search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lalu prasad yadav"

    • இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்.
    • ஷ்ரவண மாதத்தில் அசைவ உணவை உண்பதன் மூலம் சனாதன தர்ம விதிகளை புறக்கணிக்கிறார்கள்

    உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

    அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். ரெயில்வே துறையில் நிர்வாக தோல்வியே கூட்டநெரிசலுக்கு காரணம் என ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்நிலையில் கூட்டநெரிசல் குறித்து கருத்து தெரிவித்த பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவரும், முன்னாள் மத்திய ரெயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் சர்ச்சை ஒன்றை கிளப்பினார்.

    பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு, மிகவும் சோகமான சம்பவம் நடந்துள்ளது. அனைத்து மக்களுக்கும் நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம். இது ரெயில்வேயின் தவறு. ரெயில்வேயின் தவறான நிர்வாகத்தாலும் அலட்சியத்தாலும் இவ்வளவு பேர் இறந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார்.

    மேலும் மகா கும்பமேளாவில் நிலவும் கூட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்த கும்பமேளாவின் அர்த்தம் என்ன, கும்பமேளாவே அர்த்தமற்றது" என்றார்.

    இதை கையில் எடுத்த பீகார் பாஜக செய்தித் தொடர்பாளர் மனோஜ் சர்மா, ஆர்ஜேடி தலைவர்கள் எப்போதும் இந்துக்களின் மத உணர்வுகளை அவமதித்து வந்துள்ளனர்.

    மகா கும்பமேளாவை 'அர்த்தமற்றது' என்று ஆர்ஜேடி தலைவர் கூறியது, இந்து மதம் குறித்த அக்கட்சியின் மனநிலையை அம்பலப்படுத்தியுள்ளது. அவர்கள்(ஆர்ஜேடி) ஷ்ரவண மாதத்தில் அசைவ உணவை உண்பதன் மூலம் சனாதன தர்ம விதிகளை புறக்கணிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

     

    • மகிளா சம்வாத் யாத்ராவில் நிதிஷ் குமார் கலந்த கொள்ள இருக்கிறார்.
    • பெண்களை உற்றுப்பார்க்க நிதிஷ் செல்வதாக லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவித்திருந்தார்.

    பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதஷ் குமார் டிசம்பர் 15-ந்தேதி நடைபெறும் பெண்களுடன் உரையாடும் பேரணியில் (Mahila Samwad Yatra) கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். பெண்களுடன் நேரடியாக ஈடுபடுவதை நோக்கமாகக் கொண்ட மாநில அரசின் முயற்சியான மகிளா சம்வாத் யாத்திரையைத் தொடங்குவதற்கான திட்டங்களை நிதிஷ் குமார் அறிவித்தார்.

    இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவித்தபோது, அவர்கள் (நிதிஷ் குமார்) பெண்களை உற்றுப்பார்க்க செல்கிறார்கள்" எனக் குறிப்பிட்டார்.

    இந்த கருத்து மூலம் பெண்களை லாலு பிரசாத் யாதவ் இழிப்படுத்தியுள்ளார் என பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரவித்துள்ளனர்.

    ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் ரஞ்சன் "கடந்த காலங்களில் பீகார் மக்கள் தன்னை எப்படி சகித்துக்கொண்டார்கள் என்பது லாலுவுக்கு தெரியாது. இவர்கள் கேவலமான மனநிலை கொண்டவர்கள். அவர்களுடைய உண்மையான கேரக்டர் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

    பீகார் துணை முதல்வர் சம்ராத் சவுத்ரி "லாலுவின் இதுபோன்ற கருத்துகள் கவலை அளிக்கிறது. லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனைக்கு செல்வது குறித்து பரிலீசனை செய்ய வெணடும். அவருடைய மனநிலை மோசமடைந்துள்ளது" என்றார்.

