என் மலர்
நீங்கள் தேடியது "Dalit"
- 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு முனிராஜ் என்பர் காதலிக்குமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார்.
- போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராமேஸ்வரத்தில் காதலை ஏற்காமல் பேச மறுத்த நிலையில் பள்ளிக்கு சென்ற 12-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தன்னை காதலிக்குமாறு முனிராஜ் என்பவன் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்து காதலிக்க வற்புறுத்தியும் மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த முனிராஜ் கத்தியால் மாணவியை குத்தியுள்ளான். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து அறிந்து வந்த ராமேஸ்வரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற முனிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி மாணவியைப் பட்டியலின இளைஞர் கொன்றதாக இணையத்தில் பரவிய செய்தி வதந்தி என்று தமிழ்நாடு சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இராமேஸ்வரத்தில் இன்று (19.11.2025 பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட விவகாரத்தில் முனிராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. கைதான நபரும் கொல்லப்பட்ட மாணவியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை விளக்கமளித்துள்ளது. வெறுப்புப் பிரச்சாரம் செய்வது சட்டப்படி குற்றம்!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிராக கொடுமைகள், கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
- இன்று காலை, என்னைச் சந்திக்கக் கூடாது என அந்தக் குடும்பத்தை என்று அரசாங்கம் மிரட்டியது.
கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி தலித் சமூகத்தை சேர்ந்த ஹரிஓம் வால்மீகி (38 வயது) என்ற நபர் தனது உறவினரின் கிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது கும்பல் ஒன்றால் வழிமறிக்கப்பட்டார்.
வால்மீகி, திருட்டு கேங் -ஐ சேர்ந்தவர் என குற்றம்சாட்டி அந்த கும்பல் சரமாரியாக அடித்துள்ளது. இதில் வால்மீகி உயிரிழந்தார். அடுத்தநாள் காலை கிராமத்தினரால அங்கு அவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் வீடியோ வைரலான நிலையில் திருட்டு வதந்தியின் பேரில் தலித் நபர் அடித்துக் கொல்லப்பட்டது அம்மாநில அரசியலிலும் எதிரொலித்தது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் மக்களவை எதிர்கட்சித் தலைவரும் ரேபரேலி தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு ரேபரேலியில் உள்ள பதேபூர் கிராமத்திற்கு சென்று, வால்மீகியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதன்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சில நாட்களுக்கு முன் அரியானாவில் ஒரு தலித் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். நான் அங்கு சென்றேன், இன்று இங்கே வந்திருக்கிறேன். இந்த குடும்பம் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை. அவர்களுக்கு எதிராக ஒரு குற்றம் இழைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களே குற்றவாளிகளைப் போலத் நடத்தப்படுகிறார்கள்.

அவர்களை வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் கேட்பதெல்லாம் நீதி மட்டும்தான். 'எங்கள் மகன் கொல்லப்பட்டார். இந்த கொலை வீடியோவில் பதிவாகியுள்ளது. எங்களுக்கு நீதி வேண்டும்...' என்று கேட்கிறார்கள்.
இந்த குடும்பத்தில் பெண் இருக்கிறார், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும், ஆனால் அரசாங்கம் அவர்களை வீட்டுக்குள் பூட்டி வைத்திருப்பதால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை.
நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிராக கொடுமைகள், கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதலமைச்சரிடம் (யோகி ஆதித்யநாத்) நான் கேட்பதெல்லாம், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் மதிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், மாறாக குற்றவாளிகள் பாதுகாக்கப்படக் கூடாது.

இன்று காலை, என்னைச் சந்திக்கக் கூடாது என அந்தக் குடும்பத்தை என்று அரசாங்கம் மிரட்டியது. பாதிக்கப்பட்ட குடும்பம் என்னைச் சந்திக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல, ஆனால் இவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பதுதான் முக்கியம்.
அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் இறந்தவரின் குடும்பத்தை சந்தித்து, அவர்கள் சொல்வதைக் கேட்டேன். காங்கிரஸ் கட்சியும் நானும் அந்தக் குடும்பத்திற்கு முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம்.
நாட்டில் எங்கெல்லாம் தலித்துகளுக்கு எதிராகக் கொடுமைகள் நடக்குமோ, அங்கெல்லாம் காங்கிரஸ் இருக்கும், நாங்கள் அனைத்து உதவிகளையும் செய்வோம், நீதிக்காகப் போராடுவோம்." என்று தெரிவித்தார்.
