search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake doctor"

    • கடந்த ஒரு ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.
    • போலீசார் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த போலி டாக்டர் தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிக்கோணாம்பாளையம் ரோட்டில் ஒருவர் உரிய மருத்துவ படிப்பு இல்லாமல் கிளினிக் வைத்து நடத்தி வருவதாக கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜசேகரனுக்கு தகவல் வந்தது. பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜசேகரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் தகவல் வந்த கிளினிக்கிற்கு விரைந்து சென்றனர். அந்த கிளினிக்கிற்குள் நோயாளிகளை போல போலீசார் நுழைந்தனர். அப்போது தேவராஜ் (வயது 54) என்பவர் அங்கு சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்தார். உடனடியாக விரைந்து சென்ற இணை இயக்குனர் தலைமையிலான குழுவினர் மருத்துவம் பார்த்த தேவராஜிடம் மருத்துவம் படித்தற்கான சான்றிதழை கேட்டனர். அவரிடம் மருத்துவம் படித்தற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரிய வந்தது.

    விசாரணையில் அவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்து வந்ததும், இந்த கிளினிக்கை நடத்தி வந்த டாக்டர் இறந்ததும், அதன்பின் கடந்த ஒரு ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.

    இது குறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த போலி டாக்டர் தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் போலி டாக்டர் தேவராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே இந்திலி மேற்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் செயல்பட்டு வருவதாக சென்னை பாலின தேவை தடை செய்தல் சட்ட கண்காணிப்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி பாலின தேவை தடை செய்தல் சட்ட கண்காணிப்பு குழு துணை சூப்பிரண்டு சரவணகுமார் தலைமையிலான அதிகாரிகள் இந்திலி பகுதியில் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் முருகேசன் (வயது 43) பி.பார்ம் படித்துவிட்டு சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்தி வந்தது தெரிய வந்தது. அதிகாரிகள் சோதனை செய்த போது கர்ப்பிணிப் பெண்களுக்கு வயிற்றில் இருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என ஸ்கேன் கருவி மூலம் பரிசோதனை செய்ததும், பெண் சிசுவாக இருந்தால் கருக்கலைப்பு செய்ததும் தெரியவந்தது.இதனையடுத்து அவருடைய வீட்டில் இருந்த 2 சொகுசு கார்கள், மோட்டார் சைக்கிள், ஸ்கேன் கருவி, கருக்கலைப்பு மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, கருக்கலைப்பு மையத்தை பூட்டி சீல் வைத்தனர். இதுகுறித்து சின்னசேலம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் குறளியன் கொடுத்த புகாரின் பேரில் முருகேசன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், முருகேசனுக்கு உதவியாளராக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சின்னராஜ் (28) என்பவரையும் கைது செய்தனர்.இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் குறைவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெண் குழந்தைகள் வேண்டாம் என்று நினைக்கும் பெற்றோர்கள் கருவிலிருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என கண்டறிந்து சட்டவிரோதமாக செயல்படும் மையங்களில் கருக்கலைப்பு செய்து விடுகின்றனர்.

    கருக்கலைப்பு செய்வதால் பாலின விகிதம் குறையும் நிலை உள்ளது. எனவே பாலின சமத்துவத்தை உணர்ந்து ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண் குழந்தைகளும் சாதிக்கலாம் என்பதனை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. இவ்வாறு அவர் கூறினார்.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமூக நல மருத்துவத்துறை தலைவர் (பொறுப்பு) பொன்னரசு கூறுகையில்,இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனைகளை புரிந்து வருகின்றனர். சட்ட விரோதமாக நடைபெறும் கருக்கலைப்பு மையங்களில் 90 சதவீதம் பேர் பெண் சிசுக்கலையும், சுமார் 10 சதவீதம் முறையற்ற உடல் உறவினால் உருவாகும் கருவினையும் கருக்கலைப்பு செய்கின்றனர். கருவில் வளரும் சிசுவிற்கு மருத்துவ ரீதியாக குறைபாடுகள் இருந்தால் அரசு மருத்துவமனைகளிலேயே கருக்கலைப்பு செய்யப்படும்.இவ்வாறு கருக்கலைப்பு செய்யப்படும் பெண்களுக்கு மனநல மருத்துவரால் மன ஆற்றுதல் சிகிச்சையும் வழங்கப்படும். இதனால் அவர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஆனால் இது போன்று சட்டவிரோத கருக்கலைப்பு செய்வதன் மூலமாக உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மருத்துவம் கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்றார்.

    கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மூத்த வக்கீல் செல்வநாயகம் கூறுகையில்,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டு காலங்களில் அதிக அளவில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த குற்றத்தில் கைது செய்யப்படும் நபர்கள் 10 தினங்களில் ஜாமீன் பெற்று வெளியே வந்து விடுகின்றனர். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும்.தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே பெண் பிள்ளைகளின் பிறப்பு சதவீதத்தை அதிகப்படுத்த முடியும் என்றும் இல்லையென்றால் அது சமூகத்தின் பெரிய சீர்கேட்டை ஏற்படுத்தும் என கூறினார்.சட்ட விரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்திய முருகேசன் மகள் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார் என்பதும், முருகேசன் இது போன்ற வழக்கில் 4-வது முறையாக கைது செய்யப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • விசாரணை முடிந்த பிறகு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • சோதனையில் ஆண்மைக்கான மூலிகை மாத்திரைகள், மூலிகைகளால் செய்யப்பட்ட பொடிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்தவர் கேசவமூர்த்தி (வயது 47).

    இவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு சித்த மருத்துவம் பார்த்து வந்தார். போலி மருத்துவரான இவர் பலருக்கு போதை மருந்து கொடுத்து அவர்களிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார். சம்பவத்தன்று இவரிடம் வைத்தியம் பார்க்க வந்த அதே பகுதியை சேர்ந்த டிரைவர் அசோக்ராஜ் (27) என்பவருக்கு ஆண்மை வீரியத்திற்கான மருந்து கொடுத்து அவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார்.

    அப்போது மருந்தின் வீரியம் அதிகரித்து அசோக்ராஜ் மயங்கி விழுந்தார். ஆனால் அசோக்ராஜன் இறந்து விட்டதாக நினைத்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் புதைத்துள்ளார்.

    இதற்கிடையே அசோக்ராஜ் வீட்டுக்கு திரும்பாதது குறித்து அவரது பாட்டி பத்மினி சோழபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு அசோக்ராஜை தேடினர். அதில் அசோக்ராஜ் போலி சித்த வைத்தியர் கேசவமூர்த்தி வீட்டுக்கு சென்றதுதம் அதன் பின் திரும்பி வராததும் பதிவாகியிருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கேசவமூர்த்தியை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரித்ததில், அசோக்ராஜ்க்கு வீரியமிக்க மருந்து கொடுத்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு அவரை கொலை செய்ததை ஓப்புக்கொண்டார். மேலும் உடலை வெட்டி நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றை மசாலா சேர்த்து சமைத்து சாப்பிட்டதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து கேசவமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டையும் தோண்டி பார்த்தபோது அசோக்ராஜன் உடல் பாகங்களில் சில மட்டும் கிடைத்தது. அதனை மீட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் மனித தாடை எலும்பு கண்டெடுக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அனஸ் என்பவர் மாயமாகி இதுவரை வீடு திரும்பவில்லை.

    எனவே அவரது எலும்பு தாடையாக இருக்கலாமோ என போலீசார் சந்தேகித்தனர். அவரையும் இதுபோன்று போதை மருந்து கொடுத்து கொன்று புதைத்திருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து கைப்பற்றப்பட்ட மனித தாடை எலும்பு பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு டி.என்.ஏ. உள்ளிட்ட சோதனை நடந்து வருகிறது. அதன் அறிக்கை வந்த பிறகே உண்மை நிலவரம் தெரியவரும்.

