என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி மருத்துவர்"

    • விசாரணையில் அவரது சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது
    • இத்தகைய நபர்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கக் குடும்பங்களை குறிவைக்கின்றனர்.

    அசாமில் உள்ள ஸ்ரீபூமியைச் சேர்ந்தவர் புலோக் மலாக்கர். இவர் சில்சாரில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளில் கடந்த 10 ஆண்டுகளாக கைனகாலஜிஸ்ட்டாக பணியாற்றி வந்துள்ளார்.

    இதுவரை சுமார் 50 பிரசவங்களை செய்துள்ளார். அதுவும் சிசேரியன் பிரசவங்கள். இந்நிலையில் அவர் போலி மருத்துவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    கடைசியாக ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யும் போது ஆபரேஷன் தியேட்டரில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார்.

    மூத்த காவல்துறை அதிகாரி நுமல் மஹாதா கூறுகையில், புலோக் ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்றும், விசாரணையில் அவரது சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது என்றும் கூறினார். ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    இத்தகைய நபர்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கக் குடும்பங்களை குறிவைக்கின்றனர். இந்த ஆண்டு ஜனவரியில் போலி மருத்துவர்களைப் பிடிக்க அசாம் அரசு சிறப்பு நடவடிக்கையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.   

    • மர்ம நபர் தன்னை மருத்துவர் என கூறிக்கொண்டு நோயாளிகளை பரிசோதித்துள்ளார்.
    • மருத்துவமனையில் விசாரித்தபோது சம்பந்தப்பட்ட நபர் போலி மருத்துவர் என்பது அம்பலமானது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் என கூறிக்கொண்டு மர்ம நபர் ஒருவர் நோயாளியிடம் இருந்து நகை, செல்போனை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் போலவே உடை அணிந்து கொண்டு மர்ம நபர் ஒருவர் ஒவ்வொரு நோயாளியிடமும் கேஸ் ஷீட்டுகளை சரி பார்த்துள்ளார்.

    கடந்த 6-ந்தேதி அந்த மர்ம நபர் தன்னை மருத்துவர் என கூறிக்கொண்டு நோயாளிகளை பரிசோதித்துள்ளார். காப்பீடு திட்டம் இருக்கிறதா என கேட்டுவிட்டு மின்னஞ்சலையும் அவர் கொடுத்துள்ளார்.

    நோயாளி ஒருவரை ஸ்கேன் எடுக்க அழைத்து சென்ற அவர், ஸ்கேன் எடுக்கும்போது நகை போடக்கூடாது எனக்கூறி நகைகளை வாங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

    இந்த சம்பவத்தையடுத்து மருத்துவமனையில் விசாரித்தபோது சம்பந்தப்பட்ட நபர் போலி மருத்துவர் என்பது அம்பலமானது.

    இதையடுத்து நகை திருட்டு தொடர்பாக நோயாளி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரில், 3 சவரன் தங்க நகை மற்றும் செல்போனை மருத்துவர் என கூறிக்கொண்டு வந்தவர் திருடி சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

    மர்மநபர் ஒருவர் மருத்துவரை போன்று அரசு மருத்துவமனையில் வலம் வந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      மத்தியப் பிரதேசத்தில் ஒரு போலி மருத்துவர் நோயாளிகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

      மத்தியப் பிரதேசத்தின் டாமோ நகரில் உள்ள ஒரு தனியார் மிஷனரி மருத்துவமனையில், பிரட்டன் நாட்டைச் சேர்ந்த பிரபல இதயவியல் நிபுணரான என்.ஜான் கெம் எனக் கூறி ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் மருத்துவராக சேர்ந்துள்ளார். பொறுப்பேற்ற பின் ஒரு மாதத்திலேயே இவர் இதய அறுவை சிகிச்சை செய்த 7 பேர் குறுகிய காலத்தில் உயிரிழந்தனர்.

      மாவட்ட அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவர் போலி மருத்துவர் என்பதும், இவரின் உண்மை பெயர் நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என்பது தெரியவந்தது.

      இதனையடுத்து தலைமறைவாக இருந்த போலி டாக்டரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாகராஜில் இருந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். 

      • பிரட்டன் நாட்டைச் சேர்ந்த பிரபல இதயவியல் நிபுணரான என்.ஜான் கெம் எனக் கூறி ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் மருத்துவராக சேர்ந்துள்ளார்.
      • சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நிதி கிடைத்து வருகிறது

      மத்தியப் பிரதேசத்தில் ஒரு போலி மருத்துவர் நோயாளிகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

      மத்தியப் பிரதேசத்தின் டாமோ நகரில் உள்ள ஒரு தனியார் மிஷனரி மருத்துவமனையில், பிரட்டன் நாட்டைச் சேர்ந்த பிரபல இதயவியல் நிபுணரான என்.ஜான் கெம் எனக் கூறி ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் மருத்துவராக சேர்ந்துள்ளார். பொறுப்பேற்ற பின் ஒரு மாதத்திலேயே இவர் இதய அறுவை சிகிச்சை செய்த 7 பேர் குறுகிய காலத்தில் உயிரிழந்தனர்.

