என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lalu prasad yadav"

    • அரசியலை விட்டு விலகுவதாகவும் குடும்பத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாகவும் அறிவித்தார்.
    • லாலுவின் மற்ற மூன்று மகள்களும் வீட்டை விட்டு வெளியேறி டெல்லி சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பீகார் தேர்தலில் ஏற்பட்ட பெரும் பின்னடைவைத் தொடர்ந்து, ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    லாலுவின் மகன் ரோஹிணி ஆச்சார்யா நேற்று, அரசியலை விட்டு விலகுவதாகவும் குடும்பத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாகவும் அறிவித்தார்.

    இதன் பின்ணணியில் தேஜஸ்வி யாதவ் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்கு பிறகு வீட்டில் ஏற்பட்ட சண்டையில், தேஜஸ்வி, மூத்த சகோதரி ரோகிணியை குடும்பத்தின் சாபம் என்றும் அவரின் சாபத்தால் தான் தேர்தல் தோல்வி ஏற்பட்டதாகவும் திட்டியுள்ளார் என்றும் ரோஹிணி மீது தேஜஸ்வி செருப்பை எடுத்து வீசியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரோஹிணி தந்தை லாலுவுக்கு சிறுநீரக தானம் செய்திருந்த நிலையில் அதையும் தேஜஸ்வி குறை சொன்னதாக கூறப்படுகிறது.

    இதைத்த்தொடர்ந்தே ரோஹிணி அறிக்கை விட்டுள்ளார். அதில், "நேற்று, யாரோ ஒருவர் என்னை சபித்து, நான் என் தந்தைக்கு மிகவும் அழுக்கான சிறுநீரகத்தைக் கொடுத்து, கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெற்று, மக்களவை டிக்கெட் வாங்கினேன் என்று சொன்னார்கள்.

    இப்போது என் மூன்று குழந்தைகள் மற்றும் கணவர் உட்பட என் குடும்பத்தினரின் அனுமதியைப் பெறாமல் என் சிறுநீரகத்தை தானம் செய்தது ஒரு பெரிய தவறு என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நான் கடவுளாகக் கருதும் என் தந்தையைக் காப்பாற்ற இதைச் செய்தேன்.

    தந்தையுடன் ரோகிணி

     

    இப்போது நான் தொடர்ந்து கேட்கும் குற்றச்சாட்டு என்னவென்றால், அது ஒரு மோசமான வேலை. உங்களில் யாரும் மீண்டும் இதுபோன்ற தவறைச் செய்யக்கூடாது. ரோகிணியைப் போன்ற ஒரு மகள் மீண்டும் எந்த குடும்பத்திலும் பிறக்கக்கூடாது" என்று தெரிவித்துள்ளார். தனது குடும்பம் தன்னை ஒதுக்கிவிட்டதாக அவர் விரக்தியுடன் தெரிவித்தார். மேலும் தேஜஸ்வியின் நெருங்கிய கூட்டாளிகள் இருவர் தனக்கு எதிராக சதி செய்வதாகவும் ரோகிணி குற்றம்சாட்டியுள்ளார்.

    ஏற்கனவே மனைவியை விட்டு வேறொரு இளம்பெண்ணுடம் தொடர்பில் இருந்ததால் வெளியேற்றப்பட்ட லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், தன்னை போலவே குடும்பத்தால் சகோதரி ரோஹணி அவமதிக்கப்பட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே லாலுவின் மற்ற மூன்று மகள்களும் பாட்டனாவில் உள்ள வீட்டை விட்டு வெளியேறி டெல்லி சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லாலு மற்றும் ராபிரி தேவி தம்பதிக்கு லாலு மற்றும் ராப்ரிக்கு ஏழு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

    • பீகார் தேர்தலில் ராஷ்டிரீய ஜனதா தளம் உள்ளிட்ட மகாகட்பந்தன் கூட்டணி தோல்வி அடைந்தது.
    • அனைத்து பழியையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என லாலு மகள் பதிவிட்டுள்ளார்.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபை தேர்தலில் பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது.

