என் மலர்
நீங்கள் தேடியது "government job"
- குடும்ப வறுமை காரணமாக, அவரது தாய் நீண்ட காலமாகத் தெருவோர நடைபாதையில் அமர்ந்து காய்கறி விற்று வந்துள்ளார்.
- இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.
கஷ்டப்பட்டு வளர்த்த மகன் ஒரு நிலைக்கு வரும்போது எந்தத் தாய்க்கும் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தைச் சேர்ந்த கோபால் சாவந்த் என்ற இளைஞர், அத்தகைய ஒரு நெகிழ்ச்சியான தருணத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளார்.
கோபால் சாவந்த் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
குடும்ப வறுமை காரணமாக, அவரது தாய் நீண்ட காலமாகத் தெருவோர நடைபாதையில் அமர்ந்து காய்கறி விற்று வந்துள்ளார்.
தனக்கு வேலை கிடைத்த செய்தியைத் தாயிடம் சொல்ல கோபால் அவர் கடை வைத்திருக்கும் இடத்திற்கே நேரடியாகச் சென்றார்.
தாய் காய்கறி விற்றுக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்ற கோபால், தனக்கு CRPF வேலை கிடைத்த விவரத்தைக் கூறினார். இதைக் கேட்டதும் அந்தத் தாய் தனது மகனை ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.
வறுமை சாதிப்பதற்கு ஒரு தடையல்ல என்பது கோபால் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.
- மதுரையில் இருந்து அலங்காநல்லூர் செல்லும் வழியில் தொண்டர்கள், பொதுமக்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கு கால்நடை பராமரிப்பு துறையில் அரசு பணி வழங்கப்படும்.
அலங்காநல்லூர்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் பொங்கல் அன்று (15-ந்தேதி) அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், களத்தில் நின்று நீண்ட நேரம் விளையாடிய காளையின் உரிமையாளர்களுக்கும் கார், டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளைடக்கி பரிசு பெறும் சிறந்த வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று அலங்காநல்லூரில் உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை கண்டு களிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தார். அவரை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் பிரவீன்குமார் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆர்வத்துடன் போட்டியை கண்டுகளித்தார். அப்போது வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளையின் உரிமையாளருக்கும் தங்க மோதிரம் பரிசாக வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். அதே நேரத்தில் அனைவருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துகளையும், புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மதுரை மண் என்பது வீரம் விளைந்த மண்ணாகவும், அப்படிப்பட்ட வீரம் விளைந்த இந்த மண்ணில் வீர விளையாட்டான உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்கின்றபோது நமக்கு எல்லாம் வீரமே வருகிறது. அதனை அடக்குகிற காளையர்களை பார்க்கும்போது நம்முடைய தமிழ் மண்ணுக்கு பெருமையாக இருக்கிறது. நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் இந்த வீரம் விளைந்த மண்ணில் அறிவு வளர்ச்சிக்காக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது உங்களுக்கு எல்லாம் தெரியும்.
அதேபோல தமிழர்களின் அடையாளமாக இந்த வீர விளையாட்டுக்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கமும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இது அரசின் மிகப்பெரிய சாதனை.
ஆகவே இதை சொல்லுகின்ற நேரத்தில் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் ஜல்லிக்கட்டை பார்க்க முதலமைச்சராக வந்திருக்கக்கூடிய நான் ஏதாவது அறிவிப்புகளை வெளியிட்டு போனால்தான் உங்களுக்கும் திருப்தி. எனக்கும் திருப்தி. அதனால் 2 அறிவிப்புகளை நான் மகிழ்ச்சியோடு அறிவிக்க விரும்புகிறேன்.
முதல் அறிவிப்பு பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு போட்டியில் பங்பெற்று அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு துறையில் உரிய அரசு பணியிடங்களுக்கு பணி அமர்த்தி வழிவகை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
2-வது அறிவிப்பு உலக புகழ்பெற்ற தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான அலங்காநல்லூரில் சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இரண்டு அறிவிப்பும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். அந்த மகிழ்ச்சியோடு "தமிழர்கள் எல்லோரும் வெல்வோம் ஒன்றாக" என்று கூறி விடைபெறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கிராஜுவிட்டி தொகையாக ரூ. 10 லட்சம், மனைவி ரூபாலிக்கு கிடைத்துள்ளது.
- புத்தாண்டு அன்று இரவு ரூபாலியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றுவிட்டு, உடலை அருகில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் வீசிவிட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் இறந்த மகனின் அரசு வேலை மற்றும் பணத்திற்காக மருமகளைக் மாமியார் கொலை செய்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
தானே மாவட்டம் கல்யாண் பகுதியைச் சேர்ந்த 60 வயதான லதாபாய் கங்குர்டே என்பவர், தனது மருமகள் ரூபாலியை (35) இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளார்.
லதாபாயின் மகன் விலாஸ் ரெயில்வே ஊழியராகப் பணியாற்றி வந்தார். அவர் கடந்த 2025 செப்டம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, கிராஜுவிட்டி தொகையாக ரூ. 10 லட்சம், மனைவி ரூபாலிக்கு கிடைத்துள்ளது.
மேலும் கருணை அடிப்படையில் வழங்கப்படும் ரெயிலவே வேலைக்காகவும் ரூபாலி விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், லதாபாய் தனது 15 வயது பேரனுக்கு அந்த வேலை கிடைக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார்.
மேலும், மருமகளுக்குக் கிடைத்த பணத்தை மாமியார் லதாபாய் கேட்டுள்ளார்.
இதற்கு மருமகள் மறுக்கவே, இதனால் ஆத்திரமடைந்த லதாபாய், தனது நண்பர் ஜெகதீஷ் (67) என்பவருடன் சேர்ந்து மருமகளைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.
இருவரும் சேர்ந்து புத்தாண்டு அன்று இரவு ரூபாலியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றுவிட்டு, உடலை அருகில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் வீசிவிட்டனர்.
அதன் பிறகு, எதுவும் தெரியாதது போல மருமகளைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் லதாபாய் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் லதாபாய் உண்மையை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து மாமியார் லதாபாய் மற்றும் அவருக்கு உதவிய நண்பர் ஜெகதீஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
- தென்காசி பேருந்து விபத்தில் புளியங்குடியைச் சேர்ந்த மல்லிகா உயிரிழந்தார்.
- உயிரிழந்த மல்லிகா பார்வையற்ற தனது மகள் கீர்த்திகாவை பி.எட் வரை படிக்க வைத்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனிடையே, இந்த பேருந்து விபத்தில் தாயை பறிகொடுத்த பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு வேலை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து பார்வை மாற்றுத்திறனாளி பட்டதாரிக்கு அரசு வேலைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
உயிரிழந்தவர்களில் ஒருவரான புளியங்குடியைச் சேர்ந்த மல்லிகா, கணவரை இழந்த நிலையிலும் பீடி சுற்றி, பார்வையற்ற தனது மகள் கீர்த்திகாவை பி.எட் வரை படிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரசு அமைந்த 20 நாட்களுக்குள் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு 20 மாதங்களுக்குள் நிறைவேற்றுவோம்.
- பீகார் மக்களுக்கு நாங்கள் சமூக நீதியுடன் பொருளாதார நீதியையும் வழங்க விரும்புகிறோம்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
ஆளும் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
முதல்வர் நிதிஷ் குமார் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை உள்ளிட்ட மக்களை கவரும் திட்டங்களை தொடர்ச்சியாக அறிவித்து வருகிறார்.
இந்நிலையில் இந்தியா கூட்டணியின் முதல்வர் முகமான ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் அனைவரையும் வியக்க வைக்கும் தேர்தல் வாக்குறுதி ஒன்றரை இன்று அறிவித்துள்ளார்.
அதாவது, அரசு வேலையில் உள்ளவர்கள் குடும்பங்களை தவிர்த்து மற்ற அனைத்து குடும்பங்களிலும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தள அரசு அமைந்த 20 நாட்களுக்குள் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு 20 மாதங்களுக்குள் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதாக தேஜஸ்வி யாதவ் உறுதியளித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 20 ஆண்டுகளாக பீகாரில் என்டிஏ அரசாங்கத்தால் நிச்சயமின்மை நிலவுகிறது. எந்த ஒரு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படவில்லை.
ஆர்ஜேடி ஆட்சி அமைத்து 20 மாதங்களுக்கு பின் பீகாரில் ஒரு குடும்பம் கூட அரசு வேலை இன்றி இருக்காது. இது பீகாரில் நிலவும் வேலையின்மை பிரச்சனையை வேரோடு தகர்த்தெறியும். பீகார் மக்களுக்கு நாங்கள் சமூக நீதியுடன் பொருளாதார நீதியையும் வழங்க விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.
- இரவு முழுவதும் எறும்புக்கடி, கடுங்குளிரில் இருந்ததது.
- புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கைவிடும் சம்பவங்களில் மத்தியப் பிரதேசம் நாட்டிலேயே முன்னிலையில் உள்ளது.
மத்திய பிரதேசத்தில் அரசு வேலை பறிபோய்விடும் என்ற அச்சத்தில், மூன்று நாட்களே ஆன சிசுவை பெற்றோரே காட்டில் வீசிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் நந்தன்வாடி பகுதியை சேர்ந்தவர் பப்லு தண்டோலியா. அரசுப் பள்ளி ஆசிரியரான இவருக்கும் மனைவி ராஜ்குமாரி தண்டோலியாவுக்கும் 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த அண்மையில் ராஜ்குமாரிக்கு 4ஆவதாக ஆண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 3 நாட்களுக்கு பிறகு காட்டுக்குள் கொண்டு சென்று ஒரு கல்லின் ஓரத்தில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
மத்தியப் பிரதேச அரசு ஜனவரி 26, 2001 அன்று மத்தியப் பிரதேச அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் 'இரண்டு குழந்தைகள்' மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும் என்று ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.
இதை மீறி மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்தால், அவர் அரசுப் பணியிலிருந்து பணிநீக்கம் செய்யப்படுவார் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கொள்கைப்படி வேலை இழந்துவிடுவோம் என்ற பயத்தாலேயே இந்தக் கொடூரச் செயலைச் செய்ததாகப் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
காலையில் நடைபயிற்சிக்குச் சென்ற கிராம மக்கள் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு, கல்லிடுக்கில் கிடந்த குழந்தையைக் கண்டுபிடித்து, காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு, இரவு முழுவதும் எறும்புக்கடி, கடுங்குளிரில் இருந்ததால் ஏற்பட்ட பாதிப்புக்கு சிகிச்சை அளித்தனர். இதைதொடர்ந்து குழந்தை பத்திரமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கைவிடும் சம்பவங்களில் மத்தியப் பிரதேசம் நாட்டிலேயே முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- அரசு வேலைக்காக காத்திருப்பவர்களில் 31 லட்சத்து 40 ஆயிரத்து 532 பேர் ஆண்கள்.
- அரசு வேலைக்காக காத்திருப்பவர்களில் 35 லட்சத்து 82 ஆயிரத்து 882 பேர் பெண்கள்.
சென்னை :
தமிழகத்தில் இதுவரை அரசு வேலைவாய்ப்புக்காக 67.23 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அரசு கூறியுள்ளது. இதுதொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரையிலான பதிவு தொடர்பான தரவுகளை வேலை வாய்ப்பகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசு வேலைவாய்ப்புக்காக 67 லட்சத்து 23 ஆயிரத்து 682 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 31 லட்சத்து 40 ஆயிரத்து 532 பேர் ஆண்கள், 35 லட்சத்து 82 ஆயிரத்து 882 பேர் பெண்கள், 268 பேர் மூன்றாம் பாலினத்தவர்.
அவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18.48 லட்சம்; 19 முதல் 30 வயதுள்ளவர்கள் 28.09 லட்சம்; 31 முதல் 45 வயதுடையவர்கள் 18.30 லட்சம்; 46 வயது முதல் 60 வயது உடையவர்கள் 2.30 லட்சம்; 60 வயதுக்கு மேற்பட்டோர் 5,602 பேர் என்று அதில் கூறப்பட்டு உள்ளது. அரசு வேலைக்காக காத்திருப்பவர்களில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 967 பேர் மாற்றுத்திறனாளிகள் என்று அந்த தரவில் கூறப்பட்டுள்ளது.
- அரசு வேலை வழங்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது.
- மாற்றுத்திறனாளி கிரிக்கெட் இந்திய அணி கேப்டன் வினோத்பாபு பேட்டியளித்தார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் கீழச்செல்வனூர் கிரா மத்தை சேர்ந்தவர் வினோத்பாபு (வயது34). இவரது தலைமையிலான மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் அணி கடந்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற உலக கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி கோப்பையை வென்று சாதனை படைத்தது.
ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதுகளை வினோத்பாபு பெற்று சாதனை படைத்தார். தமிழகம் திரும்பிய கேப்டன் வினோத்பாபு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிலையில் சொந்த ஊர் வந்த வினோத்பாபு நிருபர்களுக்கு பேட்டியளி த்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மாற்றுத்திறனாளி இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டேன். அப்போது பயண செலவுக்கு கூட பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டேன். இதுபற்றி அறிந்த பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் உடனடியாக நிதி உதவி செய்தார்.
அதன் பின்னர் பாகிஸ்தா னில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தது. உலக கோப்பையுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
அப்போது 2018-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற போது மு.க. ஸ்டாலின் எனக்கு அரசு வேலை வழங்கப்படும் என உறுதி அளித்தார். 2018-ல் சந்தித்து பேசிய நிகழ்வினை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னிடம், மு.க.ஸ்டாலின் ஞாபகப்படுத்தினார்.
இதனையடுத்து 2 வாரத்தில் தங்களுக்கு அரசு வேலை வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து லண்டனில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளேன்.
கீழச்செல்வனூர் கிரா மத்தில் நான் பயிற்சி மேற்கொள்ள உரிய மைதானம், உபகரணங்கள் இல்லை. எனவே பயிற்சி மேற்கொள்வதற்காக தினமும் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக மைதானத்திற்கு சென்று வருகிறேன். தற்போது வீட்டில் போதுமான இடவசதி இல்லாமல் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. ஆகவே சொந்த கிராமத்தில் பயிற்சி மேற்கொள்ள மைதானத்தை அமைத்து உபகரணங்கள் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஸ்ருதி என்கிற திருநங்கைக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பணி நியமன ஆணையை வழங்கினார்.
- தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கை கிராம உதவியாளர் பணிக்கு தேர்வானதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
எட்டயபுரம்:
திருநங்கையர்கள் வாழ்வில் முன்னேற தமிழக அரசு திருநங்கையர்கள் நலவாரியம் ஒன்றை அமைத்து அதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு புதுப்புது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கிராம உதவியாளர் காலி பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த ஸ்ருதி என்கிற திருநங்கைக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பணி நியமன ஆணையை வழங்கினார்.
இதன்மூலம் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கை ஒருவருக்கு கிராம உதவியாளர் பணி தூத்துக்குடி மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
அரசுப்பணி என்றால் ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பினருக்கும் ஒரு அலாதியான விருப்பம் இருக்கும் சூழலில், பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் திருநங்கையர் சமுதாயத்தில் இருந்து ஒருவர், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கை கிராம உதவியாளர் பணிக்கு தேர்வானதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக திருநங்கை ஸ்ருதி கூறியதாவது:-
தலையாரிக்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். மேலும் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் வந்துள்ளேன். இது எங்கள் சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும்.
நான் மேன்மேலும் வளர்ந்து கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளுக்கு செல்வேன். திருநங்கைகளுக்கு நான் ஒரு உதாரணமாக இருப்பேன். எங்கள் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்து கொடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- இந்த மனு குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திருமங்கலம் டவுன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமது ஷா புரத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவரது மனைவி அபர்னா ஸ்ரீ (வயது34). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருங்குடியை சேர்ந்த அரசு ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜா (50), அவரது மனைவி நிலையூர் சத்துணவு மைய பொறுப்பாளர் கலைச்செல்வி (43) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் பொதுப்பணித்துறையில் வாங்கி தராமல் ஏமாற்றினர். பணத்தையும் திருப்பி தரவில்லை. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திருமங்கலம் டவுன் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ராஜா,கலைச்செல்வி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 5 பேரிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.
- அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தனர்.
சிவகங்கை
சிவகங்கை தொண்டி ரோடு பகுதியில் வசிப்பவர் ராஜேஸ்வரி (வயது 45). இவர் சிவகங்கை காளவாசல் பகுதியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம், அவரது மனைவி மஞ்சுளா மற்றும் சிவகங்கை சேர்ந்த மருதுபாண்டி, முத்துப்பாண்டி, முத்து உமையாள் ஆகிய 5 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரூ.21 லட்சம் பெற்றுக் கொண்டாராம்.
அதன் பின்னர் அவர்கள் 5 பேருக்கும் பணி நியமன ஆணைகளையும் கொடுத்தாராம். அதைப் பெற்றுக் கொண்ட அவர்கள் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்த அலுவலகத்தில் பணிக்கு சேர சென்ற போது அந்த உத்தரவு போலியானது என்று தெரிந்ததாம்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் ராஜேஸ்வரி மீது சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தனர். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் விசாரணை நடத்தி ராஜேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்.
- ஒடிசா ரெயில் விபத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
- அரசு வேலைக்கான நியமன ஆணைகள் நாளை வழங்கப்படும் என மாநில அரசு கூறியுள்ளது.
கொல்கத்தா :
ஒடிசாவில் நடந்த கோர விபத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாநிலத்தை சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் விபத்தில் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த மேற்கு வங்காளத்தினரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார். இதைப்போல விபத்தில் கை, கால்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு பணி வழங்குவதாக அவர் கூறினார்.
மேலும் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரெயிலில் பயணித்து, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ரெயில் விபத்து நடந்த பகுதியை ஏற்கனவே நேரில் சென்று பார்வையிட்ட மம்தா பானர்ஜி, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மேற்கு வங்காளத்தினரை பார்ப்பதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் ஒடிசா செல்ல இருப்பதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதிக்கான காசோலை மற்றும் அரசு வேலைக்கான நியமன ஆணைகள் நாளை (புதன்கிழமை) வழங்கப்படும் என மாநில அரசு கூறியுள்ளது.






