search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிளினிக் நடத்த போலி தகுதிசான்று
    X

    கிளினிக் நடத்த போலி தகுதிசான்று

    • சமூக வலைதளங்களில் பரவியதால் திரும்பப் பெறப்பட்டது
    • ஆங்கில முறைப்படி சிகிச்சை அளித்ததாக புகார்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள தாமலேரிமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 35). இவர் அந்தப்பகுதி யில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிளினிக் நடத்தி வருகிறார். இவர் முறைப்படி மருத்துவம் படிக்காமல்

    பொதுமக்களுக்கு ஆங்கில முறைப்படி சிகிச்சை அளித்து வருவதாக புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து, மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளின் இணை இயக்குனர் மாரிமுத்து தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஜோலார்பேட்டை போலீசாருடன் இணைந்து சில நாட்களுக்கு முன்பு சம்பத் நடத்தும் கிளினிக்கில் ஆய்வு நடத்தினர்.

    அப்போது, சம்பத் மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தியது தெரியவந்ததால் கிளினிக்கிற்கு சீல் வைக்கப்பட்டது. சம்பத் கைது செய்யப்பட்டார். சில நாட்கள் கழித்து வெளியே வந்த சம்பத் மீண்டும் கிளினிக் நடத்தி வந்தார்.

    இதற்கிடையே, திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரி முத்து கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி சம்பத் கிளினிக் நடத்த தகுதிச்சான்றிதழ் அளித்திருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து இணை இயக்குனர் மாரிமுத்துவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- கடந்த 2019-ம் ஆண்டு கிளினிக் நடத்தும் மருத்துவர்கள் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனரிடம் தகுதி சான்றிதழ் பெற வேண்டும் என்ற விதி நடைமுறைக்கு வந்தது. அதைதொடர்ந்து 2020-ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் இருந்து செயல்பட்டு வந்த மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து சுமார் 152 நபர்களுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் நான் திருப்பத்தூர் மாவட்ட இணை இயக்குனராக 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் பொறுப்புக்கு வந்தேன். அதனைதொடர்ந்து தகுதிச்சான்றிதழ் பெற என்னிடம் வந்த விண்ணப்பங்களில் 80 நபர்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கினேன். அதன் பிறகு ஆய்வு நடத்திய போது சம்பத் போலி மருத்துவர் என்பது கவனத்துக்கு வந்தது. இதனால் அவருக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் திரும்பப்பெறப்பட்டது.

    இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×