    இந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி படுதோல்வியை சந்தித்தது.

    இந்நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் மகள் ரோகிணி ஆச்சாரியா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தமது எக்ஸ் வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அரசியலை விட்டு விலகுகிறேன். என் குடும்பத்தையும் துறக்கிறேன். அனைத்து பழியையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    சட்டசபைத் தேர்தலில் தேஜஸ்விக்கு ஆதரவாக ரோகிணி பிரசாரம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பீகார் தேர்தலில் படுதோல்வி அடைந்த மறுநாளே லாலு மகளின் அறிவிப்பால் அக்கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • லாலு பிரசாத்திற்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
    • மேல் சிகிச்சைக்காக டெல்லி செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவுக்கு (76 வயது) திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. லாலு பிரசாத்திற்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அவரின் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்ததால் கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இன்று காலை அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

    எனவே பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக டெல்லி செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு லாலு பிரசாத் யாதவ் புறப்பட்டுச் சென்றார். இரவு ஏழு மணிக்கு டெல்லிக்கு விமானம் மூலம் லாலு புறப்பட்டார்.  

    • வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
    • லாலு பிரசாத்தின் விருப்பங்களை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை

    வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களை கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந்தேதி தாக்கல் செய்தது. பின் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் இன்று பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

    விவாதத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சிகள் மசோதா தொடர்பான தவறான கருத்துக்களை நாடு முழுவதும் பரப்ப முயற்சிக்கிறது என்று பேசினார்.

    தொடர்ந்து ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஆசையை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார் என்று அமித் ஷா தெரிவித்தார்.

    கடந்த 2013 இல் காங்கிரஸ் கூட்டணி அரசு வக்பு திருத்தங்கள் கொண்டுவந்தத்து. அந்த சமயத்தில் பேசிய லாலு பிரசாத் யாதவ், "அரசு முன்வைத்த திருத்த மசோதாவை நாங்கள் வரவேற்கிறோம். பெரும்பாலான நிலங்கள், அது அரசாங்கத்திற்குச் சொந்தமானதாக இருந்தாலும் சரி, வேறுவிதமாக இருந்தாலும் சரி, அபகரிக்கப்பட்டுள்ளன.

    வக்பு வாரியத்தில் உள்ளவர்கள் அனைத்து பிரதான நிலங்களையும் விற்றுவிட்டனர். பாட்னாவில், டாக் பங்களா சொத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

    இது போன்ற ஏராளமான கொள்ளை நடந்துள்ளது. நாங்கள் திருத்தங்களை ஆதரிக்கிறோம், ஆனால் அரசாங்கம் எதிர்காலத்தில் ஒரு கடுமையான சட்டத்தைக் கொண்டு வந்து அத்தகையவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.

    இதை இன்று அவையில் மேற்கோள் காட்டிய அமித் ஷா, எதிர்க்கட்சி இருக்கைகளை சுட்டிக்காட்டி, "லாலு பிரசாத்தின் விருப்பங்களை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை, ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அதைச் செய்கிறார். லாலு ஜி கடுமையான சட்டம் வேண்டும் என்று கேட்டிருந்தார்" என்றார். லாலு பிரசாத் அப்போது பேசிய வீடியோவும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    • பீகார் மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
    • நிதிஷ் குமாரின் ஆட்சிக் காலத்தில், சாலைகள், மின்சாரம் மற்றும் குழாய் நீர் ஆகியவை ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைந்துள்ளன.

    பீகார் மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

    பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பற்றுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தற்போது முதல்வராக உள்ளார். முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உடைய ராஷ்டிரிய ஜனதா தளம்  இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இவ்விரு கூட்டணிக்குமிடையில் இந்த தேர்தலில் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில் இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின் நடந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

    அவர் பேசியதாவது, "நிதிஷ் குமாரின் ஆட்சிக் காலத்தில், சாலைகள், மின்சாரம் மற்றும் குழாய் நீர் ஆகியவை ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைந்துள்ளன. இன்று, பீகாரின் ஏழைகளுக்கு வீடுகள், கழிப்பறைகள், தண்ணீர், மருந்துகள் மற்றும் ரேஷன் பொருட்களை வழங்குவதன் மூலம் அவர்களை மேம்படுத்த பிரதமர் மோடி பாடுபட்டுள்ளார்.

    1990 முதல் 2005 வரை பீகாரில் லாலு யாதவ் அரசு என்ன செய்தது? மாநிலம் முழுவதும் கால்நடை தீவன ஊழலை நடத்தியதன் மூலம் நாட்டிலும் உலகிலும் பீகாரை லாலு யாதவ் அரசு அவமானப்படுத்தியது. பீகார் வரலாற்றில் அவரது அரசு எப்போதும் 'காட்டு ராஜ்ஜியம்' என்று அழைக்கப்படும்" என்று தெரிவித்தார். 

    • குரூப் D பணியாளர்களை நியமிப்பதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு.
    • அப்போது அங்கு நூற்றுக்கணக்கான ஆர்ஜேடி தொண்டர்கள் கூடி அவரை புகழ்ந்து கோஷம் எழுப்பினர்.

    ரெயில்வே வேலைக்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்ற ஊழல் வழக்கில் விசாரணைக்கு அஜ்ரரகுமாறு ஆர்ஜேடி தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி, மகன் தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

    லாலு பிரசாத் நாளை (புதன்கிழமை) பாட்னாவில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பின் முன் ஆஜராகுமாறும், மனைவி உள்ளிட்டோர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜராகுமாறும் அமலாக்கத்துறை சம்மன் தெரிவித்தது.

    அதன்படி இன்று பட்லிபுத்ரா மக்களவை எம்பி, மூத்த மகள் மிசா பாரதியுடன், ராப்ரி தேவி வங்கி சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவகத்தில் ஆஜரானார். அப்போது அங்கு கூடிய நூற்றுக்கணக்கான ஆர்ஜேடி தொண்டர்கள் அவரை புகழ்ந்து கோஷம் எழுப்பினர்.

    லாலு பிரசாத் யாதவ், 2004 -2009 காலகட்டத்தில் UPA அரசில் மத்திய ரெயில்வே அமைச்சராக இருந்தபோது, இந்திய ரெயில்வேயில் குரூப் D பணியாளர்களை நியமிப்பதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    சிபிஐ அறிக்கையின்படி , ரெயில்வேயில் வேலைகளுக்கு ஈடாக  நிலத்தை லஞ்சமாக எழுதித்தருமாறு கூறி தேர்வர்களிடம் லஞ்சம் பெறப்பட்டது.

    கடந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையின்படி,  குற்றம் சாட்டப்பட்ட லாலு பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்களான மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி மற்றும் ஹேமா யாதவ் ஆகியோர், குரூப் D அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்களின் குடும்பத்தினரிடமிருந்து நிலப் பட்டாக்களைப் பெற்றனர் என்று குறிப்பிடடுள்ளது.

    இதற்கிடையே அமலாக்கத்துறை விசாரணைக்கு நாளை லாலு பிரசாத் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நிதிஷ் குமார் பெண்களை அவமரியாதை செய்கிறார்.
    • ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் பேசிய நிதிஷ்குமார், "லாலு பிரசாத் ஊழல் புகாரில் சிக்கியபோது அவர் தனது மனைவியை முதல்வர் பதவியில் அமர்த்தினார்" என்று தெரிவித்தார்

    இந்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பெண்களை அவமதித்ததாகக் கூறி, முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி உட்பட ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராப்ரி தேவி, "நிதிஷ் குமார் 'பாங்கு' சாப்பிட்டுவிட்டு சட்டமன்றத்திற்கு வருகிறார். அவர் பெண்களை அவமரியாதை செய்கிறார். அவரைச் சுற்றியுள்ளவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதையே அவரும் பேசுகிறார். அவரது சொந்தக் கட்சி உறுப்பினர்களும் பாஜக தலைவர்களில் சிலரும் இதுபோன்ற விஷயங்களைச் சொல்லச் சொல்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    • சிறுநீரகம் பாதிக்கப்பட்ட லல்லுபிரசாத்துக்கு சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • டெல்லியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    ராஷ்டிரிய ஜனதா தலைவர் லல்லுபிரசாத் யாதவ் பல்வேறு உடல்நல பிரச்சினைகள் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட அவருக்கு சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது டெல்லியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அவருக்கு சிறுநீரகம் தானம் செய்ய அவரது மகள் ரோஷினி முன்வந்துள்ளார். சிங்கப்பூரில் வசித்து வரும் ரோஷினி இதற்காக டெல்லி வந்துள்ளார்.

    • தனது அப்பா லாலு பிரசாத் யாதவும், அம்மா ரப்ரி தேவியும் இறைவனுக்கு சமமானவர்கள், அப்பாவுக்கு தான் கொஞ்சம் உதவுவதற்கு வாய்ப்பு கிடைத்தது தனது அதிர்ஷ்டம்.
    • என் அப்பாவுக்கு நான் தரப்போவது ஒரு சிறிய சதைப்பகுதிதான். நான் அவருக்காக எதையும் செய்வேன்.

    பாட்னா:

    பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரியும், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் (வயது 74), கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளார். ஜாமீனில் உள்ள இவர் தற்போது உடல் உபாதைகளால் அவதிப்படுகிறார்.

    டெல்லியில் மகள் மிசா பாரதியின் இல்லத்தில் தங்கியுள்ள லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் மறு வாழ்வு தரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    தனக்கு உயிர் தந்த தந்தைக்கு மற்றொரு மகளான ரோகிணி ஆச்சார்யா சிறுநீரகம் தந்து மறு வாழ்வு தர மனமுவந்து முன்வந்துள்ளார்.

    இந்த அறுவை சிகிச்சை தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் கடந்த மாதம் சிங்கப்பூர் சென்று மருத்துவ பரிசோதனைகள் முடித்து வந்தார்.

    அவருக்கு தனது இரு சிறுநீரகங்களில் ஒன்றை வழங்க முன்வந்துள்ள மகள் ரோகிணி ஆச்சார்யா, ஒரு டாக்டர் ஆவார். இவரது கணவர் சாம்ஷெர் சிங், சாப்ட்வேர் என்ஜினீயர். இவர்கள் தற்போது சிங்கப்பூரில்தான் வசித்து வருகின்றனர்.

    தனது அப்பா லாலு பிரசாத் யாதவும், அம்மா ரப்ரி தேவியும் இறைவனுக்கு சமமானவர்கள், அப்பாவுக்கு தான் கொஞ்சம் உதவுவதற்கு வாய்ப்பு கிடைத்தது தனது அதிர்ஷ்டம்தான் என்று ரோகிணி ஆச்சார்யா உருகுகிறார்.

    தந்தைக்கு சிறுநீரகம் அளிப்பது குறித்து ரோகிணி ஆச்சார்யா உருக்கமுடன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    என் அப்பாவுக்கு நான் தரப்போவது ஒரு சிறிய சதைப்பகுதிதான். நான் அவருக்காக எதையும் செய்வேன். எல்லாம் நல்ல விதமாக நடந்தேற வேண்டும் என்று தயவு செய்து பிரார்த்தித்துக்கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் மீண்டும் குரல் கொடுக்க அப்பா தகுதியானவராக இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    அரசியல் களத்தில் இருந்து வெளியே உள்ள இவர், தனது தந்தை லாலுவின் மடியில் குழந்தையாக இருந்தபோது எடுத்துக்கொண்ட 2 புகைப்படங்களையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். (அதில் ஒன்றை இங்கே காணலாம்.)

    இவர் அவ்வப்போது லாலு பிரசாத்தின் ஆதரவாளர்களை, தனது தந்தையின் ரசிகர்களாக கருதி அவர்களுடன் டுவிட்டர் வழியாக பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் டிசம்பர் 5-ந்தேதி அறுவை சிகிச்சை நடக்கிறது.
    • லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, சிறுநீரக தானம் செய்கிறார்.

    புதுடெல்லி

    ராஷ்டிரீய ஜனதாதள கட்சி நிறுவனர் லாலுபிரசாத் யாதவ் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரகம் பழுதடைந்ததால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டார். கோர்ட்டும் அனுமதி அளித்தது.

    சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் டிசம்பர் 5-ந்தேதி அறுவை சிகிச்சை நடக்கிறது. லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, சிறுநீரக தானம் செய்கிறார். இதற்காக லாலுபிரசாத் யாதவ், இன்று (சனிக்கிழமை) சிங்கப்பூர் செல்வார் என்று தெரிகிறது.

    லாலுவுடன் அவருடைய மூத்த மகள் மிசா பாரதி, மருமகன் சைலேஷ்குமார் ஆகியோர் செல்ல டெல்லி தனிக்கோர்ட்டு நீதிபதி எம்.கே.நாக்பால் அனுமதி அளித்துள்ளார். மிசா பாரதி, சைலேஷ்குமார் ஆகியோர் மீது ரூ.1 கோடியே 20 லட்சம் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, கோர்ட்டு விதித்த நிபந்தனைகளுடன் இருவரும் சிங்கப்பூர் செல்கிறார்கள்.

    • லாலு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருக்கிறார்.
    • லாலு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருக்கிறார்.

    குரானி :

    பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவரது மகளே தந்தைக்கு சிறுநீரகம் தானமாக வழங்க முன் வந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து லாலு பிரசாத் யாதவுக்கு வருகிற 5-ந்தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடப்பதாக அவரது மகனும், மாநில துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி, நேற்று குரானி சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தார்.

    அவர் கூறுகையில், 'லாலு ஜி இங்கு உங்களை சந்திக்க விரும்பினார். ஆனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருக்கிறார். அங்கு அவருக்கு 5-ந்தேதி அறுவை சிகிச்சை நடக்கிறது. ஆனாலும் பா.ஜனதாவை தோற்கடிக்க உங்களிடம் தெரிவிக்குமாறு என்னிடம் அவர் கேட்டுக்கொண்டார்' என்று கூறினார்.

    தனது உடல் நலக்குறைவுக்கு பா.ஜனதாவின் பழிவாங்கும் அரசியல்தான் காரணம் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தக்கூறுமாறும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்ததாக தேஜஸ்வி மேலும் குறிப்பிட்டார்.

    • ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
    • சிங்கப்பூர் மருத்துவமனையில் லாலுவுக்கு நேற்று சிறுநீரக மாற்று ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது.

    பாட்னா:

    ராஷ்டிரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவ், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

    இதற்கிடையே, கடந்த வாரம் லாலுவும், அவருடைய குடும்பத்தினரும் சிங்கப்பூர் சென்றனர்.

    இந்நிலையில், சிங்கப்பூர் மருத்துவமனையில் லாலுவுக்கு நேற்று சிறுநீரக மாற்று ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது. இத்தகவலை லாலுவின் மகனும், பீகார் மாநில துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

    லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யாவின் ஒரு சிறுநீரகம், லாலுவுக்கு பொருத்தப்பட்டது. இருவரும் நலமுடன் இருப்பதாக தேஜஸ்வி யாதவ் கூறினார்.

    ×