைமை பொறுப்பேற்று அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொண்டுள்ளார்.

    நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டினால் மட்டுமே பா.ஜனதாவை வீழ்த்த முடியும் என்ற நிர்ப்பந்தமான நிலையில் காங்கிரஸ் கட்சி சிக்கியுள்ளது. கார்கே பொறுப்பேற்றதும், இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சந்திரசேகர ராவ், சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள் அவருக்கு சாதகமான பதிலை சொல்லவில்லை.

    இதனால் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒன்று திரளுமா? என்பதில் கேள்வி குறி எழுந்தது. இந்நிலையில் சமீபத்தில் ராகுல் காந்தியிடம் இருந்து எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக 19 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு பாராளுமன்றத்திலும், பாராளுமன்ற வளாகத்திலும் போராட்டங்கள் நடத்தின.

    ராகுல் பதவி பறிப்பு விவகாரத்தில் கைகோர்த்த எதிர்க்கட்சிகளை அப்படியே பாராளுமன்றத் தேர்தல் வரை ஒருங்கிணைத்து கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் 2 தினங்களுக்கு முன்பு தொடங்கின.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பேசத் தொடங்கி உள்ளார். குறிப்பாக மாநிலங்களில் பலத்த செல்வாக்குடன் இருக்கும் கட்சிகளுடன் கார்கே பேசி இப்போதே ஒரு முடிவுக்கு வர திட்டமிட்டுள்ளார். அதன்படி அவர் இந்த வார தொடக்கத்தில் இருந்து பேச்சு வார்த்தையை தொடங்கி உள்ளார்.

    தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுடனும் மல்லிகார்ஜூன கார்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நாடு முழுவதும் உள்ள எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

    எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும்போது ஏற்படும் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கார்கே விவாதித்ததாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, தெலுங்கானா கட்சிகளை எப்படி பேசி சமாளிப்பது என்றும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

    காங்கிரஸ் தலைவர் கார்கேயிடம் சில திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. எனவே எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் காங்கிரசுக்கு மிக முக்கிய பலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்வார் என்று கருதப்படுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேசிய பிறகு பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோருடனும் மல்லிகார்ஜூன கார்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். விரைவில் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய கூட்டம் நடத்த கார்கே ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.

    • தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு குண்டு வைத்து கொல்லப்பட்டார்.
    • ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    டெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    முன்னதாக ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் மே 21-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தில் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு குண்டு வைத்து கொல்லப்பட்டார் என்பது நினைவு கூறத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு உபகரணங்களை அமைக்க வேண்டும்.
    • ரெயில்வேயில் உள்ள காலி பணியிடங்கள் 9 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பது ஏன்?

    புதுடெல்லி:

    ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இந்திய வரலாற்றில் மிக மோசமான ரெயில் விபத்தாக பாலசோர் ரெயில் விபத்து உள்ளது. இந்திய ரெயில்வேயில் 4 சதவீத வழித்தடங்களில் மட்டுமே 'கவாச்' பாதுகாப்பு கருவி பொருத்தப்பட்டு இருப்பது ஏன்? ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு உபகரணங்களை அமைக்க வேண்டும். ரெயில்வேயில் உள்ள காலி பணியிடங்கள் 9 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பது ஏன்?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, "ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் ரெயில் விபத்தை சதி எனக்கூறிய பிரதமர் மோடி இப்போது என்ன சொல்லப் போகிறார்" என்று கூறினார்.

    • புதிய செயற்குழுவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அதிக பிரதிநிதித்துவம் இருக்கும் என்று தெரிகிறது.
    • சில அதிருப்தியாளர்களை முக்கிய பொறுப்புகளில் இருந்து கழட்டி விட கார்கே திட்டமிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதே உற்சாகத்துடன் 5 மாநில சட்டசபைத் தேர்தலையும் சந்திக்க தயாராகி வருகிறார்கள்.

    கடந்த 3 நாட்களாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில பிரதிநிதிகளை அழைத்து ராகுல், கார்கே இருவரும் தீவிர ஆலோசனை நடத்தினார்கள். அதன்படி விரைவில் புதிய அறிவிப்புகளை வெளியிட காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது.

    இதற்கிடையே காங்கிரஸ் கட்சி நிர்வாகத்தில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கார்கே 8 மாதங்களுக்கு முன்பு தலைவராக பதவி ஏற்றதும் காங்கிரஸ் செயற்குழுவை மாற்றி அமைக்க முடிவு செய்தார். இளைஞர்கள், பெண்களுக்கு செயற்குழுவில் அதிக முக்கியத்துவம் கொடுக்க திட்டமிட்டுள்ளார்.

    அடுத்த வாரம் செயற்குழு மாற்றம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய செயற்குழுவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அதிக பிரதிநிதித்துவம் இருக்கும் என்று தெரிகிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் சச்சின் பைலட் கடும் அதிருப்தியுடன் இருக்கிறார். எனவே அருக்கு தேசிய அளவில் முக்கிய பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது. பிரியங்காவுக்கு துணைத் தலைவர் பதவி கொடுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

    ஆனால் சில அதிருப்தியாளர்களை முக்கிய பொறுப்புகளில் இருந்து கழட்டி விடவும் கார்கே திட்டமிட்டுள்ளார். அது போல சில மாநில காங்கிரஸ் தலைவர்களும் மாற்றப்பட உள்ளனர். எனவே அடுத்த வாரம் காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.

    ×