என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரப் பிரதேசம்"

    • குற்றவாளிகள் இருவரும் ஆத்திரமடைந்தனர்.
    • உங்கள் வீடு எங்கே இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும், உங்களை விடமாட்டோம்.

    2024 ஆம் ஆண்டு கார் ஏற்றி ஒருவரை கொலை செய்த வழக்கில், உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நிஜேந்திர குமார் இன்று தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெய்தீப் மற்றும் பிந்து சவுகான் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

    தண்டனை விவரத்தை நீதிபதி அறிவித்தவுடன், குற்றவாளிகள் இருவரும் ஆத்திரமடைந்து நீதிமன்ற அறையிலேயே நீதிபதியை மிரட்டனர்.

    "உங்கள் வீடு எங்கே இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும், உங்களை விடமாட்டோம்" என்று அவர்கள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தனர்.

    குற்றவாளிகளின் இந்த மிரட்டலைத் தொடர்ந்து, நீதிபதிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சங்க்ராம் சிங் தெரிவித்துள்ளார்.

    நீதிமன்றதிலேயே நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளிகள் மீது கூடுதல் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.   

    • ஒரு லாரியில் ஏற்றிச் செல்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • 2026-2027 கல்வியாண்டிற்காக விநியோகிக்க அச்சிடப்பட்ட சுமார் 13,595 பாடப்புத்தகங்கள் அதில் இருந்தன.

    உத்தரப் பிரதேசத்தில் 13,000 அரசுப் பள்ளி பாடப்புத்தகங்கள் பழைய பேப்பர் கடைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

    பிப்ரவரி 17 அன்று, பழைய பேப்பர் வியாபாரி ஒருவர் அரசுப் பாடப்புத்தகங்களை சட்டவிரோதமாக வாங்கி, ஒரு லாரியில் ஏற்றிச் செல்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அண்டை மாவட்டமான லக்கிம்பூரில் அந்த லாரியை போலீசார் மடக்கிப் பிடித்தனர். லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    2026-2027 கல்வியாண்டிற்காக 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்க அச்சிடப்பட்ட சுமார் 13,595 பாடப்புத்தகங்கள் அதில் இருந்தன.

    அவை சட்டவிரோதமாக உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு விற்கப்படவிருந்தது தெரியவந்தது.

    இந்த முறைகேடு தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகளான ஷபீக் அகமது மற்றும் அலோக் குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    மேலும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் சிங் மற்றும் பயிற்றுவிப்பாளர் அதுல் குமார் சிங் ஆகியோர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    பழைய பேப்பர் வியாபாரி மற்றும் லாரி உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தகங்கள் லாரியில் பிடிபட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  

    • வீட்டில் இரண்டு பெண்களும் ஐந்து குழந்தைகளும் மட்டுமே இருந்துள்ளனர்.
    • இறுதியில் கிரில் கதவுகளை அறுத்து எடுத்தே அவர்கள் மீட்கப்பட்டனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

    மீரட்டில் உள்ள இக்பால் என்பவரது வீட்டில் தரைத்தளம் துணிகளை சேமித்து வைக்கும் கிடங்காகவும், மேல்தளம் குடியிருப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

    நேற்று மாலை இக்பாலும் அவரது சகோதரரும் தொழுகைக்காக வெளியே சென்றிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த நேரத்தில் வீட்டில் இரண்டு பெண்களும் ஐந்து குழந்தைகளும் மட்டுமே இருந்துள்ளனர்.

    மேல்தளத்தில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென தீ பரவியது. வெளியேறும் பாதையில் தீயும் புகையும் சூழ்ந்ததால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை.

    தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி 5 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 5 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். 

    வீடு அமைந்திருந்த பகுதி மிகவும் குறுகலாக இருந்ததால், தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அருகில் செல்ல முடியவில்லை. நீண்ட தூரத்தில் வாகனங்களை நிறுத்தி, குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்துத் தீயை அணைத்தனர்.

