என் மலர்
நீங்கள் தேடியது "Tejashwi Yadav"
- இன்று பீகார் முதல்வராக 10 வது முறையாக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.
- சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும்.
பீகார் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், 10வது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற ஜேடியு தலைவர் நிதீஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களை கைப்பற்றி பாஜக- ஜெடியு-வின் என்டிஏ கூட்டணி அபார வெற்றி பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ்-ஆஜேடி-யின் மகாபந்தன் கூட்டணி 35 இடங்களோடு மட்டுப்பட்டது. இன்று பீகார் முதல்வராக 10 வது முறையாக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.
இந்நிலையில் தேர்தலுக்கு பின் முதல் முறையாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பொதுவெளியில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,"பீகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமாருக்கும், அமைச்சரவை உறுப்பினர்களாக பதவியேற்ற பீகார் அரசின் அனைத்து அமைச்சர்களுக்கும் வாழ்த்துக்கள்.
புதிய அரசாங்கம் தனது வாக்குறுதிகளையும் அறிவிப்புகளையும் பொறுப்புடன் நிறைவேற்றும் என்றும் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டு பீகார் மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பீகார் சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 6 தொகுதியில் வெற்றிபெற்றிந்தபோதும் ஆர்ஜேடி 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த எண்ணிக்கை மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 10 சதவீததிற்கும் சிறிது அதிகம் ஆகும்.
எனவே கடந்த ஆட்சிக்காலத்தை போலாவே தேஜஸ்வி யாதவ் எதிர்கட்சித் தலைவராக தொடர உள்ளார். இந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவ் ரஹோபூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக மீண்டும் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும்.
- ரஹோபூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக மீண்டும் தேர்வாகி உள்ளார்.
பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது.
இந்த கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டீரிய ஜனதாதளம்-காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்தது.
பீகாா் சட்டசபையின் பதவிக் காலம் வருகிற 22-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே நேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார் வரும் 20 ஆம் தேதி புதிய அமைச்சரவையுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பீகார் சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 6 தொகுதியில் வெற்றிபெற்றிந்தபோதும் ஆர்ஜேடி 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த எண்ணிக்கை மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 10 சதவீததிற்கும் சிறிது அதிகம் ஆகும்.
எனவே கடந்த ஆட்சிக்காலத்தை போலாவே தேஜஸ்வி யாதவ் எதிர்கட்சித் தலைவராக தொடர உள்ளார். இந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவ் ரஹோபூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக மீண்டும் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அரசியலை விட்டு விலகுவதாகவும் குடும்பத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாகவும் அறிவித்தார்.
- லாலுவின் மற்ற மூன்று மகள்களும் வீட்டை விட்டு வெளியேறி டெல்லி சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகார் தேர்தலில் ஏற்பட்ட பெரும் பின்னடைவைத் தொடர்ந்து, ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
லாலுவின் மகன் ரோஹிணி ஆச்சார்யா நேற்று, அரசியலை விட்டு விலகுவதாகவும் குடும்பத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாகவும் அறிவித்தார்.
இதன் பின்ணணியில் தேஜஸ்வி யாதவ் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்கு பிறகு வீட்டில் ஏற்பட்ட சண்டையில், தேஜஸ்வி, மூத்த சகோதரி ரோகிணியை குடும்பத்தின் சாபம் என்றும் அவரின் சாபத்தால் தான் தேர்தல் தோல்வி ஏற்பட்டதாகவும் திட்டியுள்ளார் என்றும் ரோஹிணி மீது தேஜஸ்வி செருப்பை எடுத்து வீசியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரோஹிணி தந்தை லாலுவுக்கு சிறுநீரக தானம் செய்திருந்த நிலையில் அதையும் தேஜஸ்வி குறை சொன்னதாக கூறப்படுகிறது.
இதைத்த்தொடர்ந்தே ரோஹிணி அறிக்கை விட்டுள்ளார். அதில், "நேற்று, யாரோ ஒருவர் என்னை சபித்து, நான் என் தந்தைக்கு மிகவும் அழுக்கான சிறுநீரகத்தைக் கொடுத்து, கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெற்று, மக்களவை டிக்கெட் வாங்கினேன் என்று சொன்னார்கள்.