    இந்நிலையில் நேற்று போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர்சித்திக் மற்றும் போலீசார், வருவாய்துறை, தயடவியல் நிபுணர்கள் முன்னிலையில் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கேசவமூர்த்தியின் வீட்டின் பின்புறத்தில் நிலத்தை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டது. அப்போது 3 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்ட தோண்ட சிறிய அளவிலும், நொறுங்கிய நிலையிலும் 25-க்கும் மேற்பட்ட எலும்பு துண்டுகள் தென்ப்பட்டன. அவைகளை பெட்டிகளில் சேகரித்து சோதனைக்காக தஞ்சாவூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த எலும்பு துண்டுகள் மனித எலும்புகளா ? அப்படி இருந்தால் அவர் யாரையெல்லாம் கொலை செய்து புதைத்திருந்தார் ? அதில் மாயமான அனஸ் உடலின் எலும்புகள் இருந்தனவா ? அல்லது வேறு ஏதேனும் எலும்புகளா ? என்பது குறித்த முழு விவரமும் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும்.

    மேலும் வீட்டில் நடந்த சோதனையில் ஆண்மைக்கான மூலிகை மாத்திரைகள், மூலிகைகளால் செய்யப்பட்ட பொடிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இது தவிர கைப்பற்றபட்ட டைரியில் பெயர்களுடன் செல்போன் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த எண்களையும் போலீசார் தொடர்பு கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முடிந்த பிறகு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டு மொத்தத்தில் போலி சித்த மருத்துவர் கேசவமூர்த்தி, தன்னை நாடி வந்தவர்களில் எத்தனை பேரை மூலிகை மருந்து கொடுத்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு அவர்களை கொன்று புதைத்த விவரமும் விசாரணை, பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தெரியவரும்.

    தொடர்ந்து கேசவமூர்த்தி வீட்டை சுற்றி இன்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • டாக்டராக பணியாற்றிய சித்ரா பிரியதர்ஷினியிடம் மருத்துவம் படிப்பு சான்றிதழ் மற்றும் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை.
    • ஆயுர்வேதம், சித்தா தொடர்பான காலாவதியான மாத்திரைகளும் இருந்தன.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வந்த பவானி கணேசன் தனியார் ஆஸ்பத்திரி தமிழ்நாடு மருத்துவமனை ஒழுங்குமுறை சட்டத்தின்படி நலப்பணிகள் இணை இயக்குனரிடம் உரிமம் பெறவில்லை.

    இங்கு டாக்டராக பணியாற்றிய சித்ரா பிரியதர்ஷினியிடம் மருத்துவம் படிப்பு சான்றிதழ் மற்றும் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை. மேலும் ஆஸ்பத்திரிக்கு தொடர்பு இல்லாத மகப்பேறு மருத்துவத்திற்கான உபகரணங்கள், மாத்திரைகள் இருந்தன. ஆயுர்வேதம், சித்தா தொடர்பான காலாவதியான மாத்திரைகளும் இருந்தன.

    அதனை பறிமுதல் செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த ஆஸ்பத்திரிக்கு சீல் வைத்தனர். மேலும் மாநகர் நல அலுவலர் முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் சித்திக் மற்றும் போலீசார் போலி டாக்டர் சித்ரா பிரியதர்ஷினி மீது மீது 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அமாவாசை தினத்தில் பெண்ணை பூஜைக்கு வருமாறு டாக்டர் அழைத்தார்.
    • பூஜை அறையில் வைத்து பெண்ணை அமர வைத்து பல்வேறு மந்திரங்களை உச்சரித்தார்.