      மாவட்ட அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவர் போலி மருத்துவர் என்பதும், இவரின் உண்மை பெயர் நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என்பது தெரியவந்தது.

      அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலர் அவர் மீதுள்ள சந்தேகத்தினால் ஜபால்பூரிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றதும், அவர் மீது ஐதராபாத்தில் ஏற்கனவே ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

      இதுகுறித்து தமோ மாவட்டத்தின் குழந்தைகள் நல ஆணையத்தின் தலைவர் தீபக் திவாரி கூறுகையில், அவர் மேற்கொண்ட அறுவைச் சிகிச்சையினால் பலியானவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கைதான் 7 எனவும் உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனக் கூறியுள்ளார்.

      தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் பிரியங்க் கனுங்கோ கூறுகையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நிதி கிடைத்து வருகிறது. இது மிகவும் தீவிரமான விஷயம் என்றும், இது தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

      குற்றம் சாட்டப்பட்டவர் இன்னும் கைது செய்யப்படவில்லை, தப்பியோடிய அவரை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அவரைத் தேடி வருகின்றனர். இதற்கிடையே அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். 

      • இருதுக்கோட்டை கிராமத்தில் போலி மருத்துவர் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
      • மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த அஸ்வத் நாராயணனை கைது செய்தனர்.

      தேன்கனிக்கோட்டை,

      கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை பொறுப்பு தலைமை மருத்துவ அலுவலர் அன்பரசு, ஓசூர் மருந்துகள் சரக ஆய்வாளர் ராஜீவ் காந்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் இருதுக்கோட்டை கிராமத்தில் போலி மருத்துவர் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

      அப்போது அங்கு மெடிக்கல் ஒன்றின் அருகே தனி அறையில் ஒன்னுக்குறுக்கை கிராமத்தை சேர்ந்த அஸ்வத் நாராயணன் (வயது50) என்பவர் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் 12-ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு முறையான ஆங்கில மருத்துவ கல்வி பயிலாமல் பொதுமக்களை ஏமாற்றி அரசு விதிகளுக்கு புறம்பாக ஆங்கில மருத்துவ சிகிச்சை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவ குழுவினர் இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

      அந்த புகாரின் பேரில் போலீசார் கிராம நிர்வாக அலுவலர்கள் இந்திய தண்டனை சட்டப்படி மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த அஸ்வத் நாராயணனை கைது செய்தனர். இந்த ஆய்வின் போது அவரது அறையில் இருந்த ஏராளமான மருத்துவ பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அறையை சீல் வைத்தனர்.

      • கோவிந்த அக்ரஹாரம் கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டாக கிளினிக் நடத்தி வருகிறார்.
      • பொதுமக்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.

      ஓசூர்,

      கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் திருமூர்த்தி (வயது31).

      இவர் பி.இ.எம்.எஸ். படித்து விட்டு ஓசூர் பேகேப்பள்ளி அருகே கோவிந்த அக்ரஹாரம் கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டாக கிளினிக் நடத்தி வருகிறார்.

      அங்கு அவர் பொது மக்களுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளித்து வந்தார். இது குறித்து பொதுமக்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.

      அதன்பேரில் ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ஞான மீனா ட்சி தலை மையில் மாவட்ட மருந்து கட்டுப் பாட்டு அலுவலர் ராஜீவ் காந்தி மற்றும் குழுவினர், கிராம நிர்வாக அலுவலர், சிப்காட் போலீசார் ஆகியோர் விரைந்து சென்று அங்கு சோதனை நடத்தினர்.

      மேலும் திருமூர்த்தியிடம் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலி டாக்டர் என்பதும், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கிளினிக் மற்றும் மருந்து கடைக்கும் மருத்துவ குழுவினர் சீல் வைத்தனர்.

      • விக்கிரவாண்டி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் ரகுநாத் அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
      • சொந்தமாக மருந்தகமும் நடத்தி வந்தது ஆய்வில் தெரியவந்தது.