இப்போது என் மூன்று குழந்தைகள் மற்றும் கணவர் உட்பட என் குடும்பத்தினரின் அனுமதியைப் பெறாமல் என் சிறுநீரகத்தை தானம் செய்தது ஒரு பெரிய தவறு என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நான் கடவுளாகக் கருதும் என் தந்தையைக் காப்பாற்ற இதைச் செய்தேன்.

இப்போது நான் தொடர்ந்து கேட்கும் குற்றச்சாட்டு என்னவென்றால், அது ஒரு மோசமான வேலை. உங்களில் யாரும் மீண்டும் இதுபோன்ற தவறைச் செய்யக்கூடாது. ரோகிணியைப் போன்ற ஒரு மகள் மீண்டும் எந்த குடும்பத்திலும் பிறக்கக்கூடாது" என்று தெரிவித்துள்ளார். தனது குடும்பம் தன்னை ஒதுக்கிவிட்டதாக அவர் விரக்தியுடன் தெரிவித்தார். மேலும் தேஜஸ்வியின் நெருங்கிய கூட்டாளிகள் இருவர் தனக்கு எதிராக சதி செய்வதாகவும் ரோகிணி குற்றம்சாட்டியுள்ளார்.
ஏற்கனவே மனைவியை விட்டு வேறொரு இளம்பெண்ணுடம் தொடர்பில் இருந்ததால் வெளியேற்றப்பட்ட லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், தன்னை போலவே குடும்பத்தால் சகோதரி ரோஹணி அவமதிக்கப்பட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே லாலுவின் மற்ற மூன்று மகள்களும் பாட்டனாவில் உள்ள வீட்டை விட்டு வெளியேறி டெல்லி சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லாலு மற்றும் ராபிரி தேவி தம்பதிக்கு லாலு மற்றும் ராப்ரிக்கு ஏழு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது ஆரம்பத்தில் முன்னிலை வகித்த தேஜஸ்வி யாதவ், ஒரு கட்டத்தில் பின்தங்கினார்.
- 2020 சட்டமன்றத் தேர்தலில், அவர் இந்தத் தொகுதியில் இருந்து 38,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மாலை 5.30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.
இதற்கிடையே ஆர்ஜேடியின் கோட்டையாகக் கருதப்படும் ரகோபூர் சட்டமன்றத் தொகுதியில் இறுதிக் கட்டம் வரை நடந்த பரபரப்பான போட்டியில், ஆர்ஜேடி தலைவரும் மகாகத்பந்தன் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் சுமார் 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது ஆரம்பத்தில் முன்னிலை வகித்த தேஜஸ்வி யாதவ், ஒரு கட்டத்தில் பின்தங்கினார். கடைசி கட்டம் வரை பரபரப்பான போட்டியைக் கண்ட ரகோபூர், இறுதியாக தேஜஸ்வி யாதவை வெற்றியாளராக முடிசூட்டியது.
முன்னதாக, இந்த சட்டமன்றத் தொகுதியை அவரது தந்தை லாலு பிரசாத் யாதவ் மற்றும் தாய் ராப்ரி தேவி ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
அதன் பிறகு, தேஜஸ்வி யாதவ் 2015 முதல் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். 2020 சட்டமன்றத் தேர்தலில், அவர் இந்தத் தொகுதியில் இருந்து 38,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஆனால், இந்த முறை பாஜக தனது வேட்பாளராக சதீஷ் குமார் யாதவை நிறுத்தியது. முன்னதாக 2010 ஆம் ஆண்டு ஜேடியு வேட்பாளராகப் போட்டியிட்ட சதீஷ் குமார் யாதவ், ராப்ரி தேவியை தோற்கடித்திருந்தார்.
- பீகார் சட்டசபை தேர்தலில் அதிக வாக்கு சதவீதம் பதிவாகி இருக்கிறது.
- கருத்து கணிப்புகளில் பா.ஜ,க கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
இதற்கிடையே கருத்து கணிப்புகளில் பா.ஜ,க கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பீகார் சட்டசபை தேர்தலில் அதிக வாக்கு சதவீதம் பதிவாகி இருக்கிறது. இது மக்கள் அரசாங்க மாற்றத்திற்கு வாக்களித்திருப்பதைக் குறிக்கிறது.
பீகாரில் பா.ஜ.க கூட்டணியின் வெற்றியைக் கணித்த கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க-வின் உயர்மட்டத் தலைமையின் வழிகாட்டுதலின் பேரில் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தனது 36வது பிறந்தநாளை ஆர்ஜேடி தலைவரும் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் கொண்டாடி வருகிறார்.
- கோடிக்கணக்கானோருக்கு நம்பிக்கையளிப்பவராகத் தாங்கள் இருக்கிறீர்கள்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் 121 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் நவம்பர் 11 அன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இந்த தேர்தலில் ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்ற பாஜவின் என்டிஏ கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட மகபந்தன் (இந்தியா) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இன்று (நவம்பர் 9) தனது 36வது பிறந்தநாளை ஆர்ஜேடி தலைவரும் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் கொண்டாடி வருகிறார்.
அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தம்பி தேஜஸ்வி யாதவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். பீகாரில் புத்துணர்வு பெற்றுள்ள சமூகநீதி இயக்கத்தின் உந்துசக்தியாக எழுந்து, கோடிக்கணக்கானோருக்கு நம்பிக்கையளிப்பவராகத் தாங்கள் இருக்கிறீர்கள்.
தங்களது தலைமையில் ஒரு புதிய அத்தியாயத்தின் விளிம்பில் பீகார் இருக்கும் நிலையில், சமத்துவம், தரமான கல்வி, வேலைவாய்ப்புகள், மாண்பு என அவர்களது எதிர்பார்ப்புகளைத் தாங்கள் நிறைவு செய்வீர்கள் என நம்புகிறோம்.
இந்த வரலாற்றுப் பாதையில் தொடர்ந்து வலிமையோடும், நல்ல உடல்நலத்தோடும், துணிச்சலோடும் தாங்கள் தொடர விழைகிறேன்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- மகர சங்கராந்தி நாளான ஜனவரி 14 அன்று ரூ.30,000 ஒரே தவணையாக வழங்கப்படும்.
- முன்னதாக வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உள்ளிட்ட வாக்குறுதிகளையும் தேஜஸ்வி அறிவித்திருந்தார்.
பீகார் மாநில சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இரண்டாவது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
ஆளும் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு இடம்பெற்ற பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட மகபந்தன் (இந்தியா) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு தரப்பினரும் கண்கவர் திட்டங்களை அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ் பேசுகையில், 'மை பஹின் மான் யோஜனா' என்ற திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு மகர சங்கராந்தி நாளான ஜனவரி 14 அன்று ரூ.30,000 ஒரே தவணையாக வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு நெல்லுக்கு குவிண்டாலுக்கு 300 ரூபாயும், கோதுமைக்கு 400 ரூபாயும் போனஸ் தொகையாக வழங்கப்படும். பாசனத்துக்காக இலவச மின்சாரம் வழங்கப்படும்.
விவசாயிகளுக்குஅனைத்து முதன்மை விவசாய கடன் சங்கங்கள், முதன்மை சந்தைப்படுத்துதல் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்களுக்கும் மாநிலத்தில் மக்கள் பிரதிநிதிகள் அந்தஸ்து வழங்கப்படும்.
ஆசிரியர்கள், காவல்துறை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலிருந்து 70 கி.மீ.க்குள் இடமாற்றங்கள் செய்யப்படும். பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்" என்று வாக்குறுதி அளித்தார்.
முன்னதாக வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உள்ளிட்ட வாக்குறுதிகளையும் தேஜஸ்வி அறிவித்திருந்தார்.
இதற்கிடையே ஆளும் என்டிஏ கூட்டணி 'முக்கியமந்திரி மகிளா ரோஸ்கர் யோஜனா' திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் கணக்குகளில் ஏற்கனவே ரூ.10,000 டெபாசிட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- தனக்கு எதிராக தம்பி பிரசாரத்தில் ஈடுபட்டது தேஜ் பிரதாப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
- கட்சியை விட பொதுமக்களே எனக்கு எஜமானர்கள்.
பாட்னா:
பீகாரில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த முன்னாள் முதல்-மந்திரி லல்லு பிரசாத் யாதவ் குடும்பம் அரசியல் பகையால் பிரிந்து கிடக்கிறது. அவரது மகன்கள் தேஜ்பிரதாபும், தேஜஸ்வியும் எதிர் எதிராக களம் இறங்கிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
தந்தை லல்லு பிரசாத் யாதவ்வை பிரிந்துள்ள அவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் ஜன்சக்தி ஜனதா தளம் (ஜே.ஜே.டி.) என்ற கட்சியை தொடங்கினார். தேர்தலில் மஹீவா சட்டசபை தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலில் இவர் முதல் முறையாக இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவருக்கு எதிராக அவரது தம்பியும் முதல்-மந்திரி வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் முகேஷ் ரவுசான் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தேஜஸ்வி யாதவ் பிரசாரம் செய்தார். தனது கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்யுமாறு அவர் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார்.
தனக்கு எதிராக தம்பி பிரசாரத்தில் ஈடுபட்டது தேஜ் பிரதாப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து அவர் கூறியதாவது:-
அவர் (தேஜஸ்வி யாதவ்) எனக்கு எதிராக பிரசாரம் செய்து இருப்பதால் அவர் போட்டியிடும் ரகோபூர் தொகுதியில் நான் அதையே செய்வேன். கட்சியை விட பொதுமக்களே எனக்கு எஜமானர்கள்.
மஹீவா மக்கள் விரும்பினால் இந்த முறை நான் முதல்-மந்திரி ஆவேன். எனது கட்சி 20-ல் இருந்து 30 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்
ஒரே குடும்பத்தில் அண்ணன்-தம்பி இடையே நடந்து வரும் இந்த மோதல் பீகார் அரசியலை சூடாக்கி இருக்கிறது. தேஜ்பிரதாப் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும் குடும்பத்தை விட்டும் அவர் பிரிந்தார். தற்போது அவருக்கு எதிரான விவாகரத்து வழக்கும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி-காங்கிரசின் மகாபந்தன் கூட்டணி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
- யார் சிறந்த முதலமைச்சர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று தேஜஸ்வி யாதவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டமாக அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக பணியாற்றி வருகிறது.
ஆட்சியைக் கைப்பற்றும் வேட்கையில் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி-காங்கிரசின் மகாபந்தன் கூட்டணி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
சட்டமன்ற தேர்தலை ஒட்டி தனியார் செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு தேஜஸ்வி யாதவ் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்? சிலர் இன்னமும் மோடிஜியின் பெயரையும் சொல்கிறார்கள். சிலர் முலாயம் சிங்கின் பெயரைச் சொல்கிறார்கள். சிலர் அகிலேஷ் யாதவின் பெயரையும் சொல்கிறார்கள். சிலர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயரையும் சொல்கிறார்கள். ஆகையால் இப்போது இருப்பவர்களில் யார் சிறந்த முதலமைச்சர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த தேஜஸ்வி, "இப்போது இருப்பவர்களில் எனக்கு ஸ்டாலின் என்று தோன்றுகிறது. நம்முடைய (பீகார்) முதலமைச்சர் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளைக் கொண்டு வருவதை நான் பார்க்கவில்லை. முதலீட்டைக் கொண்டுவருவதற்காக அவர் எதுவும் செய்வதில்லை. ஆனால், ஸ்டாலின் அவர்கள் முயற்சி செய்கிறார். அவர் முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்துகிறார், முதலீடுகளைக் கொண்டு வருகிறார்" என்று தெரிவித்தார்.
இந்த வீடியோவை திமுகவினர் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- நாட்டின் வகுப்புவாத சக்திகளுடன், லாலு பிரசாரத் யாதவ் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டது கிடையாது.
- ஆனால், பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் அதுபோன்ற சக்திகளுக்கு எப்போதும் ஆதரவாக உள்ளார்.
பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதி இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்காக இவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் கதிஹார் மற்றும் கிஷான்கஞ்ச் மாவட்டங்களில் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:-
நாட்டின் வகுப்புவாத சக்திகளுடன், லாலு பிரசாரத் யாதவ் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டது கிடையாது. ஆனால், பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் அதுபோன்ற சக்திகளுக்கு எப்போதும் ஆதரவாக உள்ளார். அவரால்தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் மாநிலத்திலும் நாட்டிலும் வகுப்புவாத வெறுப்பைப் பரப்புகின்றன. பாஜக Bharat Jalao Party (இந்தியாவை எரிக்கும் கட்சி) என்று அழைக்கப்பட வேண்டும்.
இந்தியா கூட்டணி பீகார் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், வக்கு சட்டத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் நாங்கள் வீசுவோம்.
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
வக்பு திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் பெண்களுக்கு வெளிப்படைத்தன்மை மற்றும் அதிகாரமளித்தலுக்கு முன்னோக்கிய நடவடிக்கை என பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தெரிவித்தது.
- முந்தைய ஆர்ஜேடி ஆட்சியை 'காட்டு ராஜ்ஜியம்' என பிரதமர் மோடி கூறியது குறித்து தேஜஸ்வி பேசினார்.
- நிதிஷ் குமார் அரசில் 55 ஊழல்கள் நடந்ததாக பிரதமர் மோடியே கடந்த காலத்தில் கூறியிருந்தார்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மகாபந்தன்(இந்தியா கூட்டணி) முதலமைச்சர் வேட்பாளரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்.
ஏற்கனவே பீகாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தேஜஸ்வி வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, பெண் வாக்காளர்களை குறிவைத்து, தான் ஆட்சிக்கு வந்தால், வெறும் ரூ.500க்கு எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் முதியோர் ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.1,500 ஆக உயர்த்துவதாகவும் அவர் உறுதியளித்தார்.
மாநில மக்களுக்கு சிறந்த கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவோம் என்று அவர் உறுதியளித்தார்.
முந்தைய ஆர்ஜேடி ஆட்சியை 'காட்டு ராஜ்ஜியம்' என பிரதமர் மோடி கூறியது குறித்து பேசிய தேஜஸ்வி, "நிதிஷ் குமார் அரசில் 55 ஊழல்கள் நடந்ததாக பிரதமர் மோடியே கடந்த காலத்தில் கூறியிருந்தார். அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?" என்று அவர் வினவினார்.
மேலும், "நான் செய்வதைத்தான் சொல்வேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்திய கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால், நான் மக்களின் முதல்வராக இருப்பேன். பீகாரில் ஊழல் இல்லாத பாதுகாப்பான அரசாட்சியை நான் வழங்குவேன்" என்று தேஜஸ்வி தெரிவித்தார்.
- தேர்தலுக்குப் பிறகுதான் முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார் என அமித் ஷா தெளிவாக தெரிவித்துவிட்டார்.
- எனக்கு வாய்ப்பு கொடுங்கள், என்டிஏ-வால் 20 வருடங்கள் செய்ய முடியாததை, நான் 20 மாதங்களில் செய்வேன்.
பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம்- பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையில் நேரடி போட்டி நிலவியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் நிதிஷ் குமார்தான் முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளது. ஆனால், முதல்வர் வேட்பாளர் அவர்தான் என என்.டி.ஏ. கூட்டணி வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
இந்தியா கூட்டணியில் தேஜஸ்வி யாதவும்தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
தேஜஸ்வி யாதவ் சஹர்சா மாவட்டத்தில் உளள் சிம்ரி பக்தியார்பூரில் நடைபெற்ற பேரணியில் கலந்த கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.-க்களால் முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார் என அமித் ஷா தெளிவாக தெரிவித்துவிட்டார். இதனால் என்.டி.ஏ.-வுக்கு மக்கள் வாக்களித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமார் முதல்வராக மாட்டார்.

தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் 11 வருடங்களாகவும், 20 வருடங்கள் மாநிலத்திலும் ஆட்சி செய்த போதிலும், பீகார் மாநிலம் ஏழ்மையாகவும், வேலைவாய்ப்பின்மையாகவும், ஊழலாகவும், கிரிமிகல் செயல்பாடு உள்ள மாநிலமாகவும் இருப்பது ஒரு பீகாரியாக எனக்கு மதவேதனையாக உள்ளது.
மோடிக்கு லால பயப்படவில்லை. அதேபோல் அவர் மகனுமான நானும் மோடிக்கு பயப்படமாட்டேன். எனக்கு வாய்ப்பு கொடுங்கள், தேசிய ஜனநாயக கூட்டணியால் 20 வருடங்கள் செய்ய முடியாததை, நான் 20 மாதங்களில் செய்வேன்.
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.