    பாதுகாப்புக்காக ஜன்னல்களில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கிரில் கதவுகளால், உள்ளே இருந்தவர்களால் வெளியே குதிக்கவோ அல்லது பொதுமக்கள் உள்ளே சென்று காப்பாற்றவோ முடியவில்லை. இறுதியில் கிரில் கதவுகளை அறுத்து எடுத்தே அவர்கள் மீட்கப்பட்டனர்.

    தீ விபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மின் கசிவு காரணமா அல்லது கிடங்கில் இருந்த துணிகளில் தீ பிடித்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மக்கள் வசிக்கும் பகுதியில் அனுமதியின்றி கிடங்கு நடத்தியதற்காகவும், அங்கு தீயணைப்பு பாதுகாப்பு வசதிகள் இல்லாததாலும் வீட்டின் உரிமையாளர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    காயமடைந்த மற்றொரு நபர் மீரட் மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    • சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி வாரணாசியில் தனது வித்யா மடம் ஆசிரமத்தில் தங்கியிருந்த சிறுவர்களை 5வது மாடியில் வைத்து துன்புறுத்தினார்.
    • வீடியோ ஆதாரங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் வாக்குமூலத்தை போக்சோ நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

    உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிரபல சாமியார், சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி.

    சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி வாரணாசியில் தனது வித்யா மடம் ஆசிரமத்தில் தங்கியிருந்த 'சிறுவர்'களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார்கள் எழுந்தன.

    ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி முக்தி நிர்மான் அறக்கட்டளையின் தலைவர் அசுதோஷ் பிரம்மாச்சாரி மஹாராஜ் மற்றும் சிலர் இணைந்து போலீசில்  இதைப்பற்றி புகார் அளித்தனர்.

    ஆனால் பிரயாக்ராஜ் காவல்துறையினர் இந்த வழக்கைப் பதிவு செய்ய மறுத்ததால், அசுதோஷ் நீதிமன்றத்தை நாடினார்.

    அவரது புகார் மனுவில், வித்யா மடத்தில் தங்கியிருந்த சிறுவர்கள், அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதியால், அந்த மடத்தின் 5வது மாடியில் வைத்து பாலியல் துன்புறுத்ததலுக்கு ஆளாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    மேலும் இதற்கான வீடியோ ஆதாரங்கள் அடங்கிய சி.டியை சமர்ப்பித்து, பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு சிறுவர்களை நீதிமன்றத்தில் அசுதோஷ் ஆஜர்படுத்தினார்.

     மேலும், அவிமுக்தேஸ்வரானந்தர் தனது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகவும், ஆன்மீகப் பணியின் போர்வையில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனுவை பிரயாக்ராஜ் சிறப்பு போக்சோ நீதிமன்றம் இன்று விசாரித்தது. சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் வாக்குமூலங்களை நீதிமன்றம் ஆய்வு செய்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி வினோத் குமார், சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை ஏற்றுக்கொண்டு, காவல்துறை இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ சட்டத்தின் பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி மீது FIR பதிவு செய்ய காவல்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். 

    • ராம் பவன், துர்காவதி தம்பதி 10 வருடங்களாக இயங்கி வந்தனர்
    • சிறுவர்கள் பாலியல் உறுப்புகளில் பலத்த காயங்கள்,கண் கோளாறுகள்,உளவியல் ரீதியான அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

    உத்தரப் பிரதேச நீர்ப்பாசன துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றிய வந்தவர் ராம் பவன். இவரது மனைவி துர்காவதி.

    சித்ரகூட் நகரை சேர்ந்த இவர்கள் கடந்த 2010 முதல் 2020 வரையிலான 10 வருட காலகட்டத்தில் உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல சிறுவர்களை கடத்தி பாலியல் செயல்களில் ஈடுபடுத்தி அதை படம் பிடித்து டார்க் வெப் உள்ளிட்ட சட்டவிரோத இணயதளங்களுக்கு விற்று வந்துள்ளனர்.