    திருப்பதி:

    சினிமாக்களில் வரும் காமெடி காட்சிகளில் டாக்டர்கள் பல்வேறு விதமாக பணம் பிடுங்குவதும் நூதனமாக சிகிச்சை அளிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    அதை மிஞ்சும் வகையில் ஆந்திராவில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் வெறும் எலுமிச்சம்பழம் மற்றும் சாம்பலை கொடுத்து ரூ.50 ஆயிரம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆந்திர மாநிலம் ஐதராபாத் எல்.பி.நகரில் ஆயுர்வேத டாக்டர் ஒருவர் தனியாக கிளினீக் நடத்தி வருகிறார்.

    இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக சென்றார். தனக்கு தலைவலி மற்றும் நரம்பு பகுதிகளில் வலி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    மேலும் ஆயுர்வேத சிகிச்சை பெற விரும்புவதாக டாக்டரை நாடினார். பெண்ணை பரிசோதித்த அந்த டாக்டர் மருந்துகளை பரிந்துரை செய்வதற்கு பதிலாக அந்த பெண்ணிடம் எலுமிச்சம் பழங்களையும் ஒரு சிறிய பையில் சாம்பலையும் கொடுத்தார்.

    இதனைத் தொடர்ந்து அமாவாசை தினத்தில் பெண்ணை பூஜைக்கு வருமாறு அழைத்தார். பூஜை அறையில் வைத்து பெண்ணை அமர வைத்து பல்வேறு மந்திரங்களை உச்சரித்தார்.

    அப்போது பூஜை பொருட்கள் என கூறி வீட்டிற்கு வாங்க வேண்டிய மளிகை பொருட்களின் பட்டியலை அந்த பெண்ணிடம் கொடுத்தார்.

    இவற்றையெல்லாம் கொடுத்துவிட்டு அந்த பெண்ணிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் பணத்தை டாக்டர் பறித்துக் கொண்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து அவரது உறவினர்களிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட டாக்டர் மீது இதுவரை எந்தவிதமான புகார்களும் வரவில்லை. எனவே பெண் கூறிய குற்றச்சாட்டுகள் சரிபார்க்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • போலீசில் புகார்
    • கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே மிட்டாளம் பகுதியில் மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு ஒருவர் சிகிச்சை அளிப்பதாக ஆம்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் உமராபாத் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் அப்பகுதியில் போலீசார் விசா ரணை நடத்தினர்.

    அப்போது மருத்துவ படிப்புமுடிக் காமல் கிளினிக் வைத்து பொதுமக்க ளுக்கு மருத்துவம் பார்த்த வாணியம் பாடியை அடுத்த பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சாமிநாதனுக்கு புகார்கள் வந்துள்ளது.
    • மருந்தகம் நடத்தி நோயாளிகளுக்கு மருந்துகளை விற்று வந்ததும் தெரியவந்தது.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு நோயாளிகளுக்கு போலி டாக்டர் மருத்துவம் பார்த்து வருவதாக விருத்தாசலம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சாமிநாதனுக்கு புகார்கள் வந்துள்ளது. புகாரின் அடிப்படையில் சாமிநாதன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள சங்கர் (வயது52) என்பவரிடம் சோதனை நடத்தினர். சோதனையில் அவர் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு அந்த பகுதியில் பொதுமக்களுக்கு சில வருடங்களாக மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. மேலும் அதே பகுதியில் மருந்தகம் நடத்தி நோயாளிகளுக்கு மருந்துகளை விற்று வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் சங்கரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோர் வேலைக்கு சென்று விட்ட நிலையில், சம்பந்தப்பட்ட மாணவி தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
    • வெள்ளாண்டிவலசு அருகே உள்ள நைனாம்பட்டி ரோடு தெருவை சேர்ந்த சித்த வைத்தியர் சரவணன் மாண வியின் வீட்டிற்கு வந்துள்ளார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் -1 வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த 6-ந் தேதி பெற்றோர் வேலைக்கு சென்று விட்ட நிலையில், சம்பந்தப்பட்ட மாணவி தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வெள்ளாண்டிவலசு அருகே உள்ள நைனாம்பட்டி ரோடு தெருவை சேர்ந்த சித்த வைத்தியர் சரவணன் மாண வியின் வீட்டிற்கு வந்துள்ளார்.