- தலித் ஐபிஎஸ் அதிகாரி மீது உயர் போலீஸ் அதிகாரிகள் சாதி பாகுபாடு காட்டியுள்ளனர்.
- ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மீது தற்கொலை கடிதத்த்தில் பூரன் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
அரியானாவின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) பூரன் குமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அக்டோபர் 7 ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில், சண்டிகர் செக்டார் 11-ல் உள்ள அவரது அரசு குடியிருப்பு வீட்டின் அடித்தளத்தில், தனது சர்வீஸ் ரிவால்வரால் சுட்டுக்கொண்டு அவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.
தலித் ஐபிஎஸ் அதிகாரியான பூரன் குமார் மீது உயர் போலீஸ் அதிகாரிகள் சாதி பாகுபாடு காட்டியது தான் அவரின் தற்கொலைக்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பூரன் குமார் தனது தற்கொலை கடிதத்தில், ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மற்றும் எஸ்பி நரேந்திரன் உட்பட 8 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சாதி ரீதியிலான பாகுபாடு கட்டியதாகவும் மனரீதியாக துன்புறுத்தி அவமானப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே பூரன் குமாரின் மனைவியும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான அம்னீத் குமார், தனது கணவரின் தற்கொலைக்கு காரணமாக ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரை எப்ஐஆரில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து அரியானா டிஜிபி சத்ருஜீத் கபூருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- பட்டியலின மாணவர்களை பொது பாதையில் செல்லக்கூடாது என ஆதிக்க சாத்தினார் தடுக்கின்றனர்.
- மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு எடுக்காமல் அலட்சியம் செய்வதாக புகார்
தஞ்சை ஒன்றியம், கொல்லாங்கரை கிராமத்தில் பள்ளி செல்லும், பட்டியலின மாணவர்களை பொது பாதையில் செல்லக்கூடாது என ஆதிக்க சாதியினர் தடுக்கும் அராஜகம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின், கலைச்செல்வி பாலசுப்பிரமணியன் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பை மீறி பள்ளி மாணவர்கள் பொது பாதையை பயன்படுத்தினர்.
கலைச்செல்வி பாலசுப்பிரமணியன் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், "தஞ்சை ஒன்றியம், கொல்லாங்கரை கிராமத்தில், காலம்காலமாக பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த, பொது பாதையினை, சாதிய ஆதிக்கத்தின் பெயரில், பள்ளி செல்லும், பட்டியலின மாணவர்களை பொது பாதையில் செல்லக்கூடாது என தடுக்கும் அராஜகம்....... சிபிஐ(எம்),தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில், மிக வன்மையாக கண்டிக்கிறோம்!
மாவட்ட நிர்வாகத்திடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நிரந்தர தீர்வு எடுக்காமல் அலட்சியம் காட்டியது மென்மேலும் வன்முறையை அதிகரிக்கச் செய்கிறது!" என்று பதிவிட்டுள்ளார்.
- திருமண மண்டபத்திற்குள் தடிகளுடன் நுழைந்து அந்த கும்பல் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.
- அந்த கும்பல் சாதிய அவதூறுகளைப் பேசியது.
தலித் குடும்பம் மண்டபத்தில் திருமணம் நடத்துவதா என கொந்தளித்த சாதிவெறி பிடித்த கும்பல் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் வெள்ளிக்கிழமை இரவு திருமண மண்டபத்திற்குள் தடிகளுடன் நுழைந்து அந்த கும்பல் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மண்டபத்தில் திருமணத்தை நடத்துவீர்களா என்று கேட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்களின் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் அமன் சாஹ்னி, தீபக் சாஹ்னி, ராகுல் மற்றும் அகிலேஷ் ஆவர். இவர்களைத் தவிர, குற்றம் சாட்டப்பட்டவர்களில் அடையாளம் தெரியாத சுமார் 20 பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த கும்பல் சாதிய அவதூறுகளைப் பேசி, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருமண மண்டபத்தை விழாவிற்குப் பயன்படுத்துவதை எதிர்த்துள்ளது.
அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை நடந்து வருவதாக ரஸ்ரா காவல் நிலைய பொறுப்பாளர் விபின் சிங் தெரிவித்தார்.
- இதற்கு மறுநாள் அந்த கும்பல் மீண்டும் வந்து மணமகளின் வீட்டை கட்டைகளால் தாக்கி, குடும்ப உறுப்பினர்களை அடித்து துன்புறுத்தினர்.
- குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர், ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் தலித் திருமண ஊர்வலத்தில் ஆதிக்க சாதியினர் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, மதுராவின் நௌஜ்ஹீல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூரேகா கிராமத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்ணான கல்பனா, அலிகரில் உள்ள நாக்லா பதம் கிராமத்தில் வசிக்கும் ஆகாஷ் ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்தது.
அன்று நள்ளிரவு 12:30 மணியளவில், திருமண ஊர்வலம் DJ பாடல் இசையுடன் நடந்துகொண்டிருந்தபோது, அண்டை கிராமத்திலிருந்து ஜாட் சமூகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உட்பட சுமார் 20-25 பேர் அங்கு வந்தனர். அவர்கள் DJ இசையை நிறுத்த சொல்லி மிரட்டியதாக தெரிகிறது. ஆனால் திருமண வீட்டார் அதற்கு மறுக்கவே அந்த நபர்கள் சாதிய ரீதியாக தூஷணம் செய்து வன்முறைத் தாக்குதலைத் தொடங்கினர்.
ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களை தடிகளாலும் இரும்பு கம்பிகளாலும் அந் கும்பல் தாக்கியது. மணமகனை குதிரை வண்டியிலிருந்து அவரது காலரைப் பிடித்து கீழே இழுத்து தரையில் தள்ளி தாக்குதல் நடத்தினர். மேலும் மீண்டும் வண்டியில் ஏறி திருமண ஊர்வலத்தை நடத்தினால் சுட்டுவிடுவோம் என்று மிரட்டினர்.
தகவலறிந்து போலீசார் வந்தபோது, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. திருமணச் சடங்குகள் காவல்துறையினரின் முன்னிலையில் நிறைவடைந்தன. இரவு முழுவதும் எட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கு மறுநாள் அந்த கும்பல் மீண்டும் வந்து மணமகளின் வீட்டை கட்டைகளால் தாக்கி, குடும்ப உறுப்பினர்களை அடித்து, வீட்டுப் பொருட்களையும் சேதப்படுத்தினர். பெண்களும் அநாகரீகமாக நடத்தப்பட்டனர். காயமடைந்த குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலித் பாதுகாப்பு 'பீம் ஆர்மி' ஊழியர்கள் வந்ததும், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதுதொடர்பான புகாரின் பேரில் ஜாட் சமூக இளைஞர்கள் மூவர் உட்பட 20-25 அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைத் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர், ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை. புகார் பெறப்பட்டுள்ளதாகவும், வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் துணைப்பிரிவு காவல் அதிகாரி குஞ்சன் சிங் தெரிவித்தார்.
- கோயில் புனிதம் இழந்துவிட்டதாகவும், அதனால் தான் அங்கு கங்கை நீரைத் தெளித்து மீண்டும் பூஜை செய்வேன் என்றும் கூறினார்.
- ஞான்தேவ் அஹுஜா, அந்த கோவிலில் கங்கை நீரை தெளிக்கும் வீடியோ வைரலானது.
ராஜஸ்தானில் தலித் தலைவர் வந்து சென்றபின் கங்கை நீரை தெளித்து கோவிலை சுத்தப்படுத்திய பாஜக மூத்த தலைவர் ஞான் தேவ் அஹுஜா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கடந்த வாரம் ராம நவமி தினத்தன்று, ஆல்வாரில் உள்ள ஒரு ராமர் கோவிலில் பிராண-பிரதிஷ்ட விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் காங்கிரசை சேர்ந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திகா ராம் ஜூலியும் பங்கேற்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஞான்தேவ் அஹுஜா மறுநாள் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், ராமர் இருப்பதை மறுப்பவர்களின் வருகையால் கோயில் புனிதம் இழந்துவிட்டதாகவும், அதனால் தான் அங்கு கங்கை நீரைத் தெளித்து மீண்டும் பூஜை செய்வேன் என்றும் கூறினார்.
இதற்குப் பிறகு, ஞான்தேவ் அஹுஜா, அந்த கோவிலில் கங்கை நீரை தெளிக்கும் வீடியோ வைரலானது. இதற்கு ராஜஸ்தான் காங்கிரஸ் கடும் ஆட்சேபனை தெரிவித்தது.
