என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "childbirth"

    • மேலாளருடனான வாட்சப் உரையாடல் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
    • உங்களுக்கு இப்போது விடுப்பு கொடுக்க முடியாது. அடுத்த வாரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

    ஆட்டு மந்தைகளைப் போல பணி நீக்கம் செய்யப்படுவதும், தனிப்பட்ட வாழ்க்கையை வாழ முடியாத அளவுக்கு எந்த நேரத்திலும் மீட்டிங், பணிச்சுமை என அலைக்கழிக்கப்படுவதும் கார்ப்பரேட் ஊழியர்கள் நவீன கொத்தடிமைகளாக மாறி வருவதற்காக அறிகுறி என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

    இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் பல சம்பவங்களும் அவ்வப்போது வெளிவருகின்றன.

    அந்த வகையில், பிரசவ வலி ஏற்பட்ட மனைவியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, தனக்கு 2 நாட்கள் லீவ் வேண்டும் என தனது நிறுவன மேலாளரிடம் கேட்ட ஊழியருக்கு கிடைத்த பதில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    மேலாளருடனான வாட்சப் உரையாடல் புகைப்படத்தை பகிர்ந்து Reddit சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட இந்த அனுபவம் விமர்சனங்களை ஏற்ப்படுத்தி வருகிறது

    அந்த பதிவின்படி, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் ஊழியர் பிரசவ வலி ஏற்பட்ட தனது கர்ப்பிணி மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு அவரை கவனித்துக்கொள்வதற்காக 2 நாட்கள் தனது நிறுவன மேலாளரிடம் விடுப்பு கேட்டுள்ளார்.

    இதற்கு பதியளித்த மேலாளர், 'உங்களுக்கு இப்போது விடுப்பு கொடுக்க முடியாது. அடுத்த வாரம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் மனைவியின் பிரசவத்திற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்? வேண்டுமானால் மருத்துவமனையில் இருந்து வேலை செய்ய முடியுமா?' என்று பதிலளித்தார்.

    இதற்கு பதிலளித்த ஊழியர்,"அது சாத்தியமில்லை, மருத்துவமனையில் மனைவியை கவனித்துக் கொள்ள வேண்டியவன் நான். மருத்துவக் வாங்க செல்வது போன்ற வேறு வேலைகளும் உள்ளன. மேலும், மருத்துவமனையில் இருந்து அலுவலக வேலைகளைச் செய்வது சாத்தியமில்லை," என்று பதில் கூறியுள்ளார். இதன்பின் மேலாளர் வேண்டா வெறுப்பாக அவருக்கு விடுப்பு வழங்கியுள்ளார். இந்த பதிவு வைரலாகி விமர்சனங்களை குவித்து வருகிறது. 

    • அவருக்கு மறைவான இடம் கூட தரப்படவில்லை.
    • இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    உத்தரகாண்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் மருத்துவமனை தரையிலேயே குழந்தையை பிரசவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பெண் செவ்வாய்க்கிழமை இரவு ஹரித்வாரில் உள்ள அரசு பெண்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடன் உறவினப் பெண் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார்.

    பணம் தர முடியாத ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், பணியில் இருந்த மருத்துவர், பிரசவம் பார்க்க முடியாது என்று தெரிவித்தாக கூறப்படுகிறது. 

    சிகிச்சை மறுக்கப்பட்ட அந்தப் பெண் பிரசவ வலியில் நகர முடியாமல் மருத்துவமனையின் தரையிலேயே அதிகாலை 1:30 மணியளவில் குழந்தையைப் பிரசவித்துள்ளார். அவருக்கு மறைவான இடம் கூட தரப்படவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அது மட்டுமின்றி, குழந்தை பிறந்த பிறகு கர்ப்பிணி பெண்ணிடம் அங்கிருந்த நர்சுகள், "என்ன சுகமாக இருக்கிறதா? இன்னும் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டுமா?" என்று நக்கலாக பேசி கேலி செய்துள்ளனர்.

