என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டியலினதவர்"

    • 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு முனிராஜ் என்பர் காதலிக்குமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார்.
    • போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராமேஸ்வரத்தில் காதலை ஏற்காமல் பேச மறுத்த நிலையில் பள்ளிக்கு சென்ற 12-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தன்னை காதலிக்குமாறு முனிராஜ் என்பவன் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்து காதலிக்க வற்புறுத்தியும் மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த முனிராஜ் கத்தியால் மாணவியை குத்தியுள்ளான். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    சம்பவம் குறித்து அறிந்து வந்த ராமேஸ்வரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற முனிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பள்ளி மாணவியைப் பட்டியலின இளைஞர் கொன்றதாக இணையத்தில் பரவிய செய்தி வதந்தி என்று தமிழ்நாடு சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாடு சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இராமேஸ்வரத்தில் இன்று (19.11.2025 பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட விவகாரத்தில் முனிராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. கைதான நபரும் கொல்லப்பட்ட மாணவியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை விளக்கமளித்துள்ளது. வெறுப்புப் பிரச்சாரம் செய்வது சட்டப்படி குற்றம்!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பட்டியலின, பழங்குடியினத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்க தடையில்லை என்று கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
    • உச்சநீதிமன்ற தீர்ப்பை தங்களின் கட்சி ஏற்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    பட்டியலின, பழங்குடியினத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்க தடையில்லை என்று கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. பட்டியலினத்தவரின் உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் உள் ஒதுக்கீடு, அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவை மீறவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    தமிழ்நாடு, பஞ்சாப் அரியானா மாநிலங்களில் உள் ஒதுக்கீடு வழங்கியது தொடர்பான வழக்கில் 7 நீதிபதிகள் அமர்வில் 6 நீதிபதிகள் இந்த ஒருமித்த தீர்ப்பை வழங்கி உள்ளனர். தமிழக முதலவர் ஸ்டாலின்  உள்ளிட்ட  பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர். தமிழகத்தில் அருந்ததியினருக்கு வழங்கப்பட 3 சதவீத உள் ஒதுக்கீடு செல்லும் என்றும் இந்த தீர்ப்பின்மூலம் உறுதியாகியுள்ளது.

    இந்நிலையில் பட்டியலினத்தவர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை தங்களது அரசியல் கொள்கையாக முன்னிறுத்தும் பகுஜன் சமாஜ் கட்சி உச்சநீதிமன்ற தீர்ப்பை நிராகரித்துள்ளது.

    இதுகுறித்து பேசிய உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி, ஒட்டுமொத்தமாக ஒரு குளுவாகவே பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டுள்ளனர். தற்போது அவர்களுக்கிடையில் உட்பிரிவுகளை ஏற்படுத்துவது சரியானதல்ல. சட்டரீதியாகவே இடஒதுக்கீட்டை ஒழிக்க அரசு முயல்கிறது. அதில் தற்போது பாதி வெற்றியும் கண்டுள்ளது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை தங்களின் கட்சி ஏற்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

    • தனது குடும்பத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு மாதத்துக்கு முன்பே போலீசில் புகார் அளித்திருந்தார்
    • சந்தன் வர்மா என்னிடம் அத்துமீற முயற்சித்தபோது மறுத்ததால் கன்னத்தில் அறைந்து சாதி பெயரை சொல்லி திட்டினான்.

    உத்தரப் பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் குடும்பத்தோடு வீடு புகுந்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பி மாநிலம் அமேதியில் பவானி நகர் பகுதியில் வீடு ஒன்றில் வசித்து வந்த அரசுப் பள்ளி ஆசிரியர் சுனில் குமார் [35 வயது], அவரது மனைவி பூனம் பாரதி மற்றும் இரு மகள்கள் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

    தனது குடும்பத்துக்கு சந்தன் வர்மா என்ற நபரால் அச்சுறுத்தல் இருப்பதாக மனைவி பாரதி ஒரு மாதத்துக்கு முன்பே போலீசில் புகார் அளித்திருந்ததும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம், உடல் நிலை சரியில்லாத தனது மகளுக்கு மருந்து வாங்குவதற்காக ரேபரேலியில் உள்ள மருத்துவமனைக்கு பாரதியும் அவரது கணவர் சுனில் குமாரும் சென்றுள்ளனர்.

    மருத்துவமனையில் சந்தன் வர்மா என்ற நபர் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக பாரதி தனது புகாரில் தெரிவித்துள்ளார். சந்தன் வர்மா என்னிடம் அத்துமீற முயற்சித்தபோது மறுத்ததால் என்னைக் கன்னத்தில் அறைந்தான், அப்போது அங்கு வந்த கணவரையும் என்னையும் சாதி பெயரை சொல்லி திட்டினான்.

    நடந்ததைப் போலீசில் சொன்னால் குடும்பத்தே கொன்று விடுவதாக மிரட்டினான். எனவே எங்களது உயிருக்கு சந்தன் வர்மாவால் அச்சுறுத்தல் உள்ளது என்று SC/ST பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பாரதி கடந்த மாதம் போலீசில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால் போலீஸ் அதை அலட்சியம் செய்ததாலேயே தற்போது இந்த கொலைகள் நடத்தக்கதாக கண்டனம் எழுந்துள்ளது. குற்றவாளிகள் இன்னும் கண்டறியப்படாத நிலையில் கொலைகளுக்கு விரைந்து நீதி வழங்கப்படும் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

     

    • அவருக்கு சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்தது.
    • ஞானஸ்நானத்திற்குப் பிறகு அவர் தன்னை ஒரு இந்து என்று அடையாளம் காண முடியாது.

    உண்மையான நம்பிக்கை இல்லாமல் இட ஒதுக்கீடு பெரும் ஒற்றை நோக்கத்தோடு மட்டுமே மதம் மாறுவது அரசியலமைப்பை மோசடி செய்வதாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அரசு பணி இட ஒதுக்கீட்டைப் பெற தன்னை இந்து எனக்கூறி பட்டியலின வகுப்பு [SC] சாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளார். புதுச்சேரியில் அப்பர் டிவிஷன் கிளார்க் பணிக்கு விண்ணப்பிப்பதற்காக அவர் இந்த சான்றிதழைக் கோரியுள்ளார். ஆனால் அவருக்குச் சான்றிதழ் மறுக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. ஆனால் அவருக்கு சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்தது. எனவே அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த மேல்முறையீடு மனுவானது நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள், மனுதாரர் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகிறார் என்பதற்கும் தேவாலயத்திற்குத் தவறாமல் செல்வதன் மூலம் மத விசுவாசத்தை தீவிரமாக கடைப்பிடிப்பதையும் முன்வைக்கப்பட்ட சான்றுகள் தெளிவாக நிரூபிக்கின்றன.

     

    ஆனால் தன்னை இந்துவாக முன்னிறுத்தி வேலைவாய்ப்புக்காகப் பட்டியலின சாதி சான்றிதழ் கேட்கிறார். இந்த இரட்டை நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது. ஞானஸ்நானத்திற்குப் பிறகு அவர் தன்னை ஒரு இந்து என்று அடையாளப்படுத்த முடியாது.

    கிறிஸ்தவராக இருந்து இட ஒதுக்கீடு பெறும் நோக்கத்திற்காக மட்டுமே இந்து மதத்தைத் தழுவுவதாகக் கூறுபவருக்குப் பட்டியலின சான்றிதழ் வழங்குவது இட ஒதுக்கீட்டின் நோக்கத்திற்கு எதிரானது மட்டுமின்றி அரசியலமைப்பையே மோசடி செய்வதாகும் என்று கூறி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர்.

    ×