    தனது தந்தைக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால் வைத்தியர் சரவணனை மாணவியும் வீட்டிற்குள் அனுமதித்து உள்ளார்.

    அத்துமீறல்

    அப்போது சரவணன் மனைவியை பார்த்து ஏன் சோகமாக இருக்கிறாய் என்று கேட்டுள்ளார்.

    அதற்கு மாணவி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார்.

    உடனே சரவணன் உனக்கு முதுகில் உள்ள ஒரு நரம்பில் சுளுக்கு இருக்கிறது. அதை சரி செய்ய தைலம் தடவுவதாக கூறி மாணவி யிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவரை தள்ளிவிட்டு வீட்டிற்கு வெளியே ஓடி வந்து பக்கத்து வீட்டில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

    தர்மஅடி

    பொதுமக்கள் வருவதை கண்டு வைத்தியர் சரவணன் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கடந்த சில நாட்களாக யார் கண்ணிலும் படாமல் தலைமறைவாக இருந்த சரவணன், நேற்று மீண்டும் ஊருக்குள் வந்துள்ளார். அவரை சுற்றி வளைத்த அப்பகுதி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து எடப்பாடி போலீஸ் நிலை யத்தில் ஒப்படைத்தனர்.

    புகார்

    பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் எடப்பாடி போலீசார் சரவணன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சரவணன் வைத்தியர் இல்லை என்பதும், போலி யாக பல்வேறு நோய்களை குணப்படுத்துவதாக கூறி மக்களை ஏமாற்றி வந்ததும் தெரிய வந்தது.

    பொதுமக்கள் தாக்கிய தால் காயம் அடைந்த சரவ ணன் தற்போது எடப்பாடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • ரமணன் கொத்தட்டை பகுதியில் ஆண்டவர் என்ற பெயரில் மெடிக்கல் நடத்தி வருகிறார்.
    • ரமணன் மெடிக்கலுக்கு சென்று சோதனை செய்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புவனகிரி சின்னகுமட்டி பகுதியை சேர்ந்தவர் ரமணன் (வயது 39). இவர் கொத்தட்டை பகுதியில் ஆண்டவர் என்ற பெயரில் மெடிக்கல் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 6-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் தனசேகர் (23) காய்ச்சலுக்காக ரமணன் மெடிக்கலுக்கு வந்து அவரிடம் மருந்து மற்றும் ஊசி போட்டுள்ளார். இதனையடுத்து தனசேகருக்கு மேலும் உடல் நலம் மோசமாகி கடலூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தனசேகரனின் தாய் தமிழ்ச்செல்வி என் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை வட்டார அலுவலர் அமுதா சின்னகுமட்டி பகுதியில் உள்ள ரமணன் மெடிக்கலுக்கு சென்று சோதனை செய்தார். அப்போது அவர் மருத்துவர் சீட்டு இல்லாமல் நோயாளிகளுக்கு மருந்து வழங்கியது தெரியவந்தது.

    உடனே இதுகுறித்து வட்டார அலுவலர் அமுதா பரங்கிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் ரமணன் மருத்துவ படிப்பு படிக்காமலும், மருத்துவர் சீட்டு இல்லாமலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மருந்துவம் பார்த்தது தெரியவந்தது. உடனே போலீசார் ரமணன் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மருத்துவம் படிக்காமல் மருந்து மற்றும் ஊசி போட்ட போலி டாக்டரால் சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

    • அதிகாரிகள் சோதனையில் சிக்கினார்
    • ஜெயிலில் அடைத்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் வள்ளி (வயது 45). இவர் மருத்துவ படிப்பு படிக்காமல் அப்பகுதியில் மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதார துறை அதிகாரி களுக்கு புகார்கள் வந்தன.