    சம்பவம் குறித்து புகார் எழுந்த நிலையில், முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இரவுப் பணியில் இருந்த ஒப்பந்த மருத்துவர் சோனாலி உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இரண்டு செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    கர்ப்பிணிப் பெண்ணுக்கு அவசர நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்று விரிவான விசாரணை நடந்து வருவதாகவும், அலட்சியம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார். மேலும் பிரசவித்த தாயும் சேயும் நலமாக உள்ளாதாகவும் அவர் தெரிவித்தார். 

    • இரவு முழுவதும் எறும்புக்கடி, கடுங்குளிரில் இருந்ததது.
    • புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கைவிடும் சம்பவங்களில் மத்தியப் பிரதேசம் நாட்டிலேயே முன்னிலையில் உள்ளது.

    மத்திய பிரதேசத்தில் அரசு வேலை பறிபோய்விடும் என்ற அச்சத்தில், மூன்று நாட்களே ஆன சிசுவை பெற்றோரே காட்டில் வீசிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் நந்தன்வாடி பகுதியை சேர்ந்தவர் பப்லு தண்டோலியா. அரசுப் பள்ளி ஆசிரியரான இவருக்கும் மனைவி ராஜ்குமாரி தண்டோலியாவுக்கும் 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த அண்மையில் ராஜ்குமாரிக்கு 4ஆவதாக ஆண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 3 நாட்களுக்கு பிறகு காட்டுக்குள் கொண்டு சென்று ஒரு கல்லின் ஓரத்தில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

    மத்தியப் பிரதேச அரசு ஜனவரி 26, 2001 அன்று மத்தியப் பிரதேச அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் 'இரண்டு குழந்தைகள்' மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும் என்று ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.

    இதை மீறி மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்தால், அவர் அரசுப் பணியிலிருந்து பணிநீக்கம் செய்யப்படுவார் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    இந்தக் கொள்கைப்படி வேலை இழந்துவிடுவோம் என்ற பயத்தாலேயே இந்தக் கொடூரச் செயலைச் செய்ததாகப் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

    காலையில் நடைபயிற்சிக்குச் சென்ற கிராம மக்கள் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு, கல்லிடுக்கில் கிடந்த குழந்தையைக் கண்டுபிடித்து, காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.

    மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு, இரவு முழுவதும் எறும்புக்கடி, கடுங்குளிரில் இருந்ததால் ஏற்பட்ட பாதிப்புக்கு சிகிச்சை அளித்தனர். இதைதொடர்ந்து குழந்தை பத்திரமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

     தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கைவிடும் சம்பவங்களில் மத்தியப் பிரதேசம் நாட்டிலேயே முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  

    • கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்துள்ளனர்.
    • பிரசவம் நடந்தபிறகு ஜெஸ்வீனா திடீரென மயங்கினார்.

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ராசிகுல். இவரது மனைவி ஜெஸ்வீனா (வயது30). இவர்களுக்கு 4 வயதில் ஜோஹிருல் என்ற மகன் இருக்கிறான். ராசிகுல் தனது மனைவி மற்றும் மகனுடன் கேரளாவில் வாழ்ந்து வந்தார். கூலி வேலைகளுக்கு சென்று தனது மனைவி மற்றும் மகனை காப்பாற்றி வந்தார்.

    இந்தநிலையில் ஜெஸ்வீனா மீண்டும் கர்ப்பமானார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராசிகுல் தனது மனைவி மற்றும் மகனுடன் கண்ணூர் மாலோடு பகுதியில் ஒரு வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார். இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த ஜெஸ்வீனாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்துள்ளனர். பிரசவத்தில் அவருக்கு அழகிய குழந்தை பிறந்தது. இந்தநிலையில் பிரசவம் நடந்தபிறகு ஜெஸ்வீனா திடீரென மயங்கினார். சுயநினைவை இழந்த அவரை அவரது குடும்பத்தினர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு ஜெஸ்வீனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் தலைமறைவாகினர். ஜெஸ்வீனாவுக்கு புதிதாக பிறந்த குழந்தை மற்றும் மகன் ஜோஹிருல் ஆகியோரை தனியாக தவிக்க விட்டுவிட்டு அவர்கள் மாயமாகினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பின்பு ஜெஸ்வீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு புதிதாக பிறந்த குழந்தையை மீட்டு பரியாரத்தில் உள்ள கண்ணூர் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அவரது மகன் ஜோஹிருலை சைல்டு லைன் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவன் அவர்களது பராமரிப்பில் உள்ளான்.