"இது எனது தனிப்பட்ட நம்பிக்கை மீதான தாக்குதல் மட்டுமல்ல, தீண்டாமை என்ற மனிதாபிமானமற்ற மனநிலையை ஊக்குவிக்கும் செயல். அரசியலமைப்புச் சட்டத்திற்கும் சமூக நீதிக்கும் நேரடி அவமதிப்பாகும்" என்று திகா ராம் ஜூலி தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் தனது எக்ஸ் பக்கத்தில், '21 ஆம் நூற்றாண்டில் ஒரு நாகரிக சமூகத்தில் இத்தகைய குறுகிய மனப்பான்மை ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த சிந்தனையுடன் உடன்படுகிறதா என்று பாஜக பதிலளிக்க வேண்டும்?" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சர்ச்சை வலுத்ததால் ஞான்தேவ் அஹுஜாவை பாஜக கட்சியில் இருந்து இன்று இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் ஞான்தேவ் அஹுஜா தனது செயலுக்கு மூன்று நாட்களுக்குள் எழுத்துபூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவ்வாறு விளக்கம் அளிக்கத் தவறினால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- அங்கிதா மற்றும் அஜய் ஆகியோர் கோவிலில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
- கோவில் பூசாரி நாகேந்திர செல்வால் கோவில் கதவுகளை பூட்டியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வாலில், கோவில் வளாகத்தில் தலித் தம்பதியினரின் திருமணத்திற்கு அனுமதி மறுத்த பூசாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்..
மார்ச் 5 ஆம் தேதி அங்கிதா மற்றும் அஜய் ஆகியோர் கோவிலில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். அப்போது கோவில் பூசாரி நாகேந்திர செல்வால் கோவில் கதவுகளை பூட்டிவிட்டு அவர்களை சாதி ரீதியாக திட்டியுள்ளார். இதனால் அந்த தம்பதியால் அன்று திருமணம் செய்து கொள்ள முடியவில்லை.
கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி மணமகளின் தந்தை மார்ச் 12 அன்று புகார் அளித்ததைத் தொடர்ந்து, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- ராகுல் காந்தி, இந்தியாவில் தலித்துகள், முஸ்லிம்கள் பரிதாபகரமான நிலையில் இருப்பதாக கருத்து தெரிவித்தார்.
- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
லக்னோ :
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் தலித்துகள், முஸ்லிம்கள் பரிதாபகரமான நிலையில் இருப்பதாக கருத்து தெரிவித்தார்.
அவரது கருத்தை உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி ஒப்புக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், " காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது, கோடிக்கணக்கான தலித்துகள் மற்றும் முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலை, அவரது வாழ்க்கைக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பது குறித்து குறிப்பிட்டுள்ளார். அவர் கூறி இருப்பது கசப்பான உண்மை ஆகும். இதற்கு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் பிற கட்சிகள்தான் பொறுப்பு ஆவார்கள்" என கூறி உள்ளார்.
- மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை
- பேருந்து ஓட்டுநர் சசிக்குமார், நடத்துநர் ரகு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, மூதாட்டியை பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை அரங்கேறியுள்ளது.
பட்டியல் பிரிவைச் சேர்ந்த பாஞ்சாலை என்கிற மூதாட்டியை நடுவழியில் இறக்கிவிட்டதால் அடுத்த பேருந்து நிலையம் வரை நடந்து சென்ற அவலம் ஏற்பட்டுள்ளது.மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை
இது சம்பந்தமாக, வீடியோ வெளியான நிலையில், பேருந்து ஓட்டுநர் சசிக்குமார், நடத்துநர் ரகு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
- பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, மூதாட்டியை பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை
- ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் இன்று மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு
மாட்டிறைச்சி கொண்டு சென்றதால் பேருந்திலிருந்து மூதாட்டி இறக்கிவிடப்பட்ட விவகாரத்தில், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் இன்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை அரங்கேறியுள்ளது.
இது சம்பந்தமாக, வீடியோ வெளியான நிலையில், நேற்று பேருந்து ஓட்டுநர் சசிக்குமார், நடத்துநர் ரகு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
- பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை
- பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம். பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையுமில்லை.
மாட்டிறைச்சி கொண்டு சென்றதால் பேருந்திலிருந்து மூதாட்டி இறக்கிவிடப்பட்ட விவகாரத்தில், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் இன்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை அரங்கேறியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அதில், "அரசு பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்வது குற்றமில்லை. பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம். பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையுமில்லை. மாட்டிறைச்சி கொண்டு சென்ற மூதாட்டி பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட விவகாரத்தில் 5 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும், "மலைப் பகுதிகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் நாளை உதகையில் தொடங்கப்பட உள்ளது. அதேபோன்று மற்ற மலைப் பகுதிகளில் படிப்படியாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. 500 மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.