    3 வயது முதல் 16 வயது வரையிலான 33 சிறுவர்கள் இவர்களால் கடத்தப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

    ராம் பவன், குழந்தைகளுக்கு ஆன்லைன் வீடியோ கேம்கள், பணம், பரிசுகள் கொடுத்து ஆசை காட்டி அவர்களை தனது வலைக்குள் வீழ்த்தியுள்ளார்.

    சில சிறுவர்கள் பாலியல் உறுப்புகளில் பலத்த காயங்கள்,கண் கோளாறுகள், உளவியல் ரீதியான அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட சிறார் பாலியல் வீடியோக்களை சிபிஐ அதிகாரிகள் கண்காணித்தபோதுதான் ராம் பவன், துர்காவதி தம்பதி சிக்கியுள்ளது.

    இந்தப் பாலியல் வீடியோக்கள் மற்றும் படங்கள் என்கிரிப்ட் செய்யப்பட்ட தளங்கள் மூலம் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்டது உறுதியானது.

    2020 அக்டோபரில் வழக்குப் பதிவு செய்த சிபிஐ, அடுத்த சில மாதங்களிலேயே குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

    அவர்கள் மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த கடந்த 6 ஆண்டுகளாக பாண்டா போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

    33 சிறுவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, வீடியோ உள்ளிட்ட ஆதரங்கள் சிபிஐ தரப்பில் சமர்பிக்கப்பட்டன.

    இந்நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை அரிதினும் அரிதான வழக்கு என்று கூறிய நீதிமன்றம், ராம் பவன் மற்றும் துர்காதேவி இருவருக்கும் மரண தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

    மேலும் மாநில மற்றும் மத்திய அரசுகள் தலா ரூ. 10 லட்சம் வீதம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தம்பதியின் வீட்டில் இருந்து சிபிஐ பறிமுதல் செய்த ரொக்கப் பணத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமமாகப் பிரித்து வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    • அதிகாலை 4 மணியளவில் நகைகள் வழங்கும் சடங்கு நடைபெற்றுள்ளது.
    • ஒரு மாதத்திற்கு முன்பு ஆர்ய சமாஜத்தில் திருமணம் முடிந்துவிட்டது

    உத்தரப் பிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தில் சுமித் கேஷர்வானி, தனு கேசர்வானி என்ற ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (பிப்.18) கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் மாலைமாற்றும் சடங்கு உள்ளிட்ட சில திருமண சடங்குகள் நிகழ்ந்துள்ளது. மணமகளின் குடும்பத்தினர் பிரயாக்ராஜிலிருந்து பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் மண்டபத்திற்கு வந்துள்ளனர்.

    மணமகன் தரப்பு பாரம்பரிய திருமண ஊர்வலத்துடன் திருமண மண்டபத்திற்கு வந்துள்ளனர். அதிகாலை 4 மணியளவில் நகைகள் வழங்கும் சடங்கு நடைபெற்றுள்ளது. அப்போது சிறிது தூரத்தில் கட்டப்பட்டிருந்த மணமகள் வீட்டு செல்லநாயான 'சிக்ஸர்' குறைத்துள்ளது.

    சடங்குநேரத்தில் குறைத்துக் கொண்டிருந்ததால் மணமகன் வீட்டார் நாயை அடித்துள்ளனர். இதனைப்பார்த்து ஆத்திரமடைந்த மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    வாய்மோதல் கைகலப்பாக மாற இரு தரப்பினரும் நாற்காலிகள் மற்றும் தடிகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் மணமகள் உட்பட சுமார் 8 பேர் காயமடைந்தனர். மணமகளுக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது, மேலும் மணமகள் தரப்பைச் சேர்ந்த சிலருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததாக கூறப்படுகிறது. மணமகன் தரப்பைச் சேர்ந்த ஒன்றிரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

    மோதல் குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து, இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பேசியுள்ளனர். அப்போது கருணை இல்லாத குடும்பத்தில் தன்னால் வாழ முடியாது எனக் கூறி மணமகள் திருமணத்தை நிறுத்தக் கூறியுள்ளார். இதனையடுத்து இரு வீட்டாரும் சீர் வரிசைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு சமரசமாகப் பிரிந்து சென்றனர்.

    இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இந்த ஜோடி ஏற்கனவே காதலர்கள். ஒரு மாதத்திற்கு முன்பு ஆர்ய சமாஜத்தில் திருமணம் செய்திருந்த நிலையில், முறைப்படி குடும்பத்தினர் முன்னிலையில் நடத்தப்பட்ட சடங்கின் போது இந்த விபரீதம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அறுவை சிகிச்சைக்கு பிறகு பிரியங்காவிற்கு அதீத இரத்தப்போக்கு ஏற்பட்டது.
    • யோகேஷின் தந்தை ஓய்வுபெற்ற வார்டு பாய்.

    உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிற்கு அருகே அம்பேத்கர் நகரில் புக்கியா என்ற கிராமத்தில் நவஜீவன் என்ற பெயரில் தனியார் கிளினிக் ஒன்று இயங்கி வந்துள்ளது.

    கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி பிரியங்கா என்ற 28 வயது பெண், பிரசவத்திற்காக இந்த கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார்.

    அப்பெண்ணுக்கு யோகேஷ் வர்மா (32) என்ற பி.ஏ. பட்டதாரியும் சுப்ளம் விஸ்வகர்மா (19) என்ற 12-ஆம் வகுப்பு மாணவரும் சேர்ந்து சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதில் பிரியங்காவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

    ஆனால் அறுவை சிகிச்சைக்கு பிறகு பிரியங்காவிற்கு அதீத இரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக அவர் லக்னோவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த நவஜீவன் கிளினிக் கடந்த 5 ஆண்டுகளாக உரிய அனுமதி அல்லது பதிவு இன்றி இயங்கி வந்தது அம்பலமாகியுள்ளது. தற்போது அந்த மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

    யோகேஷ் மற்றும் சுப்ளம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். யோகேஷின் தந்தை ஓய்வுபெற்ற வார்டு பாய் என்பதால், அவரிடம் உதவியாளராக இருந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு யோகேஷ் இது போன்ற சிகிச்சைகளைச் செய்து வந்துள்ளார்.

    மருத்துவமனையை நடத்தி வந்த ரூபி என்ற பெண் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைப் போலீசார் தேடி வருகின்றனர். 

    • இன்னும் பல பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் உள்ளது
    • இறுதி வாக்காளர் பட்டியல் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகிறது.

    உத்தரப் பிரதேசத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கான காலக்கெடுவை தேர்தல் ஆணையம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. அதன்படி மார்.6ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். அதே நேரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியிடப்படும்.

    லக்னோவில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது உத்தரப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா இந்த செய்தியை உறுதிப்படுத்தினார்.

    உத்தரப் பிரதேசத்தில் எஸ்ஐஆர் பணிகள் அக்டோபர் 27-ஆம் தேதி தொடங்கிய நிலையில் வாக்காளர் கணக்கெடுப்பு நவம்பர் 4 முதல் ஜனவரி 6 வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளுக்கான கால அவகாசம் ஜனவரி 6 முதல் பிப்ரவரி 6 வரை வழங்கப்பட்டது.

    இதுவரை பெயர்களை நீக்குவதற்காக படிவம் 7-இன் மூலம் 82,684 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேசமயம், பெயர்களைச் சேர்ப்பதற்காக படிவம் 6-ஐப் பயன்படுத்தி சுமார் 37.8 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்த வாக்காளர்கள் படிவம் 6A-இன் மூலம் விண்ணப்பிக்கலாம்; இதுவரை 1,076 புலம்பெயர்ந்த வாக்காளர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ரின்வா தெரிவித்துள்ளார்.