    வீட்டில் பிரசவம் பார்த்ததால் பெண் இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் ஜேஸ்வீனாவின் கணவர் மற்றும் குடும்பத்தினரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • கர்ப்ப ரோபோக்கள் தற்போது கிடைக்கும் இன்குபேட்டர்களுடன் தொடர்புடையவை அல்ல.
    • கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழு செயல்முறையும் கர்ப்ப ரோபோவின் கருப்பையில் நடைபெறுகிறது.

    கர்ப்பம் தரித்து, 10 மாதங்கள் குழந்தையை சுமந்து, பிரசவிக்கக்கூடிய மனித உருவ ரோபோக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

    சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜாங் கெஃபெங் தலைமையிலான குழு உலகின் முதல் 'கர்ப்ப ரோபோவை' உருவாக்கி வருகிறது.

    சீன ஊடக அறிக்கைகளின்படி, கர்ப்ப ரோபோக்கள் தற்போது கிடைக்கும் இன்குபேட்டர்களுடன் தொடர்புடையவை அல்ல. இந்த கர்ப்ப ரோபோக்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட கருப்பைகளைக் கொண்டுள்ளன.

    செயற்கை அம்னோடிக் திரவத்தால் நிரப்பப்பட்ட இந்த செயற்கை கருப்பை, மனித கருப்பை போலவே செயல்படுகிறது.

    நிஜ வாழ்க்கையில், கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழு செயல்முறையும் கர்ப்ப ரோபோவின் கருப்பையில் நடைபெறுகிறது.

    கருப்பையில் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குழாய்கள் மூலம் வழங்கப்படுகின்றன.

    உண்மையில், இந்த செயற்கை கருப்பை ஒரு புதிய முறை அல்ல என்று டாக்டர் ஜாங் கூறினார்.

    விஞ்ஞானிகள் முன்பு பயோ பேக் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட செயற்கை கருப்பையின் உதவியுடன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பெற்றெடுத்ததாக அவர் விளக்கினார்.

    இந்த பயோ பேக் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவதன் மூலம் கர்ப்ப ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

    கர்ப்ப ரோபோக்களின் மாதிரி அடுத்த ஆண்டு தயாராக இருக்கும் என்றும், இதற்கு ரூ. 12.96 லட்சம் வரை செலவாகும் என்றும் ஜாங் கூறினார். 

    • விசாரணையில் அவரது சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது
    • இத்தகைய நபர்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கக் குடும்பங்களை குறிவைக்கின்றனர்.

    அசாமில் உள்ள ஸ்ரீபூமியைச் சேர்ந்தவர் புலோக் மலாக்கர். இவர் சில்சாரில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளில் கடந்த 10 ஆண்டுகளாக கைனகாலஜிஸ்ட்டாக பணியாற்றி வந்துள்ளார்.

    இதுவரை சுமார் 50 பிரசவங்களை செய்துள்ளார். அதுவும் சிசேரியன் பிரசவங்கள். இந்நிலையில் அவர் போலி மருத்துவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    கடைசியாக ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யும் போது ஆபரேஷன் தியேட்டரில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார்.

    மூத்த காவல்துறை அதிகாரி நுமல் மஹாதா கூறுகையில், புலோக் ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்றும், விசாரணையில் அவரது சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது என்றும் கூறினார். ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    இத்தகைய நபர்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கக் குடும்பங்களை குறிவைக்கின்றனர். இந்த ஆண்டு ஜனவரியில் போலி மருத்துவர்களைப் பிடிக்க அசாம் அரசு சிறப்பு நடவடிக்கையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.   

    • அந்த பெண்ணுக்கு பல நாட்களாக கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி இருந்து வந்தது.
    • ஆனால் அந்த பெண்ணின் கருப்பை காலியாக இருந்தது.

    உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் 30 வயது பெண்ணின் கல்லீரலுக்குள் 3 மாத குழந்தை இருப்பது ஸ்கேன் மூலம் தெரியவந்தது.

    அந்த பெண்ணுக்கு பல நாட்களாக கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி இருந்து வந்தது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டது. ஆனால் அந்த பெண்ணின் கருப்பை காலியாக இருந்தது. பின்னர் மருத்துவர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ய பரிந்துரைத்தனர்.

    பின்னர் கல்லீரலின் வலது பக்கத்தில் கரு கண்டுபிடிக்கப்பட்டது. 12 வார வயதுடைய கருவுக்கு வழக்கமான இதயத் துடிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கல்லீரலில் இருந்து வரும் இரத்த நாளங்கள் கருவுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இந்தியாவில் இதுபோன்ற முதல் வழக்கு இதுவாகும்.

    இதுவரை, உலகில் இதுபோன்ற எட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த அரிதான நிலை இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது.

    இதுபோன்ற கர்ப்பம் தாய்க்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. உடனடி சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது கல்லீரல் சிதைவு அல்லது இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும்.

    அந்தப் பெண் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். சிக்கலான அறுவை சிகிச்சையைத் திட்டமிட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகத் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    • பயணிகளில் ஒருவர் எதையோ வெளியே வீசுவதை ஓட்டுநர் கவனித்தார்.
    • அந்தப் பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்து அதை ஜன்னல் வெளியே வீசி கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

    மகாராஷ்டிராவின் பர்பானியில், 19 வயது ரித்திகா திர் என்ற பெண்ணையும் அவரது கணவர் என்று நம்பப்படும் அல்தாஃப் ஷேக் என்ற இளைஞரையும் போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    அவர்கள் பயணித்த பேருந்தின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் பெர்த்கள் இருந்தன. பயணிகளில் ஒருவர் எதையோ வெளியே வீசுவதை ஓட்டுநர் கவனித்தார். கேட்டபோது, அல்தாஃப் தனது மனைவி பேருந்து பயணத்தால் சோர்வாக இருப்பதாகவும், வாந்தி எடுப்பதாகவும் கூறினார்.

    இருப்பினும், இந்த சம்பவத்தை கவனித்த உள்ளூர்வாசி ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வாகனத்தை நிறுத்தி விசாரித்தபோது, குழந்தை பேருந்தில் இருந்து வெளியே வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    போலீசார் கூற்றுப்படி, பயணத்தின் நடுவே பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தம்பதியினர் குழந்தையை ஒரு துணியில் சுற்றி வாகனத்திலிருந்து வெளியே எறிந்ததாக தெரிவித்தனர்.

    குழந்தையை வளர்க்க முடியாததால் அதை கைவிட்டதாக தம்பதியினர் போலீசாரிடம் விசாரணையின்போது தெரிவித்தனர். அவர்கள் பர்பானியைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒரு வருடத்திற்கும் மேலாக புனேவில் வசித்து வந்தனர் என்றும் தெரியவந்தது. அந்தப் பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    • லோகோ பைலட் ரெயிலை நிறுத்தினார்.
    • இந்த சம்பவத்தின் வீடியோவை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது 'எக்ஸ்' பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    ஜார்க்கண்டில் ரெயில் தண்டவாளத்தில் யானை தனது குட்டியை பிரசவித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    ஜார்க்கண்டில் ஒரு கர்ப்பிணி யானை தண்டவாளம் அருகே வந்து பிரசவ வேதனையில் நின்றது. அதே நேரத்தில், அருகில் ஒரு ரெயில் வருவதை உள்ளூர்வாசிகள் கவனித்தனர். அவர்கள் உடனடியாக உஷாராகி ரெயிலை நிறுத்தினர். லோகோ பைலட் ரெயிலை நிறுத்தினார்.

    பின்னர் யானை ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தது. பின்னர், அது மெதுவாக தனது குழந்தையுடன் காட்டுக்குள் நடந்து சென்றது. தாயும் குழந்தையும் பாதுகாப்பாக அகலும் வரை வரை ரெயில் அங்கேயே 2 மணிநேரம் நின்றது.

    இந்த சம்பவத்தின் வீடியோவை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது 'எக்ஸ்' பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஜார்க்கண்ட் வனத்துறை அதிகாரிகளையும், யானையின் பிரசவத்திற்கு உதவியவர்களின் மென்மையான மனதையும் அவர் பாராட்டினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    • PM 2.5 கொண்ட காற்றை சுவாசிப்பது, முன்கூட்டிய பிறப்பு மற்றும் குறைந்த எடை பிறப்புக்கு வழிவகுக்கும்
    • மழை, வெப்பம் மற்றும் காற்று மாசுபாடு உள்ளிட்ட வானிலை நிலைமைகள் இதற்கு காரணம் .

    2019-21 மக்கள்தொகை சுகாதார கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இந்தியாவில் 13 சதவீத குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறக்கின்றன. 17 சதவீத குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்கின்றன. மழை, வெப்பம் மற்றும் காற்று மாசுபாடு உள்ளிட்ட வானிலை நிலைமைகள் இதற்கு காரணம் என்று  ஆய்வு கூறுகிறது.

    டெல்லி ஐஐடி, மும்பை சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், கர்ப்ப காலத்தில் காற்று மாசுபாட்டை மதிப்பிடுவதற்கு மத்திய அரசின் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பிலிருந்து ரிமோட் சென்சிங் தரவைப் பயன்படுத்தி ஆய்வு செய்தனர்.

    சுவாச மண்டலத்தை கடுமையாக சேதப்படுத்தும் நுண்ணிய துகள் பொருளான PM 2.5 கொண்ட காற்றை சுவாசிப்பது,  குறைப்பிரசவம் மற்றும் குறைந்த எடை பிறப்புக்கு வழிவகுக்கும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேசம், டெல்லி, உத்தரகண்ட் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் PM 2.5 நுண்ணிய துகள்கள் காற்றில் அதிக அளவில் காணப்படுகிறது.

    தென் மாநிலங்களில் இந்த சதவீதம் பொதுவாக குறைவாகவே உள்ளது.

    பஞ்சாபில் அதிக எடை குறைந்த குழந்தைகள், 22 சதவீதம் உள்ளனர். டெல்லி, மத்தியப் பிரதேசம், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    • வாட்ச்மேனில் இருந்து வார்டு பாய்கள், துப்புரவுப் பணியாளர்கள் முதல் துணை மருத்துவ ஊழியர்கள் வரை அனைவரும் பணம் கேட்கிறார்கள்.
    • மருத்துவர்கள் நேரடியாகக் கேட்பதில்லை, ஆனால் இது ஒரு நடைமுறை என்று அவர்களுக்குத் தெரியும்.

    சென்னை அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பிரசவத்திற்குப் பிறகு, ஊழியர்கள் கட்டாயப்படுத்தி பணம் வசூலிப்பதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த கார்த்திகா என்ற பெண்ணின் குடும்பத்திடம், அவரைப் பிரசவ வார்டுக்கு மாற்றவும், குழந்தையை சுத்தம் செய்யவும் வார்டு பாய்கள் தலா ரூ.3,000 லஞ்சம் கேட்டுள்ளனர்.

    பயந்த கார்த்திகாவின் குடும்பத்தினர், வேறு வழியின்றி பணம் செலுத்தியுள்ளனர். அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் வரை, மொத்தம் ரூ.10,000 வரை செலவழித்ததாகத் தெரிகிறது.

    இதுகுறித்து பேசிய கார்த்திகா, "வாட்ச்மேனில் இருந்து வார்டு பாய்கள், துப்புரவுப் பணியாளர்கள் முதல் துணை மருத்துவ ஊழியர்கள் வரை அனைவரும் பணம் கேட்கிறார்கள்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

    இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட வேண்டிய சேவைகள் என்று குறிப்பிட்ட கார்த்திகா,மருத்துவர்கள் நேரடியாகக் கேட்பதில்லை, ஆனால் இது ஒரு நடைமுறை என்று அவர்களுக்குத் தெரியும் என்று கூறினார்.

    மருத்துவமனை ஊழியர்களின் லஞ்சப் பட்டியல் :

    வார்டு பாய்கள் - அறுவை சிகிச்சை அறையில் இருந்து குழந்தையை சாதாரண வார்டுக்கு மாற்றுதல், குழந்தையை சுத்தம் செய்தல் மற்றும் நோயாளிக்கு பிற வகையான உதவி ஆகியவற்றுக்கு சராசரியாக ரூ.500 முதல் ரூ.3000 வரை லஞ்சம் கேட்கின்றனர்.  

    பெண் மருத்துவ உதவியாளர்கள் - பிரசவ உதவி, குழந்தைக்கு குளிப்பாட்டுதல், துணிகள் கொண்டு வருதல் மற்றும் பிற சேவைகளுக்கு ரூ.500 முதல் ரூ.1000 லஞ்சம் கேட்கின்றனர்.

    துப்புரவு பணியாளர்கள் - துப்புரவு சேவை மற்றும் நோயாளிகளின் வார்டுக்கு வழிகாட்டுதலுக்கு குறைந்தது ரூ.20 முதல் ரூ.50 லஞ்சம் கேட்கின்றனர்.

    இதுதவிர வாட்ச்மேன்கள் ரூ.100 லஞ்சமாக பெறுகின்றனர்.

    சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் குடியிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் சங்கீதா, இந்த பிரச்சினை குறித்து தாங்கள் அறிந்திருப்பதாகவும், ஆனால் அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறுகிறார்.

    "பணம் கேட்க வேண்டாம் என்று ஊழியர்களிடம் கூறுகிறோம், இருப்பினும் இத்தகைய புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஊழியர்களைக் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை அவர்களை அடையாளம் காண முடியவில்லை" என்றும் அவர் டாக்டர் சங்கீதா வருத்தத்துடன் தெரிவித்தார்.

    சிறுசிறு வேலைகள் முதல் நோயாளிகளை வேறு அறைக்கு மாற்றுவது அல்லது ஸ்கேன் எடுப்பது போன்ற பெரிய வேலைகளுக்கும் ரூ.50 முதல் ரூ.500 அல்லது அதற்கு மேல் பணம் கோரப்படுவதாக நோயாளிகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

    பணம் கொடுக்க மறுப்பவர்கள் வாய்மொழித் துஷ்பிரயோகத்திற்கு ஆளாவதாகவும், பார்வையாளர்கள் நேரத்திலும் நோயாளிகளைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். 

    • பழுப்பு நிற கொழுப்பு திசு ஆற்றலை எரிக்கும், நம்மை சூடாக வைத்திருக்கும்.
    • 'நேச்சர் மெட்டபாலிசம்' என்ற இதழில் வெளியாகி உள்ளது.

    ஒருவரின் பிறந்த மாதத்திற்கும், அவரின் உடல் கொழுப்பை எவ்வாறு சேமிக்கிறது என்பதற்கும் தொடர்பு இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறா?.. ஆம் என புதிய ஆய்வு ஒன்று அடித்துக் கூறுகிறது.

    ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு 'நேச்சர் மெட்டபாலிசம்' என்ற இதழில் வெளியாகி உள்ளது. இந்த ஆய்வின்படி, குளிர் காலத்தில் கருத்தரித்தவர்களில் ஒப்பீட்டளவில் அதிக பழுப்பு நிற கொழுப்பு திசுக்களின் செயல்பாடு (brown adipose tissue activity) இருந்துள்ளது.

    பழுப்பு நிற கொழுப்பு திசு என்பது ஆற்றலை எரிக்கும், நம்மை சூடாக வைத்திருக்கும் மற்றும் இரத்த சர்க்கரையை சீராக்க உதவும் ஒரு வகை கொழுப்பு ஆகும்.

    இதன்படி வெப்பமான காலங்களில் கருத்தரிக்கப்பட்டவர்களை விட, குளிர்ந்த மாதங்களில் கருத்தரிக்கப்பட்டு 10 மாதங்கள் கடந்து பிரசவிக்கப்படுபவர்களுக்குக் குறைந்த BODY MASS INDEX மற்றும் உள் உறுப்புகளைச் சுற்றியுள்ள கொழுப்பு குறைவாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.  

    ×