    அதன் பேரில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் விஜயா முரளி தலைமையில் அதிகாரிகள், வள்ளி வீட்டில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது வள்ளியின் வீட்டில் ஆங்கில மருத்துவத்திற்கான மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசிகள் இருப்பதும், இவர் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்பட பல்வேறு வியாதி களுக்கு மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

    இதே தொடர்ந்து அதிகாரிகள் ராணிப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி டாக்டரான வள்ளியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இதே போல் வாலாஜா ஒத்தவாடை தெருவில் போலி மருத்துவம் பார்க்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் அங்கு பரத் (25) என்பவரின் வீட்டை சோதனை செய்தனர்.

    சோதனையில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்ப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த அறையை பூட்டி சீல் வைத்தனர்.

    • ஜெய்சக்தி நேச்சுரல் க்யூர் சென்டர் என்ற அக்குபஞ்சர் சிகிச்சை மையத்திற்கு நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    • அக்குபஞ்சர் மருத்துவம் படிக்காமல் உரிய தகுதியின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது உறுதியானது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வலசுபாளையத்தில் அரசு அனுமதியின்றி இயங்கி வந்த "ஜெய்சக்தி நேச்சுரல் க்யூர் சென்டர்" என்ற அக்குபஞ்சர் சிகிச்சை மையத்திற்கு நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    இந்தநிலையில் அங்கு சிகிச்சை பார்த்து வந்த அருள் என்பவரிடம் திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் நடத்திய விசாரணையில் அவர் அக்குபஞ்சர் மருத்துவம் படிக்காமல் உரிய தகுதியின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது உறுதியானது.

    இதனைதொடர்ந்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் கனகராணி அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் அருள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

    • சமூக வலைதளங்களில் பரவியதால் திரும்பப் பெறப்பட்டது
    • ஆங்கில முறைப்படி சிகிச்சை அளித்ததாக புகார்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள தாமலேரிமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 35). இவர் அந்தப்பகுதி யில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிளினிக் நடத்தி வருகிறார். இவர் முறைப்படி மருத்துவம் படிக்காமல்

    பொதுமக்களுக்கு ஆங்கில முறைப்படி சிகிச்சை அளித்து வருவதாக புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து, மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளின் இணை இயக்குனர் மாரிமுத்து தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஜோலார்பேட்டை போலீசாருடன் இணைந்து சில நாட்களுக்கு முன்பு சம்பத் நடத்தும் கிளினிக்கில் ஆய்வு நடத்தினர்.

    அப்போது, சம்பத் மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தியது தெரியவந்ததால் கிளினிக்கிற்கு சீல் வைக்கப்பட்டது. சம்பத் கைது செய்யப்பட்டார். சில நாட்கள் கழித்து வெளியே வந்த சம்பத் மீண்டும் கிளினிக் நடத்தி வந்தார்.

    இதற்கிடையே, திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரி முத்து கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி சம்பத் கிளினிக் நடத்த தகுதிச்சான்றிதழ் அளித்திருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து இணை இயக்குனர் மாரிமுத்துவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- கடந்த 2019-ம் ஆண்டு கிளினிக் நடத்தும் மருத்துவர்கள் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனரிடம் தகுதி சான்றிதழ் பெற வேண்டும் என்ற விதி நடைமுறைக்கு வந்தது. அதைதொடர்ந்து 2020-ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் இருந்து செயல்பட்டு வந்த மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து சுமார் 152 நபர்களுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் நான் திருப்பத்தூர் மாவட்ட இணை இயக்குனராக 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் பொறுப்புக்கு வந்தேன். அதனைதொடர்ந்து தகுதிச்சான்றிதழ் பெற என்னிடம் வந்த விண்ணப்பங்களில் 80 நபர்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கினேன். அதன் பிறகு ஆய்வு நடத்திய போது சம்பத் போலி மருத்துவர் என்பது கவனத்துக்கு வந்தது. இதனால் அவருக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் திரும்பப்பெறப்பட்டது.

    இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    ×