    மற்றொரு துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா "லாலுஜி கடைசி காலக்கட்டத்தில் உள்ளார். அவர் என்ன நினைக்கிறார், என்ன சொல்கிறார் என்பது குறித்து அவருக்கு தெரியவில்லை" என்றார்.

    ஐக்கிய ஜனதா தளம் சீனியர் தலைவர் கே.சி. தியாகி "அரசியலில் இதற்கு முன்னதாக இதுபோன்ற கருத்தை நாம் கேட்டடு இல்லை. முதலமைச்சர் பதவியில் இருந்து ஒருவர் இதுபோன்ற கருத்தை தெரிவித்து இருப்பது, கண்டனத்திற்கு தகுதியானது. பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்கு மம்தா பானர்ஜி மற்றம் சோனியா காந்தி கண்டனம் தெரிவிக்க வேண்டும். பீகார் தேர்தலில் பெண்கள் லாலுக்கு படம் கற்பிப்பார்கள்" என்றார்.

    உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி "இது sexist கருத்து. லாலுவின் சொந்த குடும்ப உறுப்பினர்கள் கூட இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அவருக்கு அறிவுறுத்தலாம்" என்றார்.

    • தலைமை தங்குவதாக கூற அவருக்கு முழு உரிமை உள்ளது என்று சரத் பவார் தெரிவித்திருந்தார்.
    • எந்த தலைவரும் கூட்டணியை வழிநடத்துவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என தேஜஸ்வி யாதவ் கூறினார்

    மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணிக்குத் தலைமையேற்க வேண்டும் என்று ஆர்ஜேடி தலைவர் லாலு யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

    கடந்த வாரம் [டிசம்பர் 6, வெள்ளிக்கிழமை] கொல்கத்தாவில் தனியார் ஊடகத்துக்கு மம்தா பேட்டியளித்தபோது, நான் இந்தியா கூட்டணியை உருவாக்கினேன், ஆனால் அவர்களால் [எதிர்க்கட்சிகள்] அதை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை. நான் என்ன செய்வது? நான் அனைத்து தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளுடனும் சிறந்த உறவைப் பேணுகிறேன் என்றார்.

    ஏன் இந்தியா கூட்டணிக்குத் தலைமை ஏற்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த மம்தா, வாய்ப்பு கிடைத்தால் கொல்கத்தாவில் இருந்தே இந்தியா கூட்டணியின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வேன் என்று தெரிவித்திருந்தார்.

     

    இதனைத்தொடர்ந்து மாகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்சிபி தலைவர் சரத் பவார், மமதா திறமையான தலைவர், எதிர்க்கட்சி கூட்டணிக்குதலைமை தங்குவதாக கூற அவருக்கு முழு உரிமை உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் பீகாரில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மம்தாவை தலைமை ஏற்க வலியுறுத்தி பேசியுள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், மம்தாவை இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்க கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ் அனுமதிக்க வேண்டும். ஆனால் மம்தாவுக்கு காங்கிரஸின் எதிர்ப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று பேசியிருக்கிறார்.

     

    முன்னதாக, லாலுவின் மகனும் மூத்த ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், மம்தா பானர்ஜி உட்பட இந்திய கூட்டணியின் எந்த மூத்த தலைவரும் கூட்டணியை வழிநடத்துவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறியிருந்தார், ஆனால் ஒருமித்த கருத்து மூலம் முடிவு எட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    அரியானா மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் தோல்விகளாலும், கூட்டணியில் காங்கிரசின் மோசமான செயல்பட்டாலும் இந்தியா கூட்டணி மாநில கட்சிகள் ராகுல் காந்தி மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில் வரிசையாக அனைவரும் மம்தாவை ஆதரிப்பது முக்கியத்துவம் பெறுகிறது. 

    • ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.
    • இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா [ஜெ.எம்.எம்] கட்சி ஆட்சியில் உள்ளது.

    கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணியை எதிர்க்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாகின. இதில் தமிழகத்தில் திமுக, உ.பி.யில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, மகாராஷ்டிராவில் சரத் பவார் என்சிபி, உத்தவ் தாக்கரே சிவசேனா, பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இதில் அங்கம் வகிக்கின்றன.

    இந்த கூட்டணி மக்களவை தேர்தலில் ஆட்சியை பிடிக்கவில்லை என்றாலும் என்சிஏ கூட்டணியை திணறடிக்கும் அளவுக்கு கணிசமான வெற்றியை பதிவு செய்தது. இதனால் தனிப்பெரும்பான்மை இழந்த பாஜக ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளை சார்ந்திருக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. மக்களவை தேர்தலுக்கு பின்னும் தொடரும் இந்தியா கூட்டணி சார்பில் உமர் அப்துல்லாவின் தேசியவாத காங்கிரஸ் காஷ்மீரில் ஆட்சியைப் பிடித்தது.

    இந்நிலையில் தற்போது மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. 288 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.

    இரண்டு மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள், கூட்டணியின் தேசிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஹேம்நாத் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா [ஜெ.எம்.எம்] கட்சி ஆட்சியில் உள்ளது.

    தற்போது வங்கதேச ஊடுருவல், அதிகரிக்கும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தனது அஸ்திரங்களை பயன்படுத்தி பாஜக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது. பழங்குடியின அடையாளம் என்பதை முன்னிறுத்தி ஹேமந்த் சோரன் பிரச்சாரம் செய்கிறார்.

     

    இந்நிலையில் பீகாரில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் ;லாலு பிரசாத் யாதவ் ஜார்கண்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். சாத்ரா [Chatra] தொகுதியில் நிற்கும் தனது கோதர்மா [Koderma] பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் லாலு உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், இந்தியா கூட்டணி ஒன்றுபட்டுள்ளது. எல்லோருக்கும் இந்தியா கூட்டணியை தெரிந்துள்ளது. ஆனால் நரேந்திர மோடி என்று ஒன்றும் இல்லை, யார் நரேந்திர மோடி, பாஜகவை நீங்கள் தூக்கி எறிய வேண்டும் என்று பேசினார். 

    • லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார்.
    • அந்த காலக்கட்டத்தில் வேலைக்குப்பதிலாக நிலங்களை குறைந்த விலையில் பெற்றதாக குற்றச்சாட்டு.

    பீகார் மாநிலம் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ். இவரது மகன் தேஜஸ்வி யாதவ். இவர் பீகார் மாநில முன்னாள் துணை முதல்வர் ஆவார்.

    இவர்கள் இருவர் உள்பட பலர் வேலைக்காகச நிலங்கள் பெற்றது தொடர்பான பணமோசடி வழக்கில் நேரில் ஆஜராக டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

    நீதிமன்ற சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, அக்டோபர் 7-ந்தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு எதிரான துணை குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    அமலாக்கத்துறை இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை ஆகஸ்ட் 6-ந்தேதி தாக்கல் செய்தது. சிபிஐ வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில் அமலாக்கத்துறை இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது.

    லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004-ல் இருந்து 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே துறை மந்திரியாக இருந்தார். அப்போது மேற்கு மத்திய மண்டலம் ரெயில்வேயின் மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரில் குரூப்-டி நியமனம் உருவாக்கப்பட்டபோது, வேலைக்கு பதிலாக நிலங்களை விண்ணப்பத்திவர்களிடம் இருந்து லாலு பிரசாத் குடும்பம் அல்லது கூட்டாளிகள் குறைந்த விலைக்கு பெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

    • பாராளுமன்ற தேர்தலில் நமது கட்சி திருப்திகரமாகவே செயல்பட்டுள்ளது.
    • அடுத்த தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார் லாலு பிரசாத்.