     "சுமார் 1.40 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வரைவுப் பட்டியலில் இருந்தபோதிலும், அவை வரைபடமாக்கப்படவில்லை (not mapped). அதேசமயம், 2.22 கோடி வாக்காளர்கள் வரைபடமாக்கல் பணியை முடித்திருந்தாலும், அவற்றில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது போன்ற அனைத்து வழக்குகளிலும் தற்போது நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    ஒட்டுமொத்தமாக, 3.26 கோடி வாக்காளர்களுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட வேண்டியுள்ளது. இதுவரை 2.37 கோடி நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன, அவற்றில் 86.27 லட்சம் நோட்டீஸ்கள் ஏற்கனவே உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. கிட்டத்தட்ட 30 லட்சம் வழக்குகளில் விசாரணை நிறைவடைந்துள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு, கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் பிப்ரவரி 6-லிருந்து மார்ச் 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அதுவரை பெயர் சேர்த்தல், நீக்கல் அல்லது விவரங்களில் திருத்தம் செய்வதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தச் சிறப்பு திருத்தப் பணியின் கீழான இறுதி வாக்காளர் பட்டியல் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியிடப்படும்.

    வாக்காளர்களுக்கு உதவும் வகையில், அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் இருப்பார்கள்." என தெரிவித்தார். 

    மேலும் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவிற்கு முன்னரும் அனைத்து ஆட்சேபனைகளும் முறையாக ஆய்வு செய்யப்படும். இன்னும் பல பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பொதுமக்கள் முன்வந்து பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

    மேலும், எதிர்காலத்தில் வீட்டில் இருந்தபடியே எளிதாக ஆன்லைன் மூலம் திருத்தங்களை மேற்கொள்வதற்கு வசதியாக, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரின் எழுத்துக்கள் ஆதார் அட்டையில் உள்ளது போலவே இருப்பதை உறுதி செய்யுமாறு அவர் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தினார். 

     

    • 24 மணிநேரமும் கொரிய இசை மற்றும் நாடகங்களை மட்டுமே பார்த்து வந்துள்ளனர்.
    • மூவரும் தங்கள் குடியிருப்பின் 9 வது மாடியில் இருந்து குதித்து செய்துகொண்டனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இந்திராபுரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 12, 14, 16 வயதுடைய மூன்று சகோதரிகள் தங்கள் பெற்றோருடன் வசித்து வந்தனர்.

    இவர்கள் நீண்ட காலமாகத் தங்களை ஒரு அறைக்குள் தனிமைப்படுத்திக் கொண்டு, கொரிய மொழி கற்பது, கொரிய உணவுகளை உண்பது மற்றும் 24 மணிநேரமும் கொரிய இசை மற்றும் நாடகங்களை மட்டுமே பார்த்து வந்துள்ளனர்.

    இவர்களின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு பெற்றோர் கண்டித்துள்ளனர். அவர்களின் மொபைல் போன்களை புரிந்துள்ளனர். இதனால் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மூவரும் தங்கள் குடியிருப்பின் 9 வது மாடியில் உள்ள வீட்டில் தங்கள் அறையில் உள்ள ஜன்னல் வழியே   குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

    டைரியில் கண்டெடுக்கப்பட்ட அவர்களின் தற்கொலைக் கடிதத்தில் "நாங்கள் சாகப்போவதில்லை; இந்த உடல் ரீதியான உலகத்தை விட்டு வெளியேறி, எங்களின் உண்மையான தேசமான தென்கொரியாவிற்குச் செல்கிறோம். இந்தியாவின் வாழ்க்கை முறை, உணவு மற்றும் சமூகக் கட்டுக்கோப்புகள் எங்களுக்குப் பிடிக்கவில்லை.

    நாங்கள் கொரியர்களாகவே வாழ விரும்புகிறோம். எங்கள் ஆன்மா ஏற்கனவே கொரியாவில் தான் வசிக்கிறது; இந்த உடலையும் அங்கேயே கொண்டு சேர்க்கப் போகிறோம்.

    எங்களை கொரியாவிற்கு அனுப்ப நீங்கள் மறுத்துவிட்டீர்கள். எங்கள் போன்களைப் பறித்து எங்களைச் சிறை வைத்தீர்கள். இனி எங்களால் இங்கே வாழ முடியாது" என்று எழுதி மூவரும் கொரிய மொழியில் கையெழுத்திட்டுள்ளனர்.

    அவர்களின் லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை ஆய்வு செய்ததில், அவர்கள் சில ஆன்லைன் கொரிய குழுக்களுடன் தொடர்பில் இருந்ததும், அங்கு தற்கொலை எண்ணங்களைத் தூண்டும் விதமான கருத்துகள் பகிரப்பட்டதும் தெரியவந்துள்ளது.

    நிஜ வாழ்க்கையின் கவலைகளில் இருந்து தப்பிக்க இணைய உலகையே உண்மையான வாழ்க்கையாகக் கருதும் இந்த போக்கு ஒரு தீவிரமான ஆன்லைன் அடிமைத்தனம் (Online Escapism) என்று மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

    • கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்த பெண் ரூ.20 லட்சம் இழப்பீடு கோரினார்.
    • இரயில்வே நிர்வாகம் தாமதத்தை ஒப்புக்கொண்டது, ஆனால் அதற்கான சரியான காரணத்தை நிரூபிக்கத் தவறிவிட்டது

    உத்தரப் பிரதேசத்தில் 2 மணி நேரம் தாமதமாக வந்த ரயிலால் கல்லூரி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை தவறவிட்ட பெண்ணுக்கு, ரூ.9.10 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை ரயில்வேத்துறை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் அல்லது கூடுதலாக 12% வட்டியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.

    உத்தரபிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சம்ரிதி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு மே.7ஆம் தேதியன்று லக்னோவில் நடந்த தனது கல்லூரி சேர்க்கைக்கான பிஎஸ்சி பயோடெக்னாலஜி நுழைவுத் தேர்வைத் தவறவிட்டார். சம்ரிதிக்கு லக்னோவில் உள்ள ஜெய் நாராயண் பி.ஜி கல்லூரியில் தேர்வு நடைபெற்றுள்ளது. இதற்காக பஸ்தி ரயில் நிலையம் வந்த சம்ரிதி, 11 மணிக்கு லக்னோ சென்றுவிடலாம் என நினைத்துள்ளார். தேர்வு 12.30 மணிக்கு. இந்நிலையில் இன்டர்சிட்டி சூப்பர்ஃபாஸ்ட் ரயில் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்துள்ளது.

    இதனால் சரியான நேரத்திற்கு தேர்வு மையத்திற்கு செல்லமுடியவில்லை. தேர்வு எழுத முடியாமல் போனதால் அந்த வருடம் சம்திரியால் கல்லூரியில் சேரமுடியாமல் போயுள்ளது. இதனையடுத்து செப்டம்பர் 11, 2018 அன்று மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்த சம்ரிதி ரூ.20 லட்சம் இழப்பீடு கோரியுள்ளார்.

    தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது நுகர்வோர் நீதிமன்றம். ரயில்வே சேவையில் குறைபாடு இருந்ததையும், தாமதத்திற்கான முறையான காரணத்தை ரயில்வே விளக்கத் தவறியதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.  