      விழுப்புரம்:

      விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா திண்டிவனம் வட்டம் பெரியதச்சூரில் போலி டாக்டர் கிளினிக் வைத்து சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் வந்தன. இதனை அடுத்து விக்கிரவாண்டி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் ரகுநாத் அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது விழுப்புரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்த செல்வசேகர் (வயது 51) என்பவர் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததை கண்டார். உடனடியாக உள்ளே சென்ற டாக்டர் ரகுநாத் அவரிடம் விசாரணை நடத்தினார். இதில் அவர் எம்.பி.பி.எஸ்., படிக்காமல் பி.எஸ்.சி. படித்து விட்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

      மேலும், இவர் சொந்தமாக மருந்தகமும் நடத்தி வந்தது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து டாக்டர் ரகுநாத், இது குறித்து பெரிய தச்சூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் வழக்குப்பதிந்து போலி டாக்டர் விழுப்புரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்த செல்வசேகரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த போலி டாக்டர் இது போல பல முறை கைதாகி, ஜாமினில் வந்து மீண்டும் கிளினிக் நடத்தி வருகிறார். எனவே, இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

      • திருவெறும்பூர், துவாக்குடி பகுதியில் 2 போலி மருத்துவர்கள் சிகிச்சை? மருத்துவ அதிகாரி புகாரின் பேரில் வழக்குப்பதிவு
      • போலி மருத்துவர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

      திருச்சி:

      திருச்சி மாவட்டம் லால்குடி தெற்கு ஸ்ரீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 42). இவர் மருத்துவம் படிக்காமல் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டை மேட்டுத்தெரு பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருவதாக புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து திருச்சி முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜன் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்துள்ளார்.அதில் அரசின் அனுமதி பெறாமல், இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிராக சுரேஷ்குமார் பொதுமக்களுக்கு ஊசி போட்டு மருத்துவம் பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.

      அதன் பேரில் சுரேஷ்குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதேபோன்று துவாக்குடி அசூர் கட் ரோடு வாடகை கட்டிடத்தில் மண்ணச்சநல்லூர் அழகு நகர் பகுதியைச் சேர்ந்த கலைமணி (72) என்பவரும் அரசின் அனுமதியின்றி இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு முரணாக பொதுமக்களுக்கு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக டாக்டர் கோவிந்தராஜன் துவாக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவர் மீதும் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

      கடந்த சில வாரங்களாக திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போலி டாக்டர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மனித உயிர்களுடன் விளையாடும் இதுபோன்ற போலி மருத்துவர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


      • சமூக வலைதளங்களில் பரவியதால் திரும்பப் பெறப்பட்டது
      • ஆங்கில முறைப்படி சிகிச்சை அளித்ததாக புகார்

      திருப்பத்தூர்:

      திருப்பத்தூர் அருகே உள்ள தாமலேரிமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 35). இவர் அந்தப்பகுதி யில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிளினிக் நடத்தி வருகிறார். இவர் முறைப்படி மருத்துவம் படிக்காமல்

      பொதுமக்களுக்கு ஆங்கில முறைப்படி சிகிச்சை அளித்து வருவதாக புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து, மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளின் இணை இயக்குனர் மாரிமுத்து தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஜோலார்பேட்டை போலீசாருடன் இணைந்து சில நாட்களுக்கு முன்பு சம்பத் நடத்தும் கிளினிக்கில் ஆய்வு நடத்தினர்.

      அப்போது, சம்பத் மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தியது தெரியவந்ததால் கிளினிக்கிற்கு சீல் வைக்கப்பட்டது. சம்பத் கைது செய்யப்பட்டார். சில நாட்கள் கழித்து வெளியே வந்த சம்பத் மீண்டும் கிளினிக் நடத்தி வந்தார்.

      இதற்கிடையே, திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரி முத்து கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி சம்பத் கிளினிக் நடத்த தகுதிச்சான்றிதழ் அளித்திருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

      இதுகுறித்து இணை இயக்குனர் மாரிமுத்துவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- கடந்த 2019-ம் ஆண்டு கிளினிக் நடத்தும் மருத்துவர்கள் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனரிடம் தகுதி சான்றிதழ் பெற வேண்டும் என்ற விதி நடைமுறைக்கு வந்தது. அதைதொடர்ந்து 2020-ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் இருந்து செயல்பட்டு வந்த மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து சுமார் 152 நபர்களுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

      இந்த நிலையில் நான் திருப்பத்தூர் மாவட்ட இணை இயக்குனராக 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் பொறுப்புக்கு வந்தேன். அதனைதொடர்ந்து தகுதிச்சான்றிதழ் பெற என்னிடம் வந்த விண்ணப்பங்களில் 80 நபர்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கினேன். அதன் பிறகு ஆய்வு நடத்திய போது சம்பத் போலி மருத்துவர் என்பது கவனத்துக்கு வந்தது. இதனால் அவருக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் திரும்பப்பெறப்பட்டது.

      இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

      • சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போலி மருத்துவர் தலைமறைவானார்.
      • இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

      பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பித்தப்பை கல்லை அகற்றுவது எப்படி என யூடியூபைப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவரால் 15 வயது சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

      தங்களது ஒப்புதலின்றி 'மருத்துவர்' அஜித்குமார் பூரி அறுவை சிகிச்சையைத் தொடங்கியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

      சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போலி மருத்துவர் தலைமறைவானார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

      ×