    பாட்னா:

    ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தொடங்கப்பட்ட தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அக்கட்சியின் தலைவரும், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் இன்று கட்சி தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    பாராளுமன்ற மக்களவை தேர்தலில் நமது கட்சியின் செயல்பாடு குறித்து மறு ஆய்வு செய்தோம். நமது கட்சி திருப்திகரமாகவே செயல்பட்டுள்ளது.

    கட்சியின் தலைவராக நான் தேர்தெடுக்கப்பட்டிருப்பதால் கட்சியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு என்னுடையதாகும். எம்.எல்.ஏ. வேட்பாளர்களை மாற்றுவதற்கு நான் எப்போதும் தயங்கமாட்டேன்.

    அடுத்த தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே கட்சி தொண்டர்கள் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    தற்போது ஆட்சி அமைத்திருக்கும் மோடி அரசு மிகவும் பலவீனமாக உள்ளது. இந்த அரசு வரும் ஆகஸ்ட் மாதத்தில் கவிழ்ந்து விடும் என தெரிவித்தார்.

    • உங்களது வாழ்க்கைப் பணி எங்களுக்குத் தொடர்ந்து ஊக்க மளிப்பதாக அமைந்து வருகின்றது.
    • ஒரு நியாயமான, சமநிலை சமுதாயத்தை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளன.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ஒடுக்கப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காகத் தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள், செயல்படுத்திய புரட்சிகரத் திட்டங்கள் மற்றும் உறுதிகுலையாமல் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்தது ஆகியவை ஒரு நியாயமான, சமநிலைச் சமுதாயத்தை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளன.

    உங்களது வாழ்க்கைப் பணி எங்களுக்குத் தொடர்ந்து ஊக்க மளிப்பதாக அமைந்து வருகின்றது.

    இவ்வாறு அதில் கூறியுளளார்.

    • காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
    • முன்னாள் கிரிக்கெட் வீரருமான அர்பஜன் சிங் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

    இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் 7 ஆம் கட்டமும் கடைசி கட்டமுமான தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. இன்று மாலை மாலை 6 மணி வரை வாக்குப்பதிவானது நடைபெறும்.

    இன்றைய தேர்தலில் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 57 தொகுதிகளும் பீகார் (8), இமாச்சல பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), ஒடிசா (6), பஞ்சாப் (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (9), ஆகிய 7 மாநிலங்களும் , சண்டிகார் யூனியன் பிரதேசமும் அடக்கம். இந்த 57 தொகுதிகளிலும் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்தநாத், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் காலையிலேயே வந்து வாக்களித்த நிலையில் பிகார் முன்னாள் முதலாவரும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மனைவி ராபிரி தேவி மகள் ரோகினி ஆச்சார்யா ஆகியோருடன் பிகார் தலைநகர் பாட்டனாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    ஆர்ஜேடி எம்.பியாக உள்ள ரோகினி ஆச்சார்யா வாக்களித்தபின் பேசுகையில், மணிப்பூரில் உள்ள தனது சகோதரிகளுக்காக வாக்களித்ததாக தெரிவித்தார். பிகார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பாட்டனா ராஜ் பவனில் தனது வாக்கினை செலுத்தினார்.

    மேலும் ஆம்ஆத்மி எம்.பியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான அர்பஜன் சிங் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரும் தயவு செய்து வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    இந்திய சினிமாவின் மூத்த நடிகரும் பாஜக தலைவருமான மிதுன் சக்கரவர்த்தி, கல்கத்தாவில் இன்று வாக்களித்தார். அதன்பின் செய்திலயாளர்களிடம் அவர் பேசுகையில், வரிசையில் 40 நிமிடம் காத்திருந்து எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். ஒரு இந்திய குடிமகனாக அது எனது தலையாய கடமை என்று தெரிவித்தார்.

    • வாக்கு வங்கியைக் கண்டு பா.ஜ.க. பயப்படவில்லை.
    • பீகாருக்கு தேவை காட்டாட்சியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் தேவை.