    இதுதொடர்பாக பேசிய சம்ரிதியின் வழக்கறிஞர் பிரபாகர் மிஸ்ரா,

    இரயில் தாமதம் காரணமாக அவரால் சரியான நேரத்திற்குத் தேர்வு மையத்தை அடைய முடியவில்லை, இதனால் அவரது முழு கல்வி ஆண்டும் வீணானது. இந்த நீண்ட சட்டப் போராட்டம் மிகவும் சோர்வளிப்பதாக இருந்தாலும் அவசியமான ஒன்றாக இருந்தது என்றார்.

    மேலும் "இரயில்வே நிர்வாகம் தாமதத்தை ஒப்புக்கொண்டது, ஆனால் அதற்கான சரியான காரணத்தை நிரூபிக்கத் தவறிவிட்டது. எனவே, நீதிமன்றம் ஒரு கணிசமான அபராதத்தை விதித்துள்ளது," என்று அவர் கூறினார்.

    • இரண்டாவது மாடியில் இருந்த அந்த ஜோடி அங்கிருந்த ஜன்னல் வழியாக திடீரென கீழே குதித்தனர்.
    • தற்போது அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உத்தரப் பிரதேசத்தில் இந்துத்துவா கும்பலின் அச்சறுத்தலால் பயந்துபோன ஒரு இளம் காதல் ஜோடி மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஷாஜஹான்பூரில் நேற்று ஒரு pizza கடை உணவகத்தின் இரண்டாவது மாடியில் அந்த இளைஞரும் இளம்பெண்ணும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த ஒரு இந்துத்துவா கும்பலை சேர்ந்தவர்கள் அந்த ஜோடியைச் சூழ்ந்துகொண்டு கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளனர்.

    அவர்கள் தங்களைத் தாக்குவார்களோ என்ற பயத்தில், இரண்டாவது மாடியில் இருந்த அந்த ஜோடி அங்கிருந்த ஜன்னல் வழியாக திடீரென கீழே குதித்தனர்.

    கீழே விழுந்ததில் அந்த இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    தற்போது அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.  

    • பெண் ஒருவரை காதலித்து வந்ததால் நீட் தேர்வில் வென்று மருத்துவ படிப்பில் சேர்ந்தால் மட்டுமே அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும்
    • சூரஜ்க்கு சிகிச்சை முடிந்ததும் அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    உத்தரப் மாநிலம் ஜான்பூரை சேர்ந்த 20 வயதான சூரஜ் பாஸ்கர் என்ற மாணவர் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்காக படித்து வந்தார்.

    ஏற்கனவே 2 முறை நீட் தேர்வில் தோற்ற அவர் அடுத்த முறை எப்படியும் வென்று விட வேண்டும் என தீவிரமாக இருந்துள்ளார்.

    சூரஜ், பெண் ஒருவரை காதலித்து வந்ததால் நீட் தேர்வில் வென்று மருத்துவ படிப்பில் சேர்ந்தால் மட்டுமே அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நிர்பந்தத்திலும் இருந்துள்ளார்.

    எனவே நீட் தேர்வில் கட்-ஆஃப் மதிப்பெண் குறைவாக இருந்தாலும், மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீடு இருந்தால் எளிதாக மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் என்று அவர் நினைத்துள்ளார்.

    எனவே அவர் தனது ஒரு காலில் உள்ள 4 விரகலை அவரே துண்டித்துள்ளார். வலிக்காமல் இருக்க அனஸ்தீசியா மருந்து செலுத்திக்கொண்டு இந்த காரியத்தை அவர் செய்துள்ளார்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இரவு தன்னை யாரோ தாக்கியதில் அவ்வாறு ஆனதாக கூறியுள்ளார். இந்த விஷயம் காவல்துறை கவனத்துக்கு செல்லவே, அவர்கள் சூரஜ் உடைய போனை ஆராய்ந்ததில் அவருக்கு காதலி இருப்பதை அறிந்து அவரை தொடர்பு கொண்டுள்ளனர். இறுதியில் விசாரணையில் உண்மை வெளிவந்தது.

    சூரஜ்க்கு சிகிச்சை முடிந்ததும் அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

    ×