என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகாரில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை..  தேஜஸ்வியின் தடாலடி தேர்தல் வாக்குறுதி!
    X

    பீகாரில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை.. தேஜஸ்வியின் தடாலடி தேர்தல் வாக்குறுதி!

    • அரசு அமைந்த 20 நாட்களுக்குள் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு 20 மாதங்களுக்குள் நிறைவேற்றுவோம்.
    • பீகார் மக்களுக்கு நாங்கள் சமூக நீதியுடன் பொருளாதார நீதியையும் வழங்க விரும்புகிறோம்.

    பீகார் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

    ஆளும் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

    முதல்வர் நிதிஷ் குமார் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை உள்ளிட்ட மக்களை கவரும் திட்டங்களை தொடர்ச்சியாக அறிவித்து வருகிறார்.

    இந்நிலையில் இந்தியா கூட்டணியின் முதல்வர் முகமான ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் அனைவரையும் வியக்க வைக்கும் தேர்தல் வாக்குறுதி ஒன்றரை இன்று அறிவித்துள்ளார்.

    அதாவது, அரசு வேலையில் உள்ளவர்கள் குடும்பங்களை தவிர்த்து மற்ற அனைத்து குடும்பங்களிலும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    ராஷ்டிரிய ஜனதா தள அரசு அமைந்த 20 நாட்களுக்குள் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு 20 மாதங்களுக்குள் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதாக தேஜஸ்வி யாதவ் உறுதியளித்தார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 20 ஆண்டுகளாக பீகாரில் என்டிஏ அரசாங்கத்தால் நிச்சயமின்மை நிலவுகிறது. எந்த ஒரு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படவில்லை.

    ஆர்ஜேடி ஆட்சி அமைத்து 20 மாதங்களுக்கு பின் பீகாரில் ஒரு குடும்பம் கூட அரசு வேலை இன்றி இருக்காது. இது பீகாரில் நிலவும் வேலையின்மை பிரச்சனையை வேரோடு தகர்த்தெறியும். பீகார் மக்களுக்கு நாங்கள் சமூக நீதியுடன் பொருளாதார நீதியையும் வழங்க விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×