    பாட்னா:

    பீகாரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பா.ஜ.க. வெற்றி பெற்றால் சீதாமர் ஹியில் அன்னை சீதா தேவிக்கு பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவோம் என வாக்குறுதி அளித்தார்.

    வாக்கு வங்கியைக் கண்டு பா.ஜ.க. பயப்படவில்லை. பிரதமர் மோடியால் தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது சாத்தியமானது. அதேபோல் சீதா அன்னை பிறந்த இடமான சீதாமர்ஹியில் அவருக்கு கோவில் கட்ட வேண்டிய கடமை நமக்கு பாக்கி இருக்கிறது. இதனை நிறைவேற்ற பிரதமர் மோடியால் மட்டும்தான் முடியும். நம்மை ஒதுக்கி வைத்தவர்கள் யாரும் இதனை செய்து முடிக்க முடியாது.

    லாலு பிரசாத் யாதவ் அதிகார அரசியலுக்காக தன் மகனை முதல்வராக்குவதற்காக பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரை எதிர்ப்பதையே வாழ்நாள் கடமையாக கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மடியில் போய் அமர்ந்துள்ளார்.

    பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவோம் என்று காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும் ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அதை மோடி அரசு செய்து முடித்தது. பீகாருக்கு தேவை காட்டாட்சியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் தேவை.

    இவ்வாறு அமித்ஷா பேசினார்.

    இந்து புராணங்களின்படி, ராஜா ஜனகன் சீதாமர்ஹிக்கு அருகில் வயலில் உழுது கொண்டிருந்த போது ஒரு மண்பானையில் இருந்து ராமனின் மனைவியான சீதை உயிர்பெற்றாக கூறப்பட்டுள்ளது.

    பீகாரில் உள்ள சீதாமர்ஹி தொகுதிக்கு மே 20-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2019 பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 39 இடங்களில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்றால் தான் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற முடியும் என்று பாஜக எம்.பி.க்கள் தொடர்ச்சியாக பேசி வருகிறார்கள்
    • அரசியல் சாசனத்தை இயற்றியது பாபாசாகேப் அம்பேத்கர் என்பதுதான் அவர்களின் பிரச்சினை - லாலு பிரசாத் யாதவ்

    வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும் எனப் பிரதமர் மோடி கூறினார். இதனையடுத்து பாஜகவினர் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்பதை தேர்தல் முழக்கமாக கொண்டுள்ளனர்.

    இதனையடுத்து, பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்றால் தான் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற முடியும் என்று பாஜக எம்.பி.க்கள் தொடர்ச்சியாக பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பாஜக எம்.பிக்களின் இத்தகைய கருத்திற்கு ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "நமது அரசியல் சாசனம் சாதாரண பாபாவால் எழுதப்பட்டது அல்ல, பாபா சாகேப் அம்பேத்கரால் எழுதப்பட்டது. அரசியலமைப்பை மாற்ற நீங்கள் யார்? ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைத்து சமூக மக்களும் இதனை உங்களுக்கு புரிய வைப்பார்கள்.

    அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பாஜக மூத்த தலைவர்கள் பலரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு எதிராக மோடியும், பாஜக உயர்மட்டத் தலைவர்களும் நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு வெகுமதியாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குகின்றனர். அரசியலமைப்புச் சட்டம், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், ஏழைகள் உள்ளிட்டவர்களுடன் பாஜகவுக்கு என்ன பிரச்னை?

    அரசியல் சாசனம் பக்கம் அவர்களின் பார்வை போனாலும் கூட, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களும் தலித்களும் ஏழைகளும் அவர்களின் கண்களை பிடுங்கியெறிந்து விடுவார்கள். அரசியல் சாசனத்தை மாற்ற இவர்கள் யார்?

    அரசியலமைப்பை மாற்றுவதன் மூலம், சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம், சமூக நீதி, இடஒதுக்கீடு ஆகியவற்றை இந்த நாட்டிலிருந்து ஒழிக்க நினைக்கிறது பாஜக. மக்களை ஆர்.எஸ்.எஸ் மற்றும் முதலாளித்துவ அடிமைகளாக்க நினைக்கிறார்கள்.

    பிரதமர் உண்மையில் பயப்படுகிறார். அவர் நாட்டு மக்களின் முன்பு அம்பலப்படுத்தப்பட்டதால் தேர்தல் தோல்விக்கு பயப்படுகிறார். அவரது தோல்வி பயத்தை மறைக்கவே அவர் பாஜக 370 க்கும் மேற்பட்ட இடங்கள் என்று பெருமை பேசுகிறார்.

    நாட்டில் சர்வாதிகாரத்தை கொண்டு வர பாஜக விரும்புகிறது, அதனால்தான் அவர்கள் அரசியலமைப்பை மாற்ற துடிக்கிறார்கள்" என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார். 

    • பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 23 பேர் மீது மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
    • வழக்கு விசாரணைக்கு லாலு தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.

    குவாலியர்:

    கடந்த 1995 முதல் 1997-ம் ஆண்டு வரையிலான காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் சட்ட விரோதமாக ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் வாங்கியது தொடர்பாக பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 23 பேர் மீது மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பான வழக்கு குவாலியர் உள்ள சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு லாலு தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு எதிராக நிரந்தர கைது உத்தரவை கோர்ட்டு பிறப்பித்தது.

    ஒருவருக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டால் அவரை கைது செய்யும் போது கோர்ட்டில் கண்டிப்பாக ஆஜர்படுத்த வேண்டும் என்று அரசு தரப்பு சிறப்பு வக்கீல் அபிஷேக் தெரிவித்தார்.

    • ராமர் கோயிலின் பெருமையை பேசும் மோடி முதலில் இந்து கிடையாது.
    • அவரது தாய் இறந்தபோது அவர் மொட்டையடிக்கவில்லை. எனவே, அவர் இந்துவாக இருக்க முடியாது

    நேற்று பாட்னாவில் 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவின் 'ஜன் விஷ்வாஸ்' யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பீகாரில் இதற்கு முன்னதாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ராஷ்டிரிய ஜனதாதள கட்சி குடும்ப அரசியல் செய்கிறது என விமர்சித்திருந்தார்.

    இது தொடர்பாக அக்கூட்டத்தில் உரையாற்றிய லாலு பிரசாத் யாதவ், "நரேந்திர மோடிக்கு ஒரு குடும்பம் கிடையாது. ஆனால் எனக்கு நல்ல குடும்பம் உள்ளது. எனது உடல்நிலை பாதிக்கப்பட்ட பொழுது எனது மகள் ரோஷினி அவரது கிட்னியை எனக்கு தானமாக கொடுத்தார் என்று பேசினார்.

    பீகார் பல சிறந்த ஆளுமைகளை உருவாக்கியுள்ளது. இதே காந்தி மைதானத்தில், நாட்டின் பெரிய தலைவர்கள் பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்தியுள்ளனர். பீகார் என்ன முடிவு எடுக்கிறதோ அதையே நாட்டு மக்கள் பின்பற்றுகிறார்கள். நாளை கூட அதுதான் நடக்கப்போகிறது

    மேலும், பிரதமர் மோடி இந்து கிடையாது. ராமர் கோயிலின் பெருமையை பேசும் மோடி முதலில் இந்து கிடையாது. அவரது தாய் இறந்தபோது அவர் மொட்டையடிக்கவில்லை. எனவே, அவர் இந்துவாக இருக்க முடியாது" என தெரிவித்திருந்தார்.

    பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என்று லாலு பிரசாத் யாதவ் கூறியிருந்த நிலையில், நான் 'மோடியின் குடும்பம்' என்ற வாசகத்தை பாஜகவினர் இன்று தனது X கணக்கில் இணைத்து வருகின்றனர